Maha Swamigal Arulaanai

Maha Swamigal Arulaanai நமது அமைப்பு உழவாரப்பணிகளைச் செய்வத Sri Mahaswamigal Iraipani trust
SB.A/c number 6993016722
IFSC code;IDIB000V060
Indian Bank
valarpuram branch

நமது அமைப்பு ஒவ்வொரு மாதமும் பாயடைந்த கோயில்களில் புல், புதர்களை அகற்றுவது, வெள்ளையடித்தல், நந்தவனம் அமைப்பது, போன்ற உழவாரப்பணிகளைச் செய்வதோடு, தீப எண்ணெய், அபிஷேகப்பொருட்கள், சுவாமி வஸ்திரங்கள் போன்றவற்றையும் வழங்கிவருகிறது. கடந்த ஆண்டு 2021ல் வாலாஜாபாத் அருகில் ஒரு ஆலயத்தை கட்டி குடமுழுக்கு நடத்தி முடித்துவிட்டு தற்போது திருப்பெரும்புதூர் தண்டலம் மேவளூர் குப்பத்தில் ஸ்ரீபவானி அம்மன் ஆலயம் கட்டி வருகிறோம். அடியார்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீ மஹான் இறைபணி மன்றம்அரிதினும் அரிதான மானிடப் பிறவியை  மகேஸ்வரன் தந்தருளினார் .அத்தகைய பிறவி ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம்...
19/10/2025

ஸ்ரீ மஹான்
இறைபணி மன்றம்

அரிதினும் அரிதான மானிடப் பிறவியை மகேஸ்வரன் தந்தருளினார் .அத்தகைய பிறவி ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் மறைந்தோம் என்றில்லாமல் இவ்வுலகிற்கு இயன்றவரை சிறிய துரும்பளவேணும் நல்லதை செய்ய வேண்டுமென்று எண்ணினோம். ஸ்ரீ மஹான் இறைபணி மன்றம் என்ற பெயரில் மாதம் ஒரு கோவிலை சுத்தப்படுத்தும் உழவாரப் பணியை இன்று வரை பல ஆண்டுகளாக செய்து வருவதோடு கவனிப்பாரற்ற கிராமக் கோயில்களுக்கு வஸ்திரம், விளக்கேற்றும் எண்ணெய், அபிஷேகப்பொருட்களை அளித்து வருகிறோம். அத்துடன் சில நல்ல உள்ளங்களின் காணிக்கையைக் கொண்டு இடிந்து போன இரண்டு ஆலயங்களை நமது அமைப்பு மூலமாகவே புதிதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளோம்.

மேலும் மகேசனுக்குச் செய்வது மக்களுக்கு செல்லாது மக்களுக்கு செய்வது மகேசனை சென்றடையும் என்கிறது புராணம் அதனால் மிகமிக வறுமை கோட்டுக்கு கீழே உள்ள இருளர் பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்களைத் தேடிச் சென்று தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வேட்டி சேலை, 5 கிலோ அரிசி , 5கிலோஆட்டா. 1 கிலோ பருப்பு, 1 கிலோ எண்ணெய், 1 கிலோ இனிப்பு, 1 கிலோ காரம் ஆகிய பொருட்களை வழங்கி வருகின்றோம். அந்த வகையில் இன்று (19-10 - 25 ) காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜா வட்டம், திருமுக்கூடல் அடுத்த புல்லம்பாக்கம் கிராமத்தில் வாழ்ந்து வரும் சுமார் 15 பழங்குடி குடும்பங்களுக்கு மேற்கண்ட உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. இயன்றவரை இந்த புண்ணிய சேவையை செய்து வருகின்றோம் இந்த தர்ம சேவைக்கு, .. உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள், அவர்கள் குடும்பம் சகல நலமும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

ஓம் நமசிவாய
ஓம் நமோ நாராயணாய
ஜெய ஜெய சங்கரா
ஹரஹர சங்கரா
சிவசிவ சங்கரா
குருகுரு சங்கரா

