Sri Jothy seva Trust

Sri Jothy seva Trust SRI JOTHY SEVA TRUST
Foundation for Public Charitable Service

நமது அமைப்பு ஒவ்வொரு மாதமும் பாயடைந்த கோயில்களில் புல், புதர்களை அகற்றுவது, வெள்ளையடித்தல், நந்தவனம் அமைப்பது, போன்ற உழவாரப்பணிகளைச் செய்வதோடு, தீப எண்ணெய், அபிஷேகப்பொருட்கள், சுவாமி வஸ்திரங்கள் போன்றவற்றையும் வழங்கிவருகிறது.

கடந்தாண்டு வாலாஜாபாத் அருகில் ஒரு ஆலயத்தை கட்டி 25-4-21 அன்று கும்பாபிஷேகம் நடத்தி முடித்துவிட்டு, தற்போது ஸ்ரீபெரும்புதூர் தண்டலம் அடுத்த மேவளூர் இப்பத்தில் ஸ்ரீபவானி அம்ம

ன் ஆலயத்தை கட்டி வருகிறோம். அடியார்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். Sri Mahaswamigal Iraipani trust
A/c number 6993016722
IFSC code;IDIB000V060
Indian Bank
valarpuram branch

09/01/2026

அன்புள்ள அடியார் பெருமக்களுக்கு. நமது ஸ்ரீ மஹாஸ்வாமிகள் இறைபணி ட்ரஸ்ட் மதம் சாந்துள்ள பணிகள் என்பதால் 80 ஜி வருமான வரி விலக்கு பெற முடியவில்லை. நன்கொடை வழங்கும் அடியார்கள் 80ஜி வரி விலக்கு உள்ளதா? என்று கேட்கிறார்கள். அதனால் ட்ரஸ்ட் பெயரை ஸ்ரீ ஜோதி சேவா ட்ரஸ்ட் என்று மாற்றியுள்ளோம். இதே பெயரில் மகா சுவாமிகள் கருணையுடன் தொடர்ந்து இறை பணிகளும் தர்ம சேவைகளும் நடைபெறும் தொடர்ந்து உங்களின் பேராதவை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஓம் நமசிவாய
ஓம் நமோ நாராயணா
ஜெய ஜெய சங்கர
ஹரஹர சங்கர
சிவசிவ சங்கர
குருகுரு சங்கர

ஸ்ரீ மஹான் இறைபணி மன்றம்அரிதினும் அரிதான மானிடப் பிறவியை  மகேஸ்வரன் தந்தருளினார் .அத்தகைய பிறவி ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம்...
19/10/2025

ஸ்ரீ மஹான்
இறைபணி மன்றம்

அரிதினும் அரிதான மானிடப் பிறவியை மகேஸ்வரன் தந்தருளினார் .அத்தகைய பிறவி ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் மறைந்தோம் என்றில்லாமல் இவ்வுலகிற்கு இயன்றவரை சிறிய துரும்பளவேணும் நல்லதை செய்ய வேண்டுமென்று எண்ணினோம். ஸ்ரீ மஹான் இறைபணி மன்றம் என்ற பெயரில் மாதம் ஒரு கோவிலை சுத்தப்படுத்தும் உழவாரப் பணியை இன்று வரை பல ஆண்டுகளாக செய்து வருவதோடு கவனிப்பாரற்ற கிராமக் கோயில்களுக்கு வஸ்திரம், விளக்கேற்றும் எண்ணெய், அபிஷேகப்பொருட்களை அளித்து வருகிறோம். அத்துடன் சில நல்ல உள்ளங்களின் காணிக்கையைக் கொண்டு இடிந்து போன இரண்டு ஆலயங்களை நமது அமைப்பு மூலமாகவே புதிதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளோம்.

