Sri Sanga Janani

Sri Sanga Janani ஆன்மீக சேவை எங்கள் நோக்கம்.

08/06/2026

Bhramari Pranayama Technique

இன்றைய சித்ரா பௌர்ணமி முன்னிட்டு நமது சத்சங்கத்தை சேர்ந்த அடியார்கள் குரு அருளால் இணைந்து நடத்திய உயர்தர பிரியாணி அரிசி ...
01/05/2026

இன்றைய சித்ரா பௌர்ணமி முன்னிட்டு நமது சத்சங்கத்தை சேர்ந்த அடியார்கள் குரு அருளால் இணைந்து நடத்திய உயர்தர பிரியாணி அரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட வெஜிடபிள் பிரியாணி அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.

01/05/2026

With our Guruji blessings On behalf of our devotees today we did "full meals Annadhana" with sweets at Shri Badrakaali Temple.

We wish to thank you all for the same.
🦜🦜🦜🦜🦜
Shri Pugalendhi
*Sri Sanga Janani Trust*
(A Registered Trust Of Sri Jothi Ramalinga Swamy Siddhar)
Message dt: 01.05.2026

ஸ்ரீ நவகோடி சித்தர் கோயில். கோடியகரை.ஸம்வத்ஸரா அபிஷேக அழைப்பிதழ்.
23/03/2026

ஸ்ரீ நவகோடி சித்தர் கோயில். கோடியகரை.

ஸம்வத்ஸரா அபிஷேக அழைப்பிதழ்.

மீள் பதிவு.எதிரிகளுக்கு சும்மா அதிருதிலே!!!வெட்டுடையா காளி - “நாணயம் தவறியோர்க்கு நாணயம் வெட்டு”எச்சரிக்கை:அதர்மம் செய்ப...
14/03/2026

மீள் பதிவு.

எதிரிகளுக்கு சும்மா அதிருதிலே!!!

வெட்டுடையா காளி - “நாணயம் தவறியோர்க்கு நாணயம் வெட்டு”

எச்சரிக்கை:
அதர்மம் செய்பவரோ அல்லது அவரை சார்ந்தவர்களோ பொய்யாக வேஷம் இங்கு சென்று அம்பிகையை சோதிக்க வேண்டாம்.
வீளைவுகள் விபரீதமாகும்

நீதிபதி :

காளி தன் வலது காலை ஊன்றி, இடதுகாலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளாள். இவள் வைத்திருக்கும் கத்தியும், கேடயமும், வில்லும், அம்பும் இன்னும் மற்ற ஆயுதங்களும் எவ்வளவு பெரிய தீய சக்தியாக இருந்தாலும் அதனை எல்லாம் அழித்து விடுவேன் என்று பராசக்தியின் அம்சமான அம்பிகை எட்டு கைகளுடன் காலுக்கு கீழே அசுரனை வதம் செய்தபடி காட்சி தருகிறாள்.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம், வீண்பழி, அவமரியாதையால் பாதிக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனைக்கு உள்ளானோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு அம்பாள் சன்னதியில் காசு வெட்டிப்போட்டு வழிபடுகின்றனர். இந்த அநியாயங்களை எல்லாம் அம்பிகை தட்டிக்கேட்டு, குற்றவாளிகளைத் தண்டிப்பாள் என்பது நம்பிக்கை. "நாணயம் தவறியோர்க்கு நாணயம் வெட்டிப்போடு' என்று சொல்லும் வழக்கமும் உள்ளது. வெட்டுடையார் காளியம்மன் மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைத்து, நடுநாயகமாக இருந்து நீதி வழங்குவதால் பக்தர்கள் இவளை "நீதிபதி' என்றே அழைக்கின்றனர்.