ஸ்ரீமஹா சுவாமிகள்இறைபணி மன்றஉழவாரப்பணி -  35சீர்காழி செம்மலை சிறு வயதில் பாடவைத்துமார்கழி ஆதிரையில் சேந்தனாரின் களி உண்ட...
24/12/2024

ஸ்ரீமஹா சுவாமிகள்
இறைபணி மன்ற
உழவாரப்பணி - 35

சீர்காழி செம்மலை சிறு வயதில் பாடவைத்து
மார்கழி ஆதிரையில் சேந்தனாரின் களி உண்டு
ஓர்வழி உலகில் உனக்காக அருளிடும்
சீர்எழில் சிவபெருமானின்
திருஅவதாரமாம் காஞ்சி மாமுனிவரின் கருணையால் நமது அமைப்பு மாதம் ஒரு கோயில் உழவாரப்பணி செய்து வருகிறது. அவ்வகையில் 22-12-2024 ஞாயிறு அன்று திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை அடுத்த கிளாம்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயத்தில் உழவாரப் பணி சிறப்பாக நடைபெற்றது .
இந்த ஆலய மூலவர் ஸ்ரீ அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும் . இமய மலையிலிருந்து பொதிகை மலைக்குச் சென்றபோது வழியில் வாதாபி என்ற அசுரனை அழிக்க கொசஸ்தலை நதிக்கரையில் மொத்தம் 108 லிங்கங்களை பிரதிஷ்டை செய்து அகத்திய முனிவர் வழிபட்டதாகவும் அதில் ஒன்றுதான் இந்த அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் என்றும் வரலாறு சொல்கிறது. இந்த ஆலயத்தின் அருகில் ஸ்ரீ லலிதாம்பிகா மஹா திரிபுர சுந்தரி அம்மனுக்கு அற்புதமான ஆலயம் ஒன்று உள்ளது. இந்த லலிதாம்பிகை மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் பலபேர் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை அருளியிருக்கிறார் என்று ஆலய நிர்வாகி தெரிவித்தார்.
இந்த அம்மனுக்கு ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திரத்தன்று விஷேச அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இரண்டு பூரம் தொடர்ந்து தரிசித்தாலே பக்தர்களின் ஞாயமான கோரிக்கைகள் நிறைவேரி விடுவதாக சொல்லப்படுகிறது.
அகத்தீஸ்வரர் சன்னதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா பிரம்மோற்சவம் பத்து நாட்கள் வெகுசிறப்பாக நடைபெறுகிறது (ஜனவரி 4 ந்தேதி முதல் )

இத்தகைய புராதன ஆலயத்தில் நமது அமைப்பு உழவாரப் பணி செய்தது பகவான் நமக்களித்த பாக்கியமே. இந்தப் பணிக்கு காலை உணவு வழங்கிய அடியார், மதிய உணவு வழங்கிய அடியார், தேனீர் வழங்கிய அடியார்கள், தங்கள் சரீர உழைப்பைத் தந்த அடியார்கள் மற்றும் இப்பணிக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஸ்ரீ மஹாஸ்வாமிகள் இறைபணி மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் வாழ்வில் சகல வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல ஈசனை பிரார்த்திக்கிறோம்.

ஓம் நமசிவாய
ஓம்நமோ நாராயணாய
ஜெய ஜெய சங்கரா
ஹர ஹர சங்கரா
சிவசிவ சங்கரா
குருகுரு சங்கரா

ஸ்ரீமஹா சுவாமிகள்இறைபணி மன்றஉழவாரப்பணி -  35சீர்காழி சிறுவன் சிந்தை மகிழ பாடிய  ஈசனைமார்கழி மாதத்தில் மனமுருகி வேண்டிடஓர...
17/12/2024

