New Covenant Ministries

New Covenant Ministries According to the word of God; Our foundation is by Grace through faith. By His divine grace He is within us and He leads us. (1 Corinthians 6:11 Ephesians 1:4)

We are uplifted through Christ alone and have been redeemed, by his finished works at the cross. ABOUT US

We maintain an unwavering focus on relationship with Jesus Christ. Minister Sabeshan Balasingam is the lead teacher of New Covenant Ministries (Europe). He lives in London with his wife Dilreena and three sons Geshan, Davelin and Timothy. We and our leaders are committed to bring the Good New

s of Jesus Christ to people all over the world, literally changing the people from religious mind (rules) and legalistic. Unfortunately, religion has caused many people to actually turn away from God and the promises contained in the bible. Gospel is all about Jesus Christ and what he has done for us and we are believing in his works, totally depending on Jesus Christ;


· Forgiveness- Once for all sin. (Heb10;10,14,17,18,19) I will remember no more
· Salvation( Heaven ready)- By finished work of Christ, not by human works(efforts, performance)Ephesians 2:7,8,9
· Already right standing with god- You were washed clean (purified by a complete atonement for sin and made free from the guilt of sin), and you were consecrated (set apart, hallowed), and you were justified [pronounced righteous, by trusting] in the name of the Lord Jesus Christ and in the [Holy] Spirit of our God.

10/05/2020

Trying to earn God's Grace? கிருபையை கிரிகைகளினால் பெற முயற்சிக்கிறீர்களா?

கலாத்தியர் 3:3. ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?

இன்று அநேக கிறிஸ்தவர்கள் இந்த நிலைமையில் தான் இருக்கிறார்கள் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். அதாவது, ஆவியில் ஆரம்பம் பண்ணி மாம்சத்தினால் நடக்கிறார்கள்....

Continue to listen...

Connect with Sabeshan Balasingam here;

Facebook: https://www.facebook.com/balasingam.s...
Website: https://www.gospelplusnothing.com

https://youtu.be/S00u3TADGTE
22/05/2019

https://youtu.be/S00u3TADGTE

Part 3-மாம்சத்தில் நடக்கிறவர்கள் V ஆவியில் நடக்கிறவர்கள்- Walking in the flesh Vs Spirit!

https://youtu.be/7h3jVkVNJzQ
16/05/2019

https://youtu.be/7h3jVkVNJzQ

ரோமர் 7:14 மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீ.....

https://youtu.be/-CKdl7B1EsE
16/05/2019

https://youtu.be/-CKdl7B1EsE

ரோமர் 7:5 நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏ....

21/02/2019

தேவையானது ஒன்றே!!! One thing is needful !!!

மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

அது என்ன எங்களை விட்டு எடுபடாத ஆசீர்வாதம்?இந்த உலகத்தில் எல்லாம் எடுபட்டு போகும், அழிந்து போகும் ஆனால் ஒன்றே ஒன்றுதான் நிலை நிற்கும் அதுதான் மகா பரிசுத்தமானது. அது- கிறிஸ்து நமக்காக செய்து முடித்த கிரிகை மட்டும் தான். அதை விசுவாசிக்கிறவன் மரிப்பதில்லை.

கடவுளுக்காக, அல்லது கிறிஸ்துவுக்காக நாம் ஓடுவது என்பது இயற்கையாக மனிதனிடத்தில் இருந்து வரும் காரியம் தான். இது ஒரு பெரிய அதிசயம் இல்லை. எல்லோருக்குள்ளும் இருந்து வருவது எப்படியென்றால்;
" கடவுளுக்காக செய்தால் கடவுள் நமக்கு செய்வார் என்பது மனித [உலக] சிந்தை". "ஒரு நோக்கத்தோடு சுய நலம்" .
நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ்கிற மனிதனின் அடையாளமும் இதுதான்.

இதுவே உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு மதத்தவர்களும் [கிறிஸ்த்தவர்களும்] செய்யும் காரியம், தங்கள் தங்கள் கடவுளுக்காக ஓடுவார்கள், நேசிப்பார்கள், வாழ்க்கையை அர்ப்பணிப்பார்கள். இதை நான் பிழை என்று சொல்லவில்லை ஆனால் கிருபையை புரிந்தீர்களா? கிருபை உங்களை செய்யவைத்தால் முடிவில் மகிமை. மாறாக உங்கள் மனித பலத்தில் செய்தால் அது புல்லும் வைக்கோலும் மாதிரி.

மற்றும் கூடுதலான போதகர்களும் சொல்லும் மந்திரம் "கிறிஸ்து உனக்காக செய்தார்? அவர் தன் அன்பை கொடுத்தார் அல்லவா? ஆகவே நீ என்ன செய்தாய்? என்ன செய்யபயோகிறாய்? என்று பயமுறுத்தும் கேள்வி மற்றும் பிரசங்கம் தான் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கையின் வழிநடத்தல் தெரியாமல் இந்த வலைக்குள் விழுந்தவர்கள் அநேகர் இருக்கிறார்கள். இப்படியிருக்க, இங்கே "கிறிஸ்து என்ன சொன்னார்" என்பதை கவனிப்போம் லூக்கா 10 : 42. தேவையானது ஒன்றே, மரியாள் "தன்னை விட்டெடுபடாத" "நல்ல பங்கைத்" தெரிந்துகொண்டாள் என்றார்.

தேவையானது ஒன்றே! அது எது ஒரு மனிதனுக்கு தேவையானது? மரியாள் தெரிந்து கொண்ட காரியம் என்ன? மார்த்தாள் தெரிந்து கொண்ட காரியம் என்ன?

மார்த்தாளும், மரியாளும் இயேசுகிறிஸ்துவை தங்கள் வீட்டுக்கு அழைத்தார்கள். லூக்கா 10 :38 -42 ல் படிக்கலாம்.

மரியாள் அவர் பாதத்தருகே உட்கார்ந்திருந்து, அவர் வாயில் இருந்து வந்த பொன் வார்த்தைகளை [ஜீவனை] கேட்டுக்கொண்டிருந்தாள், அதினால் அவள் இரட்சிப்பின் வழியை அறிந்துகொண்டாள். ஆனால், மார்த்தாளோ, "இவைகளை விட்டு" முக்கியமானதை விட்டு விட்டு, அவருக்கு சேவை செய்வதற்காக சரியாக கஷ்டப்படுகிறாள். வீட்டுக்கு வந்த இயேசுவை திருப்தி படுத்த ஓடித்திரிகிறாள். பின்னர் அவள் சினம் அடைந்து 40. மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா)? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.

"நீங்கள் பார்த்திருப்பீர்கள், சிலர் கிருபையை அறியாமல் அல்லது இரட்சிப்பின் வழியை அறிந்து இரட்சிக்கப்படாமல், கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்து அதினால் அன்பை சம்பாதிக்கமுயல்பவர்களை பார்த்திருப்பீர்கள் அப்படித்தான் மார்த்தாளும் இருந்தாள்".

இங்கே பார்த்தீர்கள் என்றால் இயேசு வீட்டுக்குள் வந்தவுடன் மரியாளுக்கும் மார்த்தாளுக்கும் முற்றிலும் வித்தியாசமான செயல்/கிரிகை உடையவர்களாக இருந்தார்கள். ஒன்றுக்கொன்று எதிர்மறையானது. மரியாள் "இருந்து" அவரால் வந்த "வார்த்தையில்" இளைப்பாறினால். சத்தியதாள் விடுதலையானாள். மார்த்தாளோ பற்பல வேலை செய்வதில் இருந்தாள்.

இங்கே என்னத்தை கிறிஸ்துவெளிப்படுத்துகிறார்?

