Tamil Catholic Media

Tamil Catholic Media கத்தோலிக்க நிகழ்வுகளை இறைமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லல்

வேப்பங்குளம் திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழாவிற்கான நவநாட்கள் ஆரம்பம் பக்தி பூர்வமாக ஆரம்பம். 2026இலுப்பைக்குளம் பங்கின் ...
12/06/2026

வேப்பங்குளம் திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழாவிற்கான நவநாட்கள் ஆரம்பம் பக்தி பூர்வமாக ஆரம்பம். 2026

இலுப்பைக்குளம் பங்கின் கிளை ஆலயமான வேப்பங்குளம் திருஇருதய ஆண்டவர் ஆலயத் திருவிழாவிற்கான கொடியேற்றமும், 1வது நவநாள் திருப்பலியும் கடந்த 10.06.2026 புதன்கிழமை மாலை 5:30மணிக்கு திருச்செபமாலையும், அதனை தொடர்ந்து கொடியேற்றமும், பின்னர் திருப்பலியும் பங்குதந்தை அருட்பணி அந்தோனிதாஸ். டலிமா அடிகளாரின் ஒழுங்கமைப்பில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

திருஇருதய ஆண்டவரின் திருக்கொடியை மன்னார் மறைமாவட்ட பேராலய பங்குதந்தை அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளாரின் இறைவேண்டுதலோடு ஆசீர்வதிக்கப்பட்டு ஏற்றி வைக்கப்பட்டது.

கொடியேற்றத்தை தொடர்ந்து மன்னார் பேராலய பங்குத்தந்தையும், மறைக்கோட்ட முதல்வருமான அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் தலைமையில் பங்குத்தந்தை அருட்பணி அந்தோனிதாஸ்.டலிமா அடிகளாரும் இணைந்து கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டு #தூய #ஆவியாரே #எங்கள் #குடும்பங்களையும், #பங்கையும்
#புதுப்பியும் என்னும் கருப்பொருளில் இறைமக்களுக்கான இறை சிந்தனையும் வழ‌ங்கப்பட்டது.

குறிப்பாக 11.06.2026 - 14.06.2026 வரை மாலை 5:00மணிக்கு திருச்செபமாலையும், அதனை தொடர்ந்து திருப்பலியும் நடைபெறும்.

15.06.2026 திங்கட்கிழமை மாலை 5:00மணிக்கு திருச்செபமாலையும் அதனை தொடர்ந்து திருப்பலியும், பின்னர் நற்கருணை ஆராதனை வழிபாடும் நடைபெறும்.

16.06.2026 செவ்வாய்கிழமை காலை 6:30 மணிக்குத் திருச்செபமாலையும், திருவிழா கூட்டுத்திருப்பலியும் அதனை தொடர்ந்து திருவுருவப் பவனியும் ,திருவுருப இறையாசீரும் இடம் பெறும் எனவே இவ் வழிபாடுகளுக்கு நேரகாலத்தோடு வருகை தந்து திருவிழாவை சிறப்பாக கொண்டாட பங்குதந்தை வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

11/06/2026

புனித அந்தோனியாரின் அற்புதத்தை video Voice மூலம் கேட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

பதுவா நகரத்திற்கு அலெயார்டினோ டி சால்வடோரே (Aleardino Di Salvatore) என்னும் ஓர் வீரன் வந்தான். கத்தோலிக்கர்களையும், புனிதர்களின் அற்புதங்களையும் அவன் நம்பவே மாட்டான்.

ஒரு நாள் விருந்தில் இருந்த போது எல்லோரும் புனித அந்தோனியாரின் அற்புதங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அதைக்கேட்ட அலெயார்டினோ டி சால்வடோரே (Aleardino Di Salvatore) இந்த கண்ணாடி குவளை தரையில் விழுந்தும் உடையலெனா நீங்கள் சொல்லுவதை எல்லாம் நம்புறேன் என்று சவால் விட்டான்.

