Ariyankavu

Ariyankavu At Ariyankavu, Lord Shri Dharma Sastha is Praised as :Annadhana Prabhu” who wedded the bride of our Sourashtra Brahmin Community ( Markhandeya Rishi Gotram ).

“ஆரியன்காவு ஸ்ரீ தர்மசாஸ்தா திருத்தலத்தின் வரலாறு, மரபு, பாரம்பரியங்கள், தொன்மை மற்றும் இத்தலத்திற்கான தத்துவத்தை ஆவணப்படுத்தும் முயற்சி.”
This is one of the temples of Lord Sri Dharma Sastha, which Sri Parasurama established at Ariyankavu, Kerala. The Temple at Ariyankavu, Kerala State, the holy abode of Lord SHRI AYYAPPA, radiating world harmoney, would celebrate the JOTHI ROOPA DHARISANAM at Ma

mbhazhathurai
on 23-12-2021 (Thursday) and the shastric Betrothal ceremonies of “PANDIAN MUDIPPU” on 24-12-2021 (Friday) Celestial wedding (Thirukkalyanam) of Lord SHRI DHARMA SASTHA - SRI PUSHKALA DEVI on 25-12-2021 (Saturday) with promp and splendor, to establish it’s old, pious, traditional principles the connected customary rites Lastly the MANDALABISHEKAM Festival ends with (Kalashabhisekam) on 26-12-2021(Sunday ). This divine marriage has been conducted annually jointly by the King of Travancore, (now Travancore Decaswom Board) and mahajanas of Sourashtra Community (Now Ariyankavu Devasthana Sourashtra Mahajana Sangam, Madurai.) On the invitiation of Decaswom Board at Ariyankavu, every year the Sourashtra Mahajan Sangh members would bring their presents with SOMANJODI (Dress for the Divine Couple ) garlands etc., from Madurai in order to conduct the Divine Marriage in a grandeur manner. Therefore, We humbly request all the devotees of Loard Shri Dharma Sastha and other public to participate in the rituals to be held on 23,24,25 & 26 - 12 - 2021 and get the blessings of Loard Shri Dharma Sastha - Shri Pushkala Devi.

01/08/2026
11🌾🌾 ஆரியன்காவு திருத்தலம் – கேள்வியில் தொடங்கி... ஞானத்தில் முடியும் ஓர் ஆன்மிகப் பயணம்...🌾🌾 ❓ கேள்வி – 11"ஆடிப்பெருக்க...
24/07/2026

11🌾🌾 ஆரியன்காவு திருத்தலம் –
கேள்வியில் தொடங்கி... ஞானத்தில் முடியும் ஓர் ஆன்மிகப் பயணம்...🌾🌾

❓ கேள்வி – 11
"ஆடிப்பெருக்கன்று
ஆரியன்காவில் நடைபெறும்
'நிறை புத்தரி' என்றால் என்ன?
அதை ஏன் அவ்வளவு சிறப்பாகக்
கொண்டாடுகிறார்கள்? நாமும்
அந்த நாளில் அங்கே இருக்க
வேண்டுமா?"

❗✍️பதில் – 11 >👉
வருகிற ஆகஸ்ட் 3, 2026 (கற்கடகம் 18 – திங்கட்கிழமை), அதிகாலை 5.40 மணி முதல் 6.20 மணி வரை, ஆரியன்காவு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயத்தில் நிறைபுத்தரி மங்கல வைபவம் நடைபெறுகிறது.

இது ஒரு பூஜை மட்டுமல்ல.
இது ஒரு நன்றித் திருவிழா.
புதிய அறுவடையின் முதல் நெற்கதிர்களை சுவாமிக்கே சமர்ப்பிக்கிறார்கள்.
அதன் பொருள்...
"நீ கொடுத்ததிலிருந்தே...
முதலில் உனக்கே திருப்பிக் கொடுக்கிறேன்." இறைவன் கொடுத்ததை, இறைவனை மறந்து அனுபவிக்காதே. முதலில் நன்றி சொல் என்பதாகும்.

🌾கேரளத்தில் உள்ள தர்ம சாஸ்தா ஆலயங்களில் பல நூற்றாண்டுகளாக இந்த வழிபாடு நடைபெற்று வருகிறது.
மழை பொழிய வேண்டும்.
வயல்கள் செழிக்க வேண்டும்.
மக்கள் பசியின்றி வாழ வேண்டும்.
நாடு வளம் பெற வேண்டும்.
இந்தப் பிரார்த்தனைகளோடு தான் இந்த வைபவம் நடத்தப்படுகிறது.

என் வேண்டுதல் என்பது என்னை மட்டும் சுற்றி இருக்கக் கூடாது. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற மனமே இறைவனுக்குப் பிடித்த வழிபாடு.

🌾 திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு சொந்தமான வயல்களில் விளைந்த புதிய நெற்கதிர்களை தந்திரிமாரும் சாந்திமாரும் தலைமேல் சுமந்து வருவார்கள். கருவறையை வலம் வருவார்கள். சுவாமிக்கு நிவேதனம் செய்வார்கள். பகவானிடம் சமர்ப்பிக்கப்பட்ட
அந்த நெற்கதிர்கள் பிரசாதமாக பக்தர்களுக்குக் கிடைக்கும்.

இறைவனிடம் சென்ற எதுவும் சாதாரணமாக திரும்பாது. அது அருளாகவே திரும்பும்.
ஆரியன்காவிலும் இதே மரபு தொடர்கிறது.

தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம், பண்பொழி கிராமத்தில் உள்ள தேவஸ்வம் போர்டுக்கு சொந்தமான வயல்களில் விளந்துள்ள நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்ட கொண்டு வரப்படும்.

அன்று அதிகாலையில்
அச்சன்கோவிலில் முதல் பூஜை
நடைபெறும். பின்னர் ஆரியன்காவு, குளத்துப்புழை.
அன்று மாலையே சபரிமலை.
நான்கு புனிதத் தலங்களையும் இணைக்கும் அரிய ஆன்மிகப் பயணம் இது.

இறைவனின் அருள் எல்லைகளை
அறியாது. அது ஊரையும்,
மொழியையும், மனிதர்களையும்
இணைக்கிறது.

🌿 ஆரியன்காவில் அன்று அந்த அதிகாலையில் பொழுதில்...

வனம் இன்னும் விழித்திருக்காது.
பறவைகளின் கீச் கானக் குரல்கள் மட்டும் கேட்கும். கோவிலின் உள் பிரகாரத்தில் மங்கள விளக்குகள் ஒளிர்ந்து கொண்டு இருக்கும்.
புதிய நெற்கதிர்களின் பச்சை மணம் காற்றில் கலந்திருக்கும்.
சாந்திமார்களின் கைகளில் அந்த பசுமை தவழும் பசுந்தளிர் நெற்கதிர்கள்... அந்தக் காட்சியை ஒருமுறை பார்த்து விட்டால்...
அதை நம் மனம் மறக்காது.

🌾 இயற்கையின் அமைதிக்குள் இதன் மூலம் இறைவன் மிக மெதுவாக நம் மனத்துடன் பேசுகிறார் என்று தான் நாம் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

🌼 இது உங்களுக்கான செய்தி
அன்று நீங்கள் அங்கே இருந்தால்...