மார்த்தாள் யூத மதத்தவர்களுக்கும் மற்றும் இன்று இருக்கும் மதத்தவர்களுக்கும் அடையாளமானவள். மார்த்தாள் நியாயப்பிரமாணத்தின் கிரிகைகளினால் நீதிமானாகும் அடிப்படையின் கீழ் வாழ்ந்த சகோதரி ஆதலால் அவள் தன் ஊழியத்தினால் இயேசுவை அடைய, நேசிக்க முயற்சிக்கிறாள். மற்றும் தன்னால் கிறிஸ்துவை ஆசீர்வதிக்கவும் போஷிக்கவும் முயல்கிறாள், ஆதலால் அவள் நல்ல பங்கை தெரியவில்லை.

அவரால் வரும் வார்த்தையில் தான் ஜீவன் இருக்கிறது, அவரில் இருந்துதான் நாம் வாழமுடியும், அவர் செய்யப்போகும் செயலில் தான் நம்முடைய பக்திவிருக்திக்கு ஏதுவான சகலமும் இருக்கிறது என்பதை அவள் அறியவில்லை. அவள், இயேசு கிறிஸ்து செய்து முடித்த கிரிகையில் இளைப்பாறவில்லை. அவரால் வரும் வார்த்தையில் தன்னை காக்கமனதில்லாமல், அவள் தன் கிரிகையினால் இயேசுவை திருப்திப்படுத்த நினைக்கிறாள். தன் கிரிகையினால், தன் சேவையினால், தன் கஷ்டத்தினால், தன்னை வருத்துவதினால் இயேசு தன்னை அதிகமாக நேசிப்பார் என நினைத்து கிருபையை கிரிகையினால் சம்பாதிக்க முயல்கிறாள். இவளுக்கு இரட்சிப்பின் வழி அல்லது கிருபை புரியவில்லை.

"கிருபையை/இயேசுவை கிருபையாய் பெற முயற்சிக்காமல் கிருபையை கிரிகையால் பெற நினைப்பது தவறு". அவரின் அன்பால் பிறந்த இலவசமான இரட்சிப்பை, மற்றும் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை நாம் நம்முடைய கிரிகையினால் சம்பாதிக்க முயல்வது அவரின் அன்பை கொச்சைப்படுத்தவில்லையா? பரலோகம் அல்லது கிரீடம் எல்லாமே நம் ஓட்டத்தில் இல்லை, மாறாக ஏற்கனவே கிறிஸ்து நமக்காக ஓடிய ஓட்டத்தில் தான் இருக்கிறது. அவருக்குள் தான் எங்களுடைய ஜீவன். எங்களுடைய ஜெயம் அவரால் தான் வந்தது.

மரியாள்!

மரியாள் கிறிஸ்துவின் செயலில் இளைப்படைகிறாள். அவர் சிலுவையில் செய்துமுடிக்கப்போகும் இரட்சிப்பின் செயலை அறிந்து தன்னை கிறிஸ்துவுக்கு /கிருபைக்கு கீழ்ப்படித்தினாள். அவள் சொல்லியிருப்பாள் " கிறிஸ்துவே உமது அன்புக்கும் கிருபைக்கும் நான் எம்மாத்திரம்" . கிருபையினால் வரும் இரட்சிப்புக்கு என்னை கீழ்ப்படுத்துகிறேன் என்று சொல்லியிருப்பாள். முற்றிலும் அவரையே சார்ந்திருக்கிறாள்.
மரியாள் அவரின் கிருபைக்கு அடையாளமானவள். கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியானவள்.

அவரின் சித்தம் என்ன?

நீங்கள் மீட்கப்படவேண்டும். இல்லையா? எப்படி? அவரால். அதற்காகவே இந்த பூமியில் மனித அவதாரம் எடுத்தார். ஆகவே, அவர் தன்னால் தானே தன் செலவில் நம்மை மீட்டிருக்கிறார். காரணம், நம் செலவில் அதை பெற முடியாது. ஆகவே, அவரின் கிருபையை அறிவதே நமக்கு ஜீவன். இன்று மனிதன் கிரிகையினால் அதை அடைய நினைப்பதுவே அவன் அதை இழப்பதற்கு காரணமாக இருக்கிறது. ஆகவே, மனம் திரும்பி அவரால் செய்து முடித்த கிரிகையில் இளைப்பாறுங்கள்.

விசுவாசம்!

இயேசு கிறிஸ்து செய்து முடித்த கிரிகையில் இளைப்பாறுவதே விசுவாசம், இதுவே அவரின் விசுவாசம். நம் விசுவாசம் அவர்செய்துமுடித்த கிரிகையில் இளைப்பாறுவதுதான். ஒரு மனிதன் எப்ப தன் கிரிகையை வெறுத்து இயேசுவின் செய்துமுடித்த கிரிகையில் இளைப்பாறுகிறானோ அன்றுதான் அவன் முழுமையாக கிறிஸ்துவையும், அவரால் வந்த அழியாத இரட்சிப்பையும் நம்புகிறான். அன்றுதான் அவன் ஆவியில் முழுகிறான். அவன் ஆவியில் பிறக்கிறான். அப்பொழுது அவன் நல்ல பங்கை தெரிந்தெடுக்கிறான். "அதுவும் அவரால் வந்தது எங்களை விட்டு எடுபடாதது". "கிருபையால் வந்ததை கிரிகையால் இழக்கமுடியாது", நீங்கள் கிரிகையால் பெற நினைக்கிறபடியால் நிச்சயம் இல்லாமல் வாழ்கிறீர்கள்.

மார்த்தாள் கிறித்துவின் வழியால் வரப்போகும் ஆசீர்வாதத்தை/இரட்சிப்பை விட்டு [நல்ல பங்கை ] விட்டு, தன் வழியால் செயலினால் கிறிஸ்துவை திருப்திப்படுத்த முயன்றால் ஆகவே அதில் ஜீவன் இல்லை. நம்மூடாக கிறிஸ்து ஆசீர்வதிக்கப்படுவதில்லை கிறிஸ்துவூடாக நாம் எப்பவும் பெறுகிறோம். மார்த்தாள் இயேசுவுக்கு செய்தால் தான் ஆசீர்வாதம் என நினைத்து கிரிகைகளை நடப்பித்தாள் ஆதலால் அவள் நல்ல பங்கை விட்டு விட்டாள். இன்றைக்கும் அநேகருடைய மனம் இப்படித்தான் இருக்கிறது, "கிருபையை விட்டு விழுந்த மனம்". கிறிஸ்துவுக்காக ஏதாச்சும் செய்தால் தான் அவர் திருப்த்ப்படுவார் அல்லது இல்லை, அவருக்கு ஊழியம் செய்யாவிட்டாள் பரலோகம் இல்லை அவருக்கு ஊழியம் செய்தால் அதிக ஆசீர்வாதம் என நினைக்கிறபடியால் அவர்கள் இன்னும் ஜீவனை காணவில்லை. நல்ல பங்கை கை விட்டு, கூடாத வழிகளில் [இஸ்ரவேலர்களை போல்] கிறிஸ்துவை தேடுகிறார்கள்.

கிறிஸ்து!

கிறிஸ்து ஒரு மதம் அல்ல. இவர் ஒரு நபர், அவர் சர்வத்தையும் சிரிஷ்டித்து தன் வலக்கையில் தாங்கி கொண்டிருக்கிற கடவுள். நீங்கள் நினைக்கிறது போல அல்ல கர்த்தராகிய கடவுள் இயேசு கிறிஸ்து. அவர் தன்னில் தானே சுயமாய் நிற்பவர். மனிதன் பாவத்தில் விழுந்தாலும் தன்னை அர்ப்பணித்து நம்மை காத்துக்கொண்டவர். அவரை விசுவாசிக்கிற பாவி அவரால் நீதியாக்கப்படுகிறான் அவ்வளவுதான். இதற்க்கு பிறகு வேறுமாற்றமில்லை. அவர் கையில் இருந்து அவனை யாரும் பறிக்கமுடியாது இதுவே அவர் சத்தியம். அவர் சிலுவையில் செய்து முடித்த இரட்சிப்பை மனிதன் முழுமையாக அறியவில்லை. அவரால் வரும் இரட்சிப்பு மனிதனின் அறிவுக்கு எட்டாது, அவரின் கிருபையின் வல்லமை மனிதனுக்கு புரியாது. அவரின் அன்பை மனிதன் தன்னுடைய அன்போடு ஒப்பிடுகிறான். ஆதலால் இன்று கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் அவருக்கு ஊழியம் செய்கிறேன் என்று சொல்லிநிற்கிற கிறிஸ்தவனே அவரின் அன்பை கிருபையை சரியான முறையில் அறியமுடியவில்லை. ஆதலால் அவர்கள் சம்பாதிக்க முயல்கிறார்கள்.