உடனே அந்த கண்ணாடி குவளையை முழு பலத்தோடு தரையில் எறிந்தான்.

#நடந்தது #என்ன #தெரியுமா?

கண்ணாடிக் குவளை கொஞ்சம் கூட உடையல அதற்கு பதிலாக தரையில் இருந்த கல் ஓடுகள்தான் உடைந்து போயின.

அதை பார்த்த அலெயார்டினோ டி சால்வடோரே (Aleardino Di Salvatore) அதிர்ச்சியில் உறைந்து போனான். இது புனித அந்தோனியாரின் அற்புதம் என்பதை உணர்ந்து உடனே மனமாறி விசுவாசத்தை ஏற்றுக்கொண்டான்.

நீங்களும் புனித அந்தோனியாரின் மூலமாக பெற்றுக் கொண்ட அற்புதங்கள் இருந்தால் comment box இல் பதிவிடுங்கள்... நாளை புனித செபஸ்தியாரின் செய்தியோடு அடுத்த வீடியோவில் சந்திப்போம்

🔔 வங்காலை வான்மழையாய் பொழியும் புனித அந்தோனியாரின் திருவிழா 2026! 🔔​அன்பான இறைமக்களே!​இறைவனின் பேரன்பும், கோடி அற்புதர் ...
11/06/2026

🔔 வங்காலை வான்மழையாய் பொழியும் புனித அந்தோனியாரின் திருவிழா 2026! 🔔

​அன்பான இறைமக்களே!

​இறைவனின் பேரன்பும், கோடி அற்புதர் தூய அந்தோனியாரின் தெய்வீக ஆசிரும் நம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நிறையட்டும்!

​மன்னார், வங்காலைப் பங்கின் நீராவி தூய அந்தோனியார் ஆலய திருவிழா (2026) பக்திப் பெருக்கோடும் ஆன்மீக மகிழ்வோடும் ஆரம்பமாகவுள்ளது.

கோடி அற்புதரின் அளப்பரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

​📅 ஆன்மீக நிகழ்வுகளின் விபரம்:

​14.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) - மாலை 05.00 மணி நவநாள் வழிபாடும் திருப்பலியும்,

​15.06.2026 (திங்கட்கிழமை) - மாலை 05.00 மணி வேஸ்பர் ஆராதனையும் நற்கருணை வழிபாடும்,
​16.06.2026 (செவ்வாய்க்கிழமை) - மாலை 05.00 மணி திருவிழா திருப்பலியும் திருச்சுரூப ஆசீரும் ​"கோடி அற்புதர் ஆசீர் பெற வாரீர்... வாரீர்..."

​மன அமைதியும், குடும்ப வாழ்வில் ஒளியும், நல்வாழ்வும் தரும் இந்த ஆன்மீகக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்து, தூய அந்தோனியாரின் பரிந்துரையால் இறை ஆசீரை நிறைவாகப் பெற்றுச் செல்லுங்கள்!

​அழைப்பில் மகிழ்வுறும்:
பங்குத்தந்தை, உதவிப்பங்குத்தந்தை, அருட்சகோதரிகள் மற்றும் பங்குமக்கள்
தூய அந்தோனியார் ஆலயம், நீராவி, வங்காலை. 🙏

அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த அடிகளாரின் கருத்தை கண்டிக்கின்றோம்.பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி மாக்கஸ் அடிகளார். அருட்பணி ...
11/06/2026

அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த அடிகளாரின் கருத்தை கண்டிக்கின்றோம்.
பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி மாக்கஸ் அடிகளார்.

அருட்பணி ஜீவந்த பீரிஸ் அடிகளார் அவர்கள் அ,ண்மையில் தனது வாழ்க்கையின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதை நாங்கள் வரவேற்கின்றோம்.

