சுவிசேஷத்தின் குரல் தேசமெங்கும்

  • Home
  • India
  • Chennai
  • சுவிசேஷத்தின் குரல் தேசமெங்கும்

சுவிசேஷத்தின் குரல் தேசமெங்கும் It is an integral part of Evangel AG Church, Gowrivakkam.

The Voice of the Evangel (VOTE), சுவிசேஷத்தின் குரல் தேசமெங்கும் is an religious organization, that endeavors to share the gospel of peace and love of our Lord Jesus Christ to the unreached.

ஜூலை மாத வாக்குத்தத்தம் 2026. சங்கீதம் 46:1. தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்தில் அநுகூலமுமான துணையுமானவர் என்ற வச...
01/07/2026

ஜூலை மாத வாக்குத்தத்தம் 2026.

சங்கீதம் 46:1.

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்தில் அநுகூலமுமான துணையுமானவர் என்ற வசனம்,
உலகமே தலைகீழாக மாறினாலும் விசுவாசிகள் பயமின்றி வாழ முடியும் என்ற தைரியத்தை அளிக்கிறது.

இந்த சங்கீதம் எசேக்கியா ராஜாவின் காலத்தில், அசீரிய ராஜாவான சனகெரிப் எருசலேமை முற்றுகையிட்டபோது இந்த வசனத்தினால் பெலப்பட்டான் என்று கருதுகின்றனர். அவர்கள் தங்களின் சொந்த பலத்தால் அசீரிய இராணுவத்தை வெல்ல முடியாத இக்கட்டான சூழலில், ஒரே இரவில் கர்த்தருடைய தூதன் அசீரிய பாளையத்தில் 1,85,000 பேரை அழித்து யூதாவுக்குப் பாதுகாப்பு அளித்தார்.
*2 இராஜாக்கள் 19:35* மற்றும் ஏசாயா 37:36.

இந்த ஒற்றை வசனம் தேவனை பற்றிய மூன்று நிலைகளை நமக்கு வெளிப்படுத்துகிறது:

1) தேவன் நமக்கு அடைக்கலமானவர்

அடைக்கலம் என்பது புயல், மழை அல்லது எதிரிகளிடமிருந்து தப்பிக்க நாம் ஓடி ஒளிரும் ஒரு பலத்த கோட்டையாகும். மனித அடைக்கலங்கள் அழியக்கூடியவை, ஆனால் தேவன் மாறாத நிரந்தரக் கோட்டையாய் இருக்கிறார். நாம் சோதனைகளில் சோர்ந்து போகும்போது, நம்முடைய பாரங்களை அவரிடம் இறக்கிவைத்துவிட்டு பாதுகாப்புப் பெறலாம்.
*நீதிமொழிகள் 18:10*
*சங்கீதம் 61:3*

2) தேவன் நமக்கு பெலனானவர்
நாம் பலவீனமடையும் போது, தேவன் நமக்குத் தம்முடைய தெய்வீகப் பெலனைத் தருகிறார்.

"என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு." *பிலிப்பியர் 4:13*
*சங்கீதம் 28:7*

3) ஆபத்தில் துணையானவர்
மனிதர்கள் ஆபத்துக் காலத்தில் நம்மை விட்டு விலகிப் போகலாம், ஆனால் தேவன் நம்முடைய நெருக்கடி நேரங்களில் மிக அருகில் இருந்து உடனடியாக நமக்குச் சகாயம் செய்கிறார்.
*சங்கீதம் 145:18*
*சங்கீதம் 50:15*
*மத்தேயு 28:20*

வாழ்க்கையில் புயல்களும் இயற்கைச் சீற்றங்களும் நம்மை அச்சுறுத்தும்போது விசுவாசிக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை தேவன் மட்டுமே.

