28/08/2026
*+* PRAISE THE LORD *+*
இனிய பகல்/ இரவு வணக்கம்
இன்றைய வேதநல்வாக்கும்
சுவிசேஷகனின் சத்தமும்
எண்ணாகமம் 22:38
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன், ஆனாலும், ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ? தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான்.
அன்பான தேவஜனமே உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக உலகில் வாழும் மனிதர்கள் தங்களுக்கு விருப்பாமானவர்களுக்கு கொடுக்கும் இலவசம் அல்லது திரும்பவரும் என நினைப்பது அளித்தல்
இறைவன் தமது தாசர்களுக்கு தரும் விசேஷ நன்மை ஆசீர்வாதம்.
ஆசீ தரும் தேவனுக்கு நன்றி
இறைவாக்கினர் எரேமியா தேவனைப் பற்றி தேவனிடம் ஜெபமாக சொல்லியது:-
ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.
ஆயிரம் தலைமுறைகளுக்கும் கிருபை செய்கிறவரும், பிதாக்களுடைய அக்கிரமத்தை அவர்களுடைய பின்னடியார் பிள்ளைகளின் மடியிலே சரிக்கட்டுகிறவருமாகிய சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள மகத்துவமும் வல்லமையுமுள்ள தேவனே,
யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர், அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன.
எரேமியா 32:19
மனிதர்களின் செயல்களுக்கு தகுந்த பலனைத் தரும் தேவனுக்கு நன்றி சொல்லி நாம் ஜெபிப்போம் இயேசுநாதர் பெயரால் ஆமென்
தின பைபிள் கதைகள்
சகோ.ராஜேந்திரபவுல் ( ஜெபவீடு✝️)