15/06/2026
அன்பர்களே, வணக்கம்.
இன்று ( 15.6.2026 ) நமது குருவும், ஆசிரியரும், வழிகாட்டியுமாக திகழ்ந்த சுவாமி அமலோர் அடிகளாரின் 94- வது பிறந்த ( 15.6.1932 )தின விழா. அவரை நாம் அனைவருக்கும், இந்திய கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கத்தை நிறுவி வழிகாட்டியாகவும் தந்த இறைவனுக்கு நன்றி கூறுகிறோம்.
அவர் பெங்களூரு தேசிய நடுநிலையம் வழியாக பொதுநிலையினர் என அழைக்கப்படும் கிறித்தவ நம்பிக்கையாளர்களுக்கு 1977 முதல் ஆங்கிலத்தில் உருவாக்கப் பயிற்சியும், 1981 முதல் 1990 வரை தமிழிலும், தொடர்ந்து பிற பிராந்திய மொழிகளிலும் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கொணர்ந்த திருஅவையின் புதிய பார்வயை நமக்கெல்லாம் விளக்கிக் கூறியது இப்போதும் நமக்கெல்லாம் திருச்சபை மீதும் உலகின் மீதும் நமது பணி என்ன என்பதை நினைவுபடுத்துகிறது.
அவரது தனித்தன்மையாக என்னை கவர்ந்த ஒருசிலவற்றை உங்களோடு இந்நன்னாளில் பகிர்ந்து கொள்ள ஆசிக்கின்றேன்.
அவரது கூற்றுப்படி திருஅவையில் பொதுநிலையினர் என அழைக்கப்படும் கிறித்தவ நம்பிக்கையாளர்களே முக்கியமானவர்கள். அவர்களது வாழ்வும் பணியும் தான் திருச்சபையை பிரதிபலிக்கின்றது. திரு ஆட்சியாளர்கள் என அழைக்கப்படும் கர்தினால்மார் கள், பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள் அனைவரும் கிறித்தவ நம்பிக்கையாளர்களின் பணியாளர்களே. அவர்கள் அனைவரும் ஒருங்கியக்க திருச்சபையாக செயல்படவும், இரண்டாம் வத்திக்கான் சங்க போதனைப்படி "திருப்பணியாளர்களின் வாழ்வும் பணியும்" என்ற ஏட்டில் எண்.9, கூறுவதை நடைமுறைப்படுத்தவும் திருப்பணியாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
சுவாமி அமலோர் அடிக்கடி நமக்கு நினைவூட்டிய ஒருசில போதனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசிக்கிறேன்.
# விவிலிய மதிப்பீடுகள் இரத்தத்தைவிட அடர்த்தியானது.
# திருஅவை இருப்பதும், இயங்குவதும் உலகிற்காக.
# திருஅவை உலகிற்கு உப்பாவும், ஒளியாகவும், புளிக்காரவுமாக செயல்படவேண்டும்.
# திருஅவை உலகில் இருக்கிறது, ஆனால் திருஅவையில் உலகம் இல்லை.
# திருமுழுக்கின் வழியாக நாம் அனைவரும் தூய ஆவியால் அருட்பொழிவு செய்யப்பட்டவர்கழள்.
# தூய ஆவியால் அருட்பொழிவு செய்யப்பட்ட நாம் அனைவரும் நமது தகுதிக்கும், நிலைக்கும் ஏற்ப கிறிஸ்துவின் முப்பெரும் பணிகளை ஆற்ற அழைக்கப்படுகிறோம்.
# திருஅவை என்பது திருப்பணியாளர்களும், கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களும் இணைந்த ஓர் இயக்கம்.