மேலும் மகேசனுக்குச் செய்வது மக்களுக்கு செல்லாது மக்களுக்கு செய்வது மகேசனை சென்றடையும் என்கிறது புராணம் அதனால் மிகமிக வறுமை கோட்டுக்கு கீழே உள்ள இருளர் பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்களைத் தேடிச் சென்று தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வேட்டி சேலை, 5 கிலோ அரிசி , 5கிலோஆட்டா. 1 கிலோ பருப்பு, 1 கிலோ எண்ணெய், 1 கிலோ இனிப்பு, 1 கிலோ காரம் ஆகிய பொருட்களை வழங்கி வருகின்றோம். அந்த வகையில் இன்று (19-10 - 25 ) காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜா வட்டம், திருமுக்கூடல் அடுத்த புல்லம்பாக்கம் கிராமத்தில் வாழ்ந்து வரும் சுமார் 15 பழங்குடி குடும்பங்களுக்கு மேற்கண்ட உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. இயன்றவரை இந்த புண்ணிய சேவையை செய்து வருகின்றோம் இந்த தர்ம சேவைக்கு, .. உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள், அவர்கள் குடும்பம் சகல நலமும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

ஓம் நமசிவாய
ஓம் நமோ நாராயணாய
ஜெய ஜெய சங்கரா
ஹரஹர சங்கரா
சிவசிவ சங்கரா
குருகுரு சங்கரா

24/12/2024
ஸ்ரீமஹா சுவாமிகள்இறைபணி மன்றஉழவாரப்பணி -  35சீர்காழி செம்மலை சிறு வயதில் பாடவைத்துமார்கழி ஆதிரையில் சேந்தனாரின் களி உண்ட...
24/12/2024

ஸ்ரீமஹா சுவாமிகள்
இறைபணி மன்ற
உழவாரப்பணி - 35

சீர்காழி செம்மலை சிறு வயதில் பாடவைத்து
மார்கழி ஆதிரையில் சேந்தனாரின் களி உண்டு
ஓர்வழி உலகில் உனக்காக அருளிடும்
சீர்எழில் சிவபெருமானின்
திருஅவதாரமாம் காஞ்சி மாமுனிவரின் கருணையால் நமது அமைப்பு மாதம் ஒரு கோயில் உழவாரப்பணி செய்து வருகிறது. அவ்வகையில் 22-12-2024 ஞாயிறு அன்று திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை அடுத்த கிளாம்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயத்தில் உழவாரப் பணி சிறப்பாக நடைபெற்றது .
இந்த ஆலய மூலவர் ஸ்ரீ அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும் . இமய மலையிலிருந்து பொதிகை மலைக்குச் சென்றபோது வழியில் வாதாபி என்ற அசுரனை அழிக்க கொசஸ்தலை நதிக்கரையில் மொத்தம் 108 லிங்கங்களை பிரதிஷ்டை செய்து அகத்திய முனிவர் வழிபட்டதாகவும் அதில் ஒன்றுதான் இந்த அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் என்றும் வரலாறு சொல்கிறது. இந்த ஆலயத்தின் அருகில் ஸ்ரீ லலிதாம்பிகா மஹா திரிபுர சுந்தரி அம்மனுக்கு அற்புதமான ஆலயம் ஒன்று உள்ளது. இந்த லலிதாம்பிகை மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் பலபேர் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை அருளியிருக்கிறார் என்று ஆலய நிர்வாகி தெரிவித்தார்.
இந்த அம்மனுக்கு ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திரத்தன்று விஷேச அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இரண்டு பூரம் தொடர்ந்து தரிசித்தாலே பக்தர்களின் ஞாயமான கோரிக்கைகள் நிறைவேரி விடுவதாக சொல்லப்படுகிறது.
அகத்தீஸ்வரர் சன்னதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா பிரம்மோற்சவம் பத்து நாட்கள் வெகுசிறப்பாக நடைபெறுகிறது (ஜனவரி 4 ந்தேதி முதல் )

இத்தகைய புராதன ஆலயத்தில் நமது அமைப்பு உழவாரப் பணி செய்தது பகவான் நமக்களித்த பாக்கியமே. இந்தப் பணிக்கு காலை உணவு வழங்கிய அடியார், மதிய உணவு வழங்கிய அடியார், தேனீர் வழங்கிய அடியார்கள், தங்கள் சரீர உழைப்பைத் தந்த அடியார்கள் மற்றும் இப்பணிக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஸ்ரீ மஹாஸ்வாமிகள் இறைபணி மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் வாழ்வில் சகல வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல ஈசனை பிரார்த்திக்கிறோம்.