சிலர் கேட்க கூடும், அப்படியென்றால் நாம் ஊழியம் செய்யத்தேவையில்லையா? நாம் கிறிஸ்துவுக்காக ஒன்றும் செய்யத்தேவையில்லையா என்று? நல்ல கேள்வி தான்.
கிறிஸ்துவை பெறுவதுதான் முதல் முக்கியம். அவர் நமக்குள் வந்தால் தான் முதலாவது நாமே மீட்கப்படலாம். நாம் போய் தண்ணியில் இறங்கி பின்னர் இரட்சிக்கபட்டு விட்டேன் என்று சொல்வது அது உங்கள் ஞானஸ்நானம். "அவரால் வரும் ஞானஸ்நானம்" என்பது, ஒருவன் தன்னை கிறிஸ்துவால் வரும் இலவச நீதிக்கு தன்னை தாழ்த்துகிறபோது வருகிறது.
அதாவது, இயேசுவே! இவ்வளுவுகாலமும் நான் தான் பரலோகத்தை தாங்கினேன், நான் தான் பரலோகத்திற்'காக' ஊழியம் செய்தேன், என்னை 'நானே' அடிமைப்படுத்தினேன், என்னை பெருமைப்படுத்தினேன், என் கிரிகைகளை நம்பினேன் இப்பொழுதுதான் தெரிகிறது இரட்சிப்பு எப்படி வருகிறது என்று. நான் ஒன்றும் செய்யத்தேவையில்லை "நீங்கள் செய்துமுடித்ததை 'ஏற்றுக்கொள்வதே' என்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கு [இரட்சிப்பு]". நன்றி இயேசுவே இதையே நான் என் சிநேகிதனுக்கும் சொல்லுவேன் எல்லாருக்கும் சொல்லுவேன்.

கிறிஸ்துவின் உண்மையான மாயமற்ற ஊழியம் என்பது நாமளாக செய்வது அல்ல. ஒரு இலாபநோக்கம் கருதி அல்லது அவரின் அன்பை சம்பாதிக்க அல்லது பரலோகத்தை பெறுவதற்காக செய்வதல்ல மாறாக அவர் நமக்குள் வந்த பிறகு அவரே நமக்குள் இருந்து நம்மை நடத்துபவர், போதிப்பவர், மற்றவர்களுக்கும் போதிப்பார். பவுல் சொன்னதுபோல நான் அல்ல கிறிஸ்துவே எனக்குள் இருந்து செய்கிறார் என்றார்.

இன்று மனிதன் தானே முடிவெடுத்து தானே ஊழியம் செய்கிறான் அதினால், ஆவியானவர் இல்லாமல் அநேகர் மனித போதனையில் கட்டப்பட்டு "மத" கிறிஸ்தவர்களாக பெருகுகிறார்கள். இதற்க்கு கிறிஸ்து காரணம் அல்ல, கிறிஸ்துவின் கிருபையின் ஆவியானவர் நமக்குள் இருந்தாள், அவரின் சத்தியம் மனிதனுக்கு இளைப்பாறுதலை கொடுக்கும், இரட்சிப்பின் நிச்சயத்தை கொடுக்கும் அவரின் கிருபையின் வல்லமையை போதிக்கும்.

ஆகவே, நாம் செய்யவேண்டியது என்ன? நம்மை விட்டு எடுபடாத நல்ல பங்கு என்ன? அவரிடம் நம்மை தாழ்த்தி அவரிடம் கற்றுக்கொள்வோம் அப்பொழுது , அவர் சிலுவையில் உங்களுக்காக எல்லாத்தையும் செய்து முடித்து இப்போ உங்களுக்கு இளைப்பாறுதலை தர வாஞ்சையாக இருக்கிறார். எபிரேயர் 4 : 2. ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.

3. "விசுவாசித்தவர்களாகிய நாமோ" அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும் இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்

மரியாள்- தன் இரட்சிப்புக்காக, இயேசு கிறிஸ்துவை முழுமையாக நம்பினால். கிறிஸ்து செய்து முடித்த கிரிகையில் இளைப்படைந்தாள். கிருபை எப்பவும் இருக்கும் [ கிறிஸ்து நமக்காக செய்து முடித்த பரிசுத்த கிரிகை எப்பவும் இருக்கும் அது அழியாது. அதுவே, அவரை விசுவாசிக்கிற எங்களுக்கு சாட்ச்சியாக நிற்கும்].

மார்த்தாள் - தன் கிரிகையை நம்பினால், நம் கிரிகையில் பரிசுத்தம் இல்லை. ஆதலால் நல்ல பங்கு, அவளை விட்டு எடுபடாத நல்ல பங்கு அவளுக்குள் இல்லை.

கிருபை கிருபை தான் அதில் மனித கிரிகை அல்ல, ஆனாலும் "கிருபைக்குள் கிரிகை இருக்கிறது" அது "நமக்குள் இருக்கும் ஆவியானவரால்" நடாத்தப்பட்டாள் அதின் பலன் பெரிதாக இருக்கும். அங்கு தான் உண்மையான மனம் திரும்புதல் இருக்கும். அந்த மனம் திரும்புதல்தான் நாம் நியாயப்பிரமாணத்தைவிட்டு கிறிஸ்துவின் கிருபைக்குள் திரும்புதல். ரோமர் 7 : 5. நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது.

6. இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.

ஆகவே, நீங்கள் உங்கள் ஊழியத்தில் அல்லது செய்கைய்களில், அல்லது வேறு ஏதாச்சிலும் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? அல்லது கிறிஸ்து உங்களுக்காக செய்து முடித்த கிரிகைகளில் முழு நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? இதுதான் நீதியுள்ள நியாத்தீர்ப்பில் பார்க்கப்படப்போகும் காரியம்.

"கிறிஸ்துவின் கிரிகையை நம்பினவன் அவனுக்காக ஆயத்தப்படுத்தப்பட்ட பரலோக ராஜ்ஜிஜத்தை சுதந்தரிப்பான்". இதைத்தான் இயேசு சீஷர்களுக்கு சொன்னார் என்னை விசுவாசிப்பதே பிதாவுக்கு ஏற்ற கிரிகையாய் இருக்கிறது என்றார்.ஆமென்.

Grace and peace to you!

Balasingam Sabeshan

09/02/2019

கிருபையில் பலப்படுங்கள் [சத்தியத்தில் வளருங்கள்]!

இயேசு கிறிஸ்துவினுடைய சித்தம் தன் பிள்ளைகள் கிருபையில் பலப்படவேண்டும் என்பது.

11 பேதுரு 3:18 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் "கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்".
II தீமோத்தேயு 2:1 ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.

கிருபையில் நாம் பலபட வேண்டும் அல்லது வளர வேண்டுமென்றால் நமக்கு முதலாவது தெரியவேண்டியது , கிருபையென்றால் என்ன என்பதும், மற்றும் கிருபையையும் கிறிஸ்த்துவையும் நாம் பிரித்துப்பார்க்கமுடியாது என்பதையும் அறியவேண்டும்.