ஸ்ரீமஹா சுவாமிகள்
இறைபணி மன்ற
உழவாரப்பணி - 35

சீர்காழி சிறுவன் சிந்தை மகிழ பாடிய ஈசனை
மார்கழி மாதத்தில் மனமுருகி வேண்டிட
ஓர்வழி உலகில் உனக்காக அருளிடும்
சீர்எழில் சிவபெருமானின்
திருஅவதாரமாம் காஞ்சி மாமுனிவரின் கருணையால் நமது அமைப்பு மாதம் ஒரு கோயில் உழவாரப்பணி செய்து வருகிறது. அவ்வகையில் 22-12-2024 ஞாயிறு அன்று திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை அடுத்த கிளாம்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயத்தில் உழவாரப் பணி சிறப்பாக நடைபெற உள்ளது .

தேவர்களின் பிரம்ம முகூர்த்தக் காலமாம் மார்கழி மாதத்தில் இத்திருப் பணியில் கலந்து கொண்டு இறைவனின் பேரருளைப் பெற்று வாழ வேண்டுமென்று அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். தொடர்புக்கு 9445661037

Sri Mahaswamigal Iraipani trust
Current.A/c number 6993016722
IFSC code;IDIB000V060
Indian Bank
valarpuram branch
Google pay 9444265091

ஓம் நமசிவாய
ஓம்நமோ நாராயணாய
ஜெய ஜெய சங்கரா
ஹர ஹர சங்கரா
சிவசிவ சங்கரா
குருகுரு சங்கரா

ஸ்ரீ மஹா சுவாமிகள்இறைபணி மன்றம். தர்ம சேவை 3.மண்மகிழ் அரவணிந்த மஹாதேவன்,மாலை இளம் மதிசூடிய மகேஸ்வரன்விண்ணவரும் வணங்கிடும...
29/10/2024

ஸ்ரீ மஹா சுவாமிகள்
இறைபணி மன்றம்.
தர்ம சேவை 3.

மண்மகிழ் அரவணிந்த மஹாதேவன்,
மாலை இளம் மதிசூடிய மகேஸ்வரன்
விண்ணவரும் வணங்கிடும் வேதநாயகன்
மண்ணவரும் பணிந்திடும் மாதொரு பாகனின் மறு உருவமாம் காஞ்சி மாமுனிவர் கருணையால் நமது அமைப்பு மூலம் மாதம் ஒரு பழமையான ஆலயத்தில் தூய்மைபடுத்தும் உழவாரப் பணியை பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். பல அடியார் பெருமக்களின் பெருங்கருணையால் பாழடைந்த இரண்டு புராதன ஆலயங்களை புதிதாக கட்டி பெரியவா அனுகிரகத்தில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளோம். இந்த வரிசையில் மேலும் ஒரு புண்ணிய சேவையைச் செய்ய மாமுனிவர் கருணை புரிந்தார். பரமாத்மாவுக்குச் செய்வது ஜீவாத்மாவைச் சேராது ஆனால் ஜீவாத்மாவுக்குச் செய்வது பரமாத்மாவைப் போய்ச் சேரும் என்கிறது புராணம் அதனால் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் சொந்த இடம் கூட இல்லாமல் அரசு நிலத்தில் குடிசை போட்டு வாழ்ந்துவரும் இருளர் பழங்குடியின ஏழைக் குடும்பங்களுக்கு 10 kg பொன்னிஅரிசி, 1kg சூரியகாந்திஎண்ணெய், 1kg துவரம்பருப்பு போன்ற , மளிகைப்பொருட்கள், ஒரு கிலோ இனிப்பு. 1 கிலோ மிக்ஸர் போன்ற காரவகைகள், ஒரு வேட்டிச் சேலை ஆகியவை ஆண்டவன் கருணையாலும் . அடியார்களின் உதவியாலும் நமது அமைப்பு மூலம் வழங்கி வருகிறோம்.
அந்த வகையில் இந்த ஆண்டு 27-10-2024 ஞாயிறு அன்று காஞ்சிபுரம் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தில் சுமார் 25 ஏழைக் குடும்பங்களுக்கு ஸ்ரீமஹா சுவாமிகள் இறைபணி மன்றம் சார்பாக உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த சேவைக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள். தங்கள் குடும்பம் சகல நலமும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்..