கொழும்பு மறைமாவட்டத்தின் குருவாகப் பணியாற்றுகின்ற அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த அடிகளார் அதற்கு எதிரான கருத்தை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மக்கள் சம நிலையோடு சமத்துவத்தோடு மனித உரிமைகளோடு மதிக்கப்படுகின்ற சட்டமாக இலங்கைத் தீவிலே இல்லை.

அனைத்து சமயங்களும் ஈஸ்டர் தாக்குதலுக்கு உண்மையைத் தேடி உழைக்கின்ற சமயங்களாக இருக்கிறதே ஒழிய தடையாக இல்லை.

ஈஸ்டர் தாக்குதலுக்கான உண்மையை கண்டறிய மதங்களை பயன்படுத்தி தடையை ஏற்படுத்துகின்ற அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி மாக்கஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

புதன்கிழமை (10.06) மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி மாக்கஸ் அடிகளார் ஊடக சந்திப்பை நடாத்தியபோது அவர் இங்கு தொடர்ந்து தனது கருத்துக்களை தெரிவிக்கையில்

மன்னார் மாவட்டத்தின் குரலாகவும் இலங்கைத் தீவின் மக்களின் குரலாகவும் நான் இந்த பதிவை முன்வைக்க விரும்புகின்றேன்.

என் சகோதரக்குரு அருட்பணி ஜீவந்த பீரிஸ் அடிகளார் அவர்கள் 16.05.2026 ஆம் ஆண்டு தனது வாழ்க்கையின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் வரலாற்றில் நடந்த அனைத்தும் இன அழிப்பு என்று தனது வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு தெரிவித்திருந்தார். இவருடைய அனுபவப் பகிரிவு யாவராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

அவருடைய இந்த அனுபவப் பகிர்வு எல்லாராலும் வரவேற்று அது உண்மை என்று அது சொல்லப் பட்டிருக்கின்ற வேளையிலே மன்னார் மாவட்டத்தில் இருக்கும் மக்களாகிய நாங்களும் அவருடைய இந்தக் கருத்துக்களை மிகவும் மதிப்போடு ஏற்றுக் கொள்கிறோம்.

அதே வேளையில் கொழும்பு மறைமாவட்டத்தின் உடைய குருவாகப் பணியாற்றுகின்ற அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த அடிகளார் அதற்கு எதிரான ஒரு மனித உரிமை மீறலான ஒரு கருத்தை வெளியிட்டிருப்பது கத்தோலிக்க சமூகத்திற்கும் இலங்கை வாழ் மக்களுக்கும் அதிர்ச்சி அளிக்கிறது

ஒரு கத்தோலிக்க குரு என்பவர் மற்றவர்களுக்காக தன் உயிரைக் கொடுப்பதற்காகத்தான் ஒரு குருவாக வருவது. அதனுடைய அந்தக் குருத்துவத்தின் உடைய மேன்மையை மறந்து இவ்வளவு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்ற பொழுது அது பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு பயங்கரவாதிகளை கொன்றது தான் இந்தப் போரின் நோக்கமாக இருந்ததே ஒழிய இன அழிப்பின் நோக்கமாக இருக்கவில்லை என்பதை மிகவும் தெளிவாக பொய்யை அவர் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் வரலாற்றில் 70 வருடத்தில் காலத்துக்குக் காலம் நடைபெற்ற திட்டமிட்ட இன அழிப்புகளை மிகவும் தெளிவாக ஜீவந்த அருட்தந்தை சொல்லியிருப்பதை நாங்கள் இந்த வேளையிலே உறுதி செய்கிறோம்.

கடந்த 70 வருடங்களாக பல இடங்களில் வடக்கு கிழக்கில் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டது உண்மையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது சர்வதேச ரீதியிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆகவே இந்த வேளையிலே எங்களுடைய அருட்பணி ஜீவந்த அடிகளாரின் கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொள்வதோடு அவருக்கு ஆதரவாக மன்னார் மாவட்ட மக்களும் மன்னார் கத்தோலிக்க மக்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதோடு அவருடைய இந்தக் குரலை நசுக்குவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம்.