இன்று அநேகர் கிருபையை ஒரு தயவாக மட்டும் பார்க்கிறார்கள். அதற்கொரு வரைவிலக்கணம் கொடுக்கிறார்கள். ஆதலால் கிருபையின் முழுமையை அறியமுடியவில்லை மற்றும் கிருபையில் வளர முடியவில்லை.

கூடுதலான பேர் சொல்லுவார்கள் எப்படியென்றால் கிருபையால் இரட்சிக்கப்பட்டோம் உண்மைதான் அது எங்களுக்கு அவர் காட்டின ஒரு தயவு. இதை வைத்துக்கொண்டு நாம் கிறிஸ்துவுக்குள் நம் இரட்சிப்பை 'நாம்' காக்க [நம் மாம்சபெலத்தால், நம் பரிசுத்தத்தால் காக்க] வேண்டும், இந்த இரட்சிப்பை காத்தல் தான் கிறிஸ்தவவாழ்க்கை என்றும், மற்றும் இதற்காக விசுவாசிகள் செய்யும் கிரிகைகள் தான் ஆவிக்குரிய வாழ்க்கை என நினைத்து மாம்சத்தில் ஓடுகிறார்கள், மற்றும் பரிசுத்தத்தை காக்கவில்லையென்றால் நமக்கு நித்திய ஆக்கினைத்தீர்ப்பு, அதுவும் சிலர் பயன்படுத்துவார்கள், நீதியுள்ள ஆக்கினைத்தீர்ப்பு என சொல்லுவார்கள். ஆனால் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது கிறிஸ்திவின் வாழ்க்கையை நாம் இலவசமாக பெற்று, அவர் மூலமாக அந்த நித்திய வாழ்க்கையில் நாம் [ஆவிக்குரிய அறிவில்] வளருதல் , இங்கு நம் காத்தலுக்கு இடமேயில்லை. "நான் அல்ல கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்"- கலா 2 :20

"நாம் பாவத்திற்கென்று ஒருதரம் மரித்து நீதிக்கென்று ஒருதரம் பிழைத்தோம் [இந்த ஆவிக்குரிய பிறப்பு ஒருமுறைதான், திரும்ப, திரும்ப நாம் பாவத்திற்கு மரிக்கமுடியாது. இதுவே நம் மறுபடி பிறத்தல்- புதுசிரிஷ்ட்டி- புதிய மனித ஆவியை பெற்று பரிசுத்த ஆவியோடு/பிதாவோடு இணைந்தோம்".

முன்னேயும் ஒருமுறை நான் எழுதியிருந்தேன் கிருபை என்றால் அதற்க்கு வரைவிலக்கணம் கர்த்தராகிய கடவுள் இயேசுகிறிஸ்துதான் என்றும் இதில் சந்தேகம் இருக்கக்கூடாது.

ரோமர் 5:2 அவர்மூலமாய் நாம் இந்தக் "கிருபையில் பிரவேசிக்கும்" சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று "நிலைகொண்டிருந்து", தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.

"கிருபையில் பிரவேசிக்கும்"
கிருபை, கிறிஸ்துவை குறிக்கவில்லையென்றால், அது ஒரு வரைவிலக்கணம் அல்லது தயவு மட்டுமென்றால், எப்படி கிருபையில் நாம் பேரவேசிக்கமுடியும்?

கிருபையில் [ இயேசுவில்] நிலைகொண்டிருந்து!
எப்படி அதில் நிலைத்திருக்கமுடியும்? நம் முயற்சியா? இல்லை, இல்லை அவரே நம்மை நிலைத்திருக்கப்பண்ணுகிறார். நாம் பிள்ளையானால் நாம் சுதந்தரராமே! பிள்ளை என்ற அடையாளத்தை யாராலும் அழிக்கவோ, மாற்றவோ முடியாது.

இந்த கிருபை [இயேசு] இல்லையென்றால் நமக்கு நம்பிக்கையும் இல்லை என்றுதான் வசனம் சொல்லுகிறது.[தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்].

இயேசு கிறிஸ்து எங்களுக்காக "கிருபையும் சத்தியமுமாக" வெளிப்பட்டார். அவரை விசுவாசித்து அறிந்துகொண்டவர்களின் ஆவியில் அவர் கிருபையின் ஆவியாகவும் சத்திய ஆவியாகவும் கலந்திருப்பதே உண்மை.

வேதாகமம் நியாயப்பிரமானத்தையும் [மோசேயையும்] கிருபையையும் [இயேசுகிறிஸ்துவையையும்] பிரித்து காண்பிக்கிறது। எப்படியெனில், நியாயப்பிரமாணம் "மோசேயின்" மூலமாய்க் "கொடுக்கப்பட்டது", கிருபையும் சத்தியமும் "இயேசுகிறிஸ்துவின் மூலமாய்" "உண்டாயின"-யோவான் 1 :17.

நியாயப்பிரமாணம் "கொடுக்கப்பட்டது" என்றும்
கிருபை "உண்டானது" என்றும் கூறப்படுகிறது. இதிலும் வித்தியாசத்தை பாருங்கள் அதாவது கொடுக்கப்பட்டத்திற்கும் நமக்குள் உண்டான[உருவான] கிறிஸ்துவுக்கும் [கிருபைக்கும்] எவ்வளுவு வேறுபாடு உள்ளது.

கிறிஸ்துவை உடையவன், கிருபையையும் சத்தியமுமாகிய ஆவியை உடையவன். சத்திய ஆவியானவர் அவனுக்குள் வாசமாக இருக்கிறார். அவனை அவர் சத்தியங்களுக்குள் நடத்திச்செல்லுகிறார் [புல்லுள்ள இடங்களில் மேயப்பண்ணுகிறார்].

கிருபையையும், சத்தியத்தையும், இயேசுவையும் பிரித்து பார்க்கமுடியாது. உதாரணமாக, பிதா, குமாரன், பரிசுத்தஆவியை போன்ற ஒரே கடவுள் மாதிரி.

சத்தியம்!

சிலர் சொல்லுகிறார்கள் சத்தியம் என்றால் நியாயப்பிரமாணம் என்று. ஆதலால் கிருபையிலும் பலப்படவேண்டும் நியாயப்பிரமானத்திலும் பலப்பட வேண்டும் என்று சொல்லுகிறார்கள். ஆனால், சத்தியத்திற்கும் நியாயப்பிரமணத்திற்கும் இடையில் பெரும் பிளவு இருக்கிறது, இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்மறையானது. மாறாக, நியாயப்பிரமாணத்தில் உள்ளவர்களை விடுதலையாக்குகிறது இந்த சத்தியம். எப்படியென்றால்
யோவான் 8:32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். கலா 4 : 4। நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி "நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை" மீட்டுக்கொள்ளத்தக்கதாக, [ சத்தியமாகிய இயேசுகிறிஸ்து வெளிப்பட்டார்].

யோவான் 14:17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

யோவான் 17:17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

யோவான் 17:19 அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.

ஆ என்ன வல்லமை, ஆகா என்ன அற்புதம், பாவத்தில் கர்பந்தரித்த எங்களை, உள்ளான மனிதனில் பாவியாக இருந்த நம்மளை, எந்த நற்கிரிகைகளை செய்தும் நம்மளை நாமளே காப்பாற்ற முடியாமல் மரணத்தில் இருந்த நம்மளை மற்றும் எவ்வளவு நற்கிரிகைகள் செய்தாலும் பிதாவினுடைய பரிசுத்தத்திற்கு நாம் கிட்ட நெருங்கமுடியாத "செத்த கிரிகைகள்" உள்ள மனிதர்களாகிய எங்களை தன்னுடைய சத்தியதால் மீட்டுக்கொண்டார்। யோவான் 17:17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

அப்படியிருந்தும் இன்று மனிதர்கள் தங்கள் கிரிகைகள் ஊடாக பிதாவை சேர முயற்சிக்கிறார்கள், தங்கள் பரிசுத்தம் போதுமென நினைக்கிறார்கள் வெறும் முட்டாள் தனம். ஆதாமும் ஏவாளும் தங்கள் சிந்தனையில் பாவம் கர்ப்பந்தரித்தவுடன் [ நன்மை தீமை அறிந்து கடவுளை தாங்களே தங்கள் கிரிகையூடாக அடையநினைத்தார்கள். இதுவே மூல பாவம். ஆனால் அந்த கனியை புசித்தவுடன்[சாத்தானுடைய வார்த்தையை தனக்குள் எடுத்தவுடன்] தாங்கள் நிர்வாணிகள் [பாவிகள்] என தாங்களே குற்றம்சுமத்தப்பட்டார்கள்.

