10/08/2025
அன்பான திருச்சபை மக்களுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள், இன்று (10.08.25) நடைபெற்ற நற்செய்தி பெருவிழா - 2025 ல் ஜெபத்துடன் கலந்து கொண்ட அனைத்து திருச்சபையாருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். விசேஷமாக மனப்பாட வசன போட்டி விற்பனை விழா மற்றும் ஏலம் என அனைத்து நிகழ்வுகளிலும் சிறப்பாக பங்கு கொண்டு, கடைசி வரை தங்கிச் சென்ற திருச்சபையாருக்கு நாங்கள் உள்ளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த நற்செய்தி பெரு விழாவில் கொடுத்த அனைத்து பொறுப்புகளையும் சிறப்பான முறையில் செய்து கொடுத்த பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்து நம்முடைய திருச்சபைக்காகவும் திருச்சபை மக்களுக்காகவும் அனைவரும் ஜெபிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். நன்றி