அவருடைய பயணம் தொடர நாங்கள் அவரோடு தோள் கொடுத்து அவருடைய கருத்துக்களை இன்னும் வலுப்படுத்த நாங்கள் தயாராக இருப்பதோடு அருட்தந்தை கிரிஷாந்த அவருடைய கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஒரு கத்தோலிக்க குரு என்ற ரீதியிலே கத்தோலிக்க குருவினுடைய இந்தக் கருத்து ஒரு காட்டுமிராண்டித்தனமான கருத்து என்பதை இந்த வேளையிலே நான் பதிவு செய்து கொள்கிறேன்.

இந்த நாட்டிலே பிரச்சினைகள் இனவாதம் வேரூன்றுவதற்கு காரணம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தான். அங்கே மக்கள் சம நிலையோடு சமத்துவத்தோடு மனித உரிமைகளோடு மதிக்கப்படுகின்ற சட்டமாக இந்த சட்டம் எங்களது இலங்கைத் தீவிலே இல்லை.

அரசியல் நோக்கங்களுக்காகவும் இனவாத நோக்கங்களுக்காகவும் இந்த சட்டம் பயன்படுத்தப்படுவதால் உண்மையாகவே இலங்கை உயர்ந்த ஒரு நாடாக வளர்வதற்கு இந்த சட்டம் இந்த மண்ணில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

ஏற்கனவே அரசு வாக்களித்தது போல பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை முற்றிலுமாக எடுத்து மக்கள் மனித உரிமைகளை அனுபவிக்கும் ஒரு நாடாக அவர்தம் வாழ்வாக மக்களின் வாழ்வு மாறுவதற்கு இந்த பயங்கரவாதச் சட்டம் முற்றிலும் தடையாக இருப்பதை இந்த இடத்திலே பதிவு செய்து கொள்வதோடு இந்தச் சட்டத்தை இன்னொரு பெயரில் மாற்றி அதையும் இன்னும் ஒரு பயங்கரமான ஒரு சட்டமாகக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் மேற்கொள்கின்ற சட்டத்தை நாங்கள் முற்றிலும் எதிர்ப்பதோடு அரசாங்கத்தினுடைய இந்த சட்டம் மென்மேலும் எங்களிடையே பிரிவினைகளையும் எங்களிடையே இனவாத மோதல்களையும் இனவாதத்தை இன்னும் ஆழமாக வேரூன்றச் செய்கின்ற சட்டமாகவும் அது அமையப் போகிறது .

ஜனாதிபதி அவர்கள் எங்களது கருத்துக்களை உள்வாங்கி இந்தச் சட்டத்தை அவர் ஏற்கனவே சொன்னது போல எங்களது இலங்கை தீவிலிருந்து அகற்றுவது மிகவும் வரவேற்கத்தக்கது .

எல்லா இன மக்களும் இந்த நாட்டிலே சமாதானமாக வாழ்வதற்கு ஒரு ஒழுங்கான ஒரு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் இலங்கை மக்கள். அந்த ரீதியிலே நாங்கள் பார்க்கின்ற பொழுது தங்களுடைய சுய நலத்திற்காக அரசியல் நோக்கங்களுக்காகவும் இனவாதத்திற்காகவும் மக்களைக் கொல்வது என்பது மிகவும் ஒரு காட்டு மிராண்டித்தனமான ஒரு செயல்.

இது திட்டமிட்ட முறையில் நடந்தது உலகறிந்த உண்மை. இலங்கையில் இருக்கும் எல்லோரும் அறிந்த உண்மை. ஆகவே அதைச் செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதை நான் தெரிவித்துக் கொள்வதோடு இதனாலேயே இனங்களுக்கு இடையே ஏற்படுகின்ற அந்த இன மோதல்கள் இந்த நல்ல முறையான தீர்ப்புகளை அளித்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு நேரத்தில் நாங்கள் நிற்கிறோம். அரசாங்கம் நீதியோடு செயல்படும் என்ற நம்பிக்கையோடு அதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணைகளை குழப்புகிற நடவடிக்கை வந்து எங்களுடைய தீவுக்கு எங்களுடைய இலங்கை நாட்டுக்கு முரணான செயல்பாடாக அமைகிறது.

