21/10/2021
சிவனே கதி
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
வேண்டத்தக்கது அறிவோய் நீ!
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன், மாற்கு, அறியோய் நீ!
வேண்டி என்னைப் பணி கொண்டாய் :
வேண்டி நீ,யாது அருள் செய்தாய்?
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்
அதுவும் உந்தன் விருப்பன்றே!
திருச்சிற்றம்பலம்