ஓம் நமசிவாய
ஓம் நமோ நாராயணாய
ஜெய ஜெய சங்கரா
ஹரஹர சங்கரா
சிவசிவ சங்கரா
குருகுரு சங்கரா

ஸ்ரீமஹா சுவாமிகள்இறைபணி மன்றஉழவாரப்பணி -  34.மண்ணுலகம் வணங்கிடும்மஹாதேவன்விண்ணுலகம் வணங்கும்வேதநாயகன்-பொன்வண்ணனாய் விளங்...
25/08/2024

ஸ்ரீமஹா சுவாமிகள்
இறைபணி மன்ற
உழவாரப்பணி - 34.

மண்ணுலகம் வணங்கிடும்
மஹாதேவன்
விண்ணுலகம் வணங்கும்
வேதநாயகன்-பொன்
வண்ணனாய் விளங்கும்
பரமனவன்-எல்லோர்
எண்ணங்களில் வீற்றி
இருக்கும்ஈசனின்
அவதாரமாம் காஞ்சி மாமுனிவரின் கருணையால் நமது அமைப்பு மாதம் ஒரு கோயில் உழவாரப்பணி செய்து வருகிறது. அவ்வகையில் 25-08-2024 ஞாயிறு அன்று திருவள்ளூர் ஐவேலி அகரம் என்ற கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆதிபராசக்தி ஆலயத்தில் உழவாரப் பணி சிறப்பாக நடைபெற்றது .
ஆலயம் இருக்கும் இடமே தெரியாத நிலையில் நமது அமைப்பின் அடியார்கள். புதர்களை அகற்றி ஆலயத்தின் மீதிருந்த மரங்களை வெட்டி சுத்தம் செய்து விட்டு ஆலயம் மற்றும் சுற்றுச் சுவர்களில் பெயிண்ட் அடித்து காவி பட்டை தீட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
இத்திருப்பணிக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஶ்ரீமஹா சுவாமிகள் இறைபணி மன்றத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓம் நமசிவாய
ஓம்நமோ நாராயணாய
ஜெய ஜெய சங்கரா
ஹர ஹர சங்கரா
சிவசிவ சங்கரா
குருகுரு சங்கரா

ஸ்ரீ மஹா சுவாமிகள்இறைபணி மன்றம். - 1             அன்புள்ளம் கொண்ட அடியார் பெருமக்கள் அனைவருக்கும் அடியேனின் பணிவான வணக்க...
07/03/2024