உலகத்தின் சூழ்நிலைகள் எப்படி மாறினாலும், மாறாத தேவன் நமக்கு அடைக்கலமாக இருப்பதால் நம்முடைய எதிர்காலம் பாதுகாப்பானது, நம்முடைய வாழ்வு பெலனானது மற்றும் துணையாக இருக்கிறார் என்ற நம்பிக்கையானது.

01/07/2026
01/05/2026

*ரோமர் 8:32,* "தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பது எப்படி?"

இந்த வார்த்தை,
தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை நமக்காக தியாகம் செய்ததன் மூலம், நமக்குத் தேவையான அனைத்தையும்
(பரலோக ஆசீர்வாதங்கள், தேவைகள், இரட்சிப்பு...) நிச்சயம் தருவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைத் தருகிறது.
இது தேவனின் அளவற்ற அன்பையும், கல்வாரி தியாகத்தின் மகிமையையும் உணர்த்துகிறது.

*மிகப்பெரிய தியாகம்:* தேவன் தம் சொந்தக் குமாரனை நமக்காகக் கொடுத்துள்ளார். இதுவே மிக உயர்ந்த அன்பு. *தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.*
யோவான் 3:16

*எல்லாவற்றையும் தருவார்:*
இயேசுவை அளித்தவர், நம் அன்றாடத் தேவைகளையும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும், நித்திய வாழ்வையும் கிருபையாகத் தருவார்.
*நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்துவக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்* . எபேசியர் 1

*நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு:*
நாம் கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை பிரிக்க முடியாது,
நம் இரட்சிப்பு பாதுகாப்பானது.
கிறிஸ்துவின் *அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?*
ரோமர் 8:36
*இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே* .
ரோமர் 8:37

*பாதுகாப்பு & வழிநடத்துதல்:*
தேவன் நமக்கு முன்பாகச் சென்று தடைகளை நீக்குவார் என்பதாகும்.
*தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார். அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்து போவார்கள். அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார் கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்து போவார்.*
மீகா 2:13

*பயமற்ற வாழ்க்கை:*
தேவன் நமக்காக இருப்பதால், பயமின்றி அவரைச் சார்ந்து வாழலாம். தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்பி, பயமின்றி இந்த மாதத்தை எதிர்கொள்ளலாம்
*தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.*
2 தீமோத்தேயு 1:7

*குறைவுகள் நீங்குதல்:* பொருளாதார அல்லது ஆவிக்குரிய குறைவுகளை தேவன் நிறைவாக்குவார்.
*என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.*
பிலிப்பியர் 4:19

, இந்த வசனங்கள் தேவன் நம் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பையும், நம் வாழ்வின் ஒவ்வொரு தேவைக்கும் அவர் பொறுப்பேற்பார் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

தேவனுடைய பாதுகாப்பு, வழிநடத்துதல் மற்றும் ஆசீர்வாதத்தை மையமாகக் கொண்டது இந்த வாக்கு.
"பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்"
என்றவர் உடனிருந்து வழி நடத்துவார்
ஆமென்

தேவனுடைய கிருபையினால் 2025  ஆண்டு முழுவதும் நடத்தி மீண்டும் ஒரு புதிய 2026 ஆண்டை காண செய்து இந்த நாள் வரையிலும் காப்பாற்...
04/01/2026

தேவனுடைய கிருபையினால் 2025 ஆண்டு முழுவதும் நடத்தி மீண்டும் ஒரு புதிய 2026 ஆண்டை காண செய்து இந்த நாள் வரையிலும் காப்பாற்றி வழி நடத்தி ஊழியத்தில் பயன்படுத்தி வந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.

இம்மாதம் ஜனவரி 08/01/2026 வியாழக்கிழமை, இவ்வருடத்தின் முதல்
*சுவிசேஷத்தின் குரல் ஆலோசனை மற்றும் ஜெப ஐக்கிய கூடுகை* காலை *10.00* மணிக்கு நடைபெறும். இதில் *பாஸ்டர் தேவ புத்திரன்* அவர்கள் செய்தி அளிப்பார்கள்.