முற்காலத்தில் இவ்வூரில் வசித்த ஒரு பக்தரின் கனவில் தோன்றிய ஐயனார், தனது சிலை வடிவம் ஈச்ச மரக்காடான இங்கு இருப்பதாக உணர்த்தினார். அதன்படி, பக்தர் இங்கு வந்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டினார். கோடரி வெட்டுப்பட்டு, சிலை கிடைக்கப்பெற்றது. இதன் காரணமாக இவருக்கு வெட்டுடையா ஐயனார் என்றே பெயர் ஏற்பட்டது.

ஒரு சமயம் நள்ளிரவில் ஐயனார் சன்னதிக்கு அருகில் ஒரு ஈச்சமரத்தடியில் பேரொளி மின்னியதைக் கண்டனர். மறுநாள் காலையில் அங்கு அம்பிகையின் யந்திரம் இருந்தது. அவ்விடத்தில் அம்பிகைக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தனர். சுவாமியின் பெயரால் அவளுக்கு "வெட்டுடையா காளி' என்றே பெயர் ஏற்பட்டது.

கவனிக்க: நாணயம் வெட்டிய பின்பு எந்த காரணம் கொண்டும் மீண்டும் எதிரிகளுடன் கைகோர்க்க கூடாது.

எதிரிகளுக்கு சும்மா அதிருதிலே!!! - தொடரும்....

தொடர்வது முருகன் ஸ்தலம் - நகரின் எல்லை காவலாய் - மக்களை எதிரிகளிடம் இருந்து காத்து ரட்சிக்கும் இடம். அவரை அங்கு எப்படி வழிபட வேண்டும்? காத்திருங்கள்.

ஸ்ரீ புகழேந்தி
ஸ்ரீ ருத்ர காளி உபாசனை.

19/02/2026

ஸ்ரீ துர்கை சித்தர் அருளிய ரோக நிவாரணி அஷ்டகம், நோய்களை எல்லாம் தீர்க்கும் சக்தி படைத்த,மிக மகிமை வாய்ந்த துதியாகும். நம்பிக்கையுடன் இதைப் பாராயணம் செய்து அம்பிகையைப் பூஜித்தால், அம்பிகையின் அருளால், சகல விதமான நோய்களும், பிறவிப்பிணியும் நீங்கி பேரானந்த நிலையை அடையலாம்.

பகவதி தேவி பர்வத தேவி.
பலமிகு தேவி துர்க்கையளே
ஜகமது யாவும் ஜயஜயவெனவே
சங்கரி உன்னைப் பாடிடுமே
ஹநஹந தகதக பசபச வெனவே
தளிர்த் திடு ஜோதியானவளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

தண்டினி தேவி தக்ஷிணி தேவி
கட்கினி தேவி துர்க்கையளே
தந்தன தான தனதன தான
தாண்டவ நடன ஈச்வ ரியே
முண்டினி தேவி முனையொளி சூலி
முனிவர்கள் தேவி மணித் தீவியளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

காளினி நீயே காமினி நீயே
கார்த்திகை நீயே துர்க்கையளே
நீலினி நீயே நீதினி நீயே
நீர்நிதி நீயே நீர் ஒளியே
மாலினி நீயே மாதினி நீயே
மாதவி நீயே மான் விழியே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

நாரணி மாயே நான் முகன் தாயே
நாகினியாயே துர்க்கையளே
ஊரணி மாயே ஊற்றுத்தாயே
ஊர்த்துவ யாளே ஊர் ஒளியே
காரணி மாயே காருணி தாயே
கானகயாளே காசி னியே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

திருமகளானாய் கலைமகளானாய்
மலைமகளானாய் துர்க்கையளே
பெருநிதியானாய் பேரறிவானாய்
பெருவலியானாய் பெண்மையளே
நறுமலரானாய் நல்லவ ளானாய்
நந்தினி யானாய் நங்கையளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

வேதமும் நீயே வேதியள் நீயே
வேகமும் நீயே துர்க்கையளே
நாதமும் நீயே நாற்றிசை நீயே
நாணமும் நீயே நாயகியே
மாதமும் நீயே மாதவம் நீயே
மானமும் நீயே மாயவளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