ஸ்ரீ மஹா சுவாமிகள்
இறைபணி மன்றம். - 1

அன்புள்ளம் கொண்ட அடியார் பெருமக்கள் அனைவருக்கும் அடியேனின் பணிவான வணக்கம். நமது அமைப்பின் மூலம் 15 ஆண்டுகளாக மாதம் ஒரு பழமையான ஆலயத்தில் உழவாரப் பணி செய்து வந்தோம். ஆண்டவன் அருளாலும் அடியார்களின் பெருங்கருணையாலும் பாழடைந்த இரண்டு ஆலயங்களை புதிதாக கட்டி குடமுழுக்கு நடத்தி முடித்துள்ளோம் இது உங்கள் அனைவருக்கும் தெரியும். அடுத்து ஒரு சிதிலமடைந்த சின்னாபின்னமான சிவாலயத்தை கட்டுமானம் செய்ய கயிலைநாதன் பணித்திருக்கிறார். ஓராண்டு காலமாக இந்த ஆலயத்தைக் கட்டித் தரும்படி ஒரு அடியார் கேட்டு வந்தார், ஊர் மக்கள் சிலர் ஒத்து வராததால் காலம் கடந்தது. தற்போது அவ்வூரில் உள்ள ஒரு வழக்கறிஞர் ஊர் மக்களிடம் பேசி நம்மை ஆலயப் பணிகளைத் தொடங்கும்படி சொல்லியிருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் ,போளூர் வட்டம், அத்திமூர் மதுரா திண்டிவனம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சிவாலயத்தை கட்டித் தரும்படி கேட்டார்கள், நாம் அதன் வரலாற்றைத் தேடினோம் அங்கிருந்த கல்வெட்டின் புகைபடத்தை தொல்லியல் துறை ஓய்வு பெற்ற அதிகாரிக்கு அனுப்பினோம். அதை அவர் படித்து விட்டுச் சொன்னத் தகவல்
இந்தக் கோயில் 11ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழ மன்னரால் கட்டப்பட்ட திந்திரிவன நாதர் ஆலயம். என்று கல்வெட்டில் இருந்தது. இருப்பினும் அம்மன் சந்நதி பற்றியோ பிற விவரங்களோத் தெரியவில்லை. நாம் சென்னையில் தேவ ப்ரசண்ணம் பார்த்தோம் அதில் கிடைத்தத் தகவல்கள்.
. இத்தலத்தில் ஈசன் பைரவ அம்சம் கொண்டவராக இருப்பதால் ஶ்ரீ பாதாள பைரவேஸ்வரர் என்ற திருநாமமாகும். அம்பாள் ஸ்ரீ பாதாள பைரவி அம்மன். ஆகும். ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் புளியமரங்கள் நிறைந்து இருநததால் சுவாமிக்கு ஸ்ரீதிந்திரி வனநாதர் என்றும் பெயர். (திந்திரி வனம் என்பது மருவி இந்த பகுதி தற்போது திண்டிவனம் என்று அழைக்கப்படுகிறது.) ஸ்ரீபாதாள காளி இத்தல ஈசனை இன்றளவும் வலம் வருகிறாள்.
இத்தலத்தில் ஈசனை வழிபட்டால் மனபயம், மனநோய், மனசோர்வு, மனகிலேசம் போன்ற மன ரீதியான சங்கடங்கள் தீரும். இங்கு பாதாளகாளிக்கு தனி சன்னதி அமைய வேண்டும்.
இத்தல ஈசனின் விபூதி ப்ரசாத மகிமையால் பேய், பிசாசு,காத்து, கருப்பு, பூத ப்ரேதம், பில்லி சூன்யம், ஓமல், பொறாமை, ஆபிசாரம், எதிரி, சூழ்ச்சி ஆகிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். இவ்வாலய திருப்பணிக்கு சிறு உதவி செய்தாலும் அவர்கள் வாழ்வில் பயம் என்பதே இருக்காது. மேலும் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் ஏற்பட்டு நலமுடன் வாழ்வர்.

ஸ்தல விருட்சம்: புளிய மரம்.
தீர்த்தம் : பாதாள தீர்த்தம்.
வினாயகர் : கல்யாண வினாயகர்
முருகன் : கல்யாண சுப்ரமண்யர்
மேற்கண்ட தகவல்கள் நமக்கு தேவ ப்ரசண்ணத்தில் கிடைத்தது. இந்த ஆலயத்தை உங்களின் பேராதரவுடன் கட்டுமானம் செய்யலாம் என்று சிந்தித்து நேற்று (4-3-24)பணிகளைத் தொடங்கினோம். பழைய ஆலயத்தை சுற்றியிருந்த புல் பூண்டு, முட்புதர்களை JCB இயந்திரம் கொண்டு சுத்தம் செய்தோம். பழைய ஆலயம் கருவறை ,ஏகநிலை கோபுரம், அர்த்தமண்டபத்துடன் உள்ளது. சிவராத்திரி முடிந்த பின் பழுதடைந்த ஆலயத்தை அகற்றிவிட்டு, அம்பாள் சன்னதி வரவேண்டிய இடத்தில் ஒரு பாறை உள்ளது அதையும் வெடி வைத்து அகற்றிவிட்டு குழி எடுத்து கோயிலுக்கு அடித்தளம் அமைக்க இருக்கிறோம். நந்தி மற்றும் சிவபெருமானை அருகில் ஒரு தற்காலிக குடில் அமைத்து அங்கு வைத்து பூஜை செய்து வருகிறார் ஒரு அடியார். கடந்த இரண்டு ஆலய கட்டுமானத்திற்கு கருணை செய்தது போல் இந்த ஆலயத்தையும் கட்டி முடிக்க உங்களின் பேராதரவை நலகிட பாதம் பணிந்து கேட்டுக் கொள்கிறோம்.

