Ariyankavu

Ariyankavu This is a One of the Temple of Lord Sri Dharma Sastha which is eastablated by Sri Parasurama at Ariyankavu,Kerala.

The deity name is Sri.Pushkala Devi sametha Ariyankavu Sri.Dharmasastha. The Temple at Ariyankavu, Kerala State, the holy abode of Lord SHRI AYYAPPA, radiating world harmoney, would celebrate the JOTHI ROOPA DHARISANAM at Mambhazhathurai
on 23-12-2021 (Thursday) and the shastric Betrothal ceremonies of “PANDIAN MUDIPPU” on 24-12-2021 (Friday) Celestial wedding (Thirukkalyanam) of Lord SHRI DHARMA

SASTHA - SRI PUSHKALA DEVI on 25-12-2021 (Saturday) with promp and splendor, to establish it’s old, pious, traditional principles the connected customary rites Lastly the MANDALABISHEKAM Festival ends with (Kalashabhisekam) on 26-12-2021(Sunday ). At Ariyankavu, Lord Shri Dharma Sastha is Praised as :Annadhana Prabhu” who wedded the bride of our Sourashtra Brahmin Community ( Markhandeya Rishi Gotram ). This divine marriage has been conducted annually jointly by the King of Travancore, (now Travancore Decaswom Board) and mahajanas of Sourashtra Community (Now Ariyankavu Devasthana Sourashtra Mahajana Sangam, Madurai.) On the invitiation of Decaswom Board at Ariyankavu, every year the Sourashtra Mahajan Sangh members would bring their presents with SOMANJODI (Dress for the Divine Couple ) garlands etc., from Madurai in order to conduct the Divine Marriage in a grandeur manner. Therefore, We humbly request all the devotees of Loard Shri Dharma Sastha and other public to participate in the rituals to be held on 23,24,25 & 26 - 12 - 2021 and get the blessings of Loard Shri Dharma Sastha - Shri Pushkala Devi.

💧💦 ஆரியன்காவு கோமுகமும் 💧💦💧💦  பாகீரதியின் கோமுகமும் 💧💦🗻 பாகீரதி , இமயமலைஎனும் கைலாய மலையில் உயிர்ப்புடன்  உயிரோட்டமாக ஊற...
11/05/2026

💧💦 ஆரியன்காவு கோமுகமும் 💧💦
💧💦 பாகீரதியின் கோமுகமும் 💧💦

🗻 பாகீரதி , இமயமலை
எனும் கைலாய மலையில் உயிர்ப்புடன் உயிரோட்டமாக ஊற்றெடுத்து பெருகி வரும் நதியாகும். அந்த முகிலவன் மலையில் அதன் ஆதி ஊற்று உற்பத்தியாகுமிடம் தான் “கோமுகம்” என்று அழைக்கப்படுகிறது.

கங்கா மாதாவின் ஆதி ஊற்றான பாகீரதி, பனி படர்ந்த கங்கோத்ரி மலைத் தொடர்களில்
30 கி.மீ. நீளமும், 4 கி.மீ
அகலமும் கொண்ட இந்த கோமுகத்திலிருந்து தான் புறப்படுகிறாள்.

இயற்கையிலேயே பசுவின் முகத்தை போன்ற அமைப்பு கொண்ட பனிப் பாறைகளின் நடுவிலிருந்து, கங்கைத் தாய் வெளிப்படுகிறாள். அங்கே உருகி வருவது பனி நீர் மட்டுமல்ல, அது அருளே உருவான உயிர் சக்தி.!

💧 இந்த பாகீரதியின் உற்பத்தி ஸ்தானத்தில் தான் எம்பெருமானின் சதுரங்க சக்திகளும், பிரம்மாவின் நான்கு சிரசுகளிலும் நிலை பெற்று நிலைத்து நிற்கின்றன.

இதனால் தான் மனிதப் பிறவிகளின்
பாவங்களை போக்கும்
புண்ணிய நதிகள் கூட, இந்த கோமுகத் தீரத்தில் தான் ஒன்று கலந்து, தங்களை தூய்மைப்படுத்திக் கொள்வதாக புராணங்கள் கூறுகின்றன.

🧘 எம்பெருமானின் திருவடிகளில் , பாகீரதியின்
இந்த யதாஸ்தானத்தில் தான்,
தேவாதி தேவர்களும் சிவ
கணங்களும், பூத கணங்களும்
எந்நாளும் தவம் செய்து கொண்டிருக்கின்றன
என்பது ஐதீகம் .

அந்தக் கொடும் பனிவனத்தில்
அந்த கோமுக வாயிலில் நின்று
நாம் செய்து கொள்ளும் பிரார்த்தனைகளை , வேண்டுதல்களை ஏற்கத் தான் எம்பெருமான் இங்கே நிச்சலமாக காத்து நிற்கின்றார். நம் மன உணர்வால் வெளிப்படுத்தும் நம் பிரார்த்தனைகளை, வேண்டுதல்களை நிறைவேற்ற,
அதை செயல்படுத்துவதற்காக
எம்பெருமானின் ஆணைக்காக
சர்வ சக்திகளும் கோமுக
வாயிலில் காத்திருக்கின்றனர்.

அந்த நம்பிக்கையில் தான்
இந்தக் கோமுகத்தைக் காண
இயற்கையோடு இயைந்து
கடுமையாக போராடி, கடும்
குளிரையும், உச்சபட்ச
சிரமங்களையும் கடந்து
வருகிறார்கள் பக்தர்கள்.
அந்த நம்பிக்கை தான் இந்த
பனி மலைகளை எளிதாக
கடக்கச் செய்கிறது.
அந்த நம்பிக்கை தான்
எம்பெருமானின் அருள்
மூலத்தை அறியத் துணை புரிகிறது.

🙏 🙏அதே தத்துவம் தான்
நமது கோவில்களிலும்…🙏🙏

எந்தக் கோவிலின் கருவறையில் இருந்தும் அபிஷேக நீர் வெளிவரும் துவாரம் “கோமுகம்” என்றே அழைக்கப்படுகிறது.

🕉️ அபிஷேகத்தின் போது, பல்வேறு புனிதப் பொருட்கள் (பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் போன்றவை) இறைவனின் திருமேனி மீது பட்டு, அதிலிருந்து கோமுகம் வழியாக அபிஷேக நீர் வெளி வருகிறது. அவை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வத் திருமேனியில் பட்டு, ஐயனின் திருமேனியை தழுவி வரும் போது, அவை அருள் நிறைந்த தீர்த்தமாகி விடுகிறது.

அந்த தீர்த்தத்தில் ஒன்று கலந்திருப்பது, நம் கண்களுக்கு புலப்படாத பிராண பிரதிஷ்டா உயிர் சக்தி..!

அதனால் தான் சாஸ்திரங்கள் கூறுகிறது:

இந்த கோமுக தீர்த்தம்,
கங்கை, யமுனை போன்ற புனித நதிகளின் சக்தியையே தாங்கி நிற்கிறது என்று..!

🕉️ பெரியோர்கள் சொல்லும் இன்னொரு ஒரு ரகசியம்.

👉 எந்த கோவிலுக்கு
சென்றாலும் அந்த கோவிலின்
கருவறை சன்னதியைத் தவிர
கோவிலில் “நம்
பிரார்த்தனைகளை,
வேண்டுதல்களை வைக்க,
சொல்ல மற்றுமொரு சிறந்த
இடம் இருக்கிறது என்றால் அது
இந்த "கோமுகம் முன்..!" தான்
என்கிறார்கள்.

ஏன்?
ஏனெனில், அங்கே நின்று
நாம் வேண்டுவது ,
மௌனமாக பேசுவது
நம் வார்த்தைகளால் அல்ல.
நம் மனதால்.
நம் உணர்வால்.✨

அங்கே
நாம் பிரார்த்தனை செய்து
கொள்வது என்பது நம் செயல்
மூலம் அல்ல. அது ஒரு
மஹா மன அனுபவம்.💫

வழிபாட்டுணர்வு என்பது
புறச் செயல் அல்ல.
அது ஓர் உள்ளுணர்வு பக்தி.🌟

💧💦 எனவே முகிலவன் மலையில் கோமுகத்தின் வாயிலில் நிற்கும்
அதே பாவனா சங்கல்பத்தில்,
அதே பாவனையில் கருவறை கோமுகத்திற்கு முன்னால் நின்று, நாம் பிரார்த்தனை செய்ய வழி காட்டுகிறார்கள்.

💦 கோமுகத்திலிருந்து வெளிப்படும் தீர்த்தத்தை தலையில் புரோஷ்ஷானம் செய்து கொண்டு, மௌனமாக, அமைதியாக உங்கள் மன ஆழத்தில் இருந்து உங்கள் பிரார்த்தனைகளை வேண்டுங்கள் என்கிறார்கள் குருமார்கள்.