கோவுறை ஜோதி கோமள ஜோதி
கோமதி ஜோதி துர்க்கையளே,
நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி
நாட்டிய ஜோதி நாச்சியாளே
பூவுறை ஜோதி பூரண ஜோதி
பூதநற் ஜோதி பூரணியே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

ஜய ஜய சைல புத்திரி ப்ரஹ்ம
சாரிணி சந்திர கண்டினியே
ஜய ஜய கூக்ஷ் மாண்டினி ஸ்கந்த
மாதினி காத்யாயன்ய யளே
ஜய ஜய காலராத்திரி கௌரி
ஸித்திதா ஸ்ரீ நவ துர்க்கையளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா.

நீண்ட வரிசைக்கு குட்பை.. திருமலை தரிசன டிக்கெட் இப்போது WhatsApp-ல் கிடைக்கும்.. நம்பரை நோட் பண்ணுங்கஸ்ரீவாரி பக்தர்கள் ...
11/02/2026

நீண்ட வரிசைக்கு குட்பை.. திருமலை தரிசன டிக்கெட் இப்போது WhatsApp-ல் கிடைக்கும்.. நம்பரை நோட் பண்ணுங்க

ஸ்ரீவாரி பக்தர்கள் இனி வாட்ஸ்அப் மூலமாகவே தரிசன டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யலாம். திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி உள்ளிட்ட முக்கிய கோவில்களுக்கான தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தபடியே பெறலாம்.

திருமலை ஸ்ரீவாரி பக்தர்களுக்கு இது உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தி ஆகும். இனி தரிசன டிக்கெட் கிடைக்குமா என கவலைப்பட வேண்டியதில்லை. நீண்ட வரிசை, இணையதள போராட்டம், கவுண்டர் காத்திருப்பு என எதற்கும் இனி கவலைப்பட தேவையில்லை. கலியுக தெய்வமாக போற்றப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாளை தரிசிக்க திருமலைக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.


இதனால் தரிசன டிக்கெட்டுகளுக்கு எப்போதும் கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை ஆன்லைன், ஆஃப்லைன் முறைகளில் மட்டுமே டிக்கெட் கிடைத்த நிலையில், தற்போது எங்கிருந்தாலும் மொபைல் மூலமாகவே டிக்கெட் பெறும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய வாட்ஸ்அப் அடிப்படையிலான சேவை மூலம், வீட்டில் இருந்தபடியே சில நிமிடங்களில் தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.


இந்த புதிய வசதிக்காக அரசு WhatsApp Governance முறையை பயன்படுத்தியுள்ளது. பக்தர்கள் முதலில் 95523 00009 என்ற எண்ணை தங்கள் மொபைலில் சேமித்து, "ஹாய்" என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன்பிறகு கிடைக்கும் மெனுவில் சேவைகள் பட்டியல் தோன்றும். இதில் "கோவில் முன்பதிவு சேவைகள்" என்ற விருப்பத்தை தேர்வு செய்தால், கோவில் சார்ந்த முன்பதிவு வசதிகளை எளிதாக அணுகலாம்.


இந்த சேவையில் திருமலை மட்டுமல்லாமல், ஸ்ரீசைலம், கனிபாகம், அன்னவரம், விஜயவாடா, ஸ்ரீகாளஹஸ்தி போன்ற ஆந்திராவின் முக்கிய கோவில்களும் இடம்பெற்றுள்ளன. நீங்கள் செல்ல விரும்பும் கோவிலைத் தேர்வு செய்து, தரிசனம் அல்லது சேவை வகையைத் தேர்ந்தெடுத்து, பக்தரின் முழு விவரங்களையும் பதிவு செய்தால் போதும்.