Sri Mahaswamigal Iraipani trust
Current.A/c number 6993016722
IFSC code;IDIB000V060
Indian Bank
valarpuram branch
Gpay 9444265091

ஓம் நமசிவாய
ஓம் நமோ நாராயணாய
ஜெய ஜெய சங்கரா
ஹர ஹரசங்கரா
சிவசிவ சங்கரா
குருகுரு சங்கரா

ஸ்ரீமஹா சுவாமிகள்இறைபணி மன்றஉழவாரப்பணி -     மண்ணுலகம் போற்றும்மஹாதேவன்விண்ணவரும் வணங்கும்வேதநாயகன்-பொன்வண்ணனாய் விளங்கு...
14/01/2024

ஸ்ரீமஹா சுவாமிகள்
இறைபணி மன்ற
உழவாரப்பணி -

மண்ணுலகம் போற்றும்
மஹாதேவன்
விண்ணவரும் வணங்கும்
வேதநாயகன்-பொன்
வண்ணனாய் விளங்கும்
பரமனவன்-எல்லோர்
எண்ணங்களில் வீற்றி
இருக்கும்ஈசனின்
அவதாரமாம் காஞ்சி மாமுனிவரின் கருணையால் நமது அமைப்பு மாதம் ஒரு கோயில் உழவாரப்பணி செய்து வருகிறது. அவ்வகையில் 14-01-2024 ஞாயிறு அன்று
தாம்பரம் பச்சைமலையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஅனுசுயாயீஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீஅத்திரியீஸ்வரர் சன்னதியில் நமது அமைப்பின் உழவாரப்பணி சிறப்பாக நடைபெற்றது.

இத்திருப்பணிக்கு வாகனம் அனுப்பியவர், காலை, மதியம் உழவாரப்பணி அடியார்களுக்கு உணவு வழங்கிய அடியார், தங்களின் சரீர உழைப்பை ஆண்டவனுக்கு அற்பணித்த அடியார்கள், மற்றும் இத்திருப்பணிக்கு உதவிய அனைத்து அடியார்களுக்கும் மஹா சுவாமிகள் இறைபணி மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அடுத்த ஞாயிறு 21-01-2024 அன்று இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. (அகத்தியர் முதல் அத்திரி மகிரிஷி மற்றும் பல சித்தர்கள் இந்த ஆலய இறைவனை இன்றுவரை வழிபாடு செய்வதாக வரலாறு சொல்கிறது.)

ஓம் நமசிவாய
ஓம்நமோ நாராயணாய
ஜெய ஜெய சங்கரா
ஹர ஹர சங்கரா
சிவசிவ சங்கரா
குருகுரு சங்கரா

ஸ்ரீமஹா சுவாமிகள்இறைபணி மன்றஉழவாரப்பணி - 33பக்தி கொண்டு பணிவார்க்கருளும் பவள வண்ணன்முக்தி வேண்டும் முனிவர்க்கருளும்முக்க...
13/01/2024