சுவாமியை மட்டும் பார்த்துக் கொண்டிருங்கள். அவசரப்பட வேண்டாம். எதையும் கேட்க வேண்டாம். அமைதியாக இருங்கள்.

ஒரு கணத்தில்...
உங்கள் மனம் அமைதியாகும்.
கவலை கரையும். இதயம் லேசாகும். அந்த அமைதியை யாரும் தர முடியாது. அது தான் சுவாமியின் அருள்...!

அந்தக் கணமே...
இறைவன் உங்கள்
உள்ளத்தைத் தொட்ட தருணம்...!

நாம் தேடுவது இறைவன் அல்ல. நான் அமைதியாக நிற்கும் அந்தக் கணத்தில், இறைவனே நம்மைத் தேடி வருகிறார்...!

🌾 இந்த விழா நமக்கு சொல்லும் வாழ்க்கைப் பாடம்...

நாம் எப்போதும்... "இன்னும் வேண்டும்.. வேண்டும்..." என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால்... "ஏற்கனவே கிடைத்திருக்கிறது..."என்று நன்றி சொல்ல மறந்து விடுகிறோம். நிறைபுத்தரி நமக்குச் சொல்வது..."முதலில் நன்றி சொல்லுங்கள். பிறகு புதிய அருள் நன்றியுணர்வு இருக்கும் இடத்தில் குறைவு தங்காது.

🌾 நெற்கதிர் பிரசாதத்தின் மகிமை...

கோவிலில் சாந்திமார் வழங்கும் அந்த நெற்கதிரை வீட்டிற்குக் கொண்டு வாருங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையில் வையுங்கள். அது வெறும் நெற்கதிர் அல்ல. அது இறைவனின் அருளாசி பெற்றது. அதைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும்...இனி "என் வீட்டில் பசி இருக்காது. என் இல்லத்தில் வளம் நிறையும். என் மனதில் நம்பிக்கை வளரும்." என்று நம்பிக்கை கொள்ளுங்கள். அதுவே அந்தப் பிரசாதத்தின் உண்மையான பலன்.

🌾 வேதாந்தம் சொல்லும் மொழியில் பார்த்தால்...

என் ஆத்மாவிற்கு கவசமாக இருக்கும் என் தேகத்தை தாங்கும் "அன்னமய கோசத்திற்கும்" இறைவனின் இந்த நிறைபுத்தரி அருள் அவசியம் என்பதை இந்தப் பிரசாதம் நினைவூட்டுகிறது.

இறைவன் தரும் அன்னத்தை மதிப்பவன், இறைவன் தரும் வாழ்க்கையையும் மதிக்கக் கற்றுக் கொள்வான்.

🌾 முன்னோர்கள் இந்த வழிபாட்டிற்கு "நிறை" என்று பெயர் வைத்தார்கள். ஏன் தெரியுமா?
நிறைவு என்பது பொருளில் இல்லை. நிறைவு என்பது பதவியில் இல்லை. நிறைவு என்பது செல்வத்தில் இல்லை.
நிறைவு என்பது நன்றியுணர்வு கொண்ட மனதில் இருக்கிறது.

அதனால்தான்...
முதல் அறுவடையை இறைவனுக்கு அர்ப்பணித்தார்கள்.
முதல் நன்றியை இறைவனுக்கே செலுத்தினார்கள்.

🌾🎯 இதில் நமக்கான பாடம்....

வருகிற ஆரியன்காவு நிறைபுத்தரி ஆடிப்பெருக்கு நன்னாளில், ஐயனின் அருள் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் வற்றாத மங்களத்தை உண்டாக்கட்டும். வளம் நிறைந்த புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும். மனம் நிறையட்டும். வாழ்வு சிறக்கட்டும்.

சுவாமியே சரணம் ஐயப்பா! 🙏🌾
🪷🪷🪷🪷🪷
© "ஆரியன்காவு ஓர் ஆன்மிகப் பூமி" என்ற நூலில் இருந்து....


?❗கேள்வி பதில் – 12> தொடரும்...

10🌿🌿 ஆரியன்காவு திருத்தலம் – கேள்வியில் தொடங்கி, ஞானத்தில் முடியும் ஓர் ஆன்மிகப் பயணம்🌿🌿❔ கேள்வி 10 :-ஆரியன்காவு திருத்த...
22/07/2026

10🌿🌿 ஆரியன்காவு திருத்தலம் – கேள்வியில் தொடங்கி, ஞானத்தில் முடியும் ஓர் ஆன்மிகப் பயணம்🌿🌿

❔ கேள்வி 10 :-
ஆரியன்காவு திருத்தலத்தில் நடைபெறும் ஶ்ரீ தர்ம சாஸ்தா – ஶ்ரீ புஷ்கலா தேவி திருக்கல்யாண வைபவத்தை உலகியல் நிலையில் இருந்து நாம் எப்படி பார்க்க வேண்டும்? நமது புரிதல் எப்படி இருக்க வேண்டும்?

✍️ பதில் 10 :–

பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் நிற்கும் மனிதன், தன் வாழ்நாளின் இறுதி இலக்காகத் தேடுவது எதை?

சொந்த பந்தங்களிலிருந்து, உலகப் பொருள் பற்றிலிருந்து விடுதலை பெற்று, தன் ஜீவன் அந்தப் பரப்பிரம்மத்தோடு ஐக்கியமாவதைத்தான் ஆன்மிகம் "ஆன்ம விடுதலை"என்கிறது.

இதை உலகியல் கண்களால் பார்த்தால் வெறும் சடங்காகத் தான் தெரியும். அதுவே ஞான மார்கக் கண்களால் பார்த்தால், ஜீவாத்மா, பரமாத்மாவோடு கரையும் ஜீவ பிரம்ம ஐக்கியப் பேரானந்தப் பெருவெளியாகத் தெரியும்.

🛑 தெய்வீகம் vs உலகியல்

இன்று சிலர் மிக மேலோட்டமான, வக்கிர புத்தியோடு தெய்வீகத் திருமணங்களை மனிதர்களின் கலப்புத் திருமணங்களோடு ஒப்பிட்டுப் பேசுவதை விபரீத வேடிக்கையாகப் பார்க்கிறோம்.

மனித உடல்களின் சேர்க்கையும், சாதி-மத எல்லைகளைக் கடந்த மனித சமுதாயத் திருமணங்கள் முற்றிலும் உலகியல் வாழ்வில் சம்பந்தப்பட்டவை.

ஆனால், தெய்வீகத் திருமணங்கள் என்பது "உடல்களின் சேர்க்கை அல்ல; அது உணர்வுகளின்
சங்கமம்." அங்கே சாதியோ,
மனித உடலோ, உலகியல்
ஈர்ப்போ எதுவும் கிடையாது.

> அத்யாத்மத்தில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். "இறைவன் மட்டுமே பிரபஞ்சத்தின் ஒரே புருஷோத்தமன் (ஆண்மகன்). மற்ற உயிர்கள் யாவும் ஜீவாத்மாக்கள் (பெண் தன்மையுடையவை)."