மொத்தத்தில், இந்த வாட்ஸ்அப் டிக்கெட் முறை பக்தர்களின் நேரத்தையும், சிரமத்தையும் பெரிதும் குறைக்கிறது. தொழில்நுட்பம் இப்போது பக்தியாகவும் உதவ தொடங்கியுள்ளது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் தொலைதூர பக்தர்களுக்கு இந்த வசதி ஒரு பெரிய வரமாக இருக்கும்.

18/01/2026

ஞாயிற்றுக்கிழமை 18.01.2026
தை அமாவாசை காலை சிற்றுண்டி அன்னதான பசியாற்றிவித்தல்

ஞாயிற்றுக்கிழமை 18.01.2026 தை அமாவாசை காலை சிற்றுண்டி அன்னதான பசியாற்றுதல் .
18/01/2026

ஞாயிற்றுக்கிழமை 18.01.2026
தை அமாவாசை காலை சிற்றுண்டி அன்னதான பசியாற்றுதல் .

"Red rose-பூஜைக்கு உகந்ததா?"(வாசனை உள்ள ரோஸ் கலரில் உள்ளரோஜாவையே மகான்கள் ஏற்பார்கள்)காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் அமர்ந...
17/12/2025

"Red rose-பூஜைக்கு உகந்ததா?"

(வாசனை உள்ள ரோஸ் கலரில் உள்ள
ரோஜாவையே மகான்கள் ஏற்பார்கள்)

காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள்

பெரியவாள்.அங்கே கோபுரத்தில் திருப்பணி நடந்துகொண்டிருந்ததை மேற்பார்வையிட்டவாறு பலமணி நேரம் தங்கியிருந்தார்கள்.

பலர் வந்தார்கள்; நமஸ்காரம் செய்தார்கள்; திரும்பி போனார்கள். ஆனால் நான் அவ்விடத்தைவிட்டு நகரவில்லை.

சற்று தூரத்தில் ஒரு பூக்காரி, கூடை நிறைய செக்கச் சிவந்த ரோஜாப் பூக்கள் விற்றுக்கொண்டிருந்தாள்.

பார்ப்பதற்கே அழகாக இருந்தன அந்தப் பூக்கள்.

'ஒரு தட்டு நிறைய வாங்கி, பெரியவாளுக்கு

சமர்ப்பிக்கலாமே?' என்று தோன்றியது.

உடனே சென்று வாங்கிக்கொண்டு வந்தேன். பூக்கள்

அளவிலும் பெரிதாக இருந்ததால், இரட்டை மகிழ்ச்சி.

தட்டில் வைத்த பூக்களை பெரியவாள் பார்த்தார்கள்;

தொடக்கூட இல்லை. ஏன்,இப்படி?

பெரியவாளின் கவனத்தைத் திருப்புவதற்காக,

"புதுக்கோட்டை மாமி ரோஜாப்பு வெச்சிருக்கா.."

என்று சொன்னார்,அருகிலிருந்த சிஷ்யர்.

பெரியவாள் நிமிர்ந்து பார்த்தார்கள்;

"இது ரோஜாப்பூ இல்லை; ரோஜாப்பூ மாதிரியான சிவப்புக் கலர் புஷ்பம்.

ரோஸ் கலரில் இருக்குமே, அதுதான் நிஜமான ரோஜா.அதில் நல்ல வாசனை இருக்கும்.

ஆமாம். இது Red rose அழகு இருந்தது;வாசனை

இல்லை மனிதர்கள் உப்யோகப்படுத்தலாம்;

மகான்கள் தொடமாட்டார்கள் என்பதை புரிந்து

கொண்டேன். அதற்குப் பிறகு red rose-ஐ

பூஜைக்கு வாங்குவதைத் தவிர்த்தேன்.

Jaya Jaya Shankara Hare Hare Shankara

Address

Mullai Nagar, IInd Main Road, Ramapuram
Chennai
600089

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Sri Sanga Janani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share