அக்கணத்திலேயே நீங்கள்
ஒரு மென்மையான அமைதியை உணர்வீர்கள்.
அது தான் ஐயனின் கிருபை...! என்கிறார்கள் பழுத்த இறையனுபவம் பெற்ற பெரியோர்கள்.🙏

இது மிக மிக நுணுக்கமான
ஒரு நுண்ணுணர்வு.

💧இது ஒரு அனுபவ சத்தியம்💧

குருவே சரணம் 🙏
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
🪷💧🪷💧🪷💧🪷💧🪷💧🪷💧

🕉️ "நிர்மால்ய சோதனா" 🕉️ 🌿 “நிர்மால்ய சோதனா பூஜை” — மலையாள மண்ணின் அதி பழமையான, அதே சமயம் அளவற்ற சக்தி நிறைந்த ஒரு அரிய ப...
26/04/2026

🕉️ "நிர்மால்ய சோதனா" 🕉️

🌿 “நிர்மால்ய சோதனா பூஜை” — மலையாள மண்ணின் அதி பழமையான, அதே சமயம் அளவற்ற சக்தி நிறைந்த ஒரு அரிய பூஜை முறையாகும்.

இது அமாவாசை திதியன்று அதிகாலை 4:00 மணிக்கு இந்தப் பூஜைக்காகவே சன்னதி மணிக்கதவு திறக்கப்பட்டு, பகவான் ஶ்ரீ பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூல முதற் விக்கிரகத்திற்கு நடைபெறும் பூஜையாகும். இதையே “பிம்ப சுத்தி பூஜை” என்றும் அழைக்கின்றனர்.

ஆரியன்காவில் நடைபெறும் இந்த பூஜை, அதன் ஆழமான தாந்தீரிக மரபு பாரம்பரியங்கள் மற்றும் தெய்வீக அதிர்வுகளால், மிக மிக விசேஷமானதும், அரிய அனுபவமாகவும் கருதப்படுகிறது.

🔥 பரசுராமர் காலத்தில், அவராலேயே ஸ்தாபிக்கப்பட்ட சாஸ்தாவின் முதற்படியான சிலா ரூபம், பிற்காலத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சேதமடைந்தது. அதன் பின்னர், அந்த விக்கிரக பாகங்கள் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு தற்போதைய மூல விக்கிரகத்தின் பின்புறம் உள்ள ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டு வருகிறது.
இந்த “நிர்மால்ய சோதனா பூஜை” நடைபெறும் நேரத்தில், அந்த சேதமடைந்த விக்கிரகத்தின் பாகங்கள் முறைப்படி வெளியே எடுத்து, தற்போதைய மூல மூர்த்தியின் முன் வைக்கப்பட்டு, ஆகம முறையிலும் தாந்தீரிக முறையிலும் நிர்மால்ய சோதனா எனும் “பிம்ப சுத்தி” சடங்கு பூஜைகள் நடைபெறும்.

இவ்விக்கிரகங்கள் அனைத்தும் பகவான் பரசுராமரால் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டவை என்பதால், அவற்றில் உறைந்துள்ள உயிர் சக்தி உயிர்ப்புடன் இன்றளவும் குறையாமல், நுண்ணிய அதிர்வுகளாக, நேர்மறை அதிர்வுகளாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த உயிர் சக்தியை நாம் நேரடியாக அனுபவிக்கும் அரிய தருணமே இந்த பூஜை.
அதனால் தான், சூரிய உதயத்திற்கு முன்பான பிரம்ம முகூர்த்தத்தில், அந்த புனிதமான நேரத்தில் பகவானின் நேரடி சாந்நித்தியத்தில் நின்று தரிசனம் செய்யும் போது, ஆண்கள் மேலாடையின்றி, எளிய அங்கவஸ்திரம் அணிந்து வருமாறு பணிக்கப்படுகிறார்கள். காரணம் அந்த தெய்வீக சக்தியை நம் உடலும் மனமும் முழுமையாக ஏற்றுக் கொள்ளுவதற்காகவே....!

🎯 இந்த தரிசனம், வார்த்தைகளால் விவரிக்க முடியாத பலன்களை அளிக்கும் என நம்பப்படுகிறது.

👉 வெளிப்படுத்த முடியாத மிக நீண்ட நாள் தீராத மனக்குறைகளுக்கு ஒரு தீர்வு ஏற்படும்.

👉 திருமணத் தடைகள் அகன்று, மங்களம் உண்டாகும்.

👉 குழந்தை பாக்கியம் அருளப்படும்.

👉 குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும்.

👉 புதிய தொழில் தொடக்கம் மற்றும் வளர்ச்சிக்கு தெய்வ அனுகிரகம் கிடைக்கும்.

👉 உங்களுக்கு பிரார்த்தனை செய்து கொள்வதற்கு ஒன்றுமேயில்லை என்றாலும் நிச்சலமான தெய்வீக அனுபவத்தை பெறுவதற்காகவாவது சென்று வாருங்கள்.

"நிர் மோஹத்வே நிச்சல தத்வம்
நிச்சல தத்வே ஜீவன் முக்தி"

என்ற அனுபவ பாடத்தின் முதல் பக்கத்தை படித்து விட்டு வந்த அனுபவமாக அது அமையும்...!

இதன் காரணமாகவே பக்தர்கள், தங்களின் துயரங்களுக்கும், நோய் நொடிகளுக்கும் தீர்வு வேண்டி, மன அமைதி தேடி, நிம்மதியை தேடி குடும்பத்துடன் வந்து இந்த பூஜையில் கலந்து கொள்கின்றனர்.

🕉️ மொத்தத்தில், இந்த பூஜையில் நேரடியாக கலந்து கொண்டு, அந்த சன்னதியில் நின்று தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தால், அதுவே தெய்வ அனுகிரகத்தின் உறுதியான அடையாளமாகக் கருதப்படுகிறது.

இந்த பூஜைக்கான பதிவை கோவில் அலுவலகத்தில் முன்னதாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். சபரிமலையில்
"படி பூஜை" மற்றவர்கள் உபயமாக நடைபெற்றாலும், பக்தர்கள் அனைவரும் நேரில் கலந்து கொண்டு தரிசனம் செய்வது போல இந்த பூஜையிலும் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

🪷 ஒன்றே ஒன்று....

பகவான் சாந்நித்தியத்தில் நின்று, ஒன்றே ஒன்றை மட்டும்
சொல்லி விட்டு வாருங்கள்...

🌟 "ஐயனே உன்னை மட்டுமே அறிவேன். மற்ற அனைத்தையும் நீ தான் அறியத் தருகிறாய். எப்போதும் என்னை விட்டு நீங்காதிரு" என்று மட்டும் சொல்லி விட்டு, உங்கள் மனம் முழுவதும் நிறைந்த அன்பால், பக்தியால் பரிபூரணமாக சரணடைந்து விடுங்கள். பயம் வேண்டாம். கவலை வேண்டாம். இனி ஆக வேண்டியதை பார்த்துக் கொள்வது அவன் பொறுப்பு...!

குருவே சரணம் 🙏
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
🪷🪷🪷🪷🪷🪷

🧘 🕉️ யோகியும் அவனே.... 🙏👫 🐘 போகியும் அவனே.... 🙏🌺 ஆரியன்காவில் சாஸ்தாவுக்கு ஆண்டு தோறும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது...
25/04/2026

🧘 🕉️ யோகியும் அவனே.... 🙏
👫 🐘 போகியும் அவனே.... 🙏

🌺 ஆரியன்காவில் சாஸ்தாவுக்கு ஆண்டு தோறும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது என்று கேள்விப்பட்டவுடன் பக்தர்கள் அனைவரும் ஒரே ஒரு கேள்வி உடனே கேட்பார்கள். சபரிமலையில் சாஸ்தாவானவர் ஸன்யாசியாக இருக்கும் போது ஆரியன்காவில் திருக்கல்யாணம் எப்படி.? என்பது தான்.

🪷 சாஸ்தாவானவர், சபரி மலையில் ஸன்யாசியாக இருப்பதும் உண்மை.!

ஆரியன்காவில் திருமணக் கோலத்தில் இருப்பதும் உண்மை..!

🕉️ எப்படி முருகப் பெருமானுக்கு
ஆறு படை வீடு இருக்கிறதோ, அதே போல சாஸ்தாவுக்கும் நான்கு படை வீடுகள் இருக்கிறது..!

👉 முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளுக்கும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஸ்தல வரலாறு உண்டு.

அதே போல் பகவான் ஶ்ரீ பரசுராமர் தமது தவத்திற்கு காவலாக சாஸ்தாவை நமது சனாதன தர்ம ஆஸ்ரம முறைப்படி நான்கு சாஸ்தா கோவில்களை ஸ்தாபிக்கிறார்.

சாஸ்தாவின் அந்த நான்கு கோவில்களுக்கும், ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனியான தனித்துவமான
ஸ்தல வரலாறுகள் உண்டு.

