18/09/2022
#மன்னார் #மறைமாவட்டத்தில் #பணியாளர்கள் #குறைந்து #செல்லுகின்றது. #இளைஞர் #யுவதிகள் #அழைப்பின