Sri Ayyappan Aanjaneyar Swiss

Sri Ayyappan Aanjaneyar Swiss ஆண்மீகம் மற்றும் சுவாரஸ்யம் நிறைந்த முகநூலாய் உங்களோடு கைகோர்க்க வருகின்றது.

ஜேர்மன் ஹம் காமாட்சி அம்பாள் தீர்த்தத்திருவிழா நிகழ்வில்…27. 07. 2026 திங்கள்க்கிழமை
27/07/2026

ஜேர்மன் ஹம் காமாட்சி அம்பாள்
தீர்த்தத்திருவிழா நிகழ்வில்…
27. 07. 2026 திங்கள்க்கிழமை

ஜேர்மன் ஹம் காமாட்சி அம்பாள் தேர்த் திருவிழா நிகழ்வில்…26. 07. 2026 ஞாயிற்றுக்கிழமை
27/07/2026

ஜேர்மன் ஹம் காமாட்சி அம்பாள்
தேர்த் திருவிழா நிகழ்வில்…
26. 07. 2026 ஞாயிற்றுக்கிழமை

என் உயிரே…
18/07/2026

என் உயிரே…

உங்கள் மதிப்பு..
18/07/2026

உங்கள் மதிப்பு..

கண்ணீர் கடந்து...வாழ்க்கையில் அழாத மனிதர்கள் யாரும் இல்லை.சிலர் தோல்விக்காக அழுகிறார்கள்... சிலர் பிரிவுக்காக அழுகிறார்க...
18/07/2026

கண்ணீர் கடந்து...

வாழ்க்கையில் அழாத மனிதர்கள் யாரும் இல்லை.

சிலர் தோல்விக்காக அழுகிறார்கள்... சிலர் பிரிவுக்காக அழுகிறார்கள்... சிலர் பாசத்திற்காக அழுகிறார்கள்... ஆனால், பலர் குடும்பத்தின் பாரத்தைத் தாங்க முடியாமல் அழுகிறார்கள்.

ஒரு காலத்தில் கம்பீரமாக வாழ்ந்த குடும்பம், தொழில் முடக்கத்தால் தினக்கூலிக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படும்போது கண்ணீர் வருகிறது.

கழுத்தில் நகைகளோடு மின்னிய அம்மாவோ, மனைவியோ, ஒரு மஞ்சள் கயிற்றை மட்டும் தாலியாக அணிந்து நிற்கும் நிலையைப் பார்க்கும்போது கண்ணீர் வருகிறது.

சகோதரிகளின் திருமணத்திற்காக சொந்த வீட்டையே விற்க வேண்டிய சூழ்நிலை வரும்போதும் கண்ணீர் வருகிறது.

மருத்துவச் செலவுகளுக்காகவோ, தவிர்க்க முடியாத குடும்பத் தேவைகளுக்காகவோ, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தெரிந்தவரிடமும் தெரியாதவரிடமும் கையேந்தி கடன் வாங்க வேண்டிய அவலம் வரும்போதும் கண்ணீர் வருகிறது.

கடனை அடைப்பதற்காகவே வாழும் வாழ்க்கை... எந்தத் தொழிலிலும் நிலைத்து நிற்க முடியாத நிலை... ஒவ்வொரு கனவும் சிதறிச் செல்வது... இவை அனைத்தும் மனதை உடைத்துவிடுகின்றன.

உதவி கேட்க யாரும் இல்லாத நேரங்களும் உண்டு. அதே நேரத்தில், எதிர்பார்க்காத ஒருவர் நீட்டும் உதவிக்கரம் கூட கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடும்.

இப்படிப்பட்ட தருணங்களை வாழ்க்கையில் பலரும் சந்தித்திருப்பார்கள்.

வாழ்க்கை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகச் சோதிக்கிறது.

அந்த நாட்களில் சிரிப்பு மறந்துபோகிறது.

தூக்கம் தொலைந்துபோகிறது. யாரிடமும் முகம் கொடுத்து பேசத் தோன்றாது. வறுமையும் வெறுமையும் சேர்ந்து மனதை விரக்தியால் நிரப்பிவிடுகின்றன.

இந்த துயரமான நேரங்களில், கடவுளிடம் பலரும் கேட்பது

ஒன்றே ஒன்றுதான்...

"இனி கண்ணீர் விட வைக்காதே... யாரிடமும் கையேந்தாமல், சுயமரியாதையுடன் வாழ

ஒரு வழியைக் காட்டு..."

