20/05/2026
காலைத் தியானம் – மே 21, 2026
வியாழன் கிருபையின் சிம்மாசனம்!
21-05-2026
1 இராஜாக்கள் 7:1-12
நீதியின் செங்கோல்! சாலொமோனின் பிரம்மாண்டமான அரண்மனை வளாகத்தில் எத்தனையோ மாளிகைகள் இருந்தாலும், எல்லார் கண்களும் பயபக்தியோடு நோக்கும் ஒரு தனித்துவமான இடம் இருந்தது. அதுவே அவன் நியாயம் விசாரிக்கவும் தீர்ப்பளிக்கவும் கட்டிய “நியாயாசன மண்டபம்” (வசனம் 7). பழைய உடன்படிக்கையில், ஒரு சாதாரண மனிதன் இந்த நியாயாசனத்தின் முன்னே வரும்போது, தன் குற்றங்களுக்கான தண்டனை கிடைத்துவிடுமோ என்ற மரண பயத்திலேயே நடுங்கி நிற்பான். நீதியின் வாள் அங்கே தயவின்றி சுழலும். ஆனால், புதிய உடன்படிக்கையில் நாம் நிற்கிற நியாயாசன மண்டபம் முற்றிலும் மாறுபட்டது. சிலுவையில் இயேசு செய்த தியாகத்தினால், இப்போது இரக்கமும் தயவும் வழிந்தோடும் ‘கிருபையின் சிம்மாசனமாக’ (எபிரெயர் 4:16) மாறிவிட்டது! தேவனுடைய சிம்மாசனம் உன்னைத் தண்டிக்கும் என்று நினைத்துப் பயந்து விடாதே. அங்கு தண்டனையல்ல, கல்வாரியின் இரக்கமே அரசாளுகிறது!
ஜெபம்: பிதாவே, உமது கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் கிருபையால் இறங்கிடுமே; தடுமாற்றமில்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிறைத்திடுமே. ஆமென்.