ஓம் நமசிவாய
ஓம்நமோ நாராயணாய
ஜெய ஜெய சங்கரா
ஹர ஹர சங்கரா
சிவசிவ சங்கரா
குருகுரு சங்கரா

ஸ்ரீமஹா சுவாமிகள்இறைபணி மன்றஉழவாரப்பணி -  35சீர்காழி சிறுவன் சிந்தை மகிழ பாடிய  ஈசனைமார்கழி மாதத்தில் மனமுருகி வேண்டிடஓர...
17/12/2024

ஸ்ரீமஹா சுவாமிகள்
இறைபணி மன்ற
உழவாரப்பணி - 35

சீர்காழி சிறுவன் சிந்தை மகிழ பாடிய ஈசனை
மார்கழி மாதத்தில் மனமுருகி வேண்டிட
ஓர்வழி உலகில் உனக்காக அருளிடும்
சீர்எழில் சிவபெருமானின்
திருஅவதாரமாம் காஞ்சி மாமுனிவரின் கருணையால் நமது அமைப்பு மாதம் ஒரு கோயில் உழவாரப்பணி செய்து வருகிறது. அவ்வகையில் 22-12-2024 ஞாயிறு அன்று திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை அடுத்த கிளாம்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயத்தில் உழவாரப் பணி சிறப்பாக நடைபெற உள்ளது .

தேவர்களின் பிரம்ம முகூர்த்தக் காலமாம் மார்கழி மாதத்தில் இத்திருப் பணியில் கலந்து கொண்டு இறைவனின் பேரருளைப் பெற்று வாழ வேண்டுமென்று அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். தொடர்புக்கு 9445661037

Sri Mahaswamigal Iraipani trust
Current.A/c number 6993016722
IFSC code;IDIB000V060
Indian Bank
valarpuram branch
Google pay 9444265091

ஓம் நமசிவாய
ஓம்நமோ நாராயணாய
ஜெய ஜெய சங்கரா
ஹர ஹர சங்கரா
சிவசிவ சங்கரா
குருகுரு சங்கரா

ஸ்ரீ மஹா சுவாமிகள்இறைபணி மன்றம். தர்ம சேவை 3.மண்மகிழ் அரவணிந்த மஹாதேவன்,மாலை இளம் மதிசூடிய மகேஸ்வரன்விண்ணவரும் வணங்கிடும...
29/10/2024

ஸ்ரீ மஹா சுவாமிகள்
இறைபணி மன்றம்.
தர்ம சேவை 3.

மண்மகிழ் அரவணிந்த மஹாதேவன்,
மாலை இளம் மதிசூடிய மகேஸ்வரன்
விண்ணவரும் வணங்கிடும் வேதநாயகன்
மண்ணவரும் பணிந்திடும் மாதொரு பாகனின் மறு உருவமாம் காஞ்சி மாமுனிவர் கருணையால் நமது அமைப்பு மூலம் மாதம் ஒரு பழமையான ஆலயத்தில் தூய்மைபடுத்தும் உழவாரப் பணியை பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். பல அடியார் பெருமக்களின் பெருங்கருணையால் பாழடைந்த இரண்டு புராதன ஆலயங்களை புதிதாக கட்டி பெரியவா அனுகிரகத்தில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளோம். இந்த வரிசையில் மேலும் ஒரு புண்ணிய சேவையைச் செய்ய மாமுனிவர் கருணை புரிந்தார். பரமாத்மாவுக்குச் செய்வது ஜீவாத்மாவைச் சேராது ஆனால் ஜீவாத்மாவுக்குச் செய்வது பரமாத்மாவைப் போய்ச் சேரும் என்கிறது புராணம் அதனால் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் சொந்த இடம் கூட இல்லாமல் அரசு நிலத்தில் குடிசை போட்டு வாழ்ந்துவரும் இருளர் பழங்குடியின ஏழைக் குடும்பங்களுக்கு 10 kg பொன்னிஅரிசி, 1kg சூரியகாந்திஎண்ணெய், 1kg துவரம்பருப்பு போன்ற , மளிகைப்பொருட்கள், ஒரு கிலோ இனிப்பு. 1 கிலோ மிக்ஸர் போன்ற காரவகைகள், ஒரு வேட்டிச் சேலை ஆகியவை ஆண்டவன் கருணையாலும் . அடியார்களின் உதவியாலும் நமது அமைப்பு மூலம் வழங்கி வருகிறோம்.
அந்த வகையில் இந்த ஆண்டு 27-10-2024 ஞாயிறு அன்று காஞ்சிபுரம் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தில் சுமார் 25 ஏழைக் குடும்பங்களுக்கு ஸ்ரீமஹா சுவாமிகள் இறைபணி மன்றம் சார்பாக உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த சேவைக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள். தங்கள் குடும்பம் சகல நலமும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்..

