02/02/2024
பேரன்பு மிக்க உறவுகளுக்கு வணக்கம்,
_________________________________
காலம் தனைச்சூடிக்கொள்ளும் என்பது எனது மிகப்பெரிய நம்பிக்கை அவ்வாறு
எனது எழுத்துப்பயணத்தை வரலாறு சார்ந்து மாற்றிய நான் பிறந்த ஊரின் மிகப்பழமை வாய்ந்த தலமாகக்கருதப்படும்
" பால்வரதகிரி ஶ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி மடம் ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் " திருத்தல வரலாற்றை
2020 களில் தகவல் சேகரிக்க ஆரம்பித்து 2024 ல் எனது முதல் ஆய்வுக்கட்டுரை நூல் #தருமநகரும்_தலவரலாறும் எனும் தலைப்பில் வெளிவருகிறது.
இன்று தங்களோடு வரலாற்று நூலின் #அட்டைப்படம் பகிர்வதில்
அகம் மகிழ்கிறேன்.
அறியப்படாத சித்தர்களின் பூமி, கி.பி. 1000 ஆவது ஆண்டுகளில் ஆற்றூரை ஆண்ட முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி , இன்றும் கொண்டாடித்தீர்க்கும் சித்தர்களின் ஜீவசமாதி, கஞ்சமலை கொல்லிமலை சித்தர்கள் சங்கமித்த சம்புநதி ஓடும் திருத்தலம் , திருவண்ணாமலைக்குச் சமமாகப் போற்றப்படும் திருக்கோடித் தீபம் , பால்வரதகிரியை சுற்றி வளைத்த சித்தர்கள், சிவனாய் அவதரித்த சிவசுப்ரமணியன், இன்றளவும் மர்மங்களாய் தொடரும் சித்தர் வழிபாடுகள் , சிவலிங்கத்திருமேணி எங்கே போனது , சித்த மருத்துவத்தில் தலவிருட்சங்களின் பங்களிப்பும் தீர்க்கும் நோய்களும் , அறிவியல் சார்ந்த தமிழ்க்குடிகளின் வழிபாட்டுமுறைகளும் என தீர்க்கப்படாத கேள்விகளுக்கு திடுக்கிடும் உண்மைகளுடன் , இதுவரை வரலாற்றில் அழுத்தமாகச் சொல்லப்படாத சோழநாட்டின் மகதை மண்டலமும் அப்பகுதியில் உள்ள தருமநகர் எனும் ஓலைநகர் வரலாற்றோடு ஒட்டப்பட்டி பால்வரதகிரி ஓம் சிவசுப்ரமணிய சுவாமி ஓம் அர்த்தநாரீஸ்வரர் திருத்தலத்தை மையமாகக்கொண்ட "தருமநகரும் தலவரலாறும்" எனும் இந்நூல் வெளிக்கொணர்கிறது .
நூல் வெளியீட்டு விழா: 9.2.2024
காலம் : மதியம் 2 மணிக்கு மேல்
இடம் : விழா மேடை
நூல் உரிமை மற்றும் நூல் வெளியிடுவோர் :
சிவசுப்ரமணியர் திருப்பணி நண்பர்கள் குழு
ஓலைப்பாடி ,ஒட்டப்பட்டி.
சேலம் மாவட்டம்.
சிறப்புரை : மகதை மண்டல படைப்பாளிகள் இயக்கம், ஆத்தூர்.
அரும் பெரும் வாய்ப்பினை அருளிய பால்வரதகிரி சிவசுப்ரமணிய னுக்கும்,
எங்கள் சித்த பூமிக்கும், உதவிய உறவுகளுக்கும் பேரன்பும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
______________________________நவி__
#தருமநகரும்_தலவரலாறும்
#மகதைமண்டலம்
#சோழநாடு #வரலாறு #சித்தர்பூமி #நமச்சிவாய #ஓம் #முருகா #ஆத்தூர் #சேலம்
#நவி