அகத்தியர் அன்னதான குழு சாரிட்பிள் டிரஸ்ட்

  • Home
  • India
  • Ambattur
  • அகத்தியர் அன்னதான குழு சாரிட்பிள் டிரஸ்ட்

அகத்தியர் அன்னதான குழு சாரிட்பிள் டிரஸ்ட் (Agathiyar Annathana Kuzhu Charitable Trust)

(Regd. No.109/2021)

08/10/2021

அகத்தியர் அன்னதான குழு சாரிடபிள் டிரஸ்ட் அம்பத்தூர் சென்னை :53

நமது அகத்தியர் அன்னதான குழுவின் சார்பாக தினமும் 130 நபர்களுக்கு நமது குடிலில் உணவு தயாரித்து சாலையோரத்தில் ஆதரவு இன்றி ஒரு வேளை உணவுக்காக கஷ்டப்படும் நம்மை போன்ற மனிதர்களுக்கு தேடி சென்று உணவுவளித்து வருகிறோம்

உங்களின் ஆதரவுவை கொடுத்து அகத்தியர் அன்னதான குழுவில் இணைத்து நீங்களும் செய்யலாம் அன்னதானம்

நமது குழுவின் நோக்கம் அன்னதானம் பசி என்ற பினியை போக்க நமக்கு ஒரு வாய்ப்பை சித்தர்களின் தலைமகன் அகத்திய பெருமான் அருள்வாக்கு

ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி

நமது அகத்தியர் அன்னதான குழு சாரிடபிள் டிரஸ்டின் அன்னதான நிகழ்வு 100 நாளை எட்டியதுஇன்று 18/08/21 புதன் கிழமை 100 வது நாள்...
18/08/2021

நமது அகத்தியர் அன்னதான குழு சாரிடபிள் டிரஸ்டின் அன்னதான நிகழ்வு 100 நாளை எட்டியது
இன்று 18/08/21 புதன் கிழமை 100 வது நாள் சிறப்பு அன்னதானமாக சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், வாழைக்காய் பொரியல், தண்ணிர் பாட்டில், என இயலாதவர்களை தேடி சென்று உணவு வழங்கப்பட்டது.
நன்றி நன்றி 🙏🏼🙏🏼

அகத்தியர் அன்னதான குழு சாரிடபிள் டிரஸ்ட்🌷கடமையைசெய் பலனை எதிர்பார்க்காதே 🌷                                  தர்ம குணம் ப...
26/07/2021

அகத்தியர் அன்னதான குழு சாரிடபிள் டிரஸ்ட்

🌷கடமையைசெய் பலனை எதிர்பார்க்காதே 🌷

தர்ம குணம் படைத்த மன்னன் போஜனிடம் விவசாயி ஒருவர், மகளின் திருமணத்திற்காக பணம் பெற எண்ணினார்.
தலைநகருக்கு புறப்பட்டார்...

வழியில் சாப்பிட ரொட்டி கட்டிக் கொண்டார். வழி நெடுக, கடவுளே! திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் தர மன்னர் சம்மதிக்க வேண்டும், என வேண்டிக் கொண்டார். பசியெடுக்கவே, ஒரு குளக்கரையில் அமர்ந்து ரொட்டியைக் கையில் எடுத்தார்.

மனதிற்குள், இந்தஉணவைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி, என்றார். அப்போது நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும், தோலுமாக வந்து நின்றது.

இரக்கப்பட்ட அவர் ஒரு ரொட்டியை அதன் முன்வீசினார். ஒரே விழுங்காக உள்ளே தள்ளிய நாய், மீண்டும் ஆவலுடன் பார்த்தது.

இரக்கப்பட்ட விவசாயி அத்தனை ரொட்டியையும் கொடுத்து விட்டார். ஒரு நாள் சாப்பிடா விட்டால் என்ன உயிரா போயிடும்?

ராஜா அவர் தகுதிக்கு தானம் கொடுத்தால், பிரஜையான நாமும் முடிந்ததை செய்வது தானே முறை எனதனக்குள் சொல்லிக் கொண்டார். பசியைப் பொறுத்துக் கொண்டுதலைநகரை அடைந்தார்.

அங்கிருந்த தர்மசத்திரத்தில் சாப்பிட்டார். பிறகு மன்னனைச் சந்தித்து, தான் வந்தவிஷயத்தை தெரிவித்தார்.

போஜன் அவரிடம்,என்னிடம் தர்மம் கேட்டு வந்துள்ளீர்களே! நீங்கள்ஏதாவது தர்மம் செய்திருந்தால் சொல்லுங்கள். அதை நிறுக்கும் தராசு ஒன்று என்னிடம் இருக்கிறது.