ஆனால், வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

ஒவ்வொரு கண்ணீருக்கும்

ஒரு முடிவு உண்டு.

ஒவ்வொரு இரவுக்கும்

ஒரு விடியல் உண்டு.

அதுபோல, ஒவ்வொரு துன்பத்திற்கும் ஒரு முடிவு உண்டு.

அந்த நம்பிக்கையே,

எவ்வளவு சோர்ந்து போனாலும், மனிதர்களை மீண்டும்

எழச் செய்கிறது...

நாளை நோக்கி நடக்க வைக்கிறது...

ஒருவன் தன் கர்ப்பமான மனைவியை ஐந்தாவது மருத்துவ பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்கிறான்.நேரம் நெருங்கிவிட்டதுபிரச...
18/07/2026

ஒருவன் தன் கர்ப்பமான
மனைவியை
ஐந்தாவது மருத்துவ
பரிசோதனைக்கு
ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்கிறான்.

நேரம் நெருங்கிவிட்டது
பிரசவ வலி நாளை அல்லது
நாளை மறு நாள் கூட வரலாம்.
ஜாக்கிரதை என்கிறார் மருத்துவர்.

இதை கேட்ட அவள் கணவனுக்கு
நெஞ்சில் ஆனந்தம் பொங்கி
இரு கண்களை மறைக்கிறது,

அன்று இரவே கணவன்
தன் மனைவியின் வயிற்றில்
காதை வைத்துப் பார்க்கிறான்.

என்ன செய்கிறீர்கள்.
என்று மனைவி கேட்க
நாளை இன்நேரம் என் மகனோ
மகளோ என் கையில் என்கிறான்.

அதை கேட்க மனைவி எனக்கு
ஆண் பிள்ளை தான் வேண்டும்
என்று சொல்ல இல்லை இல்லை எனக்கு பெண் பிள்ளை தான்
வேண்டும் என்று கணவன் சொல்ல
ஒருவழியாக இருவரும் உறங்க சென்றனர்.

படுக்கையில் தன் கணவன் அருகில்
நெருங்கி வந்து அவன் கை விரலை
இறுக்கமாக பிடித்துக்கொள்கிறாள்.

தூக்கத்தில் இருந்த கணவன்
விழித்து தன் மனைவியை பார்க்கிறான்.

என்னவென்று தெரியவில்லை
இதயம் படபடவென துடிக்கிறது.
எனக்கு தூக்கமே வரவில்லை
பயமாக இருக்கிறது. என்று சொல்லி
கண்கசிகிறாள் அவன் மனைவி.

உடனே இழுத்து தன் மார்போடு
மனைவியை அனைத்தவன்
அவள் கண்ணீரை துடைத்து
அவளுக்கு ஆறுதல் கூறுகிறான்.

அவள் நினைத்தது போல்
திடீரென பிரசவ வலி வந்தது.
பயத்திலும் கடுமையான
இடுப்பு வலியிலும் கட்டிலிலேயே
துடித்து அழ ஆரம்பித்தாள்.

என்ன செய்வது என தெரியாது
முழித்த கணவன்
அவள் துடிப்பதை காண இயலாமல்
அப்படியே அவளை தூக்கிக்கொண்டு
காரில் சிட்டுக் குருவியை போல்
பறந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தான்.

இரவு நேரம் என்பதால் உடனே
தன் மனைவியின் பெற்றோர்களுக்கு
தகவல் தெரிவித்தான்.

ஆஸ்பத்திரியே அமைதியாக இருக்க
அவன் மனைவியின் அலரல் சப்தம் மட்டும் பயங்கரமாக கேட்டது.

இரு கைகளையும் பிசைந்து கொண்டு
பிரசவ வார்டின் வெளியில்
இங்கே அங்கே என சுற்றுகிறான்.

அம்மா.
அம்மா.
என்று மனைவி வலியில் துடிக்க
அழத் தெரியாத அவள்
கணவனுக்கும் அழுகை வந்தது.

ஆண்டவா என் மனைவியின்
முதல் பிரசவம் இது.
தாய்கும் பிள்ளைக்கும் எந்த
ஒரு பாதிப்பும் வந்துவிடக்கூடாது.
என்று உலகின் உள்ள
எல்லா கடவுளிடம் வேண்டினான்.

நேரம் ஆக ஆக அவனுக்கு
முகமெல்லாம் வேர்த்து கொட்டியது.
பிரசவ வலியில் தன் மனைவி
துடிப்பது அவனால் தாங்கிக்கொள்ள
இயலவில்லை.