> இதனைப் புரிந்து கொள்ளும் ஆன்ம பக்குவம் இல்லாதவர்கள் தான், தெய்வீகத் திருமணங்களை தங்கள் புரிதல் இல்லாத தன்மையினால் தரம் தாழ்த்தி புரிந்து கொள்கிறார்கள்.

ஆரியன்காவு திருக்கல்யாண வைபவம் என்பதும் இரண்டு உடல்களுக்கு இடையே நடக்கும் உலகியல் ஒப்பந்தம் அல்ல. அது "உலக விஷயப் பற்று ஒழிந்த ஒரு தூய ஆன்மாவின் உள்முகப் பயணம்."

🕊️ பேரன்பின் பாதைகள்...

ஞானமும், மதுர பக்தியும்
பரம்பொருளோடு கலக்கும்
இந்த உன்னத நிலையை நம் முன்னோர்கள் அழகான மூன்று நிலைகளில் விளக்கியுள்ளனர்.

🪷 அறிவின் வழியே ஜோதி நிலை (பிரம்ம ஜோதி)...

வள்ளலார் சுவாமிகள் அருட்பெருஞ்ஜோதியோடு கலந்ததும், ராகவேந்திரர்,
சதாசிவ பிரமேந்திரர் போன்ற மகாபுருஷர்கள் ஜீவ சமாதி அடைந்ததும் அறிவோடு அறிவு கலந்த "ஜீவ பிரம்ம ஐக்கிய" நிலை.

🪷 அன்பின் வழியே மதுர பக்தி (நாயக-நாயகி பாவம்)...

இறையடியார்களான அப்பர் பெருமானும், சௌராஷ்டிரா குல குரு ஶ்ரீமன் நடன கோபால நாயகி சுவாமிகளும் தங்களை நாயகிகளாகப் பாவித்து இறைவனை நோக்கிப் பாடி பாடி அடிப்பதம் அடைந்தார்கள்.

🪷 பெண் இறையடியார்களான ஆண்டாள் அரங்கநாதனோடும், மீனாட்சி அம்மை சொக்க நாதனோடும் கலந்தது இந்த மதுர பக்தியின் உச்சம்.

🪷 ஆரியன்காவு புஷ்கலா தேவியும் தர்ம சாஸ்தா மீது கொண்ட எல்லையற்ற பிரமையால், தன் ஆத்மாவையே பகவானுக்கு நிவேதனமாக்கி இந்த ஐக்கிய நிலையை அடைந்தார்.

💎 இந்த இரண்டு பக்தி நிலையையும் கடந்த அதேநேரத்தில் இரண்டும் சங்கமித்த ஓர் அத்வைத
நிலையும் இருக்கிறது...!

மதுர பக்தியும், பிரம்ம ஜோதியும் சங்கமித்த அத்வைத நிலையில்
பகவான் ரமணர் தேகம், சித்தம் கடந்த நிலையில் வாழ்ந்தவர்.

அவர் அருணாசலத்தையே நாயகனாக பாவித்து 'அக்ஷரமணமாலை' பாடியபோது, மதுர பக்தியின் வடிவமாகத் திகழ்ந்தார்.

அவரே உடல் நீத்தக் கணத்தில், வானில் எழுந்த ஒளிப்பிழம்பாக அருணாசல மலையில் கலந்த போது, ஜோதி வடிவமாக பிரம்ம ஜோதியாக காட்சி அளித்து மறைந்தார்.

ஆக, அவரே மணமகன், அவரே மணமகள், அவரே ஜோதி...!
அவரே "தத் த்வம் அஸி" யாக வாழ்ந்து காட்சியளித்தார்...!

🙆 இன்றைய இளைய தலைமுறைக்கு தெய்வீகத் திருமணங்கள் சொல்லும் பாடம் என்ன?

இன்றைய வேகமான உலகில், உறவுகளுக்குள் எளிதில் விரிசல் விழுவதையும், தற்காலிக ஈர்ப்புகளைக் காதல் என்று ஏமாறுவதையும் இளைஞர்கள் பார்க்கிறார்கள். தெய்வீகத் திருமணங்கள் உங்களுக்குக் கற்றுத் தரும் பாடம் என்னவென்றால்...

❗1. "நிபந்தனையற்ற அர்ப்பணிப்பு"

உண்மையான அன்பு என்பது எதிர்பார்ப்புகளைக் கடந்தது. புஷ்கலை சாஸ்தாவிடம் காட்டிய அன்பு எதையும் கோரவில்லை; தன்னை முழுமையாக ஒப்புவித்தது.

❗2. "உள்முக அமைதி"

வெளி உலகப் பொருட்களிலும், மனிதர்களிடமும் தேடும் சுகம் தற்காலிகமானது. உண்மையான சுகம் உங்கள் ஆன்மாவிற்குள் தான் இருக்கிறது என்பதை உணர்வது தான் விவேகம். விவேகத்தால் உணர்ந்த உண்மையை எந்த சூழ்நிலையிலும், தனது கவனத்தை அந்த உண்மையிலிருந்து அகலாமல் பார்த்துக் கொள்வது தான் ஞான வைராக்கியம்.

❗3. "உயர்ந்த இலக்கு...

காமத்தையும், உலகியல் ஆசைகளையும் தாண்டி, ஒரு உன்னதமான இலக்கை நோக்கி உங்கள் மனதை ஒருமுகப்படுத்த (ஏகாக்கிரதை) பழகிக் கொள்ளுங்கள்.

🎯 இதில் நமக்கான பாடம்...

> "மனிதத் திருமணங்கள் உடல்களையும் குடும்பங்களையும் இணைக்கும் உலகியல் பந்தம். தெய்வீகத் திருமணங்களோ, எல்லையற்ற பிரபஞ்சப் பேரன்போடு நம் ஆன்மாவைக் கரைத்து பந்தங்களிலிருந்து விடுதலை செய்யும் ஞான பந்தம்...!

சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

🪷🪷🪷🪷🪷

© "ஆரியன்காவு ஓர் ஆன்மிகப் பூமி" என்ற நூலில் இருந்து....

❔❗ கேள்வி பதில் – 11> தொடரும்...

கேரளம் முழுவதும் "ராமாயண மாசம்”மலையாள மாதமான'காகிண்டகம்' உடன் தொடங்கி இருக்கிறது.இந்தப் புனித மாதத்தில், கேரளா முழுவதும்...
19/07/2026

கேரளம் முழுவதும்
"ராமாயண மாசம்”

மலையாள மாதமான
'காகிண்டகம்' உடன் தொடங்கி இருக்கிறது.

இந்தப் புனித மாதத்தில், கேரளா முழுவதும் உள்ள வீடுகளிலும் கோவில்களிலும் தினமும் 'அத்யாத்ம ராமாயணம்' பாராயணம் செய்யப்படுகிறது.

பக்தர்கள் ஸ்ரீ ராமர் மற்றும்
அவரது சகோதரர்களான
பரதன், லட்சுமணன், சத்ருகனன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களையும் தரிசிப்பார்கள்.

இந்த ஆண்டு ராமாயண மாதம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நிறைவடையும்.