👉 திருப்பரங்குன்றத்தில் தெய்வானையோடு காட்சி தரும் முருகன், திருத்தணியில் வள்ளியோடு காட்சி தருகிறார். பழமுதிர் சோலையில் வள்ளி தெய்வானை என இரு தேவியரோடும் காட்சி தருகிறார்.

அனைத்து திருக்கோவில்களிலும் திருக்கல்யாண வைபவங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன.

இவையனைத்தும் அந்தந்த திருக்கோவில்களின் ஸ்தல வரலாற்றுப்படியும்,
ஐதீகங்களின் படியும்
மூல விக்கிரகங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

👉 பொதுவாக கோவில்கள்
அனைத்தும் ஒரே நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல. லோகக் குரு பகவான் ஆதி சங்கர பகவத் பாதாள் உருவாகிய "சண்மத" வழிபாட்டு முறைப்படி ஆகமம், ஸ்தல புராணம், சித்தாந்தம், தத்துவம், ஆகியவற்றின் அடிப்படையில் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், குறிப்பாக மலையாள தேசத்தில் "ஸ்மார்த்த வழிபாடு" வழி காட்டுதலின் படி பரிகார ஸ்தலம் என்றும், பிரார்த்தனை ஸ்தலங்கள், உபதேச ஸ்தலங்கள் என்றும் ஷேத்திரங்கள் பல வகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் சாஸ்தாவானவர், ஆரியன்காவில் , “கிரகஸ்தனாக" யானை மீது அமர்ந்து வீராசனத்தில் "மதகஜ ரூபனாக", மதம் பிடித்த யானையை அடக்கி வேட ரூபத்தில் மாப்பிள்ளை கோலத்தில் புஷ்கலையுடன் “போகியாக" காட்சி தருகிறார்.

அதேபோல் சாஸ்தாவானவர் சபரிமலையில் , ஞான பீடத்தில் யோகப் பட்டயம் அணிந்து "ஸன்யாச" கோலத்தில் “யோகியாக" அமர்ந்து காட்சி தருகிறார்.

💃 ஒரு நடன ஆசிரியர், தன்னிடம் முதன்முறையாக நடனம் கற்க வரும் மாணவருக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் போது, அந்த நடன ஆசிரியரே முதலில் நடனம் ஆடிக் காட்டுவார்.

அதே போலவே
சபரிமலையில் ஸன்யாச
"யோக குரு" வாக இருந்து, தன் பக்தர்களுக்கு
" தத்துவமசி" எனும் ஞான உபதேசத்தை போதிக்கின்றார்.

அவரே ஆரியன்காவில் "போகி" யாக கிரகஸ்தாஸ்ரம அனுபவ நிலையில் இருந்து "தத்துவமசி" ஞான உபதேசத்தை போதிக்கின்றார்.

⚛️ அதனால் தான் குளத்துப்புழை,
ஆரியன்காவு, அச்சன்கோவில் மற்றும் சபரிமலை ஆகிய கோவில்கள் உபதேச ஷேத்திரங்களாக போற்றப்படுகின்றன.

🔥 நாம், போக நிலையில் இருந்தாலும், யோக நிலையில் இருந்தாலும் நாம், நம் கவனம் சிதறாமல் "தத்துவமசி" என்ற தனித்துவமான தனித்தன்மையில் எப்போதும் இருக்க வேண்டும் என்பது
தான் நாம் இங்கிருந்து பெறும் உபதேசமாகும்.

வாழ்க்கையில் நாம் நிம்மதியையும் யதார்த்தையும் அனுபவப்பூர்வமாக உணரவே இந்த ஞான உபதேசங்கள்.

🪷 வாழும் போதே அவன் திருவடிகளில் மனதளவில் பரிபூரணமாக சரணடைந்து, உங்கள் ஆன்மா நிம்மதியும் நிறைவும் கொள்ளும்படியாக முழுமையாக வாழ்ந்து விடுங்கள்.

🕉️ ஆகையால் எப்போதும்
நினைவில் கொள்ளுங்கள்.

யோகியும் அவனே.... 🙏
போகியும் அவனே.... 🙏
கிரகஸ்தனும் அவனே.. 🙏
ஸன்யாசியும் அவனே.. 🙏
ஞானமும் அவனே ... 🙏
குருவும் அவனே ... 🙏
ஆத்மனும் அவனே ... 🙏
பரிபூரண ஆத்மாவும் அவனே 🙏

குருவே சரணம் 🙏
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

🪷 இன்று ஆதிசங்கர பகவத் பாதர்ஜென்ம ஜனன தினம் 🪷 🕉️ பரமேஸ்வரரின் அம்சமாகவே இந்த நிலவுலகம் வாழ, வந்து உதித்தவர் லோக குரு ஆதி...
21/04/2026

🪷 இன்று ஆதிசங்கர பகவத் பாதர்
ஜென்ம ஜனன தினம் 🪷

🕉️ பரமேஸ்வரரின் அம்சமாகவே இந்த நிலவுலகம் வாழ, வந்து உதித்தவர் லோக குரு ஆதி சங்கர பகவத் பாதர். சித்திரை மாத அமாவாசைக்குப் பின்வரும் வளர்பிறை பஞ்சமியில், அவரின் அவதாரம் நிகழ்ந்தது.

“காலடி”யில் பிறந்த அவரது
``காலடி” படாத இடம் இந்த பாரதத்தில் இல்லை. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் நடந்து, நடந்து சென்றே அத்வைத சித்தாந்தத்தைப் பரப்பினார்.
அவருடைய பிரதான நோக்கம்;

👉 வேத தர்மத்தை காப்பது.

👉 மனிதர்கள் ஒவ்வொருவரும் பிரம்மத்தை தங்களுக்குள் உணரச் செய்வது.

👉 இந்து சமயத்தின் மூன்று முக்கிய நூல்களுக்கு (கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்ரம்) தத்துவ விளக்கம் அளிப்பது.

ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து நிறைவேற்ற வேண்டிய மகத்தான காரியங்களை, வெறும் 32 வயதில் செய்துமுடித்தார்.

ஏகம் என்பது பிரம்மம்.
அந்த பிரம்மத்தை அறியும் ஓர் அடையாளமாகவே ஏக தண்டத்தை ஏந்தி இந்திய சமய மரபின் பெரும் புரட்சிக்கு வித்திட்டார்.

தனக்குப்பின் அத்வைத தர்மத்தையும் தத்துவத்தையும் அகிலமெல்லாம் பரப்ப, சிஷ்யர்களை உருவாக்கினார். ஆங்காங்கே பீடங்களையும் மடங்களையும் உருவாக்கினார்.

"ஏகாக்கிரகத்தினால் துவைதத்தை அந்தம் பண்ணினால் மிச்சம் இருப்பது ஏகாந்தம்" என்பதை
தன் வாழ்நாள் முழுவதும் பல வழிகளில் வலியுறுத்தி வந்தார்.

குருவே சரணம் 🙏
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

🪷 இன்று (20–04–2026) திங்கட்கிழமை மாலை  ஆரியன்காவு தேவஸ்தான செளராஷ்டிரா  மகாஜன சங்கம், மதுரை சார்பாக,  தேசிய ஜனநாயக கூட்...
20/04/2026

🪷 இன்று (20–04–2026) திங்கட்கிழமை மாலை ஆரியன்காவு தேவஸ்தான செளராஷ்டிரா மகாஜன சங்கம், மதுரை சார்பாக, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பேரா. இராம. சீனிவாசன் அவர்களுக்கு
ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்த போது எடுத்த படம்.

மதுரை தெற்கு தொகுதி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.சரவணன்
அவர்கள் உடன் இருந்தார்கள்.

சங்க நிர்வாகஸ்தர்கள் தலைவர் கே.ஆர். ராகவன், பொதுக் காரியதரிசி எஸ்.ஜெ .ராஜன்,
உதவிக் காரியதரிசி
எஸ் . ஜெ.கண்ணன் கமிட்டி உறுப்பினர் கே. ஆர்.பிரதீப்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுவாமி சரணம் 🙏

🕉️🧘 ஶ்ரீ புஷ்கலை ஐக்கியத்திற்கு பிறகும் மூர்த்தியானது எப்படி? 🧘🕉️மாம்பழத்துறை ஸ்ரீ புஷ்கலா பகவதி ஆரியன்காவில் ஐயனோடு "ஜீ...
15/04/2026

🕉️🧘 ஶ்ரீ புஷ்கலை ஐக்கியத்திற்கு பிறகும் மூர்த்தியானது எப்படி? 🧘🕉️

மாம்பழத்துறை ஸ்ரீ புஷ்கலா பகவதி ஆரியன்காவில் ஐயனோடு "ஜீவ பிரம்ம" ஐக்கியமான பிறகும் மாம்பழத்துறையில் மூர்த்தி
ரூபத்தில் பகவதியாக காட்சி தருவதன் மகிமை என்ன?

