Tamil Catholic Media

Tamil Catholic Media கத்தோலிக்க நிகழ்வுகளை இறைமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லல்

ஊர்காவற்றுறையிலிருந்து சுமார் 7கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது சுருவில் கிராமம். இங்கமைந்துள்ள மரியன்னை ஆலயம் அன்னை...
04/08/2026

ஊர்காவற்றுறையிலிருந்து சுமார் 7கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது சுருவில் கிராமம். இங்கமைந்துள்ள மரியன்னை ஆலயம் அன்னைமரி ஆலயமெனவே அழைக்கப்படுகின்றது.

சுருவில் அன்னை மரி ஆலயத்திலுள்ள மரியன்னையின் பெரிய திருச்சொரூபம் தன்னகத்தே ஓர் அரிய சிறப்பையும் அமலமரித்தியாகிகளுடனான தொடர்பையும் உள்ளடக்கியுள்ளது.

அமலமரித்தியாகிகள் சபையின் நிறுவுநரான புனித இயூயின் டி மசனட் அவர்கள் பிரான்ஸ் நாட்டின் ஐக்ஸ் (Aix)பிரதேசத்திலமைந்துள்ள அமலமரித்தியாகிகள் சபைக்கு சொந்தமான சிற்றாலயமொன்றில் வைக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற சிற்பி ஒருவரால் அமைக்கப்பட்ட அன்னையின் இத்திருச்சொருபத்தை இலங்கைக்கான முதல் அமலமரித்தியாகிகள் சபையின் குழுமத்திற்கு தலைமைதாங்கிய
பேரருட்தந்தை செமேரியா (அமதி) அவர்களிடம் ஒப்படைத்திருந்தார். அவர் இச்சொரூபத்தை யாழ்ப்பாணத்திலுள்ள அமலமரித்தியாகிகள் சபையினரின் சிற்றாலயத்தில் நிறுவி வணக்கம் செலுத்தி வந்தார்.

ஆண்டுகள் உருண்டோடவே ஒருமுறை சுருவில் அன்னைமரி ஆலயத்தை தரிசித்த பேரருட்தந்தை மெலிசன் (அமதி) அவர்கள் ஆலயத்தின் மையப்பகுதியில் திருச்சொரூபமொன்றை நிறுவத்தக்க மாடக்குழிப்பகுதி (Niche) வெற்றிடமாக இருப்பதை உணர்ந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்திருச்சொரூபத்தை இவ்வாலயத்திற்கு வழங்கி வைத்தார்.

காலகதியில் இச்சொரூபத்தின் பெருமைகளை அறிந்த அருட்பணி J.கொலின்ஸ் (அமதி) அவர்கள் பேரருட்தந்தை ஹென்றி யூலன் ஆண்டகையவர்களின் பணியாளுகைக்காலத்தில் அதனை மீளவும் பெற்றுக்கொண்டு இச்சொரூபத்திற்கு பதிலாக புதிதாக ஓர் சொரூபத்தை வழங்குவதாக உறுதியளித்த போதும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து தமது எதிர்ப்பை வெளியிட்டதன் பேரில் அன்னை அவ்வாலயத்திலேயே குடிகொண்டு குறைதீர்த்து வருகிறாள்.

பல்வேறு பழமைமிக்க திருச்சொரூபங்கள் இவ்வாலயத்தில் களவாடப்பட்டபோதும் இன்றும் அன்னை கொலுவமர்ந்து ஆசியளிக்கின்றாள். Copy

முதலைகுத்தி புனித லூர்து அன்னை ஆலய மணிக் கோபுரத் திறப்பு விழாவும் ஆலய அபிஷேகத் திருப்பலியும்! ⛪​உயிலங்குளம் பங்கின் துணை...
04/08/2026

முதலைகுத்தி புனித லூர்து அன்னை ஆலய மணிக் கோபுரத் திறப்பு விழாவும் ஆலய அபிஷேகத் திருப்பலியும்! ⛪

​உயிலங்குளம் பங்கின் துணை ஆலயமாகிய முதலைகுத்தி புனித லூர்து அன்னை ஆலயத்தின் மணிக் கோபுரத் திறப்பு விழாவும், ஆலய அபிஷேகத் திருப்பலியும் கடந்த 02.08.2026 அன்று பக்திபூர்வமாகவும் கோலாகலமாகவும் நிறைவேற்றப்பட்டது.

​ மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. ஆயர் அவர்கள் புதிய மணிக் கோபுரத்தையும், ஆலயத்தையும் அபிஷேகம் செய்து திறந்து வைத்தார்.

இப்புனித நிகழ்வில் மறைமாவட்ட குருக்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டு ஆன்ம பலன் பெற்றனர்.