அது எந்த அளவு எடை காட்டுகிறதோ, அந்த அளவுக்கு தங்கம் வாங்கிக் கொள்ளுங்கள், என்றார் மன்னர்.

தர்மம் செய்யுமளவு பணம் இருந்தால், நான் ஏன் உங்களிடம் வரப் போகிறேன்? வழியில் நாய் ஒன்றுக்கு உணவு அளித்தேன். அதற்கு ஈடாக, உங்கள் சத்திரத்தில் சாப்பிட்டு விட்டேன்.

எனவே. நான் ஏதும் பெரிதாக தர்மம் செய்ததில்லை, என்று அடக்கமாகச் சொன்னார் விவசாயி.

உங்கள் பசியைப் பொறுத்துக் கொண்டு நாய்க்கு உணவிட்டதும் புண்ணியமே என்ற போஜன் தராசைக் கையில் எடுத்தார்.
ஒரு தட்டில் விவசாயி செய்த தர்மத்தையும், மறுதட்டில் தங்கத்தையும் வைத்து நிறுத்தான்.

கஜானாவில் இருந்த தங்கம் முழுவதும் வைத்தும் கூட தராசுத்தட்டு சமமாகவில்லை.

வியந்தமன்னன்,உங்களைப் பார்த்தால் சாதாரணமானவராக தெரியவில்லை. என்னைச் சோதிக்க வந்திருக்கும் தாங்கள் யார்? என்றான்.

மன்னா! நான் ஒருவிவசாயி. என்னைப்பற்றி சொல்லுமளவு வேறு ஏதுமில்லை, என்றார்பணிவுடன்.

அப்போது தர்மதேவதை அங்கு தோன்றினாள். போஜனே! தராசில் நிறுத்துப் பார்ப்பது அல்ல தர்மம்.

கொடுத்தவரின் மனமே அதன் அளவுகோல். இவர் மனம் மிகவும் பெரியது. அதனால், நீ எவ்வளவு பொன் வைத்தாலும் தராசு முள் அப்படியே தான் இருக்கும்.

அவர் என்ன கேட்டு வந்துள்ளாரோ, அதைக் கொடுத்தால் போதுமானது, என்றாள். இதை ஏற்ற மன்னன், விவசாயிக்கு வேண்டிய அளவு தங்கம் கொடுத்து வழியனுப்பினான்.

மகளின் திருமணம் சிறப்பாக நடந்தது.

ஆத்மார்த்த மனதுடன் உன் கடமையை செய்.
பலனை எதிர்பார்க்காதே.
அதுவே நமது தர்மம்

அன்புடன்
S. யாதவகுமார்

அகத்தியர் அன்னதான குழு சாரிடபிள் டிரஸ்ட்*குரு பௌர்ணமி அழைப்பிதழ்*நமது குழுவின் சார்பாக நடக்க விருக்கும் குரு பௌர்ணமி சிற...
21/07/2021

அகத்தியர் அன்னதான குழு சாரிடபிள் டிரஸ்ட்

*குரு பௌர்ணமி அழைப்பிதழ்*

நமது குழுவின் சார்பாக நடக்க விருக்கும் குரு பௌர்ணமி சிறப்பு பூஜையில் அனைவரும் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு குரு அருள் பெறுக!
நன்றி நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

19/07/2021

அகத்தியர் அன்னதான குழு சாரிடபிள் டிரஸ்ட்

*அகத்தியர் அன்னதான குழு சாரிட்டபிள் டிரஸ்ட் * சித்தர்களின் தலைமகன் அகத்தியப் பெருமானின் ஜென்ம நட்சத்திரமான ஆயில்ய நட்சத்...
18/07/2021

*அகத்தியர் அன்னதான குழு சாரிட்டபிள் டிரஸ்ட் *

சித்தர்களின் தலைமகன் அகத்தியப் பெருமானின் ஜென்ம நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரம் திங்கட்கிழமை 12/07/21 மாலை 7.00 மணியளவில் நமது
அகத்தியர் அன்னதான குடிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நமது குழுவில் பயணிக்கும் ஆன்மிக நண்பர்கள் தாங்களது குடும்பத்துடன் வந்து கலந்து கொண்ட அனைவரும் அகத்திய பெருமானின் ஆசி கிட்ட மனமார பிரார்த்திக்கிறோம்
நன்றி நன்றி நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼



🙏 நன்றி🙏

06/07/2021

அகத்தியர் அன்னதான குழு சாரிடபிள் டிரஸ்ட்

மகான் அகத்தியர் திருவடிகள் போற்றி
குருவடி சரணம் அகத்தியர் திருவடி சரணம்

*அகத்தியர் அன்னதான குழு சாரிடபிள் டிரஸ்ட்*அனைவரும் மாலை வணக்கம்இன்று நமது அகத்தியர் அன்னதான குழுவின்  சார்பாக 500 நபர்கள...
05/07/2021