தேடி வந்து ஒரு முறை பகவதியை தரிசித்தவர்கள், மீண்டும் ஒருமுறை மாம்பழத்துறைக்கு வரவேண்டும் என்று அவர்கள் மனது
துடிப்பது ஏன்? என்று இங்கு வந்து வழிபடுவோர் அனைவரும்
அறிந்து கொள்ள விரும்பும்
கேள்வியாக இருக்கிறது.

🪔 இன்று (15–04–2026) புதன்கிழமை ஆரியன்காவு மற்றும் மாம்பழத்துறை புஷ்கலா பகவதி அம்மன் ஆலயங்களில் சித்திரை விஷு மற்றும் கை நீட்டம் பெறும் புண்ணிய தினம்.

🪔 நேற்று (14–04–2026) செவ்வாய்கிழமை தமிழ் புத்தாண்டு.
அதே தினத்தன்று இரவு பகவான் ரமண மகரிஷி அவர்கள் ஸ்தூல சரீரத்தை விடுத்து, விஸ்வ ரூபத்தில் ஒடுங்கி "விதேஹ முக்தி" அடைந்த நாள்.

இந்த புண்ணிய நாட்களில் மேற்காணும் கேள்விகளைப் பற்றி நாம் சிந்திப்பது சிறப்பான சிந்தனைகளாக அமையும்.

🕉️ ஜீவன் முக்தி.

ஒரு ஜீவன், உயிரோடு இருக்கும் போதே தான் யார்? என்பதை மன
விசாரம் செய்து, மனமற்ற நிலைக்கு செல்வது. அவரது ஆத்மா, மாயையில் இருந்து விடுதலை பெறுவது.

“நான் உடல் அல்ல”
“நான் மனம் அல்ல”
“நான் பரிசுத்த தூய சைத்தன்யம், ஆத்மா , சாட்சி பாவம் , தூய உணர்வு நிலையில் இருக்கிறேன்"
என்று நேரடியாக உணர்ந்து,
அதில் நிலை பெறுவது.

👉 இந்த பரிபூரண சச்சிதானந்த நிலையை வாழும் காலத்திலேயே அடைந்தவர்கள் ரமண மகரிஷி, நாராயண குரு, காஞ்சி மஹா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், புஷ்கலா தேவி போன்ற மஹா தபஸ்விகள் .

🔥 "ஜீவன் முக்தி" அடைந்த அவர்களின் உள்ளத்தின்
உணர்வு நிலை என்பது,
வெளியில் அவர்கள் சாதாரண மனிதர் போலத் தோன்றலாம்.

ஆனால் உள்ளே “நான் செய்கிறேன்” என்ற கர்த்த்ருத்வம் அவர்களிடம் சிறிதும் இல்லை. ஆசை, பயம், பற்றுதல், எதன் மீதும் விருப்பு வெறுப்பு இல்லை. சுக, துக்கங்களில் சமநிலை. வாழ்க்கை நடக்கிறது. ஆனால் அவர்கள் அதில் சிக்கவில்லை. இது அவர்களின்
" ஜீவன் முக்தி நிலை".

🕉️ "விதேஹ முக்தி" நிலை என்பது முழுமையாக தேகம் விடுத்து, மனமே இல்லாது ஆத்மாவில் லயமாகும் நிலை.

அவர்கள் உடலில் இருந்து உயிர் விலகிய பிறகு, ஜீவன் முக்தருக்கு அங்கு தேகம் இல்லை, மனம்
இல்லை, மறு பிறவியும் இல்லை.
பரப்பிரம்மத்தில் முழுமையான ஐக்கியம். மெய்யுணர்வு எனும் தூய விழிப்புணர்வு மட்டுமே எஞ்சி
நிற்கும். இந்த ஞான நிலைக்கு என்றும் அழிவில்லை. இதுவே "விதேஹ முக்தி" . என்றென்றும்
முக்த நிலை. இது இறை நிலை.
இதுவே பரம சத்தியம்...!

🎯 இப்போது நமது கேள்வி மாம்பழத்துறை ஸ்ரீ புஷ்கலா பகவதி ஆரியன்காவில் ஐயனோடு ஐக்கியமாகி முக்தி பெற்ற பிறகும், மாம்பழத்துறையில் மூர்த்தி (சிலா ) ரூபத்தில் அருவுருவமக காட்சி தருவதன் மகிமை என்ன?

🪷 1949 ஆம் ஆண்டு இறுதியில் ரமண பகவான் அவர்களின் இடது கரத்தின் மேல்பகுதியில் ஏற்பட்ட சார்கோமா எனும் புற்று நோய்க்காக பல முறை பலவகை சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார். பல முறை மயக்க மருந்து இல்லாமலேயே அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதை பக்தர்கள் பார்த்து பரிதவித்து விட்டனர். அக்காலத்தில் ரமணாஸ்ரமத்திலும் காஞ்சி மடத்திலும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த சில அணுக்கத் தொண்டர்கள் இருந்தனர். அவர்கள் காஞ்சி மஹா பெரியவா அவர்களிடம் ரமண பகவான் படும் துயரத்தை காணத் தாளாமல் அதற்கு நிவாரணம் வழங்குமாறு பணிந்தனர்.

அப்போது, காஞ்சி மஹா பெரியவா அவர்களிடம், அத்யாத்மத்தில்
மிகவும் ஆழமான பக்தி மற்றும் ஆகம மரபில் இரண்டு முக்தி நிலைகள் கொண்டாப்படுகின்றன.

ஒன்று
🔥“பூத தேகப் பிராரப்த முக்தி நிலை”
இரண்டு
🔥"தேகப் பிராரப்த முக்தி நிலை”

இந்த இரு நிலைகளும் மிகவும் நுணுக்கமான ஆன்மீக விஷயங்கள். அவை வேதாந்தம், சித்தர் மரபு, ஆகம சாஸ்திரம், பக்தி மரபு—இவைகளின் சங்கமத்தில் புரிந்து கொள்ள வேண்டிய சத்திய தர்மங்கள்.

இதில் " பூத தேகப் பிராரப்த முக்தி நிலை” என்றால் தேகம் பஞ்சபூதங்களால் ஆனது என்ற பந்தத்திலிருந்து விடுபட்ட நிலை.

நான் இயற்கையின் ஒரு கருவி.
நான் சாட்சி பாவனையில் இருக்கிறேன். என் உடலுக்கு வலி இருக்கலாம்; ஆனால் நான் அந்த உடல் அல்ல என்று உணர்ந்த நிலை. இந்த நிலை ஜீவன் முக்தரான ரமண பகவான் அவர்களுக்கு வாய்த்தது...!

தனக்கு தேகம் இல்லை, மனம் இல்லை என்ற சத்தியத்தில் வாழும் அவருக்கு வலிகள் அவ்வளவாக இருக்காது. அதை பார்க்கும் நமக்குத் தான் வலி வேதனை . அவருக்கு இல்லை என்று ஆறுதல் கூறினார்கள்.
இது தெய்வத்தின் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல 🕉️ "தேகப் பிரகிருதி மோட்ச நிலை” / “தேகப் பிராரப்த முக்தி நிலை" என்பது மிகவும் ஆழமான பக்தி மற்றும் ஆகம
மரபில் வரும் கருத்து.

👉 ஜீவன் முக்தர் → விதேஹ முக்தி நிலை அடைந்த பிறகு -->> மீண்டும் ஒரு “ரூபத்தில்” மூர்த்தியாக சிலா ரூபத்தில் இருந்து அருள் புரிவது. இந்த நிலை ஶ்ரீ புஷ்கலா பகவதி அம்மனுக்கு வாய்த்தது.

🔥 வேதாந்தத்தின் பரம
சத்தியத்தில், விதேஹ முக்திக்கு
பின்தேகம் கொண்ட ஜீவன் முக்தர் என்று எவரும், எதுவும் இல்லை.

👉 ஆனால் பக்தி & ஆகம மரபில்:
அந்த பரப்பிரம்மத்தின் கருணையால் அந்த ஜீவன் முக்தரின் பிராரப்தத்தின் படி அந்த ஜீவன் முக்தரின் ரூபத்திலேயே, மூர்த்தியாக தொடர்ந்து இருந்து அருள்
பாலிக்கும் மரபு இருக்கிறது .

🪷 ஆரியன்காவில் ஜீவன் முக்தி நிலையில் ஜீவனோடு இருந்த புஷ்கலா தேவி "ஜீவ பிரம்ம ஐக்கியத்தில், " விதேஹ முக்தி நிலையை பெற்று, தேகத்தை விட்டு பரப்பிரம்மத்தில் லயமாகி ஞானமயமாகி விடுகிறாள்.

அதே நேரத்தில் அவரது தேகப் பிராரப்த முக்தி நிலையில் அந்த சக்தியானது அருள் ரூப நிலையில் கல் (மூர்த்தி), தலம் (க்ஷேத்திரம்) சக்தி பீடம் என்று நிலை கொண்டு,
வந்த கோலத்தில் உறைந்த திருமேனியாக சிலா ரூபத்தில்
தம்மை வெளிப்படுத்திக் கொண்டு மாம்பழத்துறையில் யாதுமாகி
நின்று காட்சி தருகிறாள்.