​திருப்பலி ஒழுங்குகள் மற்றும் ஏனைய நிகழ்வுகள் அனைத்தும் உயிலங்குளம் பங்குத்தந்தை அருட்பணி. சாந்தன் அடிகளார் அவர்களால் மிகச் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.

​ஆன்மீக வழிபாடுகளைத் தொடர்ந்து, பங்கு மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு கௌரவிப்பு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் விழாவை மேலும் சிறப்பித்தன.

​"ஆண்டவரின் இல்லம் எவ்வளவு இன்மையானது! அவர்தம் புகழை என்றென்றும் பாடுவோம்!"

​இறைவனின் அளப்பரிய கிருபையினால் இடம்பெற்ற இந்நிகழ்வு பங்கு மக்களின் வாழ்வில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அமைந்தது.

அன்னை லூர்து நமது பங்கைக் காத்து வழிநடத்துவாராக! 🙏✨

பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தலப் பெருவிழா கோலாகலமாக நிறைவு! 🙏​வரலாற்றுச் சிறப்புமிக்க பெரியகட்டு புனித அந்தோனியார...
04/08/2026

பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தலப் பெருவிழா கோலாகலமாக நிறைவு! 🙏

​வரலாற்றுச் சிறப்புமிக்க பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தலத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த ஆகஸ்ட் 01, 2026 அன்று பக்திபூர்வமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது! திருத்தலப் பரிபாலகர் அருட்பணி. எமில் எழில்ராஜ் அடிகளாரின் சிறப்பான ஏற்பாடுகளிலும் வழிநடத்தலிலும் இத்திருவிழா மிகச் சிறப்பாக ஆயத்தம் செய்யப்பட்டது.

கடந்த 23.07.2026 அன்று மாலை கொடியேற்றத்துடன் நவநாள் வழிபாடுகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து தினமும் திருச்செபமாலையும், நவநாள் திருப்பலியும் பக்தர்களின் பங்களிப்போடு ஒப்புக்கொடுக்கப்பட்டன.

​ஆன்மீக பலனுக்காக கருத்தமர்வுகளும், நற்கருணை வழிபாடுகளும் நடத்தப்பட்டதோடு, சிறுவர்களுக்கான விவிலிய விளையாட்டுக்களும் உற்சாகமாக நடத்தப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டன.

​ஆகஸ்ட் 01 அன்று நடைபெற்ற திருவிழாத் திருப்பலியினை மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் தலைமை தாங்கி, மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிபிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் முன்னிலையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தார்கள்.
இவர்களுடன் மறைமாவட்டக் குருக்களும் இணைந்து இத்திருப்பலியைச் சிறப்பாக நிறைவேற்றினர்.

​இத்திருப்பலித் திருநிகழ்வில் மறைமாவட்டக் குருக்கள், அருட்சகோதரிகள், அருட்பணியாளர்கள் மற்றும் பெருந்திரளான அந்தோனியார் பக்தர்கள் கலந்து கொண்டு புனிதரின் அருளைப் பெற்றுச் சென்றனர்.

​திருப்பலியின் நிறைவில், திருச்சுருப பவனி பக்திப் பரவசத்துடன் இடம்பெற்றதுடன், திருச்சுருப ஆசீர்வாதமும் மறைமாவட்ட ஆயர் அவர்களால் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

​"வல்லமை மிக்க புனித அந்தோனியாரே, எமக்காக வேண்டிக்கொள்ளும்!" 🙏

இயேசுவின் திருவுடலை முதன்முறையாக ஏந்திய மலர்கள்! பெரியகுஞ்சுக்குளம் புனித அங்காமத்து அன்னை ஆலயத்தில் கோலாகலமான முதல்நன்ம...
04/08/2026

இயேசுவின் திருவுடலை முதன்முறையாக ஏந்திய மலர்கள்! பெரியகுஞ்சுக்குளம் புனித அங்காமத்து அன்னை ஆலயத்தில் கோலாகலமான முதல்நன்மை கொண்டாட்டம்!

விசுவாசமும் பக்திப் பெருக்கும் நிறைந்த ஒரு ஆசீர்வாதம் நிறைந்த நாளாக, பெரிய குஞ்சுக்குளம் பங்கின் புனித அங்காமத்து அன்னை ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.08.2026) அன்று மாணவ மாணவிகளுக்கான முதல்நன்மை திருவருட்சாதனம் வழங்கும் திருப்பலி கொண்டாட்டம் மிகவும் சிறப்பாகவும் எழுச்சியுடனும் நிறைவேற்றப்பட்டது.

​அன்று காலை சரியாக 7.30 மணிக்கு ஆரம்பமான இப்புனிதத் திருப்பலி வழிபாட்டினை, பங்குத்தந்தை அருட்பணி. பிரசாந்தன் அடிகளார் அவர்கள் மிகச் சிறப்பான முறையில் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.

