Jamaat-e-Islami Hind Tamil Nadu

Jamaat-e-Islami Hind Tamil Nadu தீனை நிலைநிறுத்துங்கள்; பிரிந்து விட
(1)

"வட்டியில்லா வங்கி முறையை வலியுறுத்திய சந்திப்புகள்"தமிழ்நாட்டில் வட்டியில்லா வங்கி சேவைகள் (Interest-free Banking) அறிம...
26/05/2026

"வட்டியில்லா வங்கி முறையை வலியுறுத்திய சந்திப்புகள்"

தமிழ்நாட்டில் வட்டியில்லா வங்கி சேவைகள் (Interest-free Banking) அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் நோக்கில் முக்கிய சந்திப்புகள் நடைபெற்றன.

தமிழ்நாடு அரசின் புதிய நிதித்துறைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள
திரு. சித்திக் IAS அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்.

அப்போது, வங்கிகளில் வட்டியில்லா சேவைக்கான சிறப்பு வாயில்களை உருவாக்குவது, வட்டியில்லா பங்கேற்பு பரஸ்பர நிதிகள் மற்றும் சுகூக் போன்ற முதலீட்டு நிதிகளை மாநிலத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அறிமுகப்படுத்துவது குறித்து முதல்வர் வழியாக மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டோம்.

மேலும், இதற்காக மலேசியாவின் அனுபவத்தையும் ஒத்துழைப்பையும் பயன்படுத்தலாம் என்ற கருத்தையும் முன்வைத்தோம்.

அதனைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் புதிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரான
திரு. ஷாஜஹான் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். வட்டியில்லா வங்கி முறைக்கு அவர் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டதுடன், ‘சமரசம்’ மற்றும் IFT வெளியீடுகளையும் அறிமுகப்படுத்தினோம்.

மேலும்,
மாண்புமிகு சட்டமன்ற சபாநாயகர் அவர்களை சந்தித்து,
திரு. முருகன் எழுதிய ‘வட்டியில்லா வங்கி முறை’ குறித்த தமிழ் கட்டுரையை வழங்கினோம்.

இறுதியாக,
பாத்திமா முசஃபர் அவர்களின் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிரணி பிரதிநிதிகளுடன் பயனுள்ள மற்றும் இனிய கலந்துரையாடல் நடைபெற்றது.

வட்டியில்லா வங்கி முறை என்பது ஒரு சமூகநீதிசார்ந்த பொருளாதார மாற்றத்திற்கான அவசியமான முயற்சி என்பதையும், அதற்கான விழிப்புணர்வும் ஆதரவும் தொடர்ந்து உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் இந்த சந்திப்புகள் வலியுறுத்தின.

இந்த பிரதிநிதிக் குழுவில்
இந்திய பொருளாதார மையம் ICIF
பொதுச் செயலாளர்
H. அப்துர் ரகீப்
மலேசியாவில் இஸ்லாமிய வங்கி தொடர்பான டிப்ளமோ பெற்றுள்ளவரும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மெட்ரோ தலைவர்
திரு. என். அத்தாவுல்லாஹ் மற்றும்
சமூக ஆர்வலரும் மூத்த செயற்பாட்டாளருமான
திரு. ஜான் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு....
26/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு....

'தியாகத் திருநாள்' (ஈதுல் அல்ஹா) குறித்த மௌலானா மௌதூதியின் சிந்தனை.உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் விலங்குகளைப் பலியிடுவதன...
25/05/2026

'தியாகத் திருநாள்'
(ஈதுல் அல்ஹா) குறித்த மௌலானா மௌதூதியின் சிந்தனை.

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் விலங்குகளைப் பலியிடுவதன் (குர்பானி கொடுப்பதன்) மூலம் தியாகத் திருநாளின் நினைவைக் கொண்டாடுகிறார்கள்.

இந்த நினைவேந்தலின் உண்மையான நோக்கம் என்னவென்றால், இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்திய அதே தியாக உணர்வு, இஸ்லாமிய-ஈமானிய (இறைநம்பிக்கை) நிலைப்பாடு மற்றும் இறைவனுடனான அன்பு மற்றும் விசுவாசத்தின் அதே உன்னதப் பண்பு ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் உருவாக வேண்டும் என்பதுதான்.

யாரேனும் ஒருவர் வெறும் விலங்கின் கழுத்தில் கத்தியை வைத்து அவரது உள்ளம் இந்த (தியாக) உணர்விலிருந்து காலியாக இருக்குமேயானால், அவர் வீணாக ஒரு விலங்கின் இரத்தத்தை ஓட்டியவராகிறார்.

இறைவனுக்கு அதன் இரத்தமோ அல்லது இறைச்சியோ தேவையற்றது.

அங்கு உண்மையில் தேவைப்படுவது என்னவென்றால், யார் ஒருவர் 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்ற திருக்கலிமாவின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ, அவர் முழுமையாக சத்தியத்தின் அடிமையாக வாழ வேண்டும் என்பதுதான்.