ஸ்ரீமஹா சுவாமிகள்
இறைபணி மன்ற
உழவாரப்பணி - 33

பக்தி கொண்டு பணிவார்க்கருளும்
பவள வண்ணன்
முக்தி வேண்டும் முனிவர்க்கருளும்
முக்கண்ணன்
போற்றுவார்க்கருளும்
பொன்வண்ணனின்
அவதாரமாம் காஞ்சி மாமுனிவரின் கருணையால் நமது அமைப்பு மாதம் ஒரு கோயில் உழவாரப்பணி செய்து வருகிறது. அவ்வகையில் 14-01-2024 ஞாயிறு அன்று
தாம்பரம் பச்சைமலையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஅனுசுயாயீஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீஅத்திரியீஸ்வரர் சன்னதியில் நமது அமைப்பின் உழவாரப்பணி நடைபெற உள்ளது.

அனைவரும் வருக, அத்திரீஸ்வரர் அருளைப் பெறுக.

அடுத்த ஞாயிறு 21-01-2024 அன்று இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. (அகத்தியர் முதல் அத்திரி மகிரிஷி மற்றும் பல சித்தர்கள் இந்த ஆலய இறைவனை இன்றுவரை வழிபாடு செய்வதாக வரலாறு சொல்கிறது.)

ஸ்ரீ மஹா சுவாமிகள்இறைபணி மன்றம்.1எங்கும் நிறைந்த ஈசன்என்னில் கலந்த ஈசன்விண்ணும் ஏற்றும் ஈசன்மண்ணும் போற்றும் ஈசனின் மறு ...
09/11/2023

ஸ்ரீ மஹா சுவாமிகள்
இறைபணி மன்றம்.1

எங்கும் நிறைந்த ஈசன்
என்னில் கலந்த ஈசன்
விண்ணும் ஏற்றும் ஈசன்
மண்ணும் போற்றும் ஈசனின் மறு உருவமாம் காஞ்சி மாமுனிவர் கருணையால் நமது அமைப்பு மூலம் மாதம் ஒரு பழமையான ஆலயத்தில் தூய்மைபடுத்தும் உழவாரப் பணியை பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். பல அடியார் பெருமக்களின் பெருங்கருணையால் பாழடைந்த இரண்டு புராதன ஆலயங்களை புதிதாக கட்டி பெரியவா அனுகிரகத்தில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளோம். இந்த வரிசையில் மேலும் ஒரு புண்ணிய சேவையைச் செய்ய மாமுனிவர் கருணை புரிந்தார். பரமாத்மாவுக்குச் செய்வது ஜீவாத்மாவைச் சேராது ஆனால் ஜீவாத்மாவுக்குச் செய்வது பரமாத்மாவைப் போய்ச் சேரும் என்கிறது புராணம் அதனால் இன்று திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் சொந்த இடம் கூட இல்லாமல் அரசு நிலத்தில் குடிசை கட்டி வாழ்ந்துவரும் 25 இருளர் பழங்குடியின ஏழைக் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி எண்ணெய், பருப்பு போன்ற , மளிகைப்பொருட்கள், ஒரு கிலோ இனிப்பு மற்றும் காரவகைகள், ஒரு வேட்டிச் சேலை ஆகியவை அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டவன் கருணையாலும் . அடியார்களின் உதவியாலும் நமது அமைப்பு மூலம் இன்று வழங்கப்பட்டது.

ஓம் நமசிவாய
ஓம் நமோ நாராயணாய
ஜெய ஜெய சங்கரா
ஹரஹர சங்கரா
சிவசிவ சங்கரா
குருகுரு சங்கரா

ஸ்ரீமஹா சுவாமிகள்இறைபணி மன்றஉழவாரப்பணி - 32.மங்கைக்கு மேனியில் இடமளித்தமாதொருபாகத்தன்கங்கைதனை சடைமுடியில் அணிந்த சங்கரன்...
18/09/2023

ஸ்ரீமஹா சுவாமிகள்
இறைபணி மன்ற
உழவாரப்பணி - 32.

