20/08/2026
123 When the Pentecostal Blessings fell, and you all spoke in tongues, you old-timers, having them great Pentecostal Blessings and things, fell. After a while you had what you called the General Council. Organism’s all right, but not organization. First thing you know, you couldn’t stand it, you had to go right back and become “a child of the…Satan,” and organize yourself.
124 And then another Light came on, about the Name of Jesus Christ. Then they got all stuck-up, and said, “Bless God, if you ain’t got Jesus’ name, you’re going to hell. And we got It, and you ain’t got It.” What’d they do? Just died right there in their tracks; made an organization out of it. See? Instead of letting the Light just flow on through the church, it would automatically take its place. But you organize yourself. What is it? A child of Jezebel. And they all died, together.
125 Now I want to ask you something. Has the Assemblies of God, or the Oneness, or—or any of the rest of them ever rose in a big united revival? Not at all! This last revival just passed by, that the Holy Spirit come down on the river (many of you setting here right now) in 1933, and this great healing service was to take place, said, “It would sweep the world,” and it never come through any different organization at all. God went outside the realms and raised up a heathen, almost, to start that revival. And look what It’s done! See?
126 Them organizations, as soon as they organize, they’re dead. He said, “I’ll kill her children with death.” Oh, my! I know you…Please don’t feel bad at me, but I…If I know This and don’t tell It, I’m a low-down hypocrite, and God will hold me responsible for It. I want to be like Paul, “To shun not to declare the whole counsel of God.” That’s right. All right. All right.
60-1208 - The Thyatirean Church Age
Rev. William Marrion Branham
123 பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதங்கள் விழுந்தபோது, முன் காலத்தவரே, நீங்களெல்லாம் அந்நிய பாஷைகளில் பேசினீர்கள். மகத்தான பெந்தெகொஸ்தே அசைவைப் பெற்றிருந்தீர்கள். ஆயினும் அதுவும் விழுந்து போனது. சில காலம் கழித்து, நீங்கள் உங்களுக்கு பொது ஆலோசனைக் குழு என்ற ஒன்றை நிறுவிக் கொண்டீர்கள். கூட்டிணைவமைப்பு சரிதான். ஆனால் ஸ்தாபன அமைப்பாவது சரியல்ல. நீங்கள் அறிய வேண்டிய முதலாவது காரியம் என்னவெனில், உங்களால் நிலைத்து நிற்க முடியாமல், பின்னுக்குப் போய், ஸ்தாபனமாக ஆகி, அதன் மூலம் “சாத்தானின்…பிள்ளையாக” ஆகிவிட்டீர்கள்.
124 பிறகு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினைப் பற்றிய இன்னொரு கூடுதலான வெளிச்சம் வந்தது. அப்பொழுது அவர்கள் யாவரும் அத்தோடு தேங்கிப் போய் நின்று விட்டு, “தேவனுக்கு துதியுண்டாவதாக, ‘இயேசு’ வின் நாமத்தை நீங்கள் பெற்றிராவிடில் நரகத்திற்கு போவீர்கள். நாங்கள் அதைப் பெற்றுள்ளோம். நீங்கள் அதைப் பெற்றிருக்கவில்லை” என்று கூறினார்கள். மரித்து, அதிலிருந்து ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிவிட்டனர். பார்த்தீர்களா? அந்த வெளிச்சம் தொடர்ந்து சபைக்குள்ளாகப் பரவி வளர்ந்து கொண்டே போவதற்குப் பதிலாக, அது தானகவே தன்னுடைய ஸ்தானத்தை அடைந்துவிட்டது. ஆனால் நீங்கள் உங்களை ஸ்தாபனமாக்கிக் கொண்டீர்கள். அது என்ன? ஒரு யேசபேலின் பிள்ளை. அவர்கள் யாவரும் ஒருமித்து மரித்துப்போயினர்.
125 நான் உங்களை ஒன்று கேட்கப் போகிறேன். அசெம்ப்ளீஸ் ஆஃப் காட் அல்லது அவர்களைச் சேர்ந்த ஏனையோர் எவராவது, எப்பொழுதாவது, ஒரு பெரிய ஐக்கியமாக இணைந்து எழுப்புதலை பெற்றிருக்கிறார்களா? இல்லவே இல்லை! அந்த கடைசி எழுப்புதல் சற்று முன்பு ஏற்பட்டது. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் 1933-ல் அந்த நதிக்கரையில் இறங்கி வந்தார். (அங்கேயிருந்தவர்களில் அநேகர் இங்கே அமர்ந்திருக்கிறார்கள்) மகத்தான தெய்வீக சுகமளிக்கும் ஆராதனைகள் “உலக முழுவதையும் அசைக்கப் போகிறது” என்று தெரியப்படுத்தப்பட்டது. அவ்விதமாக அது நிறைவேறிய பொழுது, அது ஒருபோதும் பல்வேறு ஸ்தாபன சபைகள் மூலம் வரவேயில்லை. தேவன் ஸ்தாபனங்களின் எல்லைகளை விட்டு, வெளியே, எழுப்புதலை ஆரம்பிக்க ஏறத்தாழ ஒரு அஞ்ஞானியைப் போலுள்ள ஒருவனை எழுப்பினார். அது என்ன செய்துள்ளது என்பதைப் பாருங்கள்! புரிகிறதா?
126 அந்த ஸ்தாபனங்கள், அவ்வாறு அவைகள் ஸ்தாபனமாக ஆனது முதற்கொண்டே மரித்துவிட்டன. அவர், “நான் அவள் பிள்ளைகளை மரணத்தினால் கொல்லுவேன்” என்று கூறினார். ஓ, என்னே! நான் உங்களை அறிவேன்…நான் இதைச் சொல்வதினால் நீங்கள் தயவு செய்து என்னைப் பற்றி மோசமாக எண்ணாதீர்கள். ஆனால் நான்…நான் இதை அறிந்திருந்து, அதை கூறவில்லையென்றால், அப்பொழுது நான் ஒரு கீழ்த்தரமான மாய்மாலக்காரனாக ஆகிவிடுவேன். அதற்காக தேவன் என்னை பொறுப்பாளியாக்கிவிடுவார். பவுல், “தேவனுடைய ஆலோசனைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்கவில்லை” என்று கூறியது போல் நானும் இருக்க விரும்புகிறேன். அது தான் சரியானது. சரி. சரி.
60-1208 - தியத்தீரா சபையின் காலம்
சங்கை வில்லியம் மரியன் பிரான்ஹாம்