🪷 மாம்பழத்துறை புஷ்கலா பகவதி அம்மன் ஆலயத்தில் அந்த தெய்வீக சக்தி ஒரு குறிப்பிட்ட வரலாற்று சம்பவம் மற்றும் ஜீவன் முக்தரின் இறையனுபவம், ஞான நிலை இவையாவும் ஒன்று சேர்ந்து
“ஓர் அருள் நிலை பெற்ற தலம்”
மாக விளங்குகின்றது.

📥 வேதாந்தம் சொல்வது
முக்திக்கு பின் “யாரும் இல்லை."

📥 பக்தி மரபு சொல்வது:
“அவர் ஞான நிலையில் இன்னும் அருள் செய்கிறார்”

🧘 சித்தர்கள் மரபு பாரம்பரியங்கள் என்பது உடலை தெய்வீகமாக போற்றி “ஜீவ சமாதி” நிலையில் இருந்து அருள் வழங்குகிறார்கள்.

👉 இதை “தேக சித்தி” என்கிறார்கள்.

🧘 “பூத தேகப் பிரகிருதி முக்தி” என்பது, ஜீவன் தன் உடல் மீது அடையாளம் இல்லாத நிலை.

👉 இது ரமண பகவானின் ஞான நிலை.

🧘“தேகப் பிராப்தி / அருள் ரூப நிலை”

👉 ஜீவன் முக்தி அடைந்த பிறகு விதேக முக்தியில் தேகத்தை துறந்த பின்னரும், தேகப் பிராரப்தப் படி மூர்த்தியாக விளங்கி, அதன்
ஞான சக்தி உலகெங்கும் தொடரும் ஒரு ஞான அனுபவ நிலை.

அந்த ஞான சக்தி பிரபஞ்ச சக்தியாக எல்லாவிடத்திலும் பரந்து பரவி இருப்பதால், அதை தன் பால் ஈர்க்கும் ஒவ்வொரு ஜீவனும் தன்னை ஈர்க்கும் சக்தியான ஶ்ரீ புஷ்கலா பகவதியை தேடி வந்து தரிசிக்க வருகிறார்கள்.

பகவதியை தேடி வந்து ஒரு முறை தரிசித்தவர்கள், மீண்டும் ஒருமுறை மாம்பழத்துறைக்கு வரவேண்டும் என்ற மன உந்துதல் ஏற்படக் காரணமே இது தான்...!

🌟🕉️ ஆரியன்காவில் ஐயனோடு பிரேமை கொண்டு, தன் ஆத்ம நிவேதன பக்திக்கு முக்தியை வரமாக பெற்று தன் ஜீவனை பிரம்மத்தில் ஐக்கியமாக்கி, ஆத்ம ஞானம் சித்திக்கப் பெறுகிறாள் புஷ்கலை.

தன் தேகம் ஒரு கருவி மட்டுமே,
தன் தேகம் அழிந்தாலும்
தன் ஞான நிலை அழியாது,

என் பிராரப்தப்படி இங்கே நான் அருவுருவமாக இருந்து
என்னை நாடி வரும்
என் பக்தர்களுக்கு
வந்த கோலத்தில் உறைந்த திருமேனியாக
மணமகள் கோலத்தில்,
ஞான ரூப ஸ்வரூபியாக,
சத்திய ரூப ஸ்வரூபியாக
வன தேவதையாக,
ஸ்ரீ பைரவி சங்கல்பத்தில்,
ஆனந்த ஸ்வரூபியாக,
தன் பக்தர்களுக்கு காவலாகவும் , கருணையாகவும், தாயாகவும்
இருந்து "யாதுமாகி நின்று"
அருள் புரிவேன் என்ற சங்கல்பத்தில் அருவுருவாய் வியாபித்து நம்மை எல்லாம் காத்து நிற்கின்றாள்
அன்னை ஶ்ரீ புஷ்கலா பகவதி . 🙏

அவள் சன்னதியில் நின்று "மாம்பழத்துறை பகவதி தாயே"
என்று மனமுருகி நின்றாலே,
நம் மனமும், மெய்யும், மொழியும் அடங்கி, அந்த உணர்வில் உள்ளம் உருகி நம் கண்களில் நீர் மல்கும்.
அது இங்கே நடக்கும்...!

🪔 இவ்வினிய புத்தாண்டில் அனைவர் உள்ளும் ஆனந்தம், அமைதி, அன்பு, ஆரோக்கியம் நிலைக்கட்டும். 🙏

குருவே சரணம் 🙏
புஷ்கலா பகவதி தாயே சரணம் 🙏
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
🪷🧘🪷🧘🪷🧘🪷🧘🪷

📥சாஸ்தா கோவில்கள் தென் சிவாலயங்களை நோக்கி...📥பகவான் ஶ்ரீ பரசுராமர் ஸ்தாபித்த குளத்துப்புழை, ஆரியன்காவு, அச்சன் கோவில், ச...
14/04/2026

📥சாஸ்தா கோவில்கள்
தென் சிவாலயங்களை நோக்கி...📥

பகவான் ஶ்ரீ பரசுராமர் ஸ்தாபித்த
குளத்துப்புழை,
ஆரியன்காவு,
அச்சன் கோவில்,
சபரிமலை

இந்த நான்கு சாஸ்தா கோவில்களும் பூகோள ரீதியாக தமிழ்நாட்டில் உள்ள நான்கு சிவாலயங்களை நோக்கி சன்னதி கொண்டிருப்பது வியப்புக்குரிய செய்தியாகும்.

📍குளத்துப்புழை பாலகன்
பாவநாசம் சிவனை நோக்கியும்,

📍ஆரியன்காவு ஐயன்
திருக்குற்றால நாதரை நோக்கியும்,

📍அச்சன்கோவில் அரசர்
ஸ்ரீ சங்கர நாராயணரை நோக்கியும்,

📍சபரிமலை வாசன்
சதுரகிரி ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்தை நோக்கியும் சந்நிதி கொண்டு இருக்கிறார்கள்.

இதில் கூறப்படும் சிவாலயங்கள் பழமையானவை என்றால், அதை விட பழமையானவைகளாக சாஸ்தா ஆலயங்கள் அமைந்துள்ளன.

இது போன்ற பூகோள வரலாற்று அமைப்பு, அமைவிடங்கள் வேறு எங்கும் காணப்படவில்லை.

இத்தகைய அமைப்பு என்பது ஆழமான ஆகம, யோக, தத்துவ ரகசியம் கொண்டது.

இந்த நான்கு சாஸ்தா கோவில்களில் நாம் மேற்கொள்ளும் வழிபாடு என்பது, முடிவில் அது சிவானுபவத்தில் நம்மை லயம் அடையச் செய்யும் பயணமாக அமைகிறது.

🌿 மலையாள தேசத்தை ஸ்தாபிதம் செய்த பரசுராமர் தமது தவத்திற்கு காவலாக சாஸ்தாவை நான்கு கோவில்களில் ஸ்தாபிக்கிறார் என்று பார்க்கிறோம். அவை பூமியின் சக்தி கேந்திரங்களாக, சக்தி நாளங்களாக, (energy grid) அடர்ந்த மலைத் தொடர்களில் பரவி அமைந்துள்ளன.

📥 இது ஒரு “ஆன்மீக ஜியோமேட்ரி”

மலைத்தொடர் = முதுகெலும்பு
கோவில்கள் = சக்கரங்கள்
நோக்கும் திசை = சக்தி ஓட்டம்

🕉️ இந்த அமைப்பு சொல்லும் மிகப் பெரிய ரகசியம் ஐயன் வழியில் சென்று சிவன் என்ற இலக்கை அடைவது தான்...!

ஐயனின் துளசி மாலை அணிவது, விரதம் மேற்கொள்வது, இருமுடி அன்னதானம், மலை ஏற்றம், பதினெட்டாம் படி, நெய்யபிஷேகம், சமர்ப்பணம் மற்றும் சரணாகதி
இவையாவும் எதைக் குறிக்கிறது?

இவையனைத்தும் உடல் → மனம் → ஆத்மா சுத்திகரிப்பு ->> தத்துவமசி நோக்கிய பயணம் என்று சொல்கிறது.

🎯 இந்த விஷயங்கள் யாவும் வார்த்தைகளாக, படங்களாக , ஓவியங்களாக அறிவதை விட , தனக்குள் தானே உணர வேண்டிய விஷயம். மிக நுண்மையான ஆன்மிக அனுபவமாக அது அமைய வேண்டும். அதற்கு வழி?

பக்தி உணர்வோடு இதை உங்கள் மன ஓட்டத்தில், கண் முன் காணும் திரைப்படம் போல மௌனத்தில் எண்ணிப் பாருங்கள் . இதன் பிரம்மாண்டம் புரியும். அந்த புரிதலுக்கு முதலில் "நன்றி" கூறுங்கள். அப்போதே உங்கள் உள்ளத்தில் ஒரு நிறைவும், மகிழ்வும் ஏற்படுவதை உணர்வீர்கள். அதுவே அந்த ஐயனின் கிருபை...!

