அருள்மிகு கலியுக வரதராஜபெருமாள் திருக்கோவில், கல்லங்குறிச்சி-அரியலூர்

  • Home
  • India
  • Ariyalur
  • அருள்மிகு கலியுக வரதராஜபெருமாள் திருக்கோவில், கல்லங்குறிச்சி-அரியலூர்

அருள்மிகு கலியுக வரதராஜபெருமாள் திருக்கோவில், கல்லங்குறிச்சி-அரியலூர் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அருள்மிகு கலியுக வரதராஜபெருமாள் திருக்கோவில், கல்லங்குறிச்சி-அரியலூர், Hindu temple, KALLANKURICHI, Ariyalur.

தல வரலாறு:

அரியலூர் சிதளவாடியில் 250 ஆண்டுகளுக்கு முன் வன்னியகுலத்தில் கோபாலன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவருடைய மகன் மங்கான், மாடுகள் நிறைந்த மந்தை ஒன்றை நிர்வகித்து வந்தார். மந்தையில் கருவற்ற நிலையிலிருந்த அழகிய பசு, மேயச் சென்ற போது காணாமல் போனது. மூன்று நாட்கள் தேடியும் கிடைக்காததால் துயரமடைந்தார்.

மூன்றாம் நாள் இரவு, அவர் கனவில் "அன்ப! கவலைப்படாதே, காணாமல் போன பசு கன்றுடன் மேற்புறமுள்ள காட்

டில் இரண்டு மைல் தொலைவில் ஆலமரத்துக்கும் மாவிலிங்க மரத்துக்கும் இடையே சங்கு இலை புதர் அருகேயுள்ளது. காலையில் அங்கே கன்றுடன் பசுவைக்காண்பாய்!' என இறைவன் கூறி மறைந்தார். காலையில் மங்கான் பணியாட்களுடன் சென்று பார்த்த போது, பசு, அம்மாவெனக் கதறி அவரிடம் வந்தது. கன்றுடன் பசு நின்றிருந்த இடத்தில் சாய்ந்து கி டந்த கம்பத்தையும் கண்டார். அதன் மீது பால் சொரிந்திருந்தது. அக்கம்பத்தை மங்கானும், அவரது பணியாட்களும் தொட்டு வணங்கினர். பசு கிடைத்த ஏழாம் நாள் இரவு, மீண்டும் மங்கான், கனவில் "எண்ணாயிரம் ஆண்டு யோகம் செய்வோர் கூட காணக்கிடைக்காத பெரும் பொருளைக் கண்டு வணங்கி வந்த பேதையே! பொய்ப்பொருளாம், உன்பசுவை அழைத்துச் சென்று மெய்ப்பொருளாம் என்னைக் கைவிட்டாய், என்னை உன் அறியாமை! உன் முன்னோர்க்கும் எனக்கும் உள்ள உரிமைத் தொடர்பை நீ அறியாய், சீதளவாடியில் வாழ்ந்து திருமாலை வணங்கிய உன் முன்னோர் பெருமாள் கோயில் கட்ட எண்ணி, கற்கம்பம் கொண்டு வரும் போது வண்டி அச்சு முறிந்ததால் உச்சிமுனை உடைந்து கம்பமாய் என்னை அங்கேயே விட்டுவந்தார்கள். அதே கம்பம் தான் நீ காண்பது'', என அசீரீரி ஒலித்தது. தொடர்ந்து "கவலை கொள்ளாதே, கம்பத்தை நிலைநாட்டும் உரிமை உன்னுடையது.

கம்பத்தை நிலை நிறுத்தி நாளும் வணங்கு. என்னை நீ உணரவே உன் பசுவை மறைத்து வைத்தேன். உன்னையும் உன் வழித்தோன்றல்களையும் காக்க வந்தவன் யான் என்பதை அறிக. கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றினேன். என் பெயர் கலியுக பெருமாள் எனக் கூறி இறைவன் மறைந்தார். மங்கான், அந்த இடத்தில் கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார். இந்த கோயில் தற்போது கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப்பெருமாள் கோயிலாக உள்ளது.

10/01/2025

வைகுண்ட எகாதசியை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில்
கருட சேவை திருவீதி உலா

பாதுகாப்பு முக்கியம் பக்தர்களே...
08/01/2025

பாதுகாப்பு முக்கியம் பக்தர்களே...

07/01/2025
சூரியன் வாகனத்தில் கலியுக வரதன்...
07/01/2025

சூரியன் வாகனத்தில் கலியுக வரதன்...

18/04/2022

அழகிய பவனி ..

சிம்ம வாகனத்தில் எம்பெருமான்... இரண்டாம் நாள் திருவிழா..
11/04/2022

சிம்ம வாகனத்தில் எம்பெருமான்...

இரண்டாம் நாள் திருவிழா..

10/04/2022

நம்ம ஊர் திருவிழா...

கொடியேற்றத்துடன் துவக்கம்.

Address

KALLANKURICHI
Ariyalur
621705

Opening Hours

Monday 6am - 12:30pm
3pm - 9:30pm
Tuesday 6am - 12:30pm
3pm - 9:30pm
Wednesday 6am - 12:30pm
3pm - 9:30pm
Thursday 6am - 12:30pm
3pm - 9:30pm
Friday 6am - 12:30pm
3pm - 9:30pm
Saturday 6am - 9:30pm
Sunday 6am - 12:30pm
3pm - 9:30pm

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு கலியுக வரதராஜபெருமாள் திருக்கோவில், கல்லங்குறிச்சி-அரியலூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category