01/03/2016
கிருஸ்த்துவம்
ஒரு வணிகமா, சமயமா, மார்க்கமா
நான் முகப்புநூலில் படித்த செய்திகள். இன்று சுவாரஸ்யமான பல கருத்துகள், தகவல்கள், சிந்தனைச்செய்திகள், என பல்வேறு தகவல்களை தங்களுடைய முகப்பு நூல் பக்கத்தில் பதிவு செய்கிறார்கள். ஆனால் எவ்வளவு "Likes, comments" வந்தது என போட்டி போட்டுக்கொண்டு பார்க்கிறோம். ஆனால் Like போடுகிற நாம் அவற்றை ஆராய்ந்து பார்கிறோமா?.
அதில் நான் கவனித்த செய்தி ஒன்று அல்லேலூயா, ஆமென், ஆசிர்வாதம், என்ற வார்த்தையில் இன்று கிருஸ்த்துவ சமுதாயத்தில் பரவிவரும் இந்த கொடிய வியாதியாக, ஒரு கொள்ளை நோயாக பரப்பிக்கொண்டுள்ளன. நம்முடைய வெள்ளைச்சீருடை மக்கள்.
இந்த வெள்ளைச்சீருடை நண்பர்களுக்கு இறைப்பணி என்றால் தெரியாது, ஆனால் இறைப்பணி என்ற பெயரில் ஆட்கள் (ஆள்) சோர்க்கும் பணிகள்தான் இப்பொது தீவிரமாக நடைபெறுகிறது. இதில் ஒரு போட்டா, போட்டி யார் அதிக ஆள் சேர்ப்பது என? என்ன ஒரு அவளநிலை. ஒவ்வெரு வார கூடுகையில் அடுத்த வாரம் வரும் போது ஒருவரையாவது அழைத்து வரவேண்டும் என அதிகார கட்டளை. இதோடு ஒரு பயத்தையும் சொல்லி அதற்கு ஆதாரமாக ஒரு வசனத்தையும் கூறி அடிமைப்படுத்தி உள்ளனர், 1 தீமோ1:7 தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல் அன்பும், தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். தேவன் இப்படுப்பட்ட செயலைக் கொடுத்திருக்கும் போது, ஏன் வெ.சீ இவற்றை கைக்கொள்ள கற்றுத்தரவில்லை? பலமும், தெளிந்த புத்தியை அடமானம் வைத்து, அடிமைகளாக மாறிவிட்டோமா. ஆனால் நம்ம் ஆசீர்வாதங்கள் என்ற பெயரில் பயபடுத்தி வைத்துள்ளனர்.
நான் ஒரு தம்பியிடம் கதைத்துக்கொண்டிருந்தேன், அவர் சொன்ன செய்தி எண்ண வியப்பில் ஆழ்த்தியது. ஒரு பெண்மணியும் அவர் குடும்பத்தையும் ஓர் நிகழ்ச்சியில் சந்தித்து பேசும் போது அந்த பெண்மணி தன்குடும்பத்தின் பிரச்சனையை இந்த தம்பியிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு இந்த தம்பி சொன்னாராம் இயேசுவை ஏற்றுகொள்ளுங்கள் அவர் உங்கள் குடும்ப பிரச்சனை அவர் தீர்ப்பார் என்று. இதை தான் இறைப்பணி என்று சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இதுதான் இறைப்பணியா? இப்படிப்பட்ட பணியை செய்யும்படி வெள்ளைச்சீருடை கட்டாயப்படுத்துகிறனர். ஆக இறைப்பணி என்பது அவருக்கும் தெரியாது, அவருடைய அடிமைக்கும் தெரியாது.
