Group Admin

Group Admin devosition

ஒரு அற்புதமான தலைவரை அசிங்கப்படுத்திய Avadi Nazar...
06/05/2026

ஒரு அற்புதமான தலைவரை அசிங்கப்படுத்திய Avadi Nazar...

06/05/2026
22/03/2025

*சுந்தரர் மீது சூரிய ஒளி விழும் அதிசய காட்சி திருநாவலூர்* ☔🪷🪷🪷🪷🪷🪷☔

09/05/2024

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை!!

Whatsapp for Appointments -94430 61216 63804 38138
10/04/2024

Whatsapp for Appointments -94430 61216 63804 38138

01/07/2022

சனிக்கிழமை பதிவு...🕉️🕉️🕉️

வடுவூர் ராமர் தரிசனம்.

வடுவூர் கோதண்டராமர் ஆலயம், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு அருகில் உள்ளது. தஞ்சாவூர் - மன்னார்குடி சாலையில், 24 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்தக் கோயிலின் உற்சவர், ஸ்ரீராமரே உருவாக்கித் தந்தருளிய விக்கிரகம் என்கிறது ஸ்தல புராணம்.

ஶ்ரீ கோதண்டராமர் கோவில், “பஞ்ச ராம க்ஷேத்திரங்களில்” ஒன்று. அபிமான ஸ்தலம். தக்ஷிண அயோத்தி. ஒரு காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் வகுளாரண்ய க்ஷேத்ரம் என்றும் பாஸ்கர ஷேத்திரம் என்றும் பெயர். '

ஐந்து நிலை ராஜகோபுரம். மூலவராக கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் லக்ஷ்மணர், அனுமாருடன் எழுந்தருளியுள்ளார். உற்சவர் ராமர் பேரழகு! இந்த ராமனைக் காணக் கண் கோடி வேண்டும். பேரழகு வாய்ந்த ராமர். அழகுக்கே அழகு சேர்க்கும் ராமர். சேவித்துக்கொண்டே இருக்கலாம். என்ன அழகு! என்ன அழகு! பார்த்தவர் மயங்கும் அழகு! மந்தகாசப் புன்னகை!! இது போன்ற தத்ரூபமான புன்னகையை வேறு எங்குமே காண முடியாது. வில்லினைப் பிடித்திருக்கும் அழகு அதி ஆச்சர்யம்!

“மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு! என்பது ஓர் அழியா அழகு உடையான்”

என்ற கம்பரின் வரிகள் நினைவுக்கு வருகிறது. ஸ்ரீராமனை முழுவதுமாகத் துதிக்கமுடியாமல் தன்னுடைய இயலாமையை ‘ஐயோ’ என்ற பதத்தால் கம்பரே வெளிப்படுத்தி இருக்கும்போது நாம் எம்மாத்திரம்??!! கண்டோம்! கண்டோம்! கண்டோம்! கண்ணுக்கினியன கண்டோம்! என்று மெய்சிலிர்க்க மட்டுமே முடியும்.

வடுவூர் சிலையழகு, மன்னார்குடி மதிலழகு, திருவாரூர் தேரழகு என்பர். சரி இந்த உற்சவமூர்த்திக்கு அப்படி என்ன சிறப்பு? இது ஸ்ரீ ராமரே உருவாக்கிய விக்கிரகத் திருமேனி. அதனால்தான் அப்படியொரு உயிரோட்டம்.

அது வனவாச காலம். ராமரையும் அவரின் குண மாண்புகளையும் கண்டு சிலிர்த்த ரிஷிகள், முனிவர்கள் முதலானோர், அவருடனேயே ஆஸ்ரமத்தில் தங்கினர். அவருடன் இருக்கிற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஏதேனும் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டனர். ‘இதுவே மனித தர்மம். ஒரு மனிதன், இப்படித்தான் வாழவேண்டும் என்பதற்கு உதாரண புருஷர் நீங்கள்’ என்று சிலாகித்து வணங்கினர். ஆனால் வந்திருப்பது இறைவன், இவர் எடுத்திருப்பது அவதாரம் என்பதை அவர்கள் அறியவில்லை.

அவர்களுக்கு இறைவனை அடைவதற்கான வழியை, இறைவனே சொல்லித் தந்து அருளினார். அந்த உபதேசம் கேட்டு அனைவரும் நெகிழ்ந்தார்கள்.

அங்கிருந்து அயோத்ராதிக்மகு ராமர் புறப்படும் தருணம்... பதறிப் போனார்கள் ரிஷிகள். ‘’உங்களைப் பிரிந்து எங்களால் இருக்க முடியாது. ஆகவே, எங்களுடனேயே இருங்கள். இந்த வனத்தில், இந்த ஆஸ்ரமத்திலேயே இருங்கள். உங்கள் வழிகாட்டுதலுடன் பகவானை அடைவோம்‘’ என்று சொல்லிக் கண்ணீர்விட்டார்கள். வேண்டினார்கள்.