🪷 எழுத்து சித்தர் பால குமாரன் அவர்கள் சொல்வது போல, பக்தி என்பது மனித வாழ்க்கையில் முக்கியம்.

காடோ, மலையோ, உருவமுள்ளதோ, உருவமற்றதோ வழிபாடு என்பது நல்லது. வாழ்தல் என்பது இங்கு அதை விட மிக முக்கியமாக இருக்கும் போது இந்த கடவுள் வழிபாடு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

நாளை என்னவென்று தெரியாத மனிதருக்கு இந்த நம்பிக்கைதான் மிகப்பெரிய ஊன்றுகோல். கடவுள், பக்தி,விரதம், தத்துவார்த்தம் ஒரு சுகமான விஷயம். அது, வாழ்க்கை குறித்த நமது நம்பிக்கையை அதிகமாக்குகிறது என்கிறார்.
அதுவும் உண்மைதானே...!

🌠 இன்று ரமண பகவான்
"விதேஹ முக்தி" அடைந்த தினம். இந்நாளில் உங்கள் அனைவருக்கும்
பகவான் அருள்கடாட்ஷம் என்றென்றும் நிலைக்கட்டும்.

குருவே சரணம் 🙏
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
🪷🪷🪷🪷🪷🪷

♦️ சாமிக்கு ஏதேனும் கொடுக்கணுமா..? ♦️ 🪷“சாமிக்கு ஏதாவது கொடுத்தால் மட்டும் தான் அருள் கிடைக்குமா?”இந்த கேள்வி பலரது உள்ள...
13/04/2026

♦️ சாமிக்கு ஏதேனும் கொடுக்கணுமா..? ♦️

🪷
“சாமிக்கு ஏதாவது கொடுத்தால் மட்டும் தான் அருள் கிடைக்குமா?”
இந்த கேள்வி பலரது உள்ளத்திலும் மெல்ல ஒலித்துக்கொண்டே இருக்கும்.

ஆனால் ஒரு கணம் நின்று சிந்திப்போம்…நாம் இறைவனுக்கு கொடுக்க என்ன வைத்திருக்கிறோம்?
இந்த உலகமே அவனுடையது…
நாம் வைத்திருப்பது எல்லாம் அவன் அருளியது தான்…அப்படியிருக்க,
அவனுக்கே நாம் என்ன கொடுக்க முடியும்?
பணம்… பொருள்… புகழ்…
இவை அனைத்தும் நிலையற்றவை.
இவை அவனுக்குத் தேவையா?
— இல்லை… இல்லவே இல்லை.

📜
ஔவை, தன்னிடம் இருந்ததைத் தந்தாள் —
அது பொருள் அல்ல…
அது ஞானம், அது தமிழ்,
அது பக்தியின் கவியமுது.
அதை அருந்திய முருகன்,
பக்தியும் இறைவனும் ஒன்றாகும் என்ற அந்த ஆனந்தத்தை உலகிற்கு உணர்த்தினான்.

🚶‍♀️
காரைக்கால் அம்மையார்,
தன் உடலழகையும், உலக இன்பங்களையும் துறந்தார்.
ஈசனிடம் “நான் உன் அடியாள்” என்ற சரணாகதியில், எலும்புருவமாக மாறி, கைகளால் நடந்து ஈசனை அடைந்தார்.
அவரது பக்தி முன், ஈசனே ஓடி வந்து,
“அம்மையே!” என்று அழைத்தார்.

💮
ஆண்டாள்,
தன் அன்பை மலர்களில் பின்னினாள்…
அதை முதலில் தானே சூடி, அழகு பார்த்து பிறகு உவகையோடு பெருமானுக்கு சமர்ப்பித்தாள்.

அவள் அன்பின் தூய்மையில்,
பெருமான் தானே மயங்கினார்…
அவளைத் தன்னுள் ஏற்றுக் கொண்டார்.

🌿
ஆரியன்காவு புஷ்கலா தேவி,
ஞான உபதேசத்தால் தன்னில் தன்னை உருகச் செய்தாள்… தன்னையே அறிந்தாள்…
அதன் உச்சியில்,
“நானே நீ… நீயே நான்…”
என்று ஆத்ம நிவேதனமாக,
தன் ஆத்மாவையே ஐயனிடம் சமர்ப்பித்தாள்.
அங்கே, தவ யோக தவ ஞானம் சித்தித்ததால்
பக்தி முக்தியாகியது…
கன்னிகை, கிரஹலட்சுமி நிலையடைந்தாள்...!


இதிலிருந்து நாம் அறிய வேண்டியது
பழுத்த இறையனுபவம் பெற்ற
இறை அடியார்கள் பொருள் கொடுக்கவில்லை…

மாறாக
அவர்கள் தந்தது — தங்களையே.
அவர்கள் துறந்தது — அகந்தை.
அவர்கள் அடைந்தது — முக்தி.

🤷‍♂️
“என்னிடம் பணமில்லை…
ஞானமில்லை…
மெய்யுணர்வில்லை…
அப்படியிருக்க நான் என்ன கொடுப்பேன்?”
— இதற்கும் விடை உண்டு.

⚔️
மகாபாரதப் போரில்,
கிருஷ்ணன் ஒரு ஆழ்ந்த லீலை ஆடுகிறார்.
கர்ணன் — பெரும் தானவீரன்.
ஆனால், அவனுள் ஒரு நுண் அகந்தை…
“நான் தான் பெரிய தானக்காரன்”
என்ற மெல்லிய பற்றுதல்.
அதை களைவதற்காக,
கிருஷ்ணன் அந்தண வடிவில் வந்து,
அவனிடம் தானமாக கேட்டது —
அவன் செய்த புண்ணிய பலன்கள்..!

"நான் செய்த எல்லா தானங்களின் புண்ணிய பலன்களையும் உங்களுக்கு தருகிறேன்”
என்று மனதார சமர்ப்பித்தான்.

அந்த தருணத்தில்,
கர்ணன் விட்டது பொருள் அல்ல…
👉 தன் “புண்ணியத்தின் உரிமை உணர்வு”
👉 “நான் செய்தேன்” என்ற அகந்தை
அதனால், அவன் கர்ம பந்தங்கள் யாவும் களையப்பட்டன.

ஏற்கனவே கர்ணன், இந்திரனிடம்
தன் கவச குண்டலங்களை அறுத்து இல்லை என்று சொல்லாமல் தானமாக கொடுத்து விட்டான்.

கவச குண்டலம் அவன் உயிர்…
பெரும் தானங்களின் புண்ணியம் என்பது அவன் பாதுகாப்பு…
ஆனால் கர்ணன், ஒரு கணமும் தயங்கவில்லை…கேட்ட உடன் தானமாக கொடுத்து விட்டான்.

🎯
அந்த தருணத்தில்,
அவன் இழந்தது கவசம் அல்ல…
அவன் அகந்தை.
அவன் விட்டது பொருள் அல்ல…
அவன் “நான்” என்ற எண்ணம்.

அதோடு,
அவன் ஆன்மா சுதந்திரமடைந்தது.
கிருஷ்ணன் காட்டிய விஸ்வரூபத்தில்,
அவன் ஒன்றாயினான்.

🪷
அதனால்…
சாமிக்கு கொடுக்க வேண்டியது —
பணம் அல்ல…பொருள் அல்ல…
👉 அகந்தை.
👉 “நான்” என்ற மாயையை துறத்தல்
👉"தேகம்"என்ற மாயையை துறத்தல்

இதை உணர்ந்தால் போதும்…
மீதியெல்லாம் அவனே செய்வான்.
ஏனென்றால் அவனை மட்டுமே நாம் அறிவோம். மற்ற அனைத்தையும் அவன் அறியத் தருகிறான்.

🙏
ஐயனே சரணம்…
குருவே சரணம் 🙏
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
🪷🪷🪷🪷🪷

🌺🌿 அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை விஷு நல் வாழ்த்துக்கள் 🌿🌺தமிழ் புத்தாண்டை முன்னிட்டு...ஆங்கில மொழ...
13/04/2026

🌺🌿 அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை விஷு நல் வாழ்த்துக்கள் 🌿🌺

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு...

ஆங்கில மொழியைப் பயன்படுத்தும் போது ஒவ்வொரு இந்துவும் செய்யக்கூடிய தவறான விஷயங்கள்: -
திரு ஃபிராங்கோயிஸ் கடியர் எழுதியது.

1. தயவுசெய்து "கடவுள் பயம்" (God Fearing) என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள் - இந்துக்கள் ஒருபோதும் கடவுளுக்கு அஞ்ச மாட்டார்கள். நம்மைப் பொறுத்தவரை, கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார், நாமும் கடவுளின் பகுதியாக இருக்கிறோம். பயப்படுவதற்கு, கடவுள் ஒரு தனி அங்கம் அல்ல.

