21/08/2022
திருசிற்றம்பலம், நமது "SIWA(சிவா) - Sivanadiyars Improvement & Welfare Association, சிவனடியார்கள் முன்னேற்ற நலசங்கம்" கிளை : அரியலூர் மாவட்டம், நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அடியார்களின் திருவடியையும் வணங்கி கொள்கிறோம். முதலில் சிவ வழிபாட்டுடன் தொடங்கியது இக்கூட்டம். அதன் பின் முன்னுறைநாக "SIWA" சங்கத்தின் தோற்றம் மற்றும் அதன் அமைப்பு நிர்வாகிகளின் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து "சிவா" சங்கத்தின் பிரதான நோக்கமான அடியார்களின் பாதுகாப்பு, அடியார்களுக்கு வாழ்வாதாரம், சிவாலயங்களை பாதுகாத்தலும், பராமரித்தலும், சிவாலய சொத்துக்களை பராமரித்தலும் போன்றவற்றை தெளிவாக எடுத்துறைக்கப்பட்டது. பின்பு "SIWA(சிவா)" சங்கத்தின் செயல்பாடு, கட்டமைத்தல், வரையறுத்தல், ஓருங்கினைத்தல், திட்டமிடுதல் போன்றவற்றை விளக்கி கூறப்பட்டது. சிவதொண்டே சமய பாதுகாப்பும், சமய பாதுகாப்பே சிவனடியார்களின் பாதுகாப்பு மற்றும் சிவாலயங்களின் பாதுகாப்பு என்பதனை விளக்கி கூறப்பட்டது. அதன்பின் நடந்த கூட்டத்தில் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் பணி இனிதே நடந்தது. அதில் அரியலூர் மாவட்ட தலைவராக சிவ சோமசுந்தரம், அரியலூர், கைபேசி : 9487683742, மாவட்ட துணை தலைவராக சிவ முத்தையா வி.கைகாட்டி, கைபேசி : 9787332160, மாவட்ட செயலாளராக சிவ மகாராஜன் வட்டதட்டகுறிச்சி, கைபேசி : 9976912473, மாவட்ட துணை செயலாளராக சிவ இராமசந்திரன், அரியலூர், கைபேசி : 9943508996, மாவட்ட போருளாளராக சிவ செல்வி, விக்ரமங்களம், கைபேசி : 9843660301 ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிறகு சோழ மண்டல தலைவராக சிவ சுந்தரராஜன், உடையார்பாளையம், கைபேசி : 8835538456, சோழ மண்டல செயலாளராக சிவ பாலமுருகன், கும்பகோணம், கைபேசி : 8758101481 அவர்களை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பிற்பகல் பூசைக்கு பின் அடியார்களுக்கு அன்னபாலிப்பு சிறப்புடன் நடைபெற்றது. மீண்டும் ஒரு முறை , இக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து அடியார்களின் திருவடியையும் வணங்கிக் கொள்கிறோம். ஓம் நமசிவாய வாழ்க 👏🙏🏻🙏🏻🙏🏻👏