ஓம் நமசிவாய
ஓம் நமோ நாராயணாய
ஜெய ஜெய சங்கரா
ஹரஹர சங்கரா
சிவசிவ சங்கரா
குருகுரு சங்கரா

ஸ்ரீ மஹா சுவாமிகள்இறைபணி மன்றம். தர்ம சேவை 2.மண்மகிழ் அரவணிந்த மஹாதேவன்,மாலை இளம் மதிசூடிய மகேஸ்வரன்விண்ணவரும் வணங்கிடும...
20/10/2024

ஸ்ரீ மஹா சுவாமிகள்
இறைபணி மன்றம்.
தர்ம சேவை 2.

மண்மகிழ் அரவணிந்த மஹாதேவன்,
மாலை இளம் மதிசூடிய மகேஸ்வரன்
விண்ணவரும் வணங்கிடும் வேதநாயகன்
மண்ணவரும் பணிந்திடும் மாதொரு பாகனின் மறு உருவமாம் காஞ்சி மாமுனிவர் கருணையால் நமது அமைப்பு மூலம் மாதம் ஒரு பழமையான ஆலயத்தில் தூய்மைபடுத்தும் உழவாரப் பணியை பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். பல அடியார் பெருமக்களின் பெருங்கருணையால் பாழடைந்த இரண்டு புராதன ஆலயங்களை புதிதாக கட்டி பெரியவா அனுகிரகத்தில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளோம். இந்த வரிசையில் மேலும் ஒரு புண்ணிய சேவையைச் செய்ய மாமுனிவர் கருணை புரிந்தார். பரமாத்மாவுக்குச் செய்வது ஜீவாத்மாவைச் சேராது ஆனால் ஜீவாத்மாவுக்குச் செய்வது பரமாத்மாவைப் போய்ச் சேரும் என்கிறது புராணம் அதனால் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் சொந்த இடம் கூட இல்லாமல் அரசு நிலத்தில் குடிசை போட்டு வாழ்ந்துவரும் இருளர் பழங்குடியின ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, எண்ணெய், பருப்பு போன்ற , மளிகைப்பொருட்கள், ஒரு கிலோ இனிப்பு மற்றும் காரவகைகள், ஒரு வேட்டிச் சேலை ஆகியவை ஆண்டவன் கருணையாலும் . அடியார்களின் உதவியாலும் நமது அமைப்பு மூலம் வழங்கி வருகிறோம்.
சென்ற ஆண்டு இந்த சேவைக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள். தங்கள் குடும்பம் சகல நலமும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இந்த ஆண்டும் தங்கள் சக்திக்கு ஏற்ப இயன்றளவு உதவுங்கள் இயலாதவர்கள் இந்த புண்ணிய சேவையில் எங்களோடு கலந்து உதவிப் பொருட்களை வழங்க அன்புடன் அழைக்கிறோம்.