2. யாராவது இறந்தால் தயவுசெய்து "RIP" என்ற அர்த்தமற்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். "ஓம் சாந்தி", "சத்கதி" அல்லது "இந்த ஆத்மா மோட்சம் / சத்கதி / உத்தம லோகங்களை அடைய விரும்புகிறேன்" என்று சொல்லுங்கள். (விரிவாக புரிந்து கொள்ள வேண்டிய ஒரு தத்துவம் இது)

3. தயவுசெய்து நம் வரலாற்று காவியங்களுக்கு (இதிஹாஸங்களுக்கு) ராமாயணம் மற்றும் மகாபாரதத்திற்கு "கட்டுக்கதை" (Myth) என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். ராமரும் கிருஷ்ணரும் புராணக் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல, வரலாற்று நாயகர்களும் கூட.

4. தயவுசெய்து சிலை வழிபாட்டைப் பற்றி எங்கும் யாரிடமும் எப்போதும் மன்னிப்புக் கோராதீர்கள், “அது வெறும் குறியீடே” என்றும் சொல்லாதீர்கள். எல்லா மதங்களும் ஒருவித சிலை அல்லது சொற்கள் அல்லது எதோ உருவ வழிபாட்டைக் கொண்டுள்ளன - குறுக்கு (cross), சொற்கள் (words), அல்லது திசை (direction) என்று எதையாவது உபயோகிக்கின்றன. மேலும் பின்வரும் சொற்களைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். நம் தெய்வங்களை 'சிலைகள்' அல்லது 'படங்கள்' என கூறுவதை தவிருங்கள். நம் கடவுளின் சிற்பங்களைக் குறிப்பிடும்போது 'மூர்த்தி' அல்லது 'விக்ராஹா' என்ற சொற்களைப் பயன்படுத்துங்கள். கர்மா, யோகா, குரு, மந்திரம் போன்ற சொற்கள் பிரதான நீரோட்டத்தில் இருக்க முடியும் என்றால், ஏன் மூர்த்தி இல்லை அல்லது விக்ராஹா என்ற சொற்கள் இருக்கக் கூடாது?

5. தயவுசெய்து கணேஷ் மற்றும் அனுமனை முறையே "யானை கடவுள்" (Elephant God) மற்றும் "குரங்கு கடவுள்" (Monkey God) என்று குறிப்பிட வேண்டாம். நீங்கள் ஸ்ரீ கணேஷ் மற்றும் ஸ்ரீ ஹனுமான் என்றே குறிப்பிடுங்கள்.

6. தயவுசெய்து நம் கோயில்களை பிரார்த்தனை அரங்குகள் (Prayer Hall) என்று குறிப்பிடாதீர்கள். கோயில்கள் "தேவலாயா", நம்முடைய கடவுளின் வசிக்கும் இடமாகும். அவை பிரார்த்தனை அரங்குகள் அல்ல.

7. தயவுசெய்து உங்கள் குழந்தைகளுக்கு பிறந்தநாள் கேக்கின் மேல் வைக்கப்பட்டுள்ள மெழுகுவர்த்திகளை அணைத்து அதன் மூலம் அந்த நன்னாளை கருப்பு பிறந்த நாளாகாதீர்கள். தெய்வீக நெருப்பில் துப்புதல் எவ்வகையில் நல்ல காரியம் ஆகும்? அதற்கு பதிலாக, நம் குழந்தைகளை பின்வருமாறு ஜெபிக்கச் சொல்லுங்கள்: "ஓ தெய்வீக நெருப்பே, என்னை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்" (தமசோமா ஜோதிர்கமாய). அப்படி சொல்லி ஒரு விளக்கை ஏற்றி வைக்கச் சொல்லுங்கள்.

8. தயவுசெய்து "ஆன்மீகம்" (Spirituality) மற்றும் "பொருள்முதல்வாதம்" (Materialism) என்ற சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஒரு இந்துவைப் பொறுத்தவரை எதுவுமே தெய்வீகமானது. சர்ச் மற்றும் தேசம் (Church and State) என்ற கருத்தை கொண்டிருந்த சுவிசேஷகர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் மூலமாக இந்த வார்தைகள் இந்தியாவுக்குள் வந்தது. அதே போல்தான் அறிவியல் மற்றும் மதம் கருத்துக்களும். மாறாக, இந்தியாவில், ரிஷிகளும் முனிவர்களும் விஞ்ஞானிகளாய் திகழ்ந்து, சனாதன தர்மத்தின் அடித்தளத்தை அறிவியல் கொண்டே அமைத்துள்ளனர்.

9. நமக்கு தர்மம் (கடமை, நீதி, பொறுப்பு மற்றும் சலுகை) மற்றும் அதர்மா (தர்மம் பின்பற்றப்படாதபோது) மட்டுமே உள்ளது. தர்மத்திற்கு மத ஒழுக்கத்துடன் எந்த தொடர்பும் இல்லை. ஆங்கில வார்த்தைகளான Sin போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். அவை இந்து மத கோட்பாடுகளில் கிடையாது. தர்மம் அதர்மம் மட்டுமே நமக்கு பொருந்தும்.

10. தயவுசெய்து மெடிடேஷன் (Meditation), பிரீதிங் எக்ஸர்சைஸ் (Breathing Exercise) என்ற வார்த்தைகளை தியானம் மற்றும் பிராணயாமா போன்ற வார்த்தைகளின் மொழிபெயர்ப்பாய் பயன்படுத்த வேண்டாம். இது தவறான அர்த்தங்களை வெளிப்படுத்துகிறது. தியானம் மற்றும் பிராணயாமா போன்ற அசல் சொற்களைப் பயன்படுத்துங்கள்.
தங்களை மதிக்கிறவர்களை மட்டுமே உலகம் மதிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
மக்கள் இந்து தர்மத்தைப் பற்றி புரிந்துகொள்ளும் வகையில் தயவுசெய்து பரப்புங்கள்.

🙏🙏தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்🙏🙏

நன்றி:- Vasudevan Nembili Veeravalli ji

🇮🇳 தேசம்… தர்மம்… தியாகம்… 🇮🇳அமரர் எஸ். ஆர். ஜெயராமன் – ஒரு வாழும் வீர வரலாறு 🪷 இந்த மண்ணின் மண்வாசனையோடு,இந்த தேசத்தின்...
12/04/2026

🇮🇳 தேசம்… தர்மம்… தியாகம்… 🇮🇳
அமரர் எஸ். ஆர். ஜெயராமன் –
ஒரு வாழும் வீர வரலாறு

🪷 இந்த மண்ணின் மண்வாசனையோடு,
இந்த தேசத்தின் ஆன்மாவோடு
தன்னை முழுமையாக
இணைத்துக் கொண்ட
ஒரு அர்ப்பணிப்பின் உருவம் –
அமரர் எஸ். ஆர். ஜெயராமன். 🪷

👉 1955ஆம் ஆண்டில்,
தேசத்தின் மேல் கொண்ட அதீத
பற்று, அவரை ஆர்.எஸ்.எஸ்.
இயக்கம் நோக்கி இட்டுச் சென்றது.
அது ஒரு சாதாரண இணைவு அல்ல…
அது ஒரு வாழ்க்கை அர்ப்பணிப்பு!

அந்த ஈடுபாடு காரணமாகத் தான் 1960 களில் மதுரை மண்ணில் “பாரதிய ஜன சங்கம்” என்ற விதை தூவப்பட்ட போது, அதை வளர்த்த அடிப்படை வேர்களில் ஒன்றாக இருந்தார்.

ஒரு தகவலுக்காக....

👉 1955 களில், எஸ். ஆர். ஜெயராமன்
அவர்கள் மதுரையில் ஆர் எஸ் எஸ்., இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

👉 1965 களில் ஜனா. கிருஷ்ண மூர்த்தி அவர்கள் மதுரையில் தான் தன் முதல் அரசியல் பயணத்தை தொடங்கினார்.

👉 1970 களில் இல.கணேசன் அவர்கள் மதுரையில் தான் தன் முதல் முழு நேர ஆர் எஸ் எஸ்., காரியகர்த்தராக பணியை மேற்கொண்டார்.

🔥 1967 – ஜன சங்கத்தின் கள்ளிக்கோட்டை மகாநாடு நடைபெற்றது. அது ஒரு அரசியல் நிகழ்வு மட்டும் அல்ல, தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைத்த ஒரு திருப்புமுனை!

அந்த கால கட்டத்தில், அனைவரோடும் இணைந்து அந்த மாநாட்டிற்கு மதுரையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களை லாரியில் அழைத்துச் சென்று, தேசிய சிந்தனையை விதைத்த
ஒரு தீவிர செயல் வீரர் – எஸ்.ஆர்.ஜெயராமன்!

அந்த மாநாட்டில் தான் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தேசியத் தலைவராக உயர்ந்த தருணம்,
அது அவரது கண்முன்னே நடந்தது.