'ராமாயணம்' என்பது மனித விழுமியங்கள் மற்றும் இலட்சியங்களின் கண்ணாடி.

இந்த அத்யாத்ம கைங்கரியத்தில் நாமும் உளமார நம் உள்ளத்தில் ராம நாமம் சொல்லி பங்கு கொள்வோம்.

ராம ராம ராம் ராம் ..
ஜெயராம ராம ராம் ராம்...
🪷🪷🪷🪷🪷

வரும் 19–07–2026 ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05:30 மணிக்கு பகவானின் உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு பகவானுக்கு அஷ்...
17/07/2026

வரும் 19–07–2026 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05:30 மணிக்கு பகவானின் உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு பகவானுக்கு அஷ்ட அபிஷேகங்கள் நடைபெறும். அனைவரும் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
🪷🪷🪷🪷🪷

🙏 இன்று தமிழ் ஆடி மாதம் 1 ஆம் தேதி.  மலையாள தேசத்தில் இதேநாளை  கர்க்கிடகம் 1 ஆம் தேதி "இராமாயண பாராயண மாதம்" என்று அழைக்...
17/07/2026

🙏 இன்று தமிழ் ஆடி மாதம்
1 ஆம் தேதி.

மலையாள தேசத்தில் இதேநாளை கர்க்கிடகம் 1 ஆம் தேதி "இராமாயண பாராயண மாதம்" என்று அழைக்கிறார்கள். இம்மாதம் முழுவதும் கோவில்களில் வீடுகளில் இராமாயண பாராயணம் செய்து வழிபடுவது புண்ணியம் நிறைந்த வழிபாடாகும்.

இந்த நல்ல நாளில் ஐயனின் கோவிலில் வழங்கப்படும் மூங்கில் இலைப் பிரசாத மகிமையை அறிந்து கொண்டு நாமும் புண்ணியம் பெறுவோம். 🙏

–––––

🌿 ஆரியன்காவு திருத்தலம் – கேள்வியில் தொடங்கி, ஞானத்தில் முடியும் ஓர் ஆன்மிகப் பயணம்... 🌿

​❔ கேள்வி > 9:

​ஆரியன்காவு திருத்தலத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உன்னதமான, மிக விசேஷமான பிரசாதம் எது? மூங்கில் இலைப் பிரசாத மகிமை என்ன?

​பதில் > 9 👉

​ஆரியன்காவு அன்னதானப் பிரபுவின் சன்னதியில் அவரது திவ்ய தரிசனத்தை கண்டு மெய் மறந்து நிற்கும் வேளையில், கருவறையின் தெய்வீக அதிர்வுகளோடு சாந்திமார் (அர்ச்சகர்கள்) மூலஸ்தானத்தில் இருந்து வெளியே வருகிறார்கள்.
அங்கே, இயற்கையின் மடியில் உருவான ஒரு மூங்கில் இலையில் அர்ச்சனை பிரசாதங்களை வைத்து நமக்கு வழங்குகிறார்கள்.

​பிரசாதத்தைப் பெறுவதற்கு முன்னால், ஐயனின் அபிஷேக தீர்த்தம் நம் கரங்களில்... ஆம் அந்த தீர்தத்தைப் பருகி அதை உள்வாங்கிய பிறகு, மூங்கில் இலையில் மலர்ந்திருக்கும் சந்தனம், விபூதி, குங்குமம் மற்றும் அர்ச்சனைப் பூக்களை நாம் பெறுகிறோம்.

அந்தத் தூய சந்தனத்தை விரலால் தொட்டு நெற்றியில் திலகமிடும் கணத்தில்... உடலையும் உள்ளத்தையும் தாண்டி, ஆன்மாவை நனைக்கும் ஒரு தெய்வீகக் குளிர்ச்சியும் மென்மையும் நம் ஹிருதயத்தை ஆட்கொள்கிறது...!

இத்தகைய உன்னதமான நிலையைத் தான் நம் முன்னோர்கள் "சந்தன சீதள ஹிருதயம்" (என் ஹிருதயம், குளிர்ந்த சந்தனம் போன்ற பேரானந்த அமைதியில் இருக்கிறது ) என்று போற்றினார்களோ...!

​🔱 மும்மூர்த்திகளின் அருட்கொடை ...

​பிரசாதத்தின் அளப்பரிய மகிமையைப் பற்றி அங்கிருந்த மேல்சாந்திமார்களிடம் பயபக்தியோடு கேட்டறிந்தோம். அவர் சாந்தமான குரலில் அதன் மகிமையை விளக்கினார்.

இங்கு கருவறையில் தர்மசாஸ்தா, சிவபெருமான், புஷ்கலா தேவி ஆகிய மூவரும் பிரதானமாய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். நீங்கள் பெற்றுக் கொள்ளும் இந்த ஒற்றை மூங்கில் இலை பிரசாதம் சாதாரணமானதல்ல.

தர்மசாஸ்தாவுக்குப் பிரீதியான – தெய்வீகச் சந்தனம்.

முக்கண்ணனான சிவனுக்குப்
பிரீதியான – பஸ்பம் ( திருநீறு )

ஆதிசக்தி புஷ்கலா தேவிக்குப் பிரீதியான – மங்கள குங்குமம்.

இந்த மூன்று மகா சக்திகளின் அருளும் ஒன்றாக இணைந்துதான் இந்த அர்ச்சனைப் பூக்களோடு உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

​✨ அறிவியலும் ஆன்மிகமும் இணைந்த பிரசாத மகிமை...
​நெற்றியில் இட்ட கணமே நம் அகக் கண்ணைத் திறக்கும் அந்தச் சந்தனத்தின் குளிர்ச்சிக்கு ஒரு உன்னத பின்னணி உண்டு.

இங்கு இயற்கைச் சந்தனக் கட்டைகளைத் தார்மீக நெறிகளோடு முறைப்படி கற்பாறைகளில் தேய்த்து, அரைத்து சந்தனம் தயாரிக்கப்படுகிறது.

​அதைவிட முக்கியமாக, இந்தச் சந்தனம் ஐயனின் திருமேனியைத் தழுவி "சந்தனக் காப்பாகவும், களபாபிஷேகமாகவும்" சாத்தப்படுகிறது. கருவறையின் இருளுக்குள் மந்திர உச்சாடனங்களின் அதிர்வலைகளும், யாகங்களின் நேர்மறை ஆற்றலும், விக்கிரகத்தில் குடிகொண்டுள்ள பிராண சக்தியும் காந்த அலைகளாகப் பெருகி நிற்கும்.

அந்த மின்காந்த ஆற்றலையும், பிரபஞ்ச சக்தியையும் ஐயனின் திருமேனியில் உறைந்திருக்கும் இந்தச் சந்தனம் முழுமையாகத் தன்வசப்படுத்தி தன்னில் ஈர்த்துக் கொள்கிறது!

​🛐 பயபக்தியோடு பிரசாதத்தைப் பெறுவோம்...

​எனவே, ஆரியன்காவு செல்லும் பக்தர்களே... சாந்திமாரிடம் இருந்து நீங்கள் பெறும் இந்த மூங்கில் இலை பிரசாதம் வெறும் பொருளல்ல.