சற்று நேரத்தில் திடீரென
மனைவியின் குரல் அமைதியானது.
கணவன் என்னாசோ.
ஏதாச்சோ.
என மிகவும் பயந்து போனான்.

மீண்டும் ஒரு அலரல்.

அதை கேட்ட கணவன்
ஆண்டவா என் மனைவிக்கு
இவ்வளவு சித்திரவதையா.
என தலையில் கை வைத்தவாறு
இருக்கையில் அமர்ந்து மனைவியை
அவள் தியாகத்தை நினைத்து
கூணி குறுகிப்போனான்.

அப்போது ஒரு நர்ஸ் மட்டும்
வெளியே வந்து உங்கள் மனைவிக்கு சுகப்பிரசவம் பயப்படும் படி ஒன்றுமில்லை.
தாராளமாக உள்ளே சென்று
பாருங்கள் என்றார்.

காற்றை விட வேகமாக உள்ளே சென்றவன். முதலில் தன் மனைவியை பார்க்கிறான்.
அவள் இன்னும் கண் திறக்காமல்
மயக்கத்தில் சோர்ந்து படுத்திருக்க
அடுத்து எங்கே என் குழந்தை என
அவன் கண்கள் ஒரு வழியாக தேடி
தாயின் அருகில் குழந்தை
இருப்பதை கண்டு
மெதுவாக நகர்ந்து பூமியின்
பாதம் படாத சிசுவின் பாதத்தை ஆசையோடு தொட்டு முத்தமிட்டு
அதன் தலையை மெதுவாக
கோதிவிடுகிறான்.

தந்தையின் கை விரல் பட்டவுடன்
சிசு தனது கால் கையை அசைக்க ஆரம்பித்தது.

யார் சொன்னது பெண்கள் மட்டும் தான் உயிரை சுமக்கின்றனர் என்று.

ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கும் ஒவ்வொரு ஆணின் இதயத்தை
தொட்டுப் பாருங்கள்.
அவன் வாழ் நாள் முழுவதும்
அந்த பெண்ணின் நினைவுகளையும்
குடும்ப பாரங்களையும் சுமந்தே மடியும் உன்னதமான படைப்பு தான் ஆண்…

Real Click Studio Swiss.
16/07/2026

Real Click Studio Swiss.

என் ஐயனை என்னவென்று நான் அழைப்பேன்…
16/07/2026

என் ஐயனை என்னவென்று
நான் அழைப்பேன்…

மறப்போம்…
16/07/2026

மறப்போம்…

எல்லா துக்கங்களும் ஒரு முடிவுக்கு வரும்…சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்கு சென்றார். அப்போது மகனுக்கு ஒர...
16/07/2026

எல்லா துக்கங்களும்
ஒரு முடிவுக்கு வரும்…

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்கு சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்.
மகனே
இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால் நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது.
வீட்டிற்கு ஓடிவந்து
விடவும் கூடாது என்றார்.
சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார்.
பிறகு தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.

காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தை தாண்டி எகிறியது.

மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. அய்யோ இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன் என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.

சிறிது நேரத்தில் இனி கத்தி பயனில்லை என்பது அவனுக்கு புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்ன தான் நடக்கும் பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான்.

சூரியன் உடம்பைச் சுட்டபோது தான் கண்கட்டைத் திறந்து பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது அவனுக்கு ஆச்சரியம் ஆனந்தம் அழுகையே வந்துவிட்டது. அப்பா
என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவி கொண்டான்.

அப்பா நீங்க எப்போ வந்தீங்க
என்று ஆவலாகக் கேட்டான்.
சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன் என்றார். இரவு இங்குதான் இருந்தீங்களா
பிறகு ஏன் நான் பயந்து அலறிய போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை.
ஏன் என்னிடம் எதுவும்
பேசவில்லை என்று கேட்டான்.

உன் மனோதிடம் வளர வேண்டும்.
நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும் போது துணிச்சல் தானே வரும் என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.

கடவுளும் அந்த தந்தையை போலத்தான் நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும் போது துவண்டுவிடாமல் நாம் வீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்…

Adresse

Zürich

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Sri Ayyappan Aanjaneyar Swiss erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Die Kultstätte Kontaktieren

Nachricht an Sri Ayyappan Aanjaneyar Swiss senden:

Verknüpfungen

Teilen