🔥 1968 – இந்தியவின் குஜராத் கட்ச் எல்லையை காக்கும் சத்தியாக்கிரகப் போராட்டம்…

இந்திய மண்ணின் ஒரு அங்குலம் நிலத்தைக் கூட பாகிஸ்தான் ஆக்கிரமிக்க விட மாட்டோம் என்ற உறுதியோடு, தேச எல்லையை காக்க நடந்த “சத்தியாகிரக தீப்பொறி அது”!

அந்த போராட்டத்தில்
மதுரையிலிருந்து கலந்து கொண்ட
இரண்டு வீரர்களில் ஒருவர் –
அமரர் எஸ். ஆர். ஜெயராமன்! மற்றொருவர் அமரர் ஆர். வி. சேஷாச்சாரி.!!

அது ஒரு போராட்டம் மட்டும் அல்ல…
அது நமது தேசத்தின் இறையாண்மை, ஆளுமை, கௌரவம். பாதுகாப்பு!

🌿 மதுரையில் "பாரதிய ஜன சங்கத்தின்" ஆரம்பக் கட்ட தலைவர்களான ஜனா கிருஷ்ணமூர்த்தி, அட்வகேட் G. விஸ்வநாதன், N.K. குப்பைய்யன், R.V. சேஷாச்சாரி , S.K.பாலகிருஷ்ணன், T.R. கோபாலன், C.K.நரசிம்மாச்சாரி, தா.மணி, ஷேசைய்யன், P.R. ராஜகோபால் மற்றும் பல செயல்வீரர்களுடன் சேர்ந்து கட்சியை வளர்த்தார்.

திருக்கோவிலூர் சுந்தரம் அவர்களை அழைத்து வந்து டயர் வண்டியை மேடையாக்கி ஜன சங்கத்தின் அரசியலை வளர்த்தனர்.

🏛️ அரசியல் மட்டுமல்ல…
சமூகப் பணியும் அவரது சுவாசம்.

👉 1967 களில் மீனாக்ஷி கூட்டுறவு சங்கம், சிவாஜி கூட்டுறவு சங்கம் ஆகிய சங்கங்களின் ஸ்தாபக நிர்வாகி மற்றும் உறுப்பினராக சேவை செய்தார்.

👉 1970 ஆம் ஆண்டில் ஜன சங்கத்தின், கைத்தறி தொழில் சங்கத்தில் தலைவராக இருந்து கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு பெற்றுக் கொடுத்தார். அதோடு நெசவாளர்களுக்கு அரசின் இடைக்கால நிவாரண தொகையும் பெற்றுக் கொடுத்தார்.

🏛️ காமராஜபுரம் பகுதி வாழ்
மக்களுக்கு பட்டா கிடைக்க போராட்டங்களை நடத்தினார்.

🏛️ அதே நேரத்தில் பல கட்ட போராட்டங்களை நடத்தி
சக்கிமங்கலத்தில்
நெசவாளர்களுக்கு இலவச வீட்டு
மனைப் பட்டா வாங்கிக் கொடுத்து அங்கு நெசவாளர் காலனியை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தினார்.

சக்கிமங்கலத்தில் உருவான
நெசவாளர் காலனி அவரது உழைப்பின் உயிர் சாட்சி.🪔

💎 1980 களில் BMS இல் தொழில் சங்கத் தலைவராக இருந்து PRC யில் சுமார் 25 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார்.

💎 1985 இல் BMS மூலம் ரயில்வே மஸ்தூர் யூனியனில் தொழிலாளர் நலனுக்காக களத்தில் நின்று பல போராட்டங்களை நடத்தி, தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுத்தார்.

👉 1980 முதல் பாரதிய ஜனதா கட்சிப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். மூத்தத் தலைவராக களப்பணி ஆற்றினார்.

🔥 1990 ஆம் ஆண்டு அத்வானி அவர்களின் ரத யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதையடுத்து மத்தியில் இருந்த வி. பி. சிங் ஆட்சி கவிழ்ந்தது.

அந்த நேரத்தில் மதுரையில் பாஜகவின் தீவிர நிர்வாகி
என்ற முறையில் அமரர் எஸ்.ஆர். ஜெயராமன் அவர்கள் பல
நாட்கள் "ஹவுஸ் அரெஸ்ட்டில்" வைக்கப்பட்டார்.

🔥 அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கு செங்கல் மற்றும் நிதி திரட்டுவதுடன், மக்களிடையே விழிப்புணர்வையும் ஒருமித்த கருத்தையும் உருவாக்கும் வகையில் நடைபெற்ற "ஏகதா யாத்திரை" மதுரையில் எழுச்சியுடன் நடைபெற முன் களப்பணியாற்றினார்.

🔥 தேரோடும் மதுரை வீதிகளில்
இஸ்லாமியர்களின் மறைமுக ஆக்கிரமிப்புகளை எதிர்த்து, ஹிந்துக்களின் உரிமை காக்கும் போராட்டத்தில் ஹிந்து முன்னணி தலைவர் பா.ராஜகோபாலன் அவர்களுடன் கைது செய்யப்பட்டு
15 நாட்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

👉 ஆன்மிகம் அவரது உயிரோடு கலந்தது. ஆரியன்காவு கோவில் உற்சவ பணிகளில் சங்க நிர்வாகமும், ஆன்மிகமும் இணைந்த பலமான ஒரு கட்டமைப்பை உருவாக்கினார்.

💎 ஆரவாரமிக்க திராவிட புயல் வீச ஆரம்பித்த காலத்தில் , தான் சார்ந்த இயக்கம், என்றாவது ஒரு நாள் இந்த தேசத்தை ஆளும் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லாத காலம்....

ஆனால் அவர் நம்பிக்கை என்ன?
👉 “தேசம் முன்னேறும்!”

தன் குடும்பத்தை விட
தேச நலனை மேலாகக் கண்டவர்…!

👉 “எமக்கு தொழில் நாட்டிற்கு உழைத்தல்” என்ற பாரதியின் வழியில் நடந்தவர்!

🇮🇳🙏👉 அவரது குடும்பமே
தேசபக்தியின் உருவம்! காரணம் அமரர் எஸ். ஆர். ஜெயராமன் அவர்களுடைய தகப்பனார் செட்டி.ராமகிருஷ்ணய்யர்– நாகலம்மாள் தம்பதியர், 1956 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16 ஆம் தேதி அப்போது தான் பிறந்த தங்களுடைய பேரனைப் பார்க்க வீட்டிலிருந்து புறப்பட்டு வரும் வழியில் மதுரை, கீழவாசல் சந்திப்பில், மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு விஜயம் செய்யும் இந்திய ராஷ்டிரபதி பாபு ராஜேந்திர பிரசாத் @ (ராஜன் பாபு) அவர்களை பார்த்து விட்டு வருகிறோம்.

பேரனுக்கு பகவானின் திருநாமம் சூட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு வந்தவர்கள், வழியில் தேசத்தின் உத்தமத் தலைவர் ராஜன் பாபுவை பார்த்து விட்டு வந்த பெருமிதத்தில், அவரது செல்லப் பெயரான "ராஜன் பாபு" என்ற பெயரையே தங்கள் செல்லப் பேரனுக்கு பெயர் சூட்டி அக மகிழ்ந்தனர்.

அவர்களைப் பொருத்த வரை அந்த கணத்தில் தேசமா? தெய்வீகமா? என்ற போது அந்த நேரத்தில் வென்றது இரண்டும் ஒன்றிணைந்த தேசிய உணர்வு தான்...! 🇮🇳🙏 💫

👉 எஸ்.ஆர்.ஜெயராமன் அவர்கள் 1985 முதல் இறுதி வரை, ஹிந்து முன்னணி மதுரை மாவட்ட பொதுச் செயலாளராக தன் உயிர் மூச்சு இருக்கும் வரை ஹிந்து தர்ம சேவையில் இருந்தார்.

1992 அக்டோபர் 17…
ஒரு மனிதன் மறைந்த நாள் அல்ல.
👉 ஒரு தேசத் தீபம் உயர்ந்த நாள் 🪔

🌺 ஆம்… அவர் பிறந்தார்…
தேச உணர்வுடன் வளர்ந்தார்…
தர்ம உணர்வுடன் வாழ்ந்தார்…
தேசத்திற்காக தேச சேவையில் தன்னை அர்ப்பணித்தார்…
🔥
ஹிந்து தர்மப் போராளியாக
விடை பெற்றார்!

🇮🇳
அவரை பொறுத்தவரை தேசபக்தி என்பது ஒரு உணர்வு மட்டுமல்ல.…அது ஒரு வாழ்க்கை முறை!
அதை தன் வாழ்க்கையால் நிரூபித்தவர் –
🙏 அமரர் எஸ். ஆர். ஜெயராமன்🙏

🌺 இன்று அவரது
ஜென்ம ஜனன தினம். 🪷

குருவே சரணம் 🙏
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
🪷🪷🪷🪷🪷🪷

Address

Chennai
600080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ariyankavu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share