"கவனித்தீர்களா? மனிதன் தன் கிரிகைகளினால் கடவுளை சேர நினைத்தவுடனேயே பாவம் கர்ப்பந்தரிக்கிறது। சுய நீதி தேவனுடைய நீதிக்கு விரோதமானது. ஆனால் தேவனுடைய நீதியோ கிறிஸ்துவால் வருகிறது".

பின்னர் தங்களுக்கு தாங்களே அத்தியிலையால் ஆடைதைத்து தங்கள் நிர்வாணத்தை [பாவத்தை] மூடினார்கள், ஆதி 3 : 7 அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
இதன் அர்த்தம், தங்கள் பாவத்தை தங்கள் கிரிகைகளினால், தங்கள் பெலத்தினால் மூடுகிறதற்கு ஒப்பனையானது. அதாவது மனிதகிரிகையினால் வரும் பரிசுத்தம், இது அத்தியிலைக்கு ஒப்பானது. இந்த பரிசுத்தம் நம்முடைய பார்வையில் இச்சகிக்கப்படதக்கதாக இருக்கும் ஆனால் பிதாவினுடைய பார்வையில் செத்த கிரியை என்று வேதாகமம் சொல்லுகிறது.

இப்படியிருக்க பிதாவானவர், அவர்களோடு உறவை ஏற்படுத்துவதற்காக ஆதாமும் ஏவாளும் தங்கள் பாவத்தைமூட செய்த கிரிகைகளாகிய மனிதனுடைய கிரிகைகளை வெறுக்கிறார் [அத்தியிலை ஆடையை வெறுத்து], தான் தோலினால் தானே ஒரு ஆடையை உண்டுபண்ணி அவர்கள் நிர்வாணத்தை [பாவத்தை] மூட தான் உண்டுபண்ணின ஆடையை உடுத்தினார். ஆதி 3 : 21। தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார். இதன் அர்த்தம் கிறிஸ்துவால் வருகிற "நீதி" யின் ஆடை கிறிஸ்துவின் பரிசுத்த ஆடை.
இதை தான் பவுல் சொல்லுகிறார்; கிறிஸ்துவே எங்களுக்கு I கொரிந்தியர் 1 : 31 அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.

கிறிஸ்துவின் கிரிகை!

பிதாவுக்கும் எங்களுக்கும் இருந்து இந்த பெரிய பிளவை தன் கிரிகையினால் முறியடித்து அதாவது,
சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தை தானே நினைவேற்றி, பாவம் அறியாத பரிசுத்தர் நமக்காக பாவமாகி, நாம் அடைய இருந்த மரணத்தை தன் பரிசுத்தத்தால் வென்று நம்மை கட்டியிருந்த பாவம், மரண பிரமானமாகிய நியாப்பிரமானத்திற்கு நம்மை முற்றிலும் விடுதலையாக்கி அதுமட்டுமல்லாமல் நம்மை ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் 'பிதாவுக்குள்' நிறுத்தினமையே அவரின் பரிசுத்த கிரிகை. பாவியை நீதிமானாக்கியதே அவரின் நம் தகப்பனின் வெற்றி. கிருபையால் விசுவாசத்தைக்கொண்டு நம்மை இரட்சித்தார்.

எவன் ஒருவன் இந்த கிருபையை அறிந்து தன்னை தாழ்த்துகிறானோ அவன் அவரின் ஆவியால் மறுபடி பிறக்கிறான். அவன் அவரால் புதிய ஆவியை பெற்று இந்த புது அனுபவத்தை பெற்று பரிசுத்த ஆவியோடு நித்திய உறவில் வளர்கிறான். அவன் எக்காரணம் கொண்டும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை மாறாக புதிய அழியாத அவரின் பரிசுத்தஉடன்படிக்கையால் என்றென்றைக்கும் காக்கப்படுபவன். அவர் தன் கிரிகைகளினால் பரிசுத்தத்தை காப்பதில்லை மாறாக கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கை அவனை காக்கிறது.

இதை தான் நிழலாக பழைய உடன்படிக்கையில் "உடன்படிக்கை பெட்டி" இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அந்த உடன்படிக்கை தான் அவர்களை காத்தது அந்த உடன்படிக்கைப்பெட்டி கிறிஸ்துவுக்கு ஒப்பனையானது. அன்று அவர்கள் சுமந்தார்கள் இன்று கிறிஸ்து [புதிய உடன்படிக்கை] நமக்குள் இருக்கிறது. அவரின் புதிய உடன்படிக்கைதான் நம்மை பரிசுத்தப்படுத்தி என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறது.
எபிரேயர் 10:10। இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.

11। அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.

12। இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,

நாம் புதிய உடன்படிக்கையின் ஊழியர்கள், ஆனால் நியாயப்பிராமணத்தின் ஊழியர்கள் அல்ல.
II கொரிந்தியர் 3 : 6। புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.

சிலர் கேட்ப்பார்கள் அப்படியென்றால் பிதாவுக்கு ஏற்ற 'நம்முடைய கிரியை' என்ன?
யோவான் 6 : 27। அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே 'கிரியை நடப்பியுங்கள்'; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.
28। அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி "தேவனுக்கேற்ற கிரியைகளை" நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.

29। இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: "அவர் அனுப்பினவரை நீங்கள் "விசுவாசிப்பதே" தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது" என்றார்.

இங்கே பார்த்தீர்களா? இன்று உலகமே கவனிக்கவேண்டிய மிகவும் மிகவும் முக்கியமானதொன்று என்னவென்றால்

தேவனுக்கேற்ற கிரியை எது? அவர் விரும்பும் கிரிகை எது? நம்மை இரட்சித்து அவரோடு சேர்க்கும் கிரிகை எது?

நாம் மாம்சத்தில் விரும்பி செய்யும் அல்லது அவரை அடைய நினைத்து அல்லது ஆசீர்வாதங்களை பெற நினைத்து செய்யும் கிரிகைகளா? நாம், நம் பரிசுத்தத்தை பிதாவுக்கு காண்பிக்க செய்யும் கிரிகைகளா? இவைகள் எல்லாம் செத்தவைகள்.

தேவனுக்கேற்ற கிரிகை ஒன்றே ஒன்றுதான். இந்த கிரிகைமட்டும்தான் நம்மை பரிசுத்தனாக பிதாவோடு இணைக்கும் இதன் பின் தான் கிறிஸ்து நம்க்குள் வருகிறார் பின்னர் அவர் நமக்குள் இருந்து தனக்கேற்ற கிரிகைகளை அவரே நடப்பிப்பார்। அந்த கிரிகை தான் இயேசு கிறிஸ்து சொன்னார் "அவர் அனுப்பினவரை நீங்கள் "விசுவாசிப்பதே". அதாவது தன்னை விசுவாசிப்பது ஒன்றுதான் பிதாவுக்கேற்ற கிரிகை என்று ஒரு வார்த்தையில் சொல்லிமுடித்தார்.

