12/06/2026
வேப்பங்குளம் திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழாவிற்கான நவநாட்கள் ஆரம்பம் பக்தி பூர்வமாக ஆரம்பம். 2026
இலுப்பைக்குளம் பங்கின் கிளை ஆலயமான வேப்பங்குளம் திருஇருதய ஆண்டவர் ஆலயத் திருவிழாவிற்கான கொடியேற்றமும், 1வது நவநாள் திருப்பலியும் கடந்த 10.06.2026 புதன்கிழமை மாலை 5:30மணிக்கு திருச்செபமாலையும், அதனை தொடர்ந்து கொடியேற்றமும், பின்னர் திருப்பலியும் பங்குதந்தை அருட்பணி அந்தோனிதாஸ். டலிமா அடிகளாரின் ஒழுங்கமைப்பில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
திருஇருதய ஆண்டவரின் திருக்கொடியை மன்னார் மறைமாவட்ட பேராலய பங்குதந்தை அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளாரின் இறைவேண்டுதலோடு ஆசீர்வதிக்கப்பட்டு ஏற்றி வைக்கப்பட்டது.
கொடியேற்றத்தை தொடர்ந்து மன்னார் பேராலய பங்குத்தந்தையும், மறைக்கோட்ட முதல்வருமான அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் தலைமையில் பங்குத்தந்தை அருட்பணி அந்தோனிதாஸ்.டலிமா அடிகளாரும் இணைந்து கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டு #தூய #ஆவியாரே #எங்கள் #குடும்பங்களையும், #பங்கையும்
#புதுப்பியும் என்னும் கருப்பொருளில் இறைமக்களுக்கான இறை சிந்தனையும் வழங்கப்பட்டது.
குறிப்பாக 11.06.2026 - 14.06.2026 வரை மாலை 5:00மணிக்கு திருச்செபமாலையும், அதனை தொடர்ந்து திருப்பலியும் நடைபெறும்.
15.06.2026 திங்கட்கிழமை மாலை 5:00மணிக்கு திருச்செபமாலையும் அதனை தொடர்ந்து திருப்பலியும், பின்னர் நற்கருணை ஆராதனை வழிபாடும் நடைபெறும்.
16.06.2026 செவ்வாய்கிழமை காலை 6:30 மணிக்குத் திருச்செபமாலையும், திருவிழா கூட்டுத்திருப்பலியும் அதனை தொடர்ந்து திருவுருவப் பவனியும் ,திருவுருப இறையாசீரும் இடம் பெறும் எனவே இவ் வழிபாடுகளுக்கு நேரகாலத்தோடு வருகை தந்து திருவிழாவை சிறப்பாக கொண்டாட பங்குதந்தை வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.