Shree Muthaiyasamy Temple

Shree Muthaiyasamy Temple Page is Dedicated to Shree Muthaiyasamy Temple Devotees. Contact Mr. Selvam for your Services
Perumulai, Tittagudi,Tamil Nadu
04143 255 566

Information regarding the Temple Activities, Festival Updates and Daily Pooja will Live through this Page.

29/05/2026

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமலை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயிலில் இன்று(29.05.2026) வெள்ளிக்கிழமை முத்தையா சுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு உத்தம பட்சத்துடன் கூடிய 54 யாக குண்டம் கொண்ட யாகசாலைக்கு பந்தல் கால் நடும் நிகழ்வும், கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும், இன்று சிறப்பாக நடைபெற்றது அது சமயம் வாழப்பாடியார் அவர்களின் துணைவியார, கடலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், மண்டல ஸ்தபதி,செயல் அலுவலர், சரக ஆய்வர் மற்றும் குலதெய்வ பக்தர்கள் ,கிராம எட்டுக்கொத்து தலைவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்த போது எடுத்த காணொளி மற்றும் புகைப்படங்கள்.
பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் செயல் அலுவலர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமுளை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயிலில் வர இருக்கின்...
29/05/2026

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமுளை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயிலில் வர இருக்கின்ற கும்பாபிஷேக விழாவை மிகச் சிறப்பான முறையில் நடத்திட பஞ்சவடி சேத்திரம் சேர்மன்திருப்பணி செம்மல், ஜாம்பவான் எம். கோதண்டராமன் மற்றும் என்றும் நம் நினைவில் வாழும் வாழப்பாடியார் குடும்பத்தினர் அறிவுறுத்தலின் பேரில் இன்று நமது கிராமத்தில் உள்ள எட்டுக்கொத்து தாரர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் விழாகுழு( கமிட்டி) அமைப்பது பற்றிய ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி விழாவில் சிறப்பு ஆலோசகராக சோழன் குமார் வாண்டையார் மற்றும் செயல் அலுவலர் கண்ணபிரான்(Rtd) கலந்து கொண்டனர் என்ற விவரமும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அருள்மிகு முத்தையாசுவாமி திருக்கோயில்  - பெருமுளை,திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம். மஹா கும்பாபிஷேக யாகசாலை பந்தக்கால...
28/05/2026

அருள்மிகு முத்தையாசுவாமி திருக்கோயில் - பெருமுளை,
திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம்.
மஹா கும்பாபிஷேக யாகசாலை பந்தக்கால் முகூர்த்த விழா புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா அழைப்பிதழ்
பேரன்புடைய பக்தகோடிகளே,

பெருமுளை, அருள்மிகு முத்தையாசுவாமி திருக்கோயில் மூலவர் முத்தையா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குலதெய்வ பக்தர்கள் , உபயதாரர்கள் ஆகியோரின் பங்களிப்போடு திருக்கோயில் திருப்பணிகள் சிறப்பாக முறையில் நடைபெற்று வருகின்றன.

இத்திருப்பணிகள் நிறைவுற்று வருகின்ற 05.07.2026 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு 10.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது, அதை முன்னிட்டு யாகசாலை பந்தல் வெளிமுகப்பு பந்தல் அமைப்பதற்கு பந்தக்கால் ஊன்றும் விழா மற்றும் கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் விழா 29.05.2026 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிகவும் சீறும் சிறப்புடன் நடைபெறவுள்ளதை முன்னிட்டு குலதெய்வ பக்தர்கள் உபயதாரர்கள், முக்கியஸ்தர்கள்,எட்டு கொத்துதாரர்கள் அனைவரும் தவறாமல் இச்சீர்மிகு விழாவில் கலந்து கொண்டு அ/மி முத்தையாசுவாமியின் பேரருளை பெற்று பெருவாழ்வு வாழ வேண்டி அன்புடன் அழைக்கிறோம்.

செயல் அலுவலர் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள்

27/05/2026

அருள்மிகு முத்தையா சாமி திருக்கோவில்

*கபுணராவர்த்தன ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா அறிவிப்பு*

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெருமுளை கிராமத்தில் அமைந்துள்ள
**அருள்மிகு முத்தையா சாமி திருக்கோவிலில்**
கபுணராவர்த்தன ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு,

* ஸ்ரீ விநாயகர் சன்னதி
* மூலவர் ஸ்ரீ முத்தையா சுவாமி
* ராஜகோபுரம்
* ஸ்ரீ பூமாலை பிரசன்னதி
* ஸ்ரீ ராயப்பர் சன்னதி
* இதர பரிவார சன்னதிகள்

ஆகியவற்றின் திருப்பணிகள் நிறைவடைந்து, பஞ்சவர்ணம் பூசும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

மேலும், குலதெய்வ பக்தர்களின் நலன் கருதி:

* புதிய கழிவறை & குளியலறை
* அன்னதான கூடம்
* திருக்குளம் சுவர் சுதை வேலைப்பாடுகள்
* பிரதான நுழைவாயில் மற்றும் புதிய ஆர்ச் அமைப்புகள்

ஆகிய பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

---

# # மகா கும்பாபிஷேக நாள்

**பராபவ வருடம், ஆனி மாதம் 21ஆம் தேதி**
📅 **05.07.2026 – ஞாயிற்றுக்கிழமை**
🌟 பஞ்சமி திதி • சதய நட்சத்திரம் • சித்தயோக சுபமுகூர்த்தம்
🕘 காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள்

---

# # யாகசாலை நிகழ்வுகள்

📅 **29.06.2026 முதல்** யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி
📅 **05.07.2026** அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.

# # # முக்கிய நிகழ்வு

📅 **29.05.2026 – வெள்ளிக்கிழமை**
🕘 காலை 9.00 மணி

* நூதன கொடிமரம் பிரதிஷ்டை
* யாகசாலை பந்தக்கால் முகூர்த்தம்

நடைபெற உள்ளது.

---

# # குலதெய்வ பக்தர்களுக்கு கனிவான வேண்டுகோள் 🙏

யாகசாலை மற்றும் ஹோமகுண்ட பணிகளுக்காக கீழ்க்கண்ட பொருட்கள் தேவைப்படுகின்றன:

* செம்மண் – 4 யூனிட்
* செங்கல் – 15,000
* பச்சைக்கல் – 15,000
* பி.சாண்ட் – 5 யூனிட்
* சிமெண்ட் – 80 மூட்டை
* மேடைமண் – 50 யூனிட்
* நவதானியம் – 36 கிலோ

மேலும் பல்வேறு பொருளுதவிகள் தேவையாக இருப்பதால், விருப்பமுள்ள குலதெய்வ பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு உதவி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

“அருள்மிகு முத்தையா சாமி திருவருளால் அனைவரும் வளமுடன் வாழ்க!” 🙏

இவன் ,
பரம்பரை அறங்காவலர்கள்
மேற்படி திருக்கோயில்.

24/05/2026

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமலை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தையா சாமி திருக்கோயில் திருப்பணி வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளது நமது திருக்கோயில் கும்பாபிஷேகம் 05.07.26 அன்று நடைபெற உள்ளதால், போர்க்கால அடிப்படையில் பல்வேறு வகையான கும்பாபிஷேக வேலைகள் நடைபெற்று வருகிறது என்பதை குலதெய்வ பக்தர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் கும்பாபிஷேகத்திற்கு குறுகிய காலமே உள்ளதால் தாங்களால் இயன்ற ஒத்துழைப்பையும் பொருள் உதவியும் நல்ல ஆதரவையும் பெருமளவில் அளித்திட வேண்டுகிறோம்.

16/05/2026

பிரபவா வருடம் வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு இன்று 16.05.2026 அருள்மிகு முத்தையா சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

அருள்மிகு முத்தையா சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். ஸ்ரீ முத்தையா அருளால் தாங்களும் சகல தோஷங்களும் நீங்கி நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டுகிறேன்.

ஓம் முத்தையா போற்றி 🙏
சைவ மூர்தியே போற்றி 🙏
என் குல தெய்வமே போற்றி போற்றி போற்றி 🙏

#கடலூர் மாவட்டம் #திட்டக்குடி வட்டம் #பெருமலை அருள்மிகு #முத்தையா_சுவாமி அருள்மிகு #இராயப்பா_சுவாமி #அமாவாசை #வைகாசி

09/05/2026

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமுளை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோவிலில் தற்பொழுது நடைபெற்று வரும் முன்னேற்ற திருப்பணி வேலைகளில்பூமாலையப்பர் விமானம் பஞ்சவர்ணமும் சுண்ணாம்பு சுதையால் செய்யப்படுகின்ற மூலவர் ராயப்பர் மற்றும் மூலவர் ராயப்பருக்கு நேர் எதிர் உள்ள முனிகள் மேலும் ராயப்பர் விமானம் கட்டுமான பணியும் இன்று 09.05.2026 காலை பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு வேலை நடைபெறுகிறது மற்றும் புதிய அன்னதான கூடத்தில் இரும்பு படிக்கட்டு கட்டுமான பணியும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்ற விவரம் கீழ்க்கண்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் வாயிலாக குலதெய்வ பக்தர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது🙏.

06/05/2026

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமுளை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோவிலில் தற்பொழுது நடைபெற்று வரும் முன்னேற்ற திருப்பணி வேலைகளில்இன்று 06.05.2026 ந் தேதி அருள்மிகு விநாயகர் சன்னதி பஞ்சவர்ண வேலையும்,அருள்மிகு ராயப்பர் சன்னதி தூக்குபதி மண்டபம் காண்கிரிட் போடும்பணியும்,ராயப்பர் மூலவர் சிலை செய்யும் பணியும், அருள்மிகு முத்தையா சுவாமி சன்னதி முன்மண்டபம், மகாமண்டபம், திருமதில் சுவர் வாட்டர் வாஷ் வேலையும், வெளிப்புறம் திருமதில் சுவர் கோப்பிங்கில் வர்ணம் அடிக்கும் பணியும், நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற விவரம் கீழ்க்கண்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் வாயிலாக குலதெய்வ பக்தர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது🙏.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமுளை அருள்மிகு சுவாமி திருக்கோயில் குலதெய்வ பக்தர்களுக்கு வணக்கம், நமது திருக்கோய...
15/01/2026

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமுளை அருள்மிகு சுவாமி திருக்கோயில் குலதெய்வ பக்தர்களுக்கு வணக்கம்,
நமது திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணி முன்னேற்ற வேலைகளில் குலதெய்வ பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அருள்மிகு பூமாலையப்பர் சன்னதி முன்புறமுள்ள கிழக்கு புற உள் நுழைவாயில் கனரக வாகனங்கள் வந்து செல்ல ஏதுவாக அகலப்படுத்தப்பட்டு புதிய பித்தளைக் கோட்டிங் செய்யப்பட்ட கேட் பொருத்தப்பட்டு இன்று 15.1.2026 முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுவதுடன் மேலும் திருக்கோயில் முன் ராஜ கோபுரத்திற்கு முன்பு உள்ள பிரதான உள்நுழைவாயில் பழைய இரும்பு கேட் அகற்றப்பட்டு விரைவில் புதிய ஆர்ச்சுடன் கூடிய பித்தளைக் கோட்டிங் செய்யப்பட்ட கேட் அமைப்பதற்கான பணிகள் வருகிற 20 ஆம் தேதிக்கு பிறகு தொடங்கப்பட உள்ளது என்பதையும் குலதெய்வ பக்தர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓம் முத்தையா போற்றி 🙏
சைவ மூர்தியே போற்றி 🙏
என் குல தெய்வமே போற்றி போற்றி போற்றி 🙏
#கடலூர் மாவட்டம் #திட்டக்குடி வட்டம் #பெருமலை அருள்மிகு #முத்தையா_சுவாமி அருள்மிகு #இராயப்பா_சுவாமி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமுளை அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் குலதெய்வ பக்தர்களுக்கு வணக்கம்,தைத்தி...
15/01/2026

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமுளை அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் குலதெய்வ பக்தர்களுக்கு வணக்கம்,

தைத்திங்கள் பிறந்தாலே துன்பங்கள் விலகட்டும், பொங்கும் பானைபோல
வாழ்க்கை வளம் பெருகட்டும்.
சூரியனுக்கு நன்றி சொல்லி,
உழவனுக்கு மரியாதை செலுத்தி,
இனிய பொங்கல் நாளில் இன்பமும் அமைதியும் நிறையட்டும்.

தைப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இன்றைய (15.01.2026) அலங்காரத்தில் பக்தர்களுக்கு மூலவர் அருள்மிகு முத்தையா சுவாமி மற்றும் உற்சவர் அருள்மிகு ராயப்பசாமி அருள் பாலிக்கிறார்கள்.

ஓம் முத்தையா போற்றி 🙏
சைவ மூர்தியே போற்றி 🙏
என் குல தெய்வமே போற்றி போற்றி போற்றி 🙏
#கடலூர் மாவட்டம் #திட்டக்குடி வட்டம் #பெருமலை அருள்மிகு #முத்தையா_சுவாமி அருள்மிகு #இராயப்பா_சுவாமி

Address

Chennai
606106

Opening Hours

Monday 6am - 9pm
Tuesday 6am - 9pm
Wednesday 6am - 9pm
Thursday 6am - 9pm
Friday 6am - 9pm
Saturday 6am - 9pm
Sunday 6am - 9pm

Telephone

+919751502345

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shree Muthaiyasamy Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Shree Muthaiyasamy Temple:

Share

Category