ஏன்?
கிறிஸ்து நமக்காக செய்து முடித்த கிரிகையில் தான் பரிசுத்தம், நீதி, ஜீவன்/வாழ்க்கை இருக்கிறது. அவர் செய்து முடித்த கிரிகையில் தான் முழுமை/அர்த்தம்/ இருக்கிறது, மற்றதெல்லாம் மாயை ஆனால் சாத்தான் உங்களுக்கு கிறிஸ்துவின் கிரிகையை மறைத்து உங்களை உயர்துவான் இதுதான் இன்று சபைகளில் நடக்கிறது. ஆனால் ஆதி சபையில் விசுவாசிகள் கூடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தாமல் கிறிஸ்துவின் செயலை ஒருவரோடு ஒருவர் விபரமாய் பேசி அவருக்கு நன்றியையும் மற்றவர்களை சத்தியத்தில்/கிருபையில் வளர உதவினார்கள்.

ஆனால் இன்று உலகம் இதை அறியாமல் இந்த கிருபையில் பலப்படாமல் தங்கள் கிரிகைகளை நிலைநாட்டிட விரும்புகிறார்கள். ஆதலால் கிறிஸ்துவுக்கு பகையாக இருக்கிறார்கள். இன்று சத்தியத்தில் பலப்படாமல் நியாயத்தீர்ப்பை குறித்து பயப்படுகிற விசுவாசிகள் தான் அதிகம். ரோமர் 8 : 1। ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

ஏன் பயம்? அவர்கள் அவரின் அன்பில் பூரணப்பட்டவர்கள் அல்ல ஆதலால் பயப்படுகிறார்கள். அவரின் அன்பை அறிந்ததுபோதாது மற்றும் அவர்கள் இன்னுமும் நியாயப்பிரமாணத்திற்கு கீழ் வாழ்கிறபடியால், அவர்கள் பாவத்திற்கு அடிமையாயிருக்கிறார்கள்.
1 யோவான் 4 : 16। தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம்। தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
17। "நியாயத்தீர்ப்புநாளிலே" நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்.

18। அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.

நீங்கள் மாம்சத்தின்படி நடந்தால் ஆக்கினைதீர்ப்பு நினைப்புதான் இருக்கும் ஏனென்றால் நீங்கள் உங்கள் கிரிகைகளினால் முடிவடைய நினைக்கிறீர்கள். உங்கள் பரிசுத்தத்தை நம்புகிறீர்கள். அதலால், நீங்கள் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுகிறீர்கள்.

நாங்கள் , ஆவிக்குரியவர்கள் அதாவது கிறிஸ்துவால் உயித்தெழுந்தவர்கள், பிதாவின் வலதுபாரிசத்தில் உட்க்காந்திருக்கிறவர்கள் என்று அறிந்து ஆவியில் நடந்தால், ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

ஆகவே கிருபையில் புலப்படுவது அல்லது சத்தியத்தில் வளர்வது பிதாவுக்கு மிகவும் முக்கியமானதொன்று. இதற்காகவே அவர் நம்மளை பெர்றேடுத்தார். அவர் பிள்ளை எப்பவும் அவரை புகழ்வான்.

முன்னே நான் மோசேக்கு கீழே, மோசே மூலமாக கொடுக்கப்பட்ட நியாயபிரமானத்திற்குள் வாழ்ந்த போது, எனக்குள் எப்பவும் ஒரு வெற்றிடம்தான் இருந்தது, பாவ குற்ற உணர்வு, நியாத்தீர்ப்பை குறித்த பயம், பாவமன்னிப்புக்காக தினம்தோறும் வேண்டுதல், ஆசீர்வாதங்களுக்காக காலைதோறும், மாலைதொறும் வேண்டுதல் என ஒரு நிரந்தரம் இல்லாதா மற்ற மத மனிதர்களை போன்ற வாழ்க்கை தான் இருந்தது. எப்பவும் ஆசீர்வாதங்களுக்க்காக விண்ணப்பம், இப்படியாக விசுவாசம் என்கிற பேரில் ஒரு விசுவாசம் இல்லாத வாழ்க்கை தான் இருந்தது. ஏன் என்னுடைய ஊழியங்கள் கூட நான் ஆசீர்வதிக்கப்படவேண்டும், பரலோகத்தில் ஓர் இடத்தை பெற்றிடவேண்டுமென, பெறுவதற்காக ஓடினேன்.

இப்படியிருக்கும்போதுதான், கிறிஸ்துவின் ஆவியானவர் எனக்கு கிருபையையும் அதின் உடன்படிக்கையையும் பார்க்கும்படி கண்ணைத்திறந்தார். அதின் பிறகுதான் எனக்கு பிதாவின் உண்மையான உருவம், தோற்றம், நோக்கம், அன்பு எல்லாமே தெரிந்தது. நான் விசுவாசியாக இருந்தும், சாத்தான் என் கண்ணை மூடியதை நான் அறிந்திருக்கவில்லை. நான் நினைத்தேன் நான் ஒரு நல்ல கிறிஸ்தவன், மற்றவனைவிட நான் கிரிகையில் சிறந்தவன் ஆகவே கிறிஸ்து என்னை நேசிக்கிறார் என என்னை நானே புகழ்ந்தேன், ஏமாற்றினேன். ஆனால் இப்பொழுதுதான் தெரிகிறது நான் அல்ல எல்லாமே கிறிஸ்துதான். "அவரின் செயலில்தான் ஜீவன்".

வேதாகமம் தொடக்கம் வரை முடிவுமட்டும் அவரை தான் மையப்படுத்துகிறது. அவரால் மட்டுமே சுயதீதி நிறைந்த உலகத்திற்கு மீட்ப்பு. சாத்தானுக்கு நீங்கள் துதிப்பது, ஆடுவது பாடுவது மற்றும் தவறாமல் church ற்கு போகிறதில பிரட்ச்சனையில்லை மாறாக சத்தியத்தை அதாவது கிறிஸ்துவுக்குள், நீங்கள் யாரென்ற உண்மையை [பரிசுத்தம், நீதி] நீங்கள் அறியக்கூடாது, அறிந்தால் அவன் உங்களை ஏமாற்றமுடியாது ஆகவே, அதற்க்காவே ஜெபியுங்கள் சாத்தானின் கண் நீக்கப்பட்டு, கிறிஸ்துவின் கண் எல்லாருக்கும் திறக்கப்படட்டும்। ஆமென்.

Grace and peace to you!

Balasingam Sabeshan


Like
Show more reactions
Comment
Share
Comments
Balasingam Sabeshan
Write a comment...

26/01/2019

பழைய உடன்படிக்கையில் சொல்லப்பட்ட "எல்லா" வாக்குத்தத்தங்களும் எங்களுக்கு நேரடியாக கொடுக்கப்பட்டதா? மற்றும், அந்த வாக்குத்தத்தம் எங்களுக்கு என்னத்தை வெளிப்படுத்துகிறது? அதின், ஆசீர்வாதம் எப்படி, "எந்த வடிவில்" நமக்குள் இருக்கிறது?

என்னை ஒரு விசுவாசி கேட்டார், ஆதியாகமம் 12 :2 ன் படி பிதா ஆபிரகாமை ஆசீர்வதித்தார். அவன் நீதிமான் மற்றும், ஆடுகள், மாடுகள், பொன், வெள்ளி என ஐஸ்வரியசம்பந்தனாக இருந்தான். அந்த வாக்குத்தத்தை பிடித்து 9 வருடங்களாக நானும் ஜெபித்துவருகிறேன், ஆனால் ஒன்றையும் காணவில்லை, இதற்க்கு காரணம் என்ன என்று கேட்டார்? அப்பொழுது நான் அவரை கேட்டேன், யார் இந்த வாக்குத்தத்தைதை உங்களுக்கு தந்தது என்று கேட்டேன், அப்பொழுது அவர் சொன்னார் என்னுடைய பாஸ்ட்டர் வருஷ ஆராதனை வாக்குத்தத்த நேரத்தில் தந்தார் எனவும் அன்றிலிருந்து ஜெபித்து வருகிறேன் என்றார். என்னத்திற்காக ஜெபித்து வருகிறீர்கள் என கேட்டேன்? ஆசீர்வாதம் என்றார்? என்ன அசீர்வாதம் என கேட்டேன்? எல்லாம் தான் என்றார். என்ன எல்லாம் என கேட்டேன்? நல்ல வேலை இல்லை, வீடு இல்லை, மற்றும் அநேக காரியங்களுக்காக என்றார்.