சாஸ்தாவின் பிராண சக்தியையும், மும்மூர்த்திகளின் பேரருளையும் தாங்கி நிற்கும் ஒரு தெய்வீகக் கவசம்...!

​நாமும் ஐயனின் திருமேனியை ஸ்பரிசித்த சந்தனப் பிரசாதத்தை நெற்றியில் தரித்து, பூக்களைக் கைகளில் ஏந்திக் கொண்டு, மூங்கில் இலை பிரசாதத்தோடு கருவறையை வலம் வரும் போது... நம் சாதாரண உடல் குளிர்ச்சியையும் கடந்து, நம்
ஆத்மஹிருதயம் நெகிழ்ந்து உருகுவதை உணர முடிந்தது. அது தான் ஆரியன்காவு ஐயன் நமக்கு வாரி வழங்கிய உன்னத பிரசாத மகிமையன்றி வேறென்ன...!

​🌿 ஆரியன்காவு ஐயனின் பேரருள் உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் எப்போதும் நிறைந்திருக்கட்டும்.

​❝ சுவாமியே சரணம் ஐயப்பா! ❞ 🙏
​🪷🪷🪷🪷🪷
இதில் ஒரு பாடம் இருக்கிறது.

அந்த மூங்கில் இலை -
அது காட்டில் வளர்ந்த ஒரு சாதாரண இலை தான். அதற்கென்று தனி அலங்காரமோ, விலையோ இல்லை.

ஆனால் அந்த தெய்வீக சக்தியை தாங்கும் பாத்திரமாக
தெய்வம் ஒரு தங்க பாத்திரத்தை தேடவில்லை. ஒரு சாதாரண இலையை தேர்ந்தெடுத்தது.
அந்த சந்தனம் கல்லில் தேய்க்கப்பட்டு தான் மணம் பிறந்தது. வலி இல்லாமல் எதுவும் புனிதமாவதில்லை.

இன்று நம் கையில் இந்த மூங்கில் இலை பிரசாதம் வரும்போது, ஒரு நிமிடம் நினைவில் வையுங்கள்.

தெய்வம் பெரிய பாத்திரத்தை தேடவில்லை. ஒரு சாதாரண இலையை தேர்ந்தெடுத்தது.

அமைதியான வாழ்க்கைக்கு நம்முடைய பந்த பாசம், விருப்பு வெறுப்பு ,பதவி, பெயர்,புகழ் என்று எதுவும் முக்கியமில்லை.

நான் யார்? என்பதை அறிந்து கொள்வதே ஞானம்.

நீங்கள் இப்போது சந்தன
கட்டை போல் தேய்க்கப்பட்டு கொண்டிருந்தாலும் பயப்படாதீர்கள். அதுவே உங்கள் நறுமணத்தின் ஆரம்பம்.

சாந்தமாக இருங்கள்.
அதுவே போதும்.
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

❔ கேள்வி - பதில் -10 >> தொடரும்...

ஐயனின் திருமேனி ரகசியம்...🌿ஆரியன்காவு திருத்தலம்– கேள்வியில் தொடங்கி, ஞானத்தில் முடியும் ஓர் ஆன்மிகப் பயணம்...🌿––– ❔கேள்...
16/07/2026

ஐயனின் திருமேனி ரகசியம்...

🌿ஆரியன்காவு திருத்தலம்– கேள்வியில் தொடங்கி, ஞானத்தில் முடியும் ஓர் ஆன்மிகப் பயணம்...🌿
–––

❔கேள்வி 8 :– ஆரியன்காவு ஐயனின் திருமேனி எதனால் ஆனது? (கருங்கல் / சுதை / சிலை / தரு) அதன் மகிமை / அதிசயம் என்ன?

பதில்:-8 👉

​🛕 ஆரியன்காவு ஐயனின் திருமேனி இரகசியமும்... பரசுராமர் ஸ்தாபித்த கற்சிலைகள் ஈர்த்து வைத்துள்ள அறிவியல் அதிசயமும் என்றும் நினைத்து நினைத்து மனமுருகும் மகிமை நிறைந்தவைகள்.

நமது ஆரியன்காவு
திருக்கோவில் மூலஸ்தானத்தில் பகவான் ஶ்ரீ தர்ம சாஸ்தாவின் பஞ்சலோகத்தினால் ஆன சிலா ரூபம் தான் வழிபாட்டில் உள்ளது.
​இதன் பின்னணியில் ஒரு மாபெரும் ஆன்மிக அதிசயமும் வரலாற்றுப் பின்னணியும் ஒளிந்துள்ளது!

மிக விசேஷமாக, முகப்பில் இருக்கும் இந்த பஞ்சலோகத் திருமேனிக்கு பின்புறம் உள்ள பெட்டகத்தில், மகரிஷி பரசுராமரால் கருங்கல்லில் பிராண பிரதிஷ்டை செய்து ஸ்தாபிக்கப்பட்ட பகவானின்
"ஆதி ரூபம்" இன்றும் இருக்கிறது.

​🎨 தெய்வத் திருமேனிகளின் வகைகள்...

​பொதுவாக, இறை வடிவங்களை உருவாக்க கருங்கல், பஞ்சலோகங்கள், சுதை (சுண்ணாம்புச் சாந்து),
மரம் (தரு) ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

​கருங்கல்: ஆகம விதிகளின்படி, நிலையான மூலவர் எப்போதும் கருங்கல்லில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது மரபு. இது பல நூற்றாண்டுகள் கடந்தும் சிதையாமல், மந்திர உச்சாடனங்கள் மற்றும் அபிஷேகங்களின் ஆற்றலைத் தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்தும் சக்தி கொண்டது.

​சுதை: எளிதில் சிதைவடையக்கூடியது என்பதால், கோபுரங்களில் பெரிய அளவிலான உருவங்களை வடிவமைக்கவும், அவ்வப்போது வண்ணம் தீட்டவும் பயன்படுகிறது.

​தரு (மரம்): தகுதி வாய்ந்த மரத்தால் செய்யப்படும் சிலைகள் சில குறிப்பிட்ட தலங்களில் மட்டுமே இருக்கும். (உதாரணம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர்).

​பஞ்சலோகம்: உற்சவ மூர்த்திகளாகவும், வீடுகளில் வழிபடும் விக்கிரகங்களாகவும் பயன்படுகின்றன.

​🪵 ஒரு கல் எப்படி கடவுளாகிறது?
(288 நாட்கள் ஆன்மிக அறிவியல்)

​ஆரியன்காவு கோயிலின் தந்திரிமார் மற்றும் சாந்திமார்களிடம் (அர்ச்சகர்கள்) இந்த ஆதி ரூபம் குறித்துக் கேட்டபோது, ஒரு கற்சிலை மூலவராக மாறுவதற்குப் பின்னால் உள்ள வியப்பூட்டும் அறிவியல் மற்றும் ஆன்மிக வழிமுறைகளை விளக்கினர்.