மங்கைக்கு மேனியில் இடமளித்த
மாதொருபாகத்தன்
கங்கைதனை சடைமுடியில் அணிந்த சங்கரன் சங்கநாதத்தில் மகிழ்ந்திடும் சந்திரசேகரன் மறு உருவாம் காஞ்சி மாமுனிவர்
கருணையால் நமது அமைப்பு ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு பழமையான கோயிலில் உழவாரப்பணி செய்து வருகிறது. அவ்வகையில் 17-9-2023 ஞாயிறு அன்று திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ காமாக்ஷி அம்மன் சமேத ஸ்ரீ சோமநாத சோளீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.
கடுமையான சோதனைகளுக்கு பின் இறைபணி இனிதே நிறைவேறியது. நிறைந்த முகூர்த்தம் என்பதால் வழக்கமாக அடியார்களை அழைத்துச் செல்ல வரும் வேன் வரவில்லை, பலரிடம் பேசியும் பலனில்லை, கடைசியில் டாடா Ace மூலம் சென்றோம் . டிபன் ஆர்டர் கொடுத்தவர் கேரளா சென்று விட அந்த ஊர் முழுதும் தேடி கடையை கண்டுபிடித்தோம். மதிய உணவு சமைக்க வருவேண்டிய மாஸ்டர் கடைசி நிமிடத்தில் காலைவாரி விட வேறு ஏற்பாடு செய்யப் பட்டது. இவையனைத்தும் கடந்து பணிகள் பூரணமாய் முடிந்தது, கோயில் முழுவதும் புதர்களும் , புல் பூண்டுகளும் நிரம்பியிருந்தது. அனைத்தும் அற்புமாய் சுத்தம் செய்யபட்டது.
சோமன் என்பது திங்களை குறிக்கும் சோளி என்பது நரம்பைக் குறிக்கும் நரம்பு சம்பந்த பட்ட நோய் உள்ளவர்கள் 6 திங்கட்கிழமை தொடர்ந்து சோளீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வந்தால் விபூதியும் வில்வப் பொடியும் தருகிறார்கள் அதை நீரில் கலந்து அருந்திவந்தால் நரம்பு கோளாறுகள் நீங்கும் . பலபேர் வந்து இந்த வில்வபொடி விபூதியைப் பெற்றுச் செல்கிறார்கள். இங்கு அதிசங்கரர் வருகை தந்ததால் அம்பாள் நாமம் காமாக்ஷி .(பீடத்தில் ஸ்ரீசக்கரம் உண்டு) அன்னை இடை வளைந்து "ஒய்யாரி" கோலத்தில் காட்சி தருகிறார்.
காமாட்சியம்மன் தமிழ்நாட்டில் மொத்தம் 108 ஸ்தலங்களில் நின்ற கோலத்தில் காட்சி தருவார் அதில் இந்த ஆலயமும் ஒன்று.
நமது வாட்ஸ்அப் தகவலைப் பார்த்துவிட்டு ரகுநாதன் என்ற அடியார் மதுரையிலிருந்து வந்து நமது உழவாரப்பணியில் கலந்துகொண்டதோடு நமது பணிக்கு உதவியும் செய்தார்.
இத்திருப்பணிக்கு காலை உணவு, மதிய உணவு, வாகன உதவி, வழங்கிய அடியார்கள், தங்கள் சரீர உழைப்பை வழங்கிய அடியார்கள், மற்றும் மறைமுகமாக இப்பணிக்கு உதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் மகாசுவாமிகள் இறைபணி மன்றத்தின் சார்பாக உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓம் நமசிவாய
ஓம்நமோ நாராயணாய
ஜெய ஜெய சங்கரா
ஹரஹர சங்கரா
சிவசிவ சங்கரா
குருகுரு சங்கரா

I have reached 2.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
13/06/2023

I have reached 2.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

Address

Chennai

Telephone

+919445661037

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maha Swamigal Arulaanai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Maha Swamigal Arulaanai:

Share