Sri Gayatri Peedam e.V., Germany

Sri Gayatri Peedam e.V., Germany OM Bhur Bhuvas Suvaha

11/06/2026

யாருக்கெல்லாம் மீண்டும் மறுபிறவி கிடையாது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்

*மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்று பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன*.

*பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை*.

*இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.*

*தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளில் இருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.*

*எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்ம கணக்குகளை நேர் செய்த பின்னர் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது*.

*இதுபோன்ற பலகாரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவில் இருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்த பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒர

11/06/2026

🙏 Sri Gayathri Peedam 🙏
🙏 Thiruvannamalai TamilNadu India 🙏
🙏 Siddhar Sri Rajkumar 🙏
🙏 Sri Varathayoghi Temple 🙏
🇮🇳 ஶ்ரீ காயத்ரி பீடம் 🇮🇳
🇮🇳திருவண்ணாமலை தமிழ்நாடு இந்தியா 🇮🇳
🇮🇳 ஸ்ரீ வரதயோகி கோவில் 🇮🇳
00917339321676

🙏 Sri Gayathri Peedam 🙏  🙏 Thiruvannamalai   TamilNadu India  🙏  🙏  Siddhar Sri Rajkumar 🙏   🙏 Sri Varathayoghi Temple  ...
11/06/2026

🙏 Sri Gayathri Peedam 🙏
🙏 Thiruvannamalai TamilNadu India 🙏
🙏 Siddhar Sri Rajkumar 🙏
🙏 Sri Varathayoghi Temple 🙏
🇮🇳 ஶ்ரீ காயத்ரி பீடம் 🇮🇳
🇮🇳திருவண்ணாமலை தமிழ்நாடு இந்தியா 🇮🇳
🇮🇳 ஸ்ரீ வரதயோகி கோவில் 🇮🇳
00917339321676

11/06/2026

🙏 Sri Gayathri Peedam 🙏
🙏 Thiruvannamalai TamilNadu India 🙏
🙏 Siddhar Sri Rajkumar 🙏
🙏 Sri GayathriKamalaDevi Temple 🙏
🇮🇳 ஶ்ரீ காயத்ரி பீடம் 🇮🇳
🇮🇳திருவண்ணாமலை தமிழ்நாடு இந்தியா 🇮🇳
🇮🇳 ஶ்ரீ காயத்ரிகமலாதேவி கோவில் 🇮🇳 00917339321676

10/06/2026

நமசிவாய வாழ்ககுருவேசிவம் சிவமேகுரு

சைவசித்தாந்தம்

சிவபூஜை மகத்துவம்.

சிவலிங்கத்தை இன்னார் இன்னார் பூசித்து இன்ன இன்ன பயன் பெற்றார் என்றமை.

விஷ்ணு காசி க்ஷேத்திரத்தின்கண்ணே பதினாயிரம் வருஷம் தவஞ்செய்து சிவலிங்கப்பெருமானைப் பூசித்துத் தமது உத்தமமான பதவியையும், சமஸ்த உலகங்களை ரக்ஷிக்கும் உரிமையையும் அடையுமாறு பட்டாபிஷேகஞ் செய்யப்பட்டார்.

பிரமா காஞ்சிபுரத்திற் சென்று சிவலிங்கப்பெருமானைப் பூசித்துச் சிருஷ்டிக்கும் அதிகாரத்தையும், சரசுவதிக்கு நாயகராயிருக்கும் தன்மையையும் அன்னவாகன முதலியவற்றையும் பெற்றார். இங்ஙனம் இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானர் என்னும், அஷ்டதிக்பாலர்களும் முறையே ஸ்ரீசைலத்தி னும், திருவண்ணாமலையினும், கேதாரத்தினும், கோகர்ணத்தினும், ஜம்புகேசுவரத்தினும், திருக்காளத்தியினும், சித்தவடத்தினும், திரு வாரூரினும் சிவலிங்கப் பெருமானைப் பூசித்துத் தத்தம் திசையின் ஆதிபத்தியத்தையும், வாகனங்களையும், ஆயுதங்களையும் சிவபெருமானிடத்திற் பெற்றுப் பெருமையோடு வாழ்ந்திருக்கின்றார்கள்.

திக்குபாலர்கள் மாத்திரமா ! சிவலிங்க பூஜா விசேஷத்தினாற் சூரிய சந்திரர்கள் சிவபெருமானுடைய நிவாசஸ்தானமாகிய மகா மேருவைப் பிரதக்ஷிணஞ் செய்கின்றார்கள்; செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி என்போர் முறையே திருவிடைமருதூர், மதுரை, சேது, திருவெண்காடு, வேதாரணியம் என்னும் க்ஷேத்திரங்களிலே சிவலிங்கப்பெருமானைப் பூசித்து வேண்டிய வரங்களைப் பெற்றுத் துன்பம் நீங்கி இன்பமாய் வாழ்கின்றார்கள்

சப்த ரிஷிகள் சிதம்பரத்திற் சபாநாயகரைப் பூசித்துக் கிரகங்களுக்கெல்லாம் மேலே தங்கள் இருப்பிடத்தைப் பெற்றுத் தேகாவசானத்தில் மோஷத்தை அடைதற்குறிய திருவருளையும் பெற்றுள் ளார்கள்.

துருவன் ஸ்ரீகாசிவிசுவநாதப் பெருமானைப் பூசித்து நவக்கிரக மண்டலம், நக்ஷத்திரமண்டலம், சப்தரிஷி மண்டலம் என்பவற்றுக் கெல்லாம் மேலே முளைக்கட்டை போலாகிநின்று, அவற்றைச் சுற் றுவிக்கின்றான்.

ஆதிசேஷன் கும்பகோணத்திற் சிவபெருமானைப் பூசித்துப் பூமிபாரத்தைத் தாங்குகின்றான்.

1913 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'சிவலிங்க மகத்துவம்' என்னும் நூலில் இருந்து...

10/06/2026

சோம்பல் லட்சியத்தைக் கொல்லும், கோபம் ஞானத்தைக் கொல்லும், பயம் கனவுகளைக் கொல்லும்,

அகந்தை வளர்ச்சியைத் தடுக்கும், பொறாமை அமைதியைக் கெடுக்கும், சந்தேகம் நம்பிக்கையைக் கொல்லும்.

புன்னகை எதையும் வெல்லும். புன்னகை என்பது ஒரு மின்சாரம், மற்றும் வாழ்க்கை ஒரு மின்கலம் போன்றது.

நீங்கள் புன்னகைக்கும் போதெல்லாம் அந்த மின்கலம் சார்ஜ் ஆகிறது, மேலும் ஒரு அழகான நாள் தொடங்குகிறது.

உங்கள் புன்னகைதான் நீங்கள் பேசுபவர்களுடன் இடையே உள்ள தூரத்தை வெகுவாக குறைக்கிறது.

புதன் பகவான் அருளுடன் கூடிய இனிய புதன் கிழமை காலை வணக்கங்கள் பல.

இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.

தங்களைச் சார்ந்த அனைவரும் அவரவர் குலதெய்வத்தின் அருளுடன் கூடிய சகல சம்பத்தும் பெற்று இன்புற்று வளத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்.

Adresse

Gütersloh

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Sri Gayatri Peedam e.V., Germany erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Die Kultstätte Kontaktieren

Nachricht an Sri Gayatri Peedam e.V., Germany senden:

Teilen