காரணம் இலங்கை நாடு என்பது ஒரு சமய ஆன்மீக வழியிலே வளர்ந்து வருகின்ற ஒரு நாடாக இருப்பதனால் பௌத்த மதம் அழகான சமய ஆன்மீக சிந்தனைகளோடு மக்களை வழிநடத்துகின்ற ஒரு சமயம். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அத்தோடு இஸ்லாமிய சமயம் அத்தோடு சைவ சமயம் அத்தோடு கத்தோலிக்க கிறிஸ்தவ சமயங்கள் எல்லா மக்களை ஒழுக்கத்தோடு வழிநடத்துகின்ற ஒன்றுதான்.

உண்மைக்காக குரல் கொடுக்கின்ற அனைத்து சமயங்களும் இதற்கு இந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு உண்மையைத் தேடி உழைக்கின்ற சமயங்களாக இருக்கிறதே ஒழிய தடையாக இல்லை.

ஆனால் சமயங்களைப் பயன்படுத்தி அதற்கு தடையை ஏற்படுத்துகின்ற அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

அத்தோடு அரசியலுக்காக உண்மைகளை மறைக்கும் செயலானது இன்னும் வருங்காலத்தில் மிகப்பெரிய பிளவுகளையும் மிகப்பெரிய பிரச்சினைகளையும் விடிவுக்கு வராத முடிவுக்கு வராத ஒரு இனப்பிரச்சனையாக வளர்ந்து செல்வதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கப்போகிறது .

நாங்கள் கனவு காணுகின்ற நாடு எங்களுக்கு கிடைக்குமா? நாங்கள் எல்லாரும் ஒற்றுமையாக வாழ முடியுமா என்ற அந்த ஒரு சிந்தனை சிதைந்து போகும் ஒரு நிலையில் நாங்கள் இருக்கிறோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

(தமிழ்க் கத்தோலிக்க ஊடகம் இலங்கை செய்தியாளர் திரு.வாஸ் கூஞ்ஞ)

தன்னாமுனை வாவிக்கரை புனித அந்தோனியார் சிற்றாலய திருவிழாவிற்கான முதலாம் நவநாள் ஆரம்பம்.தன்னாமுனை வாவிக்கரை புனித அந்தோனிய...
11/06/2026

தன்னாமுனை வாவிக்கரை புனித அந்தோனியார் சிற்றாலய திருவிழாவிற்கான முதலாம் நவநாள் ஆரம்பம்.

தன்னாமுனை வாவிக்கரை புனித அந்தோனியார் சிற்றாலயத்தின் வருடாந்த திருவிழாவின் முதலாவது நவநாள் 11.06.2026 வியாழக்கிழமை மாலை 5:15 மணிக்கு கொடியேற்றத்துடனா பக்தி பூர்வமாக ஆரம்பமானது.

பங்கு தந்தையின் அருட்பணிரோயல் பெர்னாண்டோ அடிகளாரினால் அந்தோனியாரென் கொடியானது இறை வேண்டுதலோடு ஆசீர்வதிக்கப்பட்டு 1ம் நாள் வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கொடியேற்றத்தினை தொடர்ந்து அருட்தந்தை Fr. Jenil.Peris அடிகளாரின் தலைமையில் அருட்பணியாளர்கள் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்து இறையாசீர் வழங்கினார்கள்.