எந்தவொரு பாரபட்சமும், சுயநலமும், தனிப்பட்ட ஆதாயமும், அழுத்தமும், பேராசையும், பயமும், இழப்பும்

சுருக்கமாகச் சொன்னால், உள்ளத்தின் பலவீனமோ அல்லது வெளி உலக சக்தியோ
அவரைச் சத்தியத்தின் பாதையிலிருந்து திசை திருப்பிவிடக் கூடாது.

ஆதாரம்: ரிஸாலா குர்பானி
ஆசிரியர்:
மௌலானா சையத் அபுல் ஆலா மௌதூதி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு...
25/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு...

"கடுமையான தண்டனை வழங்க வேண்டும்"24-05-2026கோவையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: குற்றவாளிகளுக்குக் காலதாமதமின்றி உச்சபட்ச...
24/05/2026

"கடுமையான தண்டனை வழங்க வேண்டும்"

24-05-2026

கோவையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்:

குற்றவாளிகளுக்குக் காலதாமதமின்றி உச்சபட்சத் தண்டனை வழங்க வேண்டும்!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர்
மௌலவி முஹம்மது ஹனிபா மன்பயீ அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு ஒட்டுமொத்த மனிதநேயச் சமூகத்தையும் உலுக்கியுள்ளது. பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைக்கும் இந்த அநாகரிக, காட்டுமிராண்டித்தனமான செயலை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு சார்பாக மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்நிகழ்வு, ஒட்டுமொத்தத் தமிழகத்திற்கே ஒரு பெரும் அவமானக் கறையாகும்.
தங்களின் பிள்ளைகளைப் பாதுகாப்பாக வளர்க்க முடியுமா என்ற அச்சத்தையும், பெரும் கவலையையும் தமிழக மக்களிடையே, குறிப்பாகப் பெற்றோர்களிடையே இந்தச் சம்பவம் தீவிரமாக விதைத்துள்ளது.

இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடும் மனித மிருகங்களுக்குச் சட்டத்தின் முன் எந்தவிதமான தளர்வுகளோ, சலுகைகளோ காட்டப்படக் கூடாது.
இக்கொலை வெறிச் செயலில் ஈடுபட்ட இருவரையும்
சட்டப்படியான 'உச்சபட்சக் கடுமையான தண்டனை' மிக விரைவாக வழங்கப்பட வேண்டும்.

தண்டனைகள் தாமதமாவது இதுபோன்ற குற்றவாளிகளுக்குத் தைரியத்தையே வரவழைக்கும் என்பதால்,
இந்த வழக்கில் நீதி உடனே நிலைநாட்டப்பட வேண்டும்.

தமிழக அரசுக்கு நாங்கள் வைக்கும் மிக முக்கியமான கோரிக்கை என்னவெனில், பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான குற்றங்களில் அரசு மிகத் தீவிரமான, சமரசமற்ற இரும்புக்கர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இப்படியொரு கொடூரமான நிகழ்வு கற்பனையிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாதவாறு அரசு சட்டத்தையும், பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும்.

> "இனி தமிழ்நாட்டில் இதுவே இதுபோன்ற கடைசி நிகழ்வாக இருக்க வேண்டும்" என்கின்ற உறுதியோடும், அந்த உத்வேகத்தோடும் தற்போதைய அரசு செயல்பட வேண்டும் என்று மிக உறுதியோடு கேட்டுக் கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட அச்சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களுக்கு உரிய நீதியும், தார்மீக ஆதரவும், தகுந்த நிவாரணமும் உடனடியாகக் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

"சபாநாயகருடன் சந்திப்பு"ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முன்னாள் மாநிலத் தலைவரும், மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினரும், இந்திய பொர...
22/05/2026

"சபாநாயகருடன் சந்திப்பு"

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முன்னாள் மாநிலத் தலைவரும்,
மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினரும், இந்திய பொருளாதார மையத்தின் (ICIF) பொதுச் செயலாளருமான
H. அப்துர் ரகீப் அவர்கள்,
தமிழ்நாடு சட்டமன்றச் சபாநாயகர்
திரு. ஜே.சி.டி. பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இந்திய பொருளாதார மையத்தின் (ICIF) செயல்பாடுகள் மற்றும் இஸ்லாம் தொடர்பான பல்வேறு கருத்துக்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நீண்ட நேரம் நடைபெற்ற இந்த பயனுள்ள சந்திப்பின் நிறைவாக, சபாநாயகர் அவர்களுக்கு சமரசம் இதழ் மற்றும் இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) வெளியிட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்த சந்திப்பும் கலந்துரையாடலும் மிகவும் மகிழ்ச்சிகரமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது.

Address

Chennai
600012

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat-e-Islami Hind Tamil Nadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Jamaat-e-Islami Hind Tamil Nadu:

Share