விடிந்தது. அங்கே அந்தக் காட்சியைக் கண்டு ரிஷிகள் வியந்து போனார்கள். பிரமித்துப் பார்த்தார்கள். பார்த்து பரவசமானார்கள். அங்கே... அழகும் கம்பீரமும் கொண்டு, ராமரைப் போலவே நின்றது சிலை ஒன்று! தொட்டுத் தொட்டுப் பார்த்தார்கள். கண்களில் ஒற்றிக் கொண்டார்கள். விரலை நீவிவிட்டார்கள். பாதங்களை வருடினார்கள். கன்னம் கிள்ளி கொஞ்சினார்கள். அப்படியே ராமரை போன்று தத்ரூபமாக இருந்தது சிலை.

‘’உங்களுக்காக என்னுடைய உருவத்தை நானே சிலையாக உருவாக்கியுள்ளேன். இந்தச் சிலை உங்களுக்காக! பிரிவுத் துயர் இனி இல்லை. இந்தச் சிலையிலும் நான் வாசம் செய்கிறேன். இதோ... அயோத்திக்குச் செல்லும் வேளை நெருங்கிவிட்டது. இந்தச் சிலை உங்களுக்குத்தான். இது இந்த அகிலத்து மக்களின் சொத்து. தங்களது பணியைத் தொடருங்கள்’’ என அருளினார். அனைவரும் விழுந்து நமஸ்கரித்தனர். அவர்களுக்கு ஆசிகூறி, அங்கிருந்து புறப்பட்டார் ஸ்ரீராமர்!

அந்த விக்கிரகத்தை, ஶ்ரீ ராமரே உருவாக்கித் தந்த, அவரின் திருவுருவச் சிலையை இன்றைக்கும் வடுவூர் திருத்தலத்தில் தரிசிக்கலாம்.

இங்கே, ஸ்ரீகோதண்டராமரை மனம் உருகி வேண்டிக் கொள்ள காரியம் யாவும் கைகூடும் என்பது உறுதி. ஸ்வாமிக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் இழந்த பதவியையும், கெளரவத்தையும், செல்வத்தையும் மீண்டும் பெறுவீர்கள். திருமண பாக்கியம் கைகூடும் . நல்ல வாழ்க்கைத் துணை அமையும். நம்மிடம் உள்ள சின்னச் சின்ன துர்குணங்களையெல்லாம் மாற்றி, நற்குணங்களையே மனதுக்குள் விதைத்து, அன்பொழுக வாழச் செய்வார் ராமச்சந்திர மூர்த்தி என்பது சத்தியம்!

ராமரின் அழகில் சொக்கிப்போனேன் நான். நீங்கள் சென்று பார்த்தால் ஶ்ரீராமர் அழகை உணர முடியும்.🙏🙏🙏🙏ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே.🙏🙏🙏🙏 🕉️🕉️🕉️

15/05/2022

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி பெருமாள் கோயில் கருடசேவை கோபுர தரிசனம் கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.🙏🙏🙏🕉️🕉️🕉️💐💐💐

11/05/2022

வியாழன் பதிவு...🙏🙏🙏
#வருங்காலம்_உனக்கு_நிச்சயம்_சிறப்பாக_இருக்கும்

உனக்கென்று விதிக்கப்பட்டது, நிச்சயம் உன்னை வந்து சேரும். அதைப் புரிந்து கொள். உன் உழைப்பு என்றும் வீணாகாது...

வாழ்வில் உனக்கு லட்சியமும் அதை அடைய வேண்டும் என்ற எண்ணமும், பொறுப்பும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதேசமயம் எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் அவசியம் வேண்டும்.

இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு அனுதினமும் எதாவது ஒரு கஷ்டம் எனக்கு மட்டும் வந்து கொண்டு இருக்கிறதே என்று புலம்பாதே..

நான் உனக்கு பலமுறை கூறிவிட்டேன் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

உனக்கு பெரிதாக தெரியும் பிரச்சினை மற்றவருக்கு சிறிதாக படும்.
உனக்கு சிறிதாக இருக்கும் பிரச்சினை மற்றவருக்கு தலையாய பிரச்சினையாக இருக்கும்.

உன்னுள் இருக்கும் பலத்தை நீயே நம்பவில்லை எனில் வேறு யார் நம்புவது.

நம்பிக்கையோடும் மன தைரியத்தோடும் நீ நிதானமாக யோசித்து செயல்படு. உன் காரியம் நிச்சயம் கைகூடும்.

நிகழ் காலம் உனக்கு கடினமாக இருந்தாலும் இதுவே நிரந்தரமென்று நினைத்துக் கொள்ளாதே...

நிலைகள் மாறும். காலம் மாறும்.. உன் அம்மா அப்பாவாகிய இந்த சாய்பாபா மாற்றுவேன்.

நீ எல்லா செல்வ வளங்களைப் பெற்று நற்பெயருடன் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வாய்.

கலங்காதே அப்பா நான் இருக்கிறேன் நிழலாக என்றும் உனக்காக நீ செல்லும் இடமெல்லாம்...

உனக்கு எல்லா சூழ்நிலைகளிலும் நான் துணை நிற்பேன்.

என் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து செயல்படு...

நல்லதே நடக்கும்..!

என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை
Om sri sai ram..🙏🙏🙏🕉️🕉️🕉️💐💐💐

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Group Admin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Group Admin:

Share