*அகத்தியர் அன்னதான குழு சாரிடபிள் டிரஸ்ட்*

அனைவரும் மாலை வணக்கம்

இன்று நமது அகத்தியர் அன்னதான குழுவின் சார்பாக 500 நபர்களுக்கு நமது அகத்தியர் அன்னதானம் குடிலில் அருட்கஞ்சி தயாரித்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

அருட்கஞ்சியை தயாரித்து கொடுக்க வருகை தந்த சிறப்பு விருந்தினர் ஐயா ஆறுமுக அரங்கமகா தேசிகரின் பக்தரும் திரைப்பட நடிகருமான அருமை அண்ணன் திரு. *மகாநதி சங்கர்* அவர்கள் *அன்னதானத்தில் சிறப்புகளையும் ஆன்மிகம் சார்ந்த நல்ல பல கருத்துக்களையும்* நமது குழுவில் உள்ள அனைவரிடமும் பகிர்ந்துக் கொண்டு இன்றைய நிகழ்வை சிறப்பித்து தந்தார்.

அண்ணன் திரு.
*மகாநதி சங்கர்* அவர்களுக்கும்
மற்றும் *இந்த நிகழ்வு சிறப்பாக நடக்க உறுதுணையாக இருந்த நமது அகத்தியர் அன்னதான குழுவில் பயணிக்கும் ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் அகத்தியர் அன்னதான குழு சாரிடபிள் டிரஸ்ட்யின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்*

01/07/2021

*அகத்தியர் அன்னதான குழு சாரிடபிள் டிரஸ்ட்*

*அனைவரும் காலை வணக்கம்*

*சித்தர்களின் தலைமகன் அகத்திய பெருமானின் நல்லாசியுடன்*

*நம்மைப் போன்ற சக மனிதர்களுக்கு நாம் செய்யும் ஒரு சிறு உதவியாக தினம்தோறும் ஒரு வேளை அன்னதானம் என்ற நோக்கத்தில் 100 நபர்களுக்கு நமது அகத்தியர் அன்னதான குடிலில் சிறந்த முறையில் உணவு தயாரித்து சாலையோரத்தில் ஆதரவின்றி இருக்கும் முதியோர் மனநலம் குன்றியோர் ஊனமுற்றோர் என தேடிச்சென்று மதியம் ஒரு வேளை உணவளிக்கும் பணியை நமது குழுவில் பயணிக்கும் அனைவரின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது*

*நமது குழுவில் பயணிக்கும் ஆன்மீக அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்*

*நீங்களும் உங்கள் கைகளால் அன்னதானம் செய்ய விரும்பினால் நமது அகத்தியர் அன்னதான குடிலில் இருந்து தினம்தோறும் அல்லது வார விடுமுறை தினங்களில் 5 நபர்களுக்கு அல்லது 10 நபர்களுக்கு உணவைப் பெற்று சென்று சாலையோரத்தில் இருக்கும் இயலாதவர்களுக்கு உங்கள் கைகளால் அன்னதானம் செய்யலாம்*

விருப்பம்
உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்

+91 9710223362, +91 8144506757
+91 9841866320

அகத்தியர் அன்னதான குழு சாரிடபிள் டிரஸ்ட்              ஓம் முருகா !அகத்தியர் ! திருவடிகள் போற்றி.      அன்னதானம் ஏன் அன்ன...
26/06/2021

அகத்தியர் அன்னதான குழு சாரிடபிள் டிரஸ்ட்

ஓம் முருகா !அகத்தியர் ! திருவடிகள் போற்றி.

அன்னதானம்
ஏன் அன்னதானம் செய்ய வேண்டும் ?...

வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும். அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும்.
பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு போன்ற மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும். ஆனால்,
அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும். ஆகையாலே *பூரணமான தானம் – அன்னதானம்* மட்டுமே ஆகும்.
அன்னத்தை துவேஷிக்கக் கூடாது. அன்னத்தை மிகுதியாக உண்டாக்க வேண்டும். அன்னத்தை வேண்டி வந்த எவருக்கும் இல்லை என சொல்லக் கூடாது.
உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜன்மங்களையும் தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது.
தானம் செய்வதில் பெரும் பெயர் அடைந்தவன் –
கர்ணன்.
மஹாபாரதப் போரில் கர்ணனின் மார்பை அம்புகளால் துளைத்தெடுக்கின்றான் அர்ஜுனன். ஆயினும் கர்ணனின் உயிர் பிரியவில்லை.
அவன் செய்த தர்மம் அவனின் தலையைக் காக்கின்றது. பகவான் கிருஷ்ணர் ஒரு வேதியர் வடிவம் கொண்டு கர்ணனிடம், இதுவரை கர்ணன் செய்த புண்ணியத்தை அனைத்தையும் தானமாக வேண்டுகின்றார்.
இறந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்கின்றான் கர்ணன். எல்லாவிதமான சௌகரியங்களும் கிடைக்கின்றது கர்ணனுக்கு. ஆனால், கடுமையான பசி எடுக்கின்றது. சொர்க்கத்தில் பசி என்ற உணர்வே கிடையந்தாயிற்றே! தனக்கு மட்டும் பசியெடுக்கக் காரணம் என்று எண்ணியபோது, நாரத மகரிஷி அங்கு தோன்றுகின்றார்.
கர்ணனிடம் நாரதர், பசி நீங்கவேண்டுமானால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் என்கிறார். அதன்படி, ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால், பசி நீங்குகின்றது. ஆனால், மறுபடிப் பசியெடுக்கின்றது.
மறுபடியும் நாரதரை கர்ணன் நினைக்க, அவர் தோன்றுகின்றார். அவரிடம் கர்ணன் தனக்குப் பசியெடுப்பதற்கும், ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி நீங்குவதற்கும் காரணம் கேட்கின்றார்.
அதற்கு, நாரதர் உன் வாழ்வில் நீ அனைத்து தானங்களையும் செய்திருக்கின்றாய்,
ஆனால், ஒரே ஒரு தானத்தைத் தவிர. அது அன்னதானம். அன்னதானம் செய்யாமல் சொர்க்கத்திற்கு வந்ததால், இங்கு வந்தும் உனக்குப் பசியெடுக்கின்றது.
உன் பூலோக வாழ்நாளில் ஒருநாள் உன்னிடமிருந்து தானம் பெற்றவர் அன்னசத்திரம் எங்கிருக்கிறது எனக் கேட்க அதற்கு நீ உன் ஆட்காட்டி விரலைக் காட்டி அங்கிருக்கின்றது என்றிருக்கின்றாய்.
நேரடியாக அன்னதானம் செய்யாவிட்டாலும், அன்னதானத்திற்கான காரணியாக விளங்கிய உன் ஆட்காட்டி விரல் மட்டும் அன்னதானப் பலன் பெற்றது. ஆகையால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைக்கும்போது, சொர்க்கத்தின் முழுப்பலனாகிய பசியின்மையும் சேர்த்து உனக்குக் கிடைக்கின்றது என்றார்.
அன்னதானம் செய்யாமலேயே,அன்னசத்திரம் இருந்த இடத்தைக் காட்டியமைக்கே இந்தப் புண்ணியம் என்றால், அன்னதானத்தின் மகிமையை எப்படி அளவிடமுடியும்.
மற்ற எந்தத் தானம் செய்யினும் யாரையும் போதுமென்ற அளவுக்குத் திருப்தி்ப்படுத்த முடியாது. எத்தகைய பசியாக இருப்பினும் ஒரு எல்லையில் போதுமென்று கூறுவர். மற்ற எந்தத் தானங்களையும் விட அன்னதானம் என்னும் உயிர்காக்கும் தானம் மிக உயர்வான அறமாகும்.
அன்னதானம் செய்வோம் இன்புற்று வாழ்வோம். ஆகவே , நாம் எல்லோரும் ,
*பசியுற்றவர் முகம் பாராமல் இருந்தேனே*
என்ற மனு முறை கண்ட வாசகத்தில் உள்ள கருத்தை நினைத்து பசியால் வாடும் எந்த உயிருக்கும் அது *செடியாக இருந்தாலும், எறும்பாக இருந்தாலும், யானையாக இருந்தாலும்* நம்மால் இயன்ற வரை பசியாற்றிவிப்போம்....

20/06/2021

குருவடி சரணம்

அகத்தியர் திருவடி சரணம்

குருவடி சரணம்

அகத்தியர் திருவடி சரணம்

20/06/2021

அகத்தியர் அன்னதான குழு சாரிடபிள் டிரஸ்ட்

நமது அகத்தியர் அன்னதான குழுவின் சார்பாக இன்று 20/06/21 அகத்திய பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது

மற்றும் சாலையோரத்தில் உணவுவின்றி தவிக்கும் மனநலம் பாதித்தவர்,ஊனமுற்றோர்,
முதியோர்யான 100 நபர்களை தேடி சென்று உணவு அளிக்கபட்டது

Address

Ambattur
600053

Telephone

+919080706177

Website

Alerts

Be the first to know and let us send you an email when அகத்தியர் அன்னதான குழு சாரிட்பிள் டிரஸ்ட் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to அகத்தியர் அன்னதான குழு சாரிட்பிள் டிரஸ்ட்:

Share