11/05/2026
💧💦 ஆரியன்காவு கோமுகமும் 💧💦
💧💦 பாகீரதியின் கோமுகமும் 💧💦
🗻 பாகீரதி , இமயமலை
எனும் கைலாய மலையில் உயிர்ப்புடன் உயிரோட்டமாக ஊற்றெடுத்து பெருகி வரும் நதியாகும். அந்த முகிலவன் மலையில் அதன் ஆதி ஊற்று உற்பத்தியாகுமிடம் தான் “கோமுகம்” என்று அழைக்கப்படுகிறது.
கங்கா மாதாவின் ஆதி ஊற்றான பாகீரதி, பனி படர்ந்த கங்கோத்ரி மலைத் தொடர்களில்
30 கி.மீ. நீளமும், 4 கி.மீ
அகலமும் கொண்ட இந்த கோமுகத்திலிருந்து தான் புறப்படுகிறாள்.
இயற்கையிலேயே பசுவின் முகத்தை போன்ற அமைப்பு கொண்ட பனிப் பாறைகளின் நடுவிலிருந்து, கங்கைத் தாய் வெளிப்படுகிறாள். அங்கே உருகி வருவது பனி நீர் மட்டுமல்ல, அது அருளே உருவான உயிர் சக்தி.!
💧 இந்த பாகீரதியின் உற்பத்தி ஸ்தானத்தில் தான் எம்பெருமானின் சதுரங்க சக்திகளும், பிரம்மாவின் நான்கு சிரசுகளிலும் நிலை பெற்று நிலைத்து நிற்கின்றன.
இதனால் தான் மனிதப் பிறவிகளின்
பாவங்களை போக்கும்
புண்ணிய நதிகள் கூட, இந்த கோமுகத் தீரத்தில் தான் ஒன்று கலந்து, தங்களை தூய்மைப்படுத்திக் கொள்வதாக புராணங்கள் கூறுகின்றன.
🧘 எம்பெருமானின் திருவடிகளில் , பாகீரதியின்
இந்த யதாஸ்தானத்தில் தான்,
தேவாதி தேவர்களும் சிவ
கணங்களும், பூத கணங்களும்
எந்நாளும் தவம் செய்து கொண்டிருக்கின்றன
என்பது ஐதீகம் .
அந்தக் கொடும் பனிவனத்தில்
அந்த கோமுக வாயிலில் நின்று
நாம் செய்து கொள்ளும் பிரார்த்தனைகளை , வேண்டுதல்களை ஏற்கத் தான் எம்பெருமான் இங்கே நிச்சலமாக காத்து நிற்கின்றார். நம் மன உணர்வால் வெளிப்படுத்தும் நம் பிரார்த்தனைகளை, வேண்டுதல்களை நிறைவேற்ற,
அதை செயல்படுத்துவதற்காக
எம்பெருமானின் ஆணைக்காக
சர்வ சக்திகளும் கோமுக
வாயிலில் காத்திருக்கின்றனர்.
அந்த நம்பிக்கையில் தான்
இந்தக் கோமுகத்தைக் காண
இயற்கையோடு இயைந்து
கடுமையாக போராடி, கடும்
குளிரையும், உச்சபட்ச
சிரமங்களையும் கடந்து
வருகிறார்கள் பக்தர்கள்.
அந்த நம்பிக்கை தான் இந்த
பனி மலைகளை எளிதாக
கடக்கச் செய்கிறது.
அந்த நம்பிக்கை தான்
எம்பெருமானின் அருள்
மூலத்தை அறியத் துணை புரிகிறது.
🙏 🙏அதே தத்துவம் தான்
நமது கோவில்களிலும்…🙏🙏
எந்தக் கோவிலின் கருவறையில் இருந்தும் அபிஷேக நீர் வெளிவரும் துவாரம் “கோமுகம்” என்றே அழைக்கப்படுகிறது.
🕉️ அபிஷேகத்தின் போது, பல்வேறு புனிதப் பொருட்கள் (பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் போன்றவை) இறைவனின் திருமேனி மீது பட்டு, அதிலிருந்து கோமுகம் வழியாக அபிஷேக நீர் வெளி வருகிறது. அவை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வத் திருமேனியில் பட்டு, ஐயனின் திருமேனியை தழுவி வரும் போது, அவை அருள் நிறைந்த தீர்த்தமாகி விடுகிறது.
அந்த தீர்த்தத்தில் ஒன்று கலந்திருப்பது, நம் கண்களுக்கு புலப்படாத பிராண பிரதிஷ்டா உயிர் சக்தி..!
அதனால் தான் சாஸ்திரங்கள் கூறுகிறது:
இந்த கோமுக தீர்த்தம்,
கங்கை, யமுனை போன்ற புனித நதிகளின் சக்தியையே தாங்கி நிற்கிறது என்று..!
🕉️ பெரியோர்கள் சொல்லும் இன்னொரு ஒரு ரகசியம்.
👉 எந்த கோவிலுக்கு
சென்றாலும் அந்த கோவிலின்
கருவறை சன்னதியைத் தவிர
கோவிலில் “நம்
பிரார்த்தனைகளை,
வேண்டுதல்களை வைக்க,
சொல்ல மற்றுமொரு சிறந்த
இடம் இருக்கிறது என்றால் அது
இந்த "கோமுகம் முன்..!" தான்
என்கிறார்கள்.
ஏன்?
ஏனெனில், அங்கே நின்று
நாம் வேண்டுவது ,
மௌனமாக பேசுவது
நம் வார்த்தைகளால் அல்ல.
நம் மனதால்.
நம் உணர்வால்.✨
அங்கே
நாம் பிரார்த்தனை செய்து
கொள்வது என்பது நம் செயல்
மூலம் அல்ல. அது ஒரு
மஹா மன அனுபவம்.💫
வழிபாட்டுணர்வு என்பது
புறச் செயல் அல்ல.
அது ஓர் உள்ளுணர்வு பக்தி.🌟
💧💦 எனவே முகிலவன் மலையில் கோமுகத்தின் வாயிலில் நிற்கும்
அதே பாவனா சங்கல்பத்தில்,
அதே பாவனையில் கருவறை கோமுகத்திற்கு முன்னால் நின்று, நாம் பிரார்த்தனை செய்ய வழி காட்டுகிறார்கள்.
💦 கோமுகத்திலிருந்து வெளிப்படும் தீர்த்தத்தை தலையில் புரோஷ்ஷானம் செய்து கொண்டு, மௌனமாக, அமைதியாக உங்கள் மன ஆழத்தில் இருந்து உங்கள் பிரார்த்தனைகளை வேண்டுங்கள் என்கிறார்கள் குருமார்கள்.
அக்கணத்திலேயே நீங்கள்
ஒரு மென்மையான அமைதியை உணர்வீர்கள்.
அது தான் ஐயனின் கிருபை...! என்கிறார்கள் பழுத்த இறையனுபவம் பெற்ற பெரியோர்கள்.🙏
இது மிக மிக நுணுக்கமான
ஒரு நுண்ணுணர்வு.
💧இது ஒரு அனுபவ சத்தியம்💧
குருவே சரணம் 🙏
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
🪷💧🪷💧🪷💧🪷💧🪷💧🪷💧