23/09/2024
நமது தந்தை பேராயர் ஐயா அவர்கள் ஞாயிற்றுக்கிழமை
(22.09.24) மாலை 5.10 மணியளவில் விண்ணக வாழ்வின்
அழைப்பை பெற்றுக் கொண்டார்கள்.
தற்போது நமது தந்தை பேராயரின் சரீரம் வின்சென்ட் பார்க்கர்
மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. நமது தந்தை பேராயரின் நல்லடக்க ஆராதனை வரும் வியாழக்கிழமை (26.09.24) காலை 6.00 மணி முதல் வானகரம் இயேசு அழைக்கிறார் வளாகத்தில் நடைபெறும். மாலை 4.00 மணிக்கு கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் நமது தந்தை பேராயரின் சரீரம் விண்ணக வாழ்விற்கு அடையாளமாக இம்மண்ணில் விதைக்கப்படும்.
நமது தந்தை பேராயரை இழந்து தவிக்கும் அன்பு குடும்பத்தின்
ஆறுதலுக்காக தொடர்ந்து ஜெபிப்போம்..
கர்த்தர் நம்மையும் நம்முடைய திருச்சபைகளையும்
ஆறுதல்படுத்துவாராக!!