​"ஆண்டவர் இயேசுவின் திருவுடலை முதன்முறையாகத் தங்களின் இதயக் கோயிலில் ஏற்றுக்கொண்ட மாணவ மாணவிகளுக்கு எமது உளமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!"

​பங்குத்தந்தையின் அருமையான வழிகாட்டுதலின் படி, ஆலய அருட்சகோதரிகள் மற்றும் மறையாசிரியர்கள் இந்நிகழ்வை மிக நேர்த்தியாகவும் ஆன்மீகச் சூழலோடும் ஒழுங்குபடுத்தியிருந்தனர்.

பங்கு மக்களும், பெற்றோர்களும், உறவினர்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறார்களின் ஆன்மீகப் பயணத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.

​ஆண்டவரின் அன்பில் வளர்ந்து, சாட்சியாக வாழும் பிள்ளைகளை வாழ்த்தி மகிழ்வோம்! 🙏✨

⛪ அருள்மிகு பூவரசங்குளம் புனித அன்னம்மாள் ஆலயப் பெருவிழா பக்திபூர்வமாக நிறைவு! 🙏​வவுனியா பம்பைமடு பங்கின்  துணை ஆலயமான ப...
04/08/2026

⛪ அருள்மிகு பூவரசங்குளம் புனித அன்னம்மாள் ஆலயப் பெருவிழா
பக்திபூர்வமாக நிறைவு! 🙏

​வவுனியா பம்பைமடு பங்கின் துணை ஆலயமான பூவரசங்குளம் புனித அன்னம்மாள் ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.02.2026) அன்று மிகச் சிறப்பாகவும் இறை ஆசீயுடனும் கொண்டாடப்பட்டது.


​காலை 07:30 மணிக்கு திருச்செபமாலையுடன் திருவிழாத் திருப்பலி ஆரம்பமானது.
​இத்திருவிழாத் திருப்பலியானது அருட்தந்தை அருள்ராஜ் CMF அவர்களின் தலைமையில், பங்குத்தந்தை அருட்தந்தை பிரான்சிஸ் CMF மற்றும் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் CMF ஆகியோர் இணைந்து மிகச் சிறப்பாக நிறைவேற்றி இறையாசீர் வழங்கினார்கள்.

திருப்பலியின் நிறைவில் புனித அன்னம்மாளின் திருவுருவம் பவனியாக ஆலயத்தைச் சுற்றி வலம் வந்தது. பவணி நிறைவில், இறுதிப் பரிந்துரை செபம் செய்யப்பட்டு, இறைமக்கள் அனைவருக்கும் அன்னையின் திருச்சுரூப ஆசிர் வழங்கப்பட்டது.

​நவநாட்கள் மற்றும் திருவிழாத் திருப்பலி வழிபாடுகளை மிகச் நேர்த்தியாகவும் அழகாகவும் திட்டமிட்டு, தொடர்ச்சியான ஒத்திகைகள் மூலம் வழிபாடுகளை நெறிப்படுத்திய பங்குத்தந்தை அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

​மேலும், பங்குத்தந்தையுடன் இணைந்து விழாச் சிறக்க உழைத்த:
​🏛️ ஆலய சபை உறுப்பினர்கள்
​📖 வழிபாட்டுக் குழுவினர்
​🎵 பாடகர்குழாம்
​👦 பீடப்பணியாளர்கள்
​🤝 மற்றும் அனைத்து பங்கு மக்கள் அனைவருக்கும் சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஊடகம் சார்பாக நல்வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

​"புனித அன்னம்மாளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்." 🌹

முதியவர்கள் சுமையல்ல பேணிப் பாதுகாக்க வேண்டிய இறைவனின் கொடைகள் என, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வுக்கான திருப்பீ...
04/08/2026

முதியவர்கள் சுமையல்ல பேணிப் பாதுகாக்க வேண்டிய இறைவனின் கொடைகள் என, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வுக்கான திருப்பீடத்துறையின் முதியோர் மேய்ப்புப் பணிக்குப் பொறுப்பான திரு. வித்தோரியோ ஸ்கெல்சோ தெரிவித்துள்ளார்.

புனிதர்கள் சுவக்கீன், அன்னா திருவிழாவையொட்டி கொண்டாடப்பட்ட தாத்தா, பாட்டிகள் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முதியவர்களை பராமரிப்பு பெறுபவர்களாக மட்டும் பார்க்காமல், திருஅவையின் மறைப்பணியில் முக்கிய பங்காளிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