வணிகமயமாக்கபட்ட இயேசு கிருஸ்துவின் போதனைகள் இன்று மிகவும் வேதனையும், வெட்கமும் அடையச்செய்கின்ற சூழல் நடைபெற்றுகொண்டுள்ளது. கிருஸ்த்துவின் சுவிசேஷத்தை வியபாரம் செய்து கொண்டிருக்கும் கூட்டங்கள் பரவலாக உள்ளது, அவை: ஊடகக் கூட்டம், விளம்பர பலகை ஒட்டும் கூட்டம், அபிஷேக எண்ணெய், அபிஷேக கைக்குட்டை, விற்கும் ஒரு கூட்டம், அபிஷேக ஆராதனை, துதி ஆராதனை, அபிஷேக அன்னிய பாஷை என நடத்தும் ஒரு கூட்டம், பெயர் சொல்லி அழைக்கும் ஒரு கூட்டம், Mela-க்கள் நடத்தும் ஒரு கூட்டம், பங்காளர்களை திரட்டும் கூட்டம், என பல கூட்டங்கள் அணி அணியாக வளம்வந்து கொண்டியிருக்கின்றன. இவர்கள் மூலதனமாக சுவிசேஷத்தையும் தங்களுடைய பொருட்களையும் பயண்படுத்துகின்றனர். இவர்கள் பெரும் பொருள் ஈட்ட இத்தகைய உத்திகளை கையளுகிறார்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் புனித யாத்திரை(HOLY LAND TOUR) என்கின்ற ஒரு வேடிக்கையான கூட்டம். இன்னும் அறியப்படாத, கண்டறியாத, கேட்டறியாத கூட்டங்கள் இருக்கலாம். இவர்கள் இயேசுவை பின்பற்றினால், ஏன் இந்த வணிகமயம்? மத்தேயு 20:25-28, இவர்களில் பணிவிடைக்காரர், ஊழியக்காரர் எங்கே? இயேசு: "மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகர் மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்."
மதம் யானைக்கு பிடிக்கும், ஏன் பிடிக்கிறது? மருத்துவ ஆராய்ச்சி முலம் கண்டுபிடித்தது யானைக்கு உடலில் உஷ்ணம் அதிகம் ஏற்பட்டால் அது மூளைக்கு குழப்பம் உண்டாகி பைத்தியம் போல் சுற்றி திரிந்து கேடு விளைவிக்கிறது. இப்படி தான் கிருஸ்த்துவத்திலும். மதம் மூன்று காலங்களையும் உள்ளடக்கியது. அதாவது ஆன்மாவானது கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும், விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் மதம் என்ற பெயரில் பல சடங்குகள், சம்பிரதாயங்கள், என பலவற்றில் மூழ்கி உள்ளது. நெற்றியில் சிலுவை படுவது, எண்ணெய் பூசுவது, தண்ணீர் தெளிப்பது. என பலவேறுபட்ட மதச்சடங்க்குள் பினைக்கப்பட்டுள்ளது.
நம் தலைவர்கள், சபைகளின் எழுப்புதல், எழுச்சி, அடைவேண்டும் என்று சபைகளில் எழுப்புதல், எழுச்சி கூட்டங்கள் நடத்தி இப்படிபட்ட உபதேசங்குகளை பயிற்றுவிக்கிறார்கள். எங்கே மனமாற்றம்? மாறாக மதமாற்றம் வேட்டைதான் நடைபெறுகிறது. இயேசு சொன்ன வார்த்தை மத்தேயு 23:15 இதன்படித்தான் இன்று அனைத்து திருச்சபைகளிலும் ஆள் சேர்க்கும் போட்டி உள்ளது. இதற்கு எத்தனை போட்டிகள், சண்டைகள், சச்சரவுகள், குழப்பங்கள், வெட்கம்.
அன்புள்ள கிருஸ்துவ சகோதர, சகோதரிகளோ. உங்களை தாழ்மையுடன் கேட்பது. தயவு செய்து கிருஸ்துவின் சத்தியத்தை புரிந்து, சத்தியமில்லாத உபதேசங்குக்கு விலகியும், எச்சரிக்கையாகவும், இருங்கள். இப்படிபட்ட உபதேச மக்களுக்கு ஆதரவை அளிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
இப்படிக்கு ,கிருஸ்துவின் பணியில்
தேவன்
பரிபூரண வாழ்வு, சென்னை