"இவர் மட்டுமல்ல நானும்கூட முன்னே ஆபிரகாமின் ஆசீர்வாதம் என்னதை குறிக்கிறது என்பதை அறியாமல் அதற்காக ஜெபித்துக்கொண்டிருந்தேன்". அதை அறிந்த பின்னர் தான் கிறிஸ்துவுக்குள் நான் பெற்றுக்கொண்டதையிட்டு சந்தோஷப்பட்டு பெற்றுக்கொண்ட நிச்சயத்துடன் கிறிஸ்துவுக்குள் நடக்க ஆரம்பித்தேன்".

கிறிஸ்துவின் ஆசீர்வாதங்களை நாம் பொருட்களாக, பணமாக, அல்லது வேறெந்த அழிந்துபோகக்கூடியவைகளாக பார்த்தல் நாம் சரியான இரட்சிப்பை பெறவில்லை என்பதும் நம் கண் திறக்கப்பட்டு அவருடைய ஜீவனுள்ள வசனங்களை இன்னமும் ஆவிக்குரியவைகளோடு சம்பந்தப்படுத்தவில்லை என்பதும் தான் உண்மை.

இன்று அநேக மக்களுக்கு வேதாகமத்தின் முக்கியதுவமும் அதின் அர்த்தமும் தெரியவில்லை. உலக ஆசீர்வாதங்கள் இருந்தால் போதும் என்றும் அதற்காக வாக்குத்தத்தை/வசனங்களை பயன்படுத்துவதாலும் சபைகளும், ஆலயங்களும், கிறிஸ்தவமும் ஒரு கூட்டமாக கூடுகிறது. உலகத்தில், உலக ஆசீர்வாதமாக இருப்பவர்கள் கிறிஸ்துவையுடையவர்கள் அல்ல, அதற்கு கிறிஸ்து தான் தேவையென்றுமில்லை. உலகத்தில் நாம் உலக ஆசீர்வாதமாக இருப்பதற்கு உலகத்தில் நாம் கடுமையாக உழைத்து உலக திறமையில் நாம் வளர்ந்தால் எவரும் இருக்கலாம். ஆனால் இவைகள் அல்ல வேதாகமம் சொல்லும் உண்மையான ஆசீர்வாதம். உலகமும் அதில் உள்ளவைகளும் மாயை.

உதாரணமாக இயேசுவின் அப்போஸ்தலர்களை கவனியுங்கள், அவர்கள் விசுவாசத்தில் வல்லவர்கள், அவர்களூடாக இந்த பரிசுத்தவேதாகமம் எழுதப்பட்டது, அப்படியிருந்தும் அவர்கள் ஆபிராகாமின் சொத்துபத்துகளோடு இருக்கவில்லை. கீழே கவனியுங்கள்; II கொரிந்தியர் 11 : 9. நான் உங்களோடிருந்து "குறைவுபட்டபோதும்", "ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை"; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள், எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.

பவுலும் ஆபிரகாம் சந்ததிதான்!
மற்றும் 22 ம் வசனத்தில் சொல்லுகிறார் நானும் ஆபிரகாம் சந்ததி என; 22. அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிரகாமின் சந்ததியான்.

ஆகவே புதிய உடன்படிக்கை ஆபிரகாம் பெற்றதைவிட ஆயிரம்மடங்கு அதிகமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நமக்கு தந்தது. இதற்காகவே முன்னே எழுதப்படடவைகள் ஒரு சின்னமாக இருந்தது.

உலகமும் அதில் உள்ளவைகளும் அழிந்துபோகும், அதில் நிரந்தரம் இல்லை. ஆனால் மனிதனின் முக்கியம் என்னவென்றால், அவன் தேவனால் படைக்கப்பட்டவன் ஆனால், அவன் நித்தியஜீவனை இழந்துவிட்டான், அவன் பாவம் அவனுக்குள் வேராக இருக்கிறது, இந்த நிலைமை மாற்றப்படவேண்டும். அவன் கடவுளோடு ஆவியில் சேரவேண்டும், கடவுளிடம் திரும்ப போகவேண்டும் அதற்க்கு ஒரே வழி ஆபிராகாமின் வித்தாகிய இயேசு கிறிஸ்துதான். இல்லையேல் அவன் நித்திய மரணம் தான்.

ஆதியாகமம் 12:2 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

13 : 2. ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான்.

ஆதியாகமம் 13:15 நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் "சந்ததிக்கும்" [கிறிஸ்து] என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,

இந்த வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் சுவிசேஷமாய் கொடுக்கப்பட்டது, ஏனென்றால் அவனுடைய வம்சத்தில் தோன்றப்போகிற இயேசுகிறிஸ்துமூலமாக எங்களுக்கு இவைகளிலும் மேலான ஆவிக்குரிய ஆசீர்வாதமாகிய நித்திய ஜீவனை தருவதற்காக. நித்தியஜீவனுக்காகவே இந்த வேதாகமம் இருக்கிறது என்பதை அநேகர் மறந்து இதை ஒரு financial புத்தகமாக மாற்றிவிட்டார்கள் சிலர்- ஆபிரகாமைபோல் உலக ஆசீர்வாதங்களில் நிரம்பி உலகத்தில் பேர் எடுக்க நினைக்கும் மக்கள் தான் இன்று அதிகம்.

"நித்தியஜீவன் இல்லாமல் நாம் யூதர்களைப்போல் இருந்து என்ன பலன்".

கலா 3 :16. ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி "கிறிஸ்துவே.

அந்தச் சந்ததி "கிறிஸ்துவே!

கலா 3 :16. ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி "கிறிஸ்துவே.

பழைய உடன்படிக்கை நமக்காக வரப்போகும் கிறிஸ்துவையே இலக்கு வைத்து எழுதப்பட்டது அதாவது உலகத்தில் வாழும் எந்த மனிதனையும் அவருக்குள் முற்றிலும் தேறினவனாக நிறுத்தப்போகும் கிறிஸ்துவை பற்றினது. அவருக்குள் நாம் இல்லையேல், நமக்குள் ஜீவன் இல்லை ஏனென்றால் அவர்தான் நமக்கு ஜீவன்.

நமக்கு தந்த வாக்குத்தத்தம்!

பரிசுத்த ஆவியை [கடவுள்] அளிப்பேன் என்பதே நமக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம்/வாக்குத்தத்தம். இது இல்லாமல் ஆபிரகாமுக்கு இருந்த ஆடு, மாடு, வெள்ளி, பொன் ஆசீர்வாதம் இருந்தும் கடைசியில் எல்லாமே வீண் தான். அவருடைய ஆவியில்லாதவன் அவருடையவன் அல்ல என்று வசனம் சொல்லுகிறது.

கலா 3 : 8. மேலும் தேவன் "விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு": "உனக்குள்" [கிறிஸ்துவுக்குள்] சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் [பரிசுத்தஆவியால்] என்று ஆபிரகாமுக்குச் "சுவிசேஷமாய்" முன்னறிவித்தது.

அப்போஸ்தலர் 1:5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட "பிதாவின் வாக்குத்தத்தம்" [பரிசுத்த ஆவியை- கிறிஸ்துவை பெற] "நிறைவேறக்" காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

"நிறைவேற" அதாவது கிறிஸ்துவை பெற்றவனுக்குள் நிறைவேறியிருக்கிறது. ஆபிரகாமின் ஆசீர்வாதம் அவனுக்குள் இருக்கிறது. வாக்குத்தத்தம் நிறைவேறியிருக்கிறது. கிறிஸ்துவால் உரைத்த தீர்க்கதரிசனம் விசுவாசிகளான எங்களுக்குள் நிறைவேறியிருக்கிறது. அவர் சொல்லியும் செய்யாமல் இருப்பாரோ அவர் செயல் அதிசயமானது என்பது எவ்வளவு உண்மை.