முதியோரின் முக்கிய சவாலாக தனிமை காணப்படுவதால், தனிமையில் வாழும் மற்றும் வீட்டை விட்டு வெளியே வர இயலாத முதியவர்களை நேரில் சந்தித்து, நிலையான உறவுகளை உருவாக்குமாறு கிறிஸ்தவ சமூகங்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“முதுமை ஆன்மிக ஓய்வுக்காலம் அல்ல அது இறைவன் வழங்கும் ஓர் அழைப்பு” எனக் குறிப்பிட்ட அவர், எந்தவொரு முதியவரும் புறக்கணிக்கப்படாத வகையில் அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அன்புவழிபுரம் புனித சதா சகாய மாதா ஆலய வருடாந்த திருவிழா மிகவும் விமரிசையாக நிறைவுபெற்றது! ⛪​திருகோணமலை மறைமாவட்டத்தின் ச...
04/08/2026

அன்புவழிபுரம் புனித சதா சகாய மாதா ஆலய வருடாந்த திருவிழா மிகவும் விமரிசையாக நிறைவுபெற்றது! ⛪

​திருகோணமலை மறைமாவட்டத்தின் சிறப்புமிக்க அன்புவழிபுரம் புனித சதா சகாய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி, கடந்த 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் கோலாகலமாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

​🙏 இவ்வாண்டு திருவிழாத் திருப்பலியானது, திருகோணமலை மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்களின் தலைமையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

​ஆலயத்திற்கு வருகை தந்து, அன்னையின் அருளைப்பெற்று, கூட்டுத் திருப்பலியில் கலந்துகொண்ட அனைத்து இறைமக்களுக்கும் இறைவனின் பிரசன்னமும், சதா சகாய மாதாவின் இடைத்தரசு மன்றாட்டுகளும்நிறைவாக இருப்பதாக!

வெற்றிகரமாக நிறைவுபெற்ற தேசிய மட்ட வதிவிடப் பயிற்சி - 2026!​இலங்கையின் அனைத்து மறைமாவட்டங்களையும் சேர்ந்த தமிழ் மொழி மூல...
04/08/2026

வெற்றிகரமாக நிறைவுபெற்ற தேசிய மட்ட வதிவிடப் பயிற்சி - 2026!

​இலங்கையின் அனைத்து மறைமாவட்டங்களையும் சேர்ந்த தமிழ் மொழி மூலமான மறையாசிரியர்களுக்கான தேசிய மட்ட வதிவிடப் பயிற்சி - 2026 மிகவும் சிறப்பான முறையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

​கடந்த ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 02 வரை (ஆடி 31 முதல் ஆவணி 02 வரை) தேவத்தை தியான இல்லத்தில் நடைபெற்றது.

​ இலங்கையின் பல்வேறு மறைமாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட ஏறக்குறைய 50 தமிழ் மொழி மூல மறையாசிரியர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

தேசிய மறைக்கல்வி நிலையத்தின் தேசிய மறைக்கல்வி இயக்குனர் அருட்பணி. பிரதீப் நிரோஷன் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில், தமிழ் பிரிவுக்கு பொறுப்பான அன்புக்கன்னியர் சபையைச் சேர்ந்த அருட்சகோதரி யோகராணி அவர்களின் சிறப்பான ஒழுங்கமைப்பில், அவர்களின் பணியாளர்களின் ஒத்துழைப்போடு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

​இப்பயிற்சிப் பட்டறையில் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து மறைக்கல்வி இயக்குனருடன் 8 மறையாசிரியர்கள் கலந்துகொண்டு தங்களை மெருகூட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

​குறிப்பாக, மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி இயக்குனர் அருட்பணி. கிருஷாந் அடிகள், 'தற்கால இளையோர் முகம் கொடுக்கும் சவால்களும் கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வியும்' என்ற ஆழமான தலைப்பில் சிறப்பு உரையொன்றை வழங்கி விழாவைச் சிறப்பித்தார்.

​இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நமது பிள்ளைகளுக்குச் சரியான ஆன்மீக வழிகாட்டலையும், மறைக்கல்வியையும் வழங்குவதில் இத்தகைய தேசிய பயிற்சிப் பட்டறைகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

பங்குபற்றிய அனைத்து மறையாசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்!

​🙏 மறைக்கல்விப் பணியைத் தொடர்வோம், விசுவாசத்தைப் பகிர்வோம்! 🙏

கிளரீசிய மறைபரப்பாளர்கள்...இறையழைத்தல் முகாம்.☦️☦️☦️
03/08/2026

கிளரீசிய மறைபரப்பாளர்கள்...
இறையழைத்தல் முகாம்.☦️☦️☦️

02/08/2026

புனித லிகோரியார் ஆலய திருவிழா திருப்பலி - 02.08.2026 -சாவகச்சேரி

Adresse

Suhr

Öffnungszeiten

Montag 08:00 - 17:00
Dienstag 08:00 - 17:00
Mittwoch 08:00 - 20:00
Donnerstag 08:00 - 20:00
Freitag 08:00 - 20:00
Samstag 08:00 - 20:00

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Tamil Catholic Media erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Verknüpfungen

Teilen