திரிதின வழிபாட்டின் முதல்நாளில் வழிபாடுகளை சிறப்பாக ஒழுங்கமைப்பு செய்த வழிபாட்டுக்குழுவினர், பாடகர் குழுவினர் பீடப்பணியாளர்கள், அருட்தந்தையர்கள், அருட் சகோதரர்கள், அனைவருக்கும் பங்குதந்தை விசேட நன்றிகளை தெரிவித்ததுடன்
இறைமக்களும் புனிதரின் இறையாசீரை பெற்று செல்ல வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

“புனித அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.”

நினைவூட்டுகின்றோம்... அனைவரும் வருக புனித அந்தோனியாரின் இறையாசீரை பெறுக.....
11/06/2026

நினைவூட்டுகின்றோம்... அனைவரும் வருக புனித அந்தோனியாரின் இறையாசீரை பெறுக.....

நற்செய்திப் பணியில் நறுமணம் பரப்பும்  #அருட்தந்தை  #பிரான்சிஸ்  #சேவியர்  #ரஜீவன்  #லியோன் அடிகளார் அவர்களுக்கு இனிய பிற...
10/06/2026

நற்செய்திப் பணியில் நறுமணம் பரப்பும் #அருட்தந்தை #பிரான்சிஸ் #சேவியர்
#ரஜீவன் #லியோன் அடிகளார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! ​[11.06.2026/Tamil Catholic Media Switzerland

இறைவனின் ஆசிபெற்ற நன்னாளாம் ஜூன் 11 அன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் அருட்பணி F.X. ரஜீவன் லியோன் (மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்) அடிகளார் அவர்களுக்கு, சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஊடகம், பங்குச் சமூகம் மற்றும் இறைமக்கள் இணைந்து இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து நிற்கின்றோம்.

​ பெயரின் அர்த்தமும் வாழ்வின் சாட்சியமும்
​அருட்தந்தையின் திருப்பெயரே அவரது ஆன்மீக வாழ்வின் இலக்கணத்தை அழகாகச் சித்தரிக்கிறது.

#ரஜீவன் என்பதற்கேற்ப தாமரை போன்ற தூய ஆன்மீக நறுமணத்தையும், #லியோன் என்பதற்கேற்ப விசுவாசத்தைக் காப்பதில் சிங்கம்போன்ற துணிச்சலையும் கொண்டு அவர் ஆற்றிவரும் பணிகள் போற்றுதலுக்குரியவை.

விசுவாசப் பணியும் அர்ப்பணிப்பும்
​அதிகாரத்தால் அல்லாமல், அன்பினாலும் அரவணைப்பாலும் பங்குச் சமூகத்தை ஒரு குடும்பமாக வழிநடத்தி வரும் அருட்தந்தை அவர்களின் விசுவாச வாழ்வு ஆன்மீகப் பயணிகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகும்.

சோதனையான காலங்களிலும் இறைமக்களுக்கு நம்பிக்கையூட்டி, இறைவார்த்தையை விதைக்கும் உன்னத இளம் அருட்பணியாளராக அவர் திகழ்கிறார்.

​கடந்த கால நன்மைகளுக்காக இறைவனுக்கு நன்றி கூறும் அதேவேளையில், அருட்தந்தை அவர்கள் பூரண உடல்நலத்துடனும், சரீர சுகத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து இறைப்பணியாற்ற இறைமகன் இயேசுவின் ஆசி வேண்டுகிறோம். அவரது எதிர்கால ஆன்மீகப் பயணங்கள் யாவும் தூய ஆவியானவரின் வழிகாட்டுதலோடு வெற்றிகரமாக அமைய எங்களது செபங்களை ஏறெடுக்கிறோம்.

தங்களின் நல்வழிகாட்டுதலில் பயணிக்கும் பங்குச் சமூகம், தங்களின் அன்பைப் பெறும் இறைமக்கள் மற்றும் தங்களின் பணிகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் தமிழ்க் கத்தோலிக்க ஊடகம் இணைந்து தங்களுக்கு தங்களின் பிறந்தநாளில் எங்களது செபங்களையும், உளம் கனிந்த நல்வாழ்த்துகளையும் சமர்ப்பிக்கின்றோம்.

​இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், அருட்தந்தை அவர்களே! 🎉🎂 #முத்தரிப்புத்துறை

மடு ஆலய ஆடி விழாவுக்கான ஆலோசனைக்  கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில்மன்னார் மாவட்டத்தின் யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாக விள...
10/06/2026

மடு ஆலய ஆடி விழாவுக்கான ஆலோசனைக் கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில்

மன்னார் மாவட்டத்தின் யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை (10.06.2026) மாலை 2.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

மன்னார் மறைமாவட்ட ஆயர் தற்பொழுது வெளிநாடு சென்றுள்ளமையால் இச்கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி.கிறிஸ்து நேசன் அடிகளார் ஆயரின் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

அத்துடன் பல்வேறுபட்ட திணைக்களத் தலைவர்கள் , மடுத் திருப்பதி பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் மடுத் திருப்பதியின் வருடாந்த ஆடி மாத பெருவிழாவை முன்னிட்டு நடைபெற வேண்டிய நடைமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இதில் சுகாதாரம்- போக்குவரத்து- பாதுகாப்பு- குடிநீர்- உணவு விடயங்கள்- மின்சார வசதி ஆகியன பற்றி முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

மருதமடு ஆலய ஆடி மாத பெருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் விழா ஆரம்பமாகி எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி (02.07.2026) பெருவிழா இடம்பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(தமிழ்க் கத்தோலிக்க ஊடக செய்திக்காக மன்னாரில் இருந்து திரு. வாஸ் கூஞ்ஞ)

[ 10 | JUNE | 2026 ] நெடுந்தீவு சென் ஜேம்ஸ்  முன்பள்ளி மழழைகளின் மாதிரி சந்தையானது  முன்பள்ளி கட்டடத்தொகுதியில் இன்று மு...
10/06/2026

[ 10 | JUNE | 2026 ] நெடுந்தீவு சென் ஜேம்ஸ் முன்பள்ளி மழழைகளின் மாதிரி சந்தையானது முன்பள்ளி கட்டடத்தொகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் பங்குத்தந்தை அருட்பணி P A கமல்ராஜ் அடிகளார் கலந்து சிறப்பித்தார்.

முன்பள்ளி நிர்வாகத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட மாதிரி சந்தை நிகழ்வில், மழழைகளின் உற்சாகம்மிகு சந்தைப்படுத்தலில் மகிழ்சிகரமாக பொருட்கொள்வனவில் ஈடுபட்ட பங்குத்தந்தை , மழழைகளின் கற்றல் செயற்பாடுகள் மற்றும் கற்றல் சூழமைவுகளையும் பாராட்டிய பங்குத்தந்தை தனது வாழ்த்துக்களையும் இதன்போது பகிர்ந்துகொண்டார்.

நிகழ்வுகளில் திருக்குடும்ப கன்னியர்மட முதல்வர் அருட்சகோதரி சுகிர்தசெல்வி,தேவசபை போதகர், முன்பள்ளிகளின் இணைப்பாளர் திருமதி வசந்த சகாயராணி, நெடுந்தீவு கல்விக்கோட்ட முன்பள்ளிகளின் ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் மற்றும் முன்பள்ளி சமுகத்தினர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

10/06/2026

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார்

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அவர்கள் வரலாற்றில் நடந்த அனைத்தும் இன அழிப்பு என்றும், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு என உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளமையை தான் வரவேற்பதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று புதன் கிழமை (10) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

Adresse

Suhr

Öffnungszeiten

Montag 08:00 - 17:00
Dienstag 08:00 - 17:00
Mittwoch 08:00 - 20:00
Donnerstag 08:00 - 20:00
Freitag 08:00 - 20:00
Samstag 08:00 - 20:00

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Tamil Catholic Media erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen