04/03/2024
அன்பான தேவ பிள்ளைகளே... கர்த்தருடைய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்...கடன் இல்லாத நாடு இல்லை... வீடு இல்லை... நிறுவனங்கள் இல்லை... தனிப்பட்ட மனிதனும் இல்லை.
கணவனும் மனைவியும் வேலைக்கு செல்லும் போதும் குடும்பத்தில் கடன் பிரச்சினைகள்... ஏன் என்று யோசிக்கும் போது...ஒன்று அளவுக்கு மீறி ஆசை படுவது...மற்றவரைப் போல வாழ நினைப்பது...தேவையில்லாத ஆடம்பரம்..
இவைகள் தான் இன்றைக்கு மனிதர்களை கடனுக்குள் விழ வைக்கின்றது...சில நேரங்களில் நினைத்துப் பார்க்க முடியாத சுகவீனம் காரணமாக கடன் வரும்...இதை நம்மால் தவிர்க்க முடியும்... health insurance இன்றைக்கு நடைமுறையில் இருக்கின்றது... எல்லாவற்றிற்கும் மேலாக நாம் திட்டமிட தவறுகிறோம்...
ஐந்து அப்பம் இரண்டு மீன் கொண்டு அற்புதம் செய்த தேவன் 12 கூடைகள் மீதம் எடுக்க வைத்து பத்திரப் படுத்தவும்
சொன்னார் அல்லவா...சரி...ஏதோ கடன் வந்து விட்டது...அதை நிவர்த்தி செய்ய என்ன பண்றது..... முதலாவது உண்மையாக உழைக்க வேண்டும்...சோம்பலைத் தவிர்க்க வேண்டும்...கர்த்தருக்கு முதலிடம் கொடுத்து ஜெபித்து காரியங்கள் செய்யப்படவேண்டும்... ஆலோசனை தேவனிடத்தில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்... இந்த காரியங்களை நாம் தவறாமல் கைக் கொள்ளும் போது நிச்சயமாக கடனிலிருந்து விடுதலைப் பெற முடியும்.
கர்த்தர் நம்மை கொடுப்பவர்களாக மாற்றுவார் .. அல்லேலூயா