​சிற்ப சாஸ்திரப்படி, வடிக்கப்பட்ட ஒரு சிலையை அப்படியே பிரதிஷ்டை செய்துவிட முடியாது.
அதற்கு முன்னதாக 6
மண்டலங்கள் (6 x 48 = 288 நாட்கள்) பல்வேறு "வாசங்களில்" (மூழ்கடித்து) வைக்கப்பட்டு பக்குவப்படுத்தப்படுகிறது.

​ஜலவாசம் (48 நாட்கள் - நீர்):- புண்ணிய நதி மற்றும் கோயிலின் தீர்த்த நீரில் சிலை அமிழ்த்தி வைக்கப்படும். அறிவியல் பூர்வமாக, சிலையில் ஏதேனும் நுண் துளைகளோ அல்லது பிளவுகளோ இருந்தால், நீர் உள்ளே புகுந்து காற்றுக்குமிழிகளை வெளியேற்றும். இதன் மூலம் அது 'பின்னமான' (சேதமடைந்த) சிலை என்று கண்டறியப்பட்டு, வழிபாட்டுக்கு தவிர்க்கப்படும்.

​தானியவாசம் (48 நாட்கள் - நவதானியம்):- சிலை மூழ்கும் அளவுக்கு நவதானியங்களுக்குள் வைக்கப்படும். தானியங்கள் வெளியிடும் வெவ்வேறு விதமான வெப்பத்தைத் தாங்கும் அளவுக்கு சிலைக்கு வலிமை இருக்கிறதா என்பது இதன் மூலம் சோதிக்கப்படும்.

​ரத்ன வாசம் (48 நாட்கள் - நவரத்தினங்கள்):- நவகிரகங்களின் அம்சமான நவ ரத்தினங்களின் தெய்வீகக் குணங்களை சிலை இதன் மூலம் பெறுகிறது.

​தன வாசம் (48 நாட்கள் - பொற்காசுகள்):- ஐஸ்வர்ய அதிர்வுகளை உள்வாங்க பொற் காசுகளுக்குள் வைக்கப்படும்.

​வஸ்திர வாசம் (48 நாட்கள் - பட்டாடைகள்):- மென்மையான பட்டுத் துணிகளால் சிலை ஆடை வாசம் செய்யும்.

​சயன வாசம் (48 நாட்கள் - படுக்கை):- 'ஹம்சதூளிகா மஞ்சம்' எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன மென்மையான படுக்கையில், மான் தோல் விரித்து அதன் மேல் சிலை கிடைமட்டமாக வைக்கப்படும். இதன் மூலம் சிலையின் சமநிலை சோதிக்கப்படும்.

​🌸 கண் திறப்பும்...
பிராண பிரதிஷ்டையும்...

​இந்த 288 நாட்களுக்குப் பிறகு, பிராண பிரதிஷ்டைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சிலைக்கு
'கண் திறக்கும்' புனித நிகழ்வு நடைபெறும். அதற்கு முன்னதாக
7 நாட்கள் 'புஷ்பாதிவாசத்தில்' (நறுமண மலர்களில்) சிலை வைக்கப்படும். இதனால் மலர்களின் மூலிகைச் சத்துக்கள் சிலையினுள் ஊடுருவுகின்றன.
​இறுதியாக, கும்பாபிஷேகத்தின் போது யாகசாலை பூஜையில் வைக்கப்பட்ட புனித நீர் மற்றும் காப்பு நாண் மூலம் சுவாமிக்கு 'பிராண பிரதிஷ்டை' செய்யப்பட்டு, முழுமையான தெய்வீகத் தன்மை ஊட்டப்படுகிறது.

​🧠 வாழ்வியல் பாடம்:-
​வெறும் கல்லாக இருந்த ஒன்று, இத்தனை சோதனைகளையும் பக்குவங்களையும் கடந்த பிறகுதான் வணங்கத்தக்க 'இறைவனாக' மாறுகிறது.

🪷 மனிதனும் தன் வாழ்வில் ஏற்படும் சோதனைகளைக் கடந்து, பக்குவமடைந்தால் மட்டுமே உயர்ந்த நிலையை அடைய
முடியும் என்பதைத் தான்
இந்த வழிமுறைகள் நமக்கு உணர்த்துகின்றன.

​அதனால்தான், பகவானின் முன்னால் நாம் நிற்கும்போது, அந்த கருங்கல் சிலாரூபத்தில் உறைந்துள்ள அத்தனை தெய்வீக அதிர்வுகளையும் நமது தேகம் உள்வாங்கிக் கொள்வதற்காகவே, ஆசார அனுஷ்டானங்களுடன் (ஆடைக் கட்டுப்பாடுகளுடன்) ஆலயத்திற்கு வருமாறு நம் முன்னோர்கள் பணித்துள்ளனர்.

👉 இதே பக்கத்தில் 26–ஏப்ரல்–2026 தேதி வெளிவந்துள்ள
"நிர்மால்ய சோதனா" பதிவில் பரசுராமர் ஸ்தாபித்த சிலையை அமாவாசை அன்று பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட்டால் ஏற்படும் நன்மைகள் பற்றிய விபரங்கள் இருக்கின்றன.

​- ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
🙏
🪷🪷🪷🪷🪷

❔கேள்வி - பதில் >> 9 தொடரும்....

🙏 ஆரியன்காவு ஶ்ரீ தர்ம சாஸ்தா ஆலயத்திலும், 🙏 மாம்பழத்துறை ஸ்ரீ புஷ்கலா பகவதி ஆலயத்திலும்  17–07–2026 முதல் 16–08–2026 வர...
11/07/2026

🙏 ஆரியன்காவு ஶ்ரீ தர்ம சாஸ்தா ஆலயத்திலும்,

🙏 மாம்பழத்துறை ஸ்ரீ புஷ்கலா பகவதி ஆலயத்திலும்

17–07–2026 முதல் 16–08–2026 வரை ஆடி மாதம் முழுவதும் "இராமாயண பாராயணம்" நடைபெறும். அனைவரும் பங்கு கொள்ள வேண்டுகிறோம்.

👉 ஆரியன்காவு ஆலயத்தில் கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதால், அதற்கு தகுந்தாற் உங்கள் தரிசன நேரத்தையும் நாட்களையும் முடிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.

சுவாமி சரணம் 🙏
🪷🪷🪷🪷🪷

யோகியும் .... போகியும்".... 🌱🌱ஆரியன்காவு திருத்தலம்– கேள்வியில் தொடங்கி, ஞானத்தில் முடியும் ஒரு ஆன்மிகப் பயணம்...🌱🌱 ❔ கே...
10/07/2026

யோகியும் .... போகியும்"....

🌱🌱ஆரியன்காவு திருத்தலம்– கேள்வியில் தொடங்கி, ஞானத்தில் முடியும் ஒரு ஆன்மிகப் பயணம்...🌱🌱

❔ கேள்வி 6 :
ஆரியன்காவு ஶ்ரீ தர்ம சாஸ்தா ஐயன் கருவறையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் திருக்கோலத்தை விவரிக்க வேண்டுகிறேன்.

பதில்:–👉
ஆரியன்காவில் அருள் பாலிக்கும் ஸ்ரீ தர்ம சாஸ்தா, கேரள தாந்திரீக மரபின் "தந்திர சமுச்சயம்" ஆகமப்படி பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, "மதகஜ வாகன ரூபத்தில்" காட்சி தருகிறார்.