Bank details
Sri Mahaswamigal Iraipani trust
Current.A/c number 6993016722
IFSC code;IDIB000V060
Indian Bank
valarpuram branch
Google pay 9444265091

ஓம் நமசிவாய
ஓம் நமோ நாராயணாய
ஜெய ஜெய சங்கரா
ஹரஹர சங்கரா
சிவசிவ சங்கரா
குருகுரு சங்கரா

ஸ்ரீமஹா சுவாமிகள்இறைபணி மன்றஉழவாரப்பணி -  34.மண்ணுலகம் வணங்கிடும்மஹாதேவன்விண்ணுலகம் வணங்கும்வேதநாயகன்-பொன்வண்ணனாய் விளங்...
25/08/2024

ஸ்ரீமஹா சுவாமிகள்
இறைபணி மன்ற
உழவாரப்பணி - 34.

மண்ணுலகம் வணங்கிடும்
மஹாதேவன்
விண்ணுலகம் வணங்கும்
வேதநாயகன்-பொன்
வண்ணனாய் விளங்கும்
பரமனவன்-எல்லோர்
எண்ணங்களில் வீற்றி
இருக்கும்ஈசனின்
அவதாரமாம் காஞ்சி மாமுனிவரின் கருணையால் நமது அமைப்பு மாதம் ஒரு கோயில் உழவாரப்பணி செய்து வருகிறது. அவ்வகையில் 25-08-2024 ஞாயிறு அன்று திருவள்ளூர் ஐவேலி அகரம் என்ற கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆதிபராசக்தி ஆலயத்தில் உழவாரப் பணி சிறப்பாக நடைபெற்றது .
ஆலயம் இருக்கும் இடமே தெரியாத நிலையில் நமது அமைப்பின் அடியார்கள். புதர்களை அகற்றி ஆலயத்தின் மீதிருந்த மரங்களை வெட்டி சுத்தம் செய்து விட்டு ஆலயம் மற்றும் சுற்றுச் சுவர்களில் பெயிண்ட் அடித்து காவி பட்டை தீட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
இத்திருப்பணிக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஶ்ரீமஹா சுவாமிகள் இறைபணி மன்றத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓம் நமசிவாய
ஓம்நமோ நாராயணாய
ஜெய ஜெய சங்கரா
ஹர ஹர சங்கரா
சிவசிவ சங்கரா
குருகுரு சங்கரா

ஸ்ரீமஹா சுவாமிகள்இறைபணி மன்றஉழவாரப்பணி -  34.மண்ணுலகம் வணங்கிடும்மஹாதேவன்விண்ணுலகம் வணங்கும்வேதநாயகன்-பொன்வண்ணனாய் விளங்...
19/08/2024

ஸ்ரீமஹா சுவாமிகள்
இறைபணி மன்ற
உழவாரப்பணி - 34.

மண்ணுலகம் வணங்கிடும்
மஹாதேவன்
விண்ணுலகம் வணங்கும்
வேதநாயகன்-பொன்
வண்ணனாய் விளங்கும்
பரமனவன்-எல்லோர்
எண்ணங்களில் வீற்றி
இருக்கும்ஈசனின்
அவதாரமாம் காஞ்சி மாமுனிவரின் கருணையால் நமது அமைப்பு மாதம் ஒரு கோயில் உழவாரப்பணி செய்து வருகிறது. அவ்வகையில் 25-08-2024 ஞாயிறு அன்று திருவள்ளூர் ஐவேலி அகரம் என்ற கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆதிபராசக்தி ஆலயத்தில் உழவாரப் பணி நடைபெற உள்ளது. அனைவரும் வருக அம்மன் அருள் பெறுக. cont 9445661037 (சில குடும்ப கடமைகளை நிறைவேற்ற வேண்டி . ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டது. இனி வரும் காலங்களில் இறை பணிகள் தொடரும்)

ஓம் நமசிவாய
ஓம்நமோ நாராயணாய
ஜெய ஜெய சங்கரா
ஹர ஹர சங்கரா
சிவசிவ சங்கரா
குருகுரு சங்கரா

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Sri Jothy seva Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Jothy seva Trust:

Share