கலாத்தியர் 3:14 ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், "ஆவியைக்குறித்துச்" சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.

இன்னுமொரு வடிவில் சொன்னால்;
கிறிஸ்துவூடாக எமக்கு கிடைத்த வாக்குத்தத்தம் நித்தியஜீவன்-பரிசுத்தபிதாவோடு ஒன்று சேர்ந்துவிட்டோம்.
1 யோவான் 2 : 25. நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் "நமக்குச்" செய்த வாக்குத்தத்தம். கிறிஸ்துவை உடையவர்கள் நித்தியஜீவனை உடையவர்கள். I யோவான் 5:11 தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் "தந்திருக்கிறார்", அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம். இன்னும் சொல்லுகிறார் இருக்குது என்பதை அறியுங்கள் என்கிறார் -
I யோவான் 5:13 உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும்.

ஆகவே நாம் ஆபிரகாமைவிட அதிகமாக ஆவிக்குரியவர்களாக ஆசீர்வதிக்கப்பட்டு விட்டோம். கிறிஸ்து நமக்குள் இருந்தால் அவரைப்பற்றி சொன்ன எல்லாம் நிறைவேறியிருக்கிறது. ஆகவே நாம் விசுவாசித்து ஆவியோடு நடக்கிறோம். இதுவே நமக்கு கிடைத்த சுதந்திரம். இதற்காகவே, நாம் பெற்ற இந்த புதிய அனுபவத்தை முன்னிருந்த தீர்க்கதரிசிகள் கருத்தாய் ஆராய்ந்தார்கள் என வேதம் சொல்லுகிறது

ஆகவே, பழைய உடன்படிக்கையில் எங்களுக்கு திருஷ்டாந்தகளாக அநேக வாக்குத்தத்தங்கள், அநேக சம்பவங்கள் கிறிஸ்துவை மையப்படுத்தி காண்பித்திருக்கிறது. நாங்கள் பெறப்போகும் ஆவிக்குரிய ஆசீர்வாதமாகிய ஆவிக்குரிய பிறப்பை/இரட்சிப்பை மையப்படுத்தியது. அவைகள் எங்களுக்கு நிழலாக இருந்தது. அதினால், பழைய உடன்படிக்கையில் இருக்கும் வாக்குத்தத்தங்கள் எல்லாமே இயேசுகிறிஸ்துவையும் நாம் கிறிஸ்துமூலமாக பெற்றிருக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் குறிக்கிறது.

அந்த வாக்குத்தத்தம் எல்லாமே கிறிஸ்துவை பற்றியது கிறிஸ்துவை உடையவர்களுக்கு அவருடைய வாக்குத்தத்தம் ஏற்கனவே நிறைவேறியிருக்கிறது. அந்த வாக்குத்தத்தம் தான் நான் உங்களை பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்கு கொண்டு சொல்லுவேன் என்பது, அதின் அர்த்தம் நான் உங்களை இரட்சிப்பேன். என் கரத்தில் இருந்து யாரும் உங்களை பறிக்க உடையாது. எப்படி? எப்படி? என் கரத்தில் இருந்து யாரும் உங்களை பறிக்கமுடியாது. இது என்னவொரு அசீர்வாதம்!, உலகத்தில் நாம் கஷ்டப்பட்டாலும், துன்பப்பட்டாலும், கிறிஸ்துவினுடைய வாக்குத்தத்தம் [இரட்சிப்பு] எங்களுக்குள் நிறைவேறியிருக்கிற சந்தோசம் எங்களுக்குள் வற்றாத நீரூற்றாக ஓடுகிறது.
தீத்து 1:3 பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் "நித்திய ஜீவனைக்குறித்து" வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி,

கிறிஸ்து தாமே வாக்குத்தத்தைதை நிறைவேற்றியிருக்கிறார்.
II கொரிந்தியர் 1:20 எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் "இருக்கிறதே".
"நம்புங்கள், நடவுங்கள்".

கிறிஸ்துமூலமாக நாம் பிதாவின் சுதந்தரராக, பிள்ளைக்குரிய ஆவிக்குரிய ஆஸ்திகளோடு, சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். இதுவே நித்திஜீவன். அதாவது, நித்திய ஆவிக்குரிய உறவு. இதை அனுபவிக்கும் விசுவாசிகள் வாக்குத்தத்தை நிறைவேற்றும் என்று ஜெபிக்கமாட்டார்கள். மாறாகா, வாக்குத்தத்தை நிறைவேற்றிமுடித்த கிறிஸ்துவை மகிமைப்படுதுவார்கள்.
கலாத்தியர் 3:18 அன்றியும், சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிராது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.

கலாத்தியர் 3:19 அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி [கிறிஸ்து] வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.

கிறிஸ்துவால் பிறந்தவர்கள் அதாவது கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டு பிறந்தவர்கள் கிறிஸ்துவின் சந்ததி. அவர்களுக்குள் கிறிஸ்து, கிறிஸ்துவுக்குள் சகலமும் அடங்குகிறது. கிறிஸ்துவுக்கு விரோதமான வேறெந்த வாக்குத்தத்தமும் இல்லை அவரே நம் வாக்குத்தத்தம் என்று சொல்லலாம். அவர் நம்முடைய ஆவியோடு இருப்பதே அந்த இரகசியம்.

கிறிஸ்துவுக்குள் கடைசியாக நண்பர்களே, அவரின், இன்னும் நிறைவேற இருக்கும் வாக்குத்தத்தமான புதிய வானத்தையும், புதிய பூமியையும் நாம் காணுவோம் அவருக்குள் மகிழ்வோம் ஆமென். எல்லாமே அவர் கிருபைதான், கிறிஸ்துவின் செயலுக்குள் இருக்கும் பொக்கிஷங்களை நாம் அறியவேண்டியதே நம் வேலை, அதில் தான் எங்கள் ஜீவன் இருக்கிறது. அதுவும் அவர் செயலே, நமக்குள் இருக்கும் அவர் அபிஷேகம் தான் நமக்கு போதிக்க்கவேண்டும்.

இன்றைய கிறிஸ்தவ உலகம் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறது, ஆகவே பண ஆசை எல்லா தீமைக்கும் வேர் என சொல்வது எவ்வளுவு புத்திக்குரிய வார்த்தை, கிறிஸ்துவின் கிருபையின் சுவிஷேசத்தை போதித்து, மாம்ச பலத்தினால் தங்களை காக்க நினைக்கும் அழிவுக்குரியவர்களை கிறிஸ்துவின் கிருபையினால் இரட்சித்து காப்பாற்றுவதும், மற்றும் பெற்றவைகளை அறியாமல் இருக்கும் விசுவாசிகளின் கண்களை திறக்கும் செயலே கிறிஸ்துவின் ஆவியின் செயல், இவைகளையே செய்யுங்கள். கிறிஸ்துவை எல்லா இடங்களிலும் மேன்மைப்படுத்துங்கள். கிறிஸ்துவை உங்கள் இருதயங்களில் தரிசியுங்கள். அவர் கிருபை நம்மை கடைசிவரை இஸ்திரப்படுத்தும் இதில் ஆட்ச்சேபனையில்லை.

நண்பர்களே, நீங்கள்
1 பேதுரு 1 23. அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.

24. மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.

25. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.
ஆமென்.

Grace and peace to you!

Balasingam Sabeshan
Like
Show more reactions
Comment
Share
Comments
Balasingam Sabeshan
Write a comment...
Attach a photo or video

Address

London
SE63BH

Alerts

Be the first to know and let us send you an email when New Covenant Ministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share