மதம்பிடித்த யானையை அடக்கி, அதன் மீது வேடர் ரூபத்தில், மாப்பிள்ளைக் கோலத்தில் அமர்ந்திருக்கும் இந்த அரிய திருக்கோலமே ஒரு மௌன உபதேசம் தான்.

👉 பகவான், மாப்பிள்ளை கோலத்தில் நெற்றியில் திலகமிட்டு, ஞான ஜூவாலையாக ஜொலிக்கும் அடையாளமாக சிரசில் ஜூவாலா கிரீடம் அணிந்து, வலது கரத்தில் மாலையில் மட்டுமே மலரும் நீலோற்ப மலர் ஏந்தி, வலது காலை கீழே வைத்துக் கொண்டும், இடது காலை மடித்து பீடத்தில் வைத்துக் கொண்டு இடுப்பிற்கும் மடித்த காலுக்கும் சேர்த்து "வீராசனம்" எனும் யோகப்பட்டயம் அணிந்து, இடது கரத்தை இடது காலின் மேல் வைத்து கொண்டு, அந்தக் கரத்தால் தனது திருவடியை காட்டி, என்னிடம் சம்பூர்ண சரணாகதி அடைந்தவர்களுக்கு எப்போதும் மனநிறைவும், நிம்மதியும் பேரானந்தத்தையும் வழங்குவேன் என்ற ரூபத்தில் காட்சி தருகிறார்.

அவருக்கு இடப்பாகத்தில் மணப் பெண் அலங்காரத்தில், சர்வ லட்சணங்களுடன் வலது கரத்தில் கதம்பவன மலர் செண்டு ஏந்தி, எழில் பிரகாசம் பொங்கக் காட்சியளிக்கிறார்.

பகவானின் வலப்புரத்தில், எம்பெருமான் சிவபெருமான் அழகு சிலா ரூபத்தில் காட்சி தருகிறார்.

–––
❔கேள்வி:–7 ஆரியன்காவு ஶ்ரீ தர்ம சாஸ்தாவுக்கும் சபரிமலை ஶ்ரீ ஐயப்பனுக்கும், இடையே உள்ள தத்துவ ஒப்பீடு, போக நிலை, யோக நிலை பற்றிய தத்துவ நிலை , இரு நிலைகளுக்கும் உள்ள வேறுபாடு மற்றும் இரு நிலைகளுக்குமான கல்யாண குணங்களை அறிய விரும்புகிறேன்.

பதில்:–👉 ஆரியன்காவு ஸ்ரீ தர்ம சாஸ்தா மற்றும் சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் ஆகிய இரு மூர்த்திகளும் ஒருவரே என்றாலும், அவர்கள் வீற்றிருக்கும் கோலமும், தத்துவமும், வழிபாட்டு முறைகளும் முற்றிலும் மாறுபட்டவை.

"ஆரியன்காவு சாஸ்தாவும் சபரிமலை ஐயப்பனும்"

ஓர் ஆன்மீக தத்துவ ஒப்பீடு செய்தால், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள சாஸ்தா திருத்தலங்களில், ஆரியன்காவும் சபரிமலையும் மிக முக்கியமானவை.

ஒரே பரம்பொருள் இரு வேறு நிலைகளில் நின்று பக்தர்களுக்கு எப்படி அருள் பாலிக்கிறது என்பதை உணர்த்தும் உன்னத தத்துவக் களஞ்சியம் இது.

👉 ஆரியன்காவு ஸ்ரீ தர்ம சாஸ்தா 'மாப்பிள்ளை' கோலம் (போக
நிலை)

ஆரியன்காவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தர்ம சாஸ்தா, கேரள தாந்திரீக மரபின் "தந்திர சமுச்சயம்" ஆகமப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு, மதகஜ வாகன ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதம் பிடித்த
யானையை அடக்கி, அதன் மீது
வேடர் ரூபத்தில், மாப்பிள்ளைக் கோலத்தில் அமர்ந்திருக்கும் இந்த அரிய திருக்கோலமே ஒரு மௌன உபதேசம் தான்.

👉 அலங்காரமும் தத்துவமும்.

• கோலம்: பகவான் மாப்பிள்ளை கோலத்தில் நெற்றியில் திலகமிட்டு, ஞான ஜூவாலையாக ஜொலிக்கும் ஜூவாலா கிரீடத்தை சிரசில் அணிந்து பூரணமாக காட்சியளிக்கிறார்.

• அமர்ந்த நிலை: வலது காலை கீழே தாழ்த்தி வைத்துக் கொண்டும், இடது காலை மடித்து பீடத்தில் வைத்துக் கொண்டு இடுப்பிற்கும் மடித்த காலுக்கும் சேர்த்து "வீராசனம்" எனும் யோகபட்டயம் அணிந்துள்ளார்.

• முத்திரைகள்: வலது கரத்தில் மாலையில் மட்டுமே மலரும் நீலோற்பல (நீலோர்ப்ப) மலரை ஏந்தியுள்ளார். இடது கரத்தை இடது காலின் மேல் வைத்து, அந்தக் கரத்தால் தனது திருவடியைக் காட்டி, "என்னிடம் சம்பூர்ண சரணாகதி அடைந்தவர்களுக்கு எப்போதும் மனநிறைவும் நிம்மதியும் பேரானந்தமும் வழங்குவேன்" என்ற ஞான ஸ்ரூபமாக "தத்துவமஸி" யை வலியுறுத்துவனாகக் காட்சி தருகிறார்.

• பரிவாரங்கள்: அவருக்கு இடப்பாகத்தில் மணப் பெண் அலங்காரத்தில், சர்வ லட்சணங்களுடன் வலது கரத்தில் கதம்பவன மலர் செண்டு ஏந்தி புஷ்கலா தேவி (சௌராஷ்டிர குல தேவி) கொஞ்சும் எழில் பொங்க காட்சியளிக்கிறார்.

• பகவானின் வலது புரத்தில், எம்பெருமான் சிவபெருமான் அழகிய சிலா ரூபத்தில் காட்சி தருகிறார்.

• இங்கு சாஸ்தா கிரகஸ்தனாக , போக மூர்த்தியாக விளங்குகிறார்.

👉 சபரிமலை ஸ்ரீ ஐயப்பன். 'நைஷ்டிக பிரம்மச்சாரி' கோலம் (யோக நிலை)
சபரிமலையில் வீற்றிருக்கும் பகவான், ஆரியன்காவுக்கு முற்றிலும் மாறாக, உலக பந்தங்களை அறுத்த "நைஷ்டிக பிரம்மச்சாரி" (முழுமையான துறவற) கோலத்தில் யோகியாகக் காட்சியளிக்கிறார்.

👉 பகவானின் ரூபமும் தத்துவமும்.

• சின்முத்திரை: சபரிமலை ஐயப்பன் தனது வலது கரத்தில் 'சின்முத்திரை' தாங்கி நிற்கிறார். பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைந்த இந்த முத்திரை, ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று (தத்துவமஸி) என்பதை மௌனமாக உபதேசிக்கிறது.

