19/10/2025
ஸ்ரீ மஹான்
இறைபணி மன்றம்
அரிதினும் அரிதான மானிடப் பிறவியை மகேஸ்வரன் தந்தருளினார் .அத்தகைய பிறவி ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் மறைந்தோம் என்றில்லாமல் இவ்வுலகிற்கு இயன்றவரை சிறிய துரும்பளவேணும் நல்லதை செய்ய வேண்டுமென்று எண்ணினோம். ஸ்ரீ மஹான் இறைபணி மன்றம் என்ற பெயரில் மாதம் ஒரு கோவிலை சுத்தப்படுத்தும் உழவாரப் பணியை இன்று வரை பல ஆண்டுகளாக செய்து வருவதோடு கவனிப்பாரற்ற கிராமக் கோயில்களுக்கு வஸ்திரம், விளக்கேற்றும் எண்ணெய், அபிஷேகப்பொருட்களை அளித்து வருகிறோம். அத்துடன் சில நல்ல உள்ளங்களின் காணிக்கையைக் கொண்டு இடிந்து போன இரண்டு ஆலயங்களை நமது அமைப்பு மூலமாகவே புதிதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளோம்.
மேலும் மகேசனுக்குச் செய்வது மக்களுக்கு செல்லாது மக்களுக்கு செய்வது மகேசனை சென்றடையும் என்கிறது புராணம் அதனால் மிகமிக வறுமை கோட்டுக்கு கீழே உள்ள இருளர் பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்களைத் தேடிச் சென்று தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வேட்டி சேலை, 5 கிலோ அரிசி , 5கிலோஆட்டா. 1 கிலோ பருப்பு, 1 கிலோ எண்ணெய், 1 கிலோ இனிப்பு, 1 கிலோ காரம் ஆகிய பொருட்களை வழங்கி வருகின்றோம். அந்த வகையில் இன்று (19-10 - 25 ) காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜா வட்டம், திருமுக்கூடல் அடுத்த புல்லம்பாக்கம் கிராமத்தில் வாழ்ந்து வரும் சுமார் 15 பழங்குடி குடும்பங்களுக்கு மேற்கண்ட உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. இயன்றவரை இந்த புண்ணிய சேவையை செய்து வருகின்றோம் இந்த தர்ம சேவைக்கு, .. உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள், அவர்கள் குடும்பம் சகல நலமும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
ஓம் நமசிவாய
ஓம் நமோ நாராயணாய
ஜெய ஜெய சங்கரா
ஹரஹர சங்கரா
சிவசிவ சங்கரா
குருகுரு சங்கரா