இதற்காக ஜெபித்து கொள்ளுங்கள்.

தேவனுக்கு மகிமை!

சுவிசேஷத்தின் குரல் மற்றும் Evangel AG சபை சார்பாக எங்கள் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.
25/12/2025

சுவிசேஷத்தின் குரல் மற்றும் Evangel AG சபை சார்பாக எங்கள் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

டிசம்பர் மாதம் வாக்குத்தத்தம் 2025! *லூக்கா 1:34*  *இது எப்படி ஆகும்* என்ற மரியாளின் கேள்விக்கு  *லூக்கா 1:37* தேவ தூதனி...
01/12/2025

டிசம்பர் மாதம் வாக்குத்தத்தம் 2025!

*லூக்கா 1:34*
*இது எப்படி ஆகும்* என்ற மரியாளின் கேள்விக்கு
*லூக்கா 1:37*
தேவ தூதனின் பதில்
*தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை .* என்பதாகும்.

மரியாள் மிகச்சாதாராண குடும்ப பிண்ணனியில் வாழ்ந்த ஒரு வாலிப பெண். அவள் வாழ்ந்த நாசரேத் என்னும் ஊர், *“நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமோ?” (யோவான் 1:46)* என்ற அளவிற்கு மிகச்சாதாராண ஊர்.

சாதாரணமான அந்த மரியாளின் வாழ்க்கையில் தேவன் இடைபட்டார். அதன் பின்னர் அவள் வாழ்க்கை மாறியது. இந்த உலகத்தை இரட்சிக்கும் தேவ குமாரனை பெற்றெடுக்கும் தேவ திட்டத்தை, சித்தத்தை நிறைவேற்றும் உன்னத பணியை நிறைவேற்றினாள்.

அன்பானவர்களே நம் அநேகருடைய வாழ்க்கையும் அப்படித்தான் நம் வாழ்க்கையில் எந்த சுவாரசியமும் இல்லை. எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் சலிப்புடன் என் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்குமா இது எப்படியாகும் என்று இந்த 2025 ஆம் ஆண்டை கடக்கும் டிசம்பர் மாதத்தில் வந்திருக்கிறோம்.

இது எப்படியாகும்? என்ற கேள்வி வரும் போதெல்லாம், இது தேவனால் ஆகும்! தேவனால் எல்லாம் கூடும் என்று கர்த்தர் நம்மை உற்சாகப்படுத்துவதுடன் முடியாது என்ற நம் வாழ்வின் நிலையை மாற்றி அதை செய்து முடித்து காட்டுவார்.

ஆம் தேவன் தம்முடைய சித்தத்தை திட்டத்தை சரியான நேரத்தில் நம் வாழ்வில் நிறைவேற்றுவார்.

அன்று மரியாள்
*லூக்கா 1:38*
*“இதோ நான் என் ஆண்டவருக்கு அடிமை”* என்று தேவனிடம் அர்ப்பணித்தார்.
நம் வாழ்க்கையையும் அப்படி அர்ப்பணிக்கும் பொழுது தேவன் முடியாது என்று அல்ல தேவனால் எல்லாம் கூடும் என்று உங்களை வெற்றியின் பாதையிலே ஆச்சரியத்தின் பாதையிலே கொண்டு போவார்

ஆம் தேவன் தம்முடைய சித்தத்தை திட்டத்தை சரியான நேரத்தில் நம் வாழ்வில் நிறைவேற்றுவார்.
தேவனிடம் அர்பணிப்போம்.

*யோபு 8:7*
*உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரனமாயிருக்கும்.*

ஆமென்

நவம்பர் மாத வாக்குத்தத்தம் 2025!ஏசா: 55:3 “உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள்...
01/11/2025

நவம்பர் மாத வாக்குத்தத்தம் 2025!

ஏசா: 55:3
“உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்”.

தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகள் (அப்: 13:34 )

பழைய ஏற்பாடு என்பது நியாயப்பிரமாணக் காலம். அது கிரியைகளினால் உண்டானது.
ஆனால் புதிய ஏற்பாட்டில் கிரியைகளினாலல்ல கிருபையால் விசுவாசத்தை கொண்டு நித்திய உடன்படிக்கையாக இயேசு கிறிஸ்துவின் மூலம் உண்டானது.

தாவீது பழைய ஏற்பாட்டுக்காலத்தில் வாழ்ந்தாலும், அவன் புதிய ஏற்பாட்டின் நித்திய உடன்படிக்கையின் கிருபைக்குள் ஆசீர்வதிக்கப்படுகிறான்.

நியாயப்பிரமாணம் கிறிஸ்து இயேசுவில் நிறைவேறினபடியால், நிறைவேறி முடிந்தபடியால் அது *கிருபையின் நித்திய உடன்படிக்கையாகிறது* அது குறுகிய காலத்தை உடையதல்ல. அது இம்மைக்கும் மறுமைக்குமானவைகள்.

ஏசாயா சொல்லும்போது “நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்” என்கிறார். “ஏற்படுத்துவேன்” என்ற சொல் “இப்போதல்ல… இனிமேல்” என்கிற எதிர்காலத்தைக் குறிக்கிறது.

எனவே, இது உங்களுக்கு தீர்க்கதரிசனமாக வரும் வார்த்தை.

இது 'ஏற்ற சமயத்தில் உதவும் கர்த்தரின் கரம்' என எபேசியர் 4:16 கூறுகிறது போல, தேவனின் உதவி மற்றும் கிருபை எப்போதும் வரும் காலங்களில் இருக்கும் என்பதைக் குறிக்கிறது.

முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும், அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும். ஏசாயா 55:13.

அக்டோபர் மாத வாக்குத்தத்தம் 2025! தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார...
01/10/2025

அக்டோபர் மாத வாக்குத்தத்தம் 2025!

தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.
சங்கீதம் 147:11

கர்த்தருக்கு காத்திருத்தல்,
அவருடைய கிருபைக்காக காத்திருத்தல் என்பது தேவனுக்கு பிரியமானது.

கர்த்தர் நம் மேல் பிரியம் வைக்கும் போது,

*உபாகமம் 33:12* கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான், அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.

1. *சங்கீதம் 31:24*
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் *உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்*

2. *சங்கீதம் 33:18*
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் *ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கிவிடுவிக்கவும்*

3. *சங்கீதம் 33:20*
நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது, *அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்*

4. *சங்கீதம் 37:34*
நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள், அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு *அவர் உன்னை உயர்த்துவார்*

5. *ஏசாயா 40:31*
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ *புதுப்பெலன் அடைந்து,* கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் *இளைப்படையார்கள்* நடந்தாலும் *சோர்ந்துபோகார்கள்*

அன்பானவர்களே,

உங்கள் வேதனை நேரத்தில், சோதனை காலத்தில் பொறுமையுடன் கர்த்தர் மேல் நம்பிக்கையுடன், கிருபை தாரும் என்று அவருடைய கிருபைக்காக காத்திருங்கள். உங்கள் மேல் பிரியம் வைத்து உங்களை உயர்த்துவார்.

வரும் நாட்களில் நீங்கள் இப்படி சொல்வீர்கள் ..
*ஏசாயா 25:9ன்படி*
அக்காலத்திலே, இதோ, இவரே நம்முடைய தேவன், இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார், இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம், இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்வீர்கள்.

ஆமென்.

Address

No 40, Shanmuga Complex, Second Floor, Velachery Main Road, Gowrivakkam
Chennai
600073

Alerts

Be the first to know and let us send you an email when சுவிசேஷத்தின் குரல் தேசமெங்கும் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share