03/11/2025
இந்தியா அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளும் மதச் சுதந்திரமும்.
தேவா ஊழியர்களுக்கான ஆலோசணை.
1. தேவனுடைய ஊழியத்தை செய்கின்ற நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
2. பரிசுத்த ஆவியானவரின் துணையோடு தைரியமாகவும் உற்சாகமாகவும் ஜனங்களையும் திடப்படுத்தி கிறிஸ்துவுக்குள் வழிநடத்துங்கள்
3. உங்கள் பகுதியில் உள்ள காவல்துறை, வருவாய்துறை உள்ளாட்சி துறை போன்ற முக்கியமான துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகளுடன் நல்ல உறவையும், ஐக்கியத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.
4. அது உங்கள் ஊழியத்தின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் அரசு அதிகரிகள் பொதுமக்களுகான சேவகர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
5. வீட்டு கூட்டங்கள், ஆராதனைகள், ஜெபங்கள், Cell Group, Prayer Cell, நடத்துவதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. கூட்டம் நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டு காத்திருக்க வேண்டியதில்லை. கூட்டம் நடத்துவதை கடிதம் மூலம் தெரியப்படுத்தினால் போதும், சட்டம் நியமித்துள்ள பெரிய கூடங்களுக்கு மட்டுமே அனுமதி பெற வேண்டும்.
6. கிறிஸ்துவை அறியாத ஏற்றுக்கொள்ளாத மக்கள் வழிபடுகின்ற கடவுளையும் அவர்கள் நம்பிக்கைகளையும் குறை சொல்லுவதையும், தரக்குறைவாக பேசுவதையும் தவிர்ப்பது மிகவும் நல்லது. அவர்களையும் கிறிஸ்துவுக்குள். கொண்டுவர வேண்டும் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்
7. நீங்கள் நடத்துகின்ற பொதுவான விக்ஷே நிகழ்ச்சிகளிலும்,கூட்டங்களிலும் உள்ளூரில் உள்ள முக்கியஸ்தர்களையும், அரசு அதிகாரிகளையும் அழைத்து சிறப்பித்து அவர்களையும் பேசவைத்து கணப்படுத்துங்கள் இதனால் நமக்கும் மக்களுக்கும் நல்ல ஒரு உறவும் ஐக்கியமும் உண்டாகும்,
8. நம்முடைய இந்திய தேசம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படுவதால் யார் ஆட்சி செய்தாலும் சட்டத்தின்படி தான் நிர்வாகம் செய்யப்படும் அந்த நிர்வாக அதிகாரத்துக்கு உட்பட்டு இருக்கிற நாமும் எதை செய்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு செய்கிறோமா என்பதை கவனத்தில் வைத்துக்கொள்வேண்டும்
9. நீங்கள் விரும்புகின்ற ஏதாவது ஒரு ஊழிய ஐக்கியத்தில் இணைந்திருங்கள், அந்த ஐக்கியம் உங்கள் ஆவிக்குறிய வளர்ச்சிக்கும் உங்கள் சபை வளர்ச்சிக்கும், சபை பாதுகாப்பிற்கும், வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் இருப்பது மிகமிக அவசியம்.