• யோகப் பட்டம்: இரண்டு கால்களையும் மடித்து, குத்துக்காலிட்டு அமர்ந்து, இடுப்பையும் கால்களையும் சேர்த்து யோகப்பட்டம் (யோக தாரணைப் பட்டி) தரித்து, பிரபஞ்ச சக்தியைத் தன்னுள் ஒடுக்கி தவம் செய்யும் யோக ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

• சரண் தத்துவம்: உலக ஆசைகளைத் துறந்து, இருமுடி சுமந்து, பதினெட்டு படிகள் ஏறி வரும் பக்தர்களுக்குத் தன்னையே ஞானமாக அள்ளித் தரும் "தத்துவமஸி" தத்ரூபனாக காட்சி தருகிறார்.

👉 சபரிமலையானின் கல்யாண குணங்கள்.

• சமபாவனை (சமத்துவம்): சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளின்றி "சுவாமியே சரணம் ஐயப்பா" என்று சரணடையும் அனைத்து பக்தர்களையும் 'மணிகண்டனாகவே' (சமமாக) பார்க்கும் உன்னத குணம்.

• கருணை வாரிதி: விரதமிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களின் கர்ம வினைகளைத் தீர்த்து, அவர்களுக்கு மன அமைதியையும், ஆன்ம ஞானத்தையும் வழங்குபவர்.

• சரணாகதி வத்சலன்: "அஹம் பிரம்மாஸ்மி" மற்றும் "தத்துவமஸி" (நீயே அதுவாக இருக்கிறாய்) என்ற மஹாவாக்கியத்தின் படி, தன்னை நாடி வரும் பக்தனைத் தன்னுள்ளும் , தன்னை அவனுள்ளும், இரண்டற்று, நாம் ஒன்றென கணநேரமாவது உணர வைத்து கலந்து விடும் ஞானாசிரியர்.

👉ஆரியன்காவு என்பது இல்லறத்தில் இருந்து கொண்டே லௌகீகக் கடமைகளைச் செவ்வனே செய்து இறைவனை அடையலாம் என்ற "கர்ம யோகத்தை" உணர்த்துகிறது.

சபரிமலை என்பது உலக ஆசைகளைத் துறந்து, புலன்களை அடக்கி இறைவனுடன் கலக்கலாம் என்ற "ஞான யோகத்தை" உணர்த்துகிறது.

கோலங்கள் வேறானாலும், இரு தலங்களிலும் அருள்மழை பொழியும் பரம்பொருள் ஒன்றே!
சுவாமியே சரணம் ஐயப்பா!

–––

❔கேள்வி 8 >தொடரும்:...
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
🪷🪷🪷🪷🪷

10/07/2026

🌱🌿ஆரியன்காவு திருத்தலம் –. கேள்வியில் தொடங்கி, ஞானத்தில் முடியும் ஓர் ஆன்மிகப் பயணம்...🌿🌱

❔ கேள்வி:–5)
ஶ்ரீ தர்ம சாஸ்தா ராமரைப் போல்,கிருஷ்ணரை போல்
ஒரு அவதார புருஷரா?

பதில் : 👉 ஒரு அவதாரம் தன்னை உலகிற்கு எப்படிக் காட்டிக் கொள்கிறது?

இதற்கான பதிலை நமது இதிகாசங்களே நமக்குக் கற்றுத் தருகின்றன.

இராமாயணத்தில், பகவான் ஸ்ரீராமர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு சிறந்த மனிதனாகவே வாழ்ந்தார்.
"நான் இறைவன்" என்று எங்கும் அறிவிக்கவில்லை. தனது வாழ்க்கையையே தர்மத்தின் இலக்கணமாக மாற்றி, மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை உலகுக்குக் காட்டினார்.

மகாபாரதத்தில், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் வேறொரு பாதையை எடுத்தார். தேவையான தருணங்களில் தனது தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு நிகழ்வும் ஒரு உபதேசமாக மாறியது. ஒவ்வொரு செயலிலும் தர்மத்தின் ஆழ்ந்த ரகசியத்தை உலகிற்கு உணர்த்தினார்.

அப்படியானால், ஹரியும் ஹரனும் ஒன்றாய் வெளிப்பட்ட பகவான்
ஸ்ரீ தர்ம சாஸ்தா எவ்வாறு
நமக்கு உபதேசம் செய்கிறார்?

அவர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு ஆஸ்ரம நிலையையும் ஒரு ஆன்மிகப் பாடமாக மாற்றினார். பாலனாகவும், பிரம்மச்சாரியாகவும், இல்லறத்தின் அர்த்தத்தை உணர்த்துபவராகவும், இறுதியில் உலகுக்கே குருவாகவும் திகழ்ந்தார். ஒவ்வொரு நிலையிலும் மனித வாழ்வின் உயர்ந்த நோக்கம் என்ன என்பதை வாழ்ந்து காட்டினார். இறுதியில் தனது அவதாரத்தின் மையச் செய்தியை உலகிற்கு வெளிப்படுத்தினார்.

ஏனெனில்...

அவதாரம் என்பது அற்புதங்களை நிகழ்த்துவதற்காக மட்டும் அல்ல.

தர்மம் மறைந்து, மனிதன் அறியாமையால் தனது உண்மையான இயல்பை மறந்துவிடும் போது, இறைவன்
தன் உயர்ந்த நிலையிலிருந்து மனிதனின் நிலைக்கு இறங்கி வருகிறார். அது கருணையின் இறக்கம்.

ஆனால் அந்தப் பயணம் ஒருதிசை அல்ல.

அவர் நம்மிடம் வந்து நம்மோடு இருப்பதற்காக மட்டுமல்ல; நம்மையும் தன்னுடைய உண்மை நிலைக்கு உயர்த்துவதற்காகவே அவதரிக்கிறார்.

அதனால்தான் பகவான் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் முழு வாழ்க்கையும் ஒரு மாபெரும் உபநிஷத்.

அந்த உபநிஷத்தின் சாரம்
ஒரு மஹாவாக்கியத்தில் அடங்கியுள்ளது:

"தத் த்வம் அஸி" — "அது நீயே."

இது வெறும் தத்துவச் சொல் அல்ல.

நீ தேடிக் கொண்டிருக்கும் இறை உண்மை உனக்கு வெளியே இல்லை. உன் உள்ளத்தில் ஒளிரும் அதே பரம்பொருளே நீ என்பதே இந்த மகாவாக்கியத்தின் அழைப்பு.

எனவே, சாஸ்தாவின் அவதாரம் ஒரு வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல.

அது ஒவ்வொரு மனிதனையும் அறியாமையிலிருந்து ஞானத்திற்கும்,
பயத்திலிருந்து சுதந்திரத்திற்கும், தனிமையிலிருந்து பரம்பொருளோடு ஒன்றுபடும் ஆனந்த நிலைக்கும் அழைத்துச் செல்லும் கருணையின் பயணம்.

சுவாமியே சரணம் ஐயப்பா! 🙏

–––
❔கேள்வி >>6 தொடரும்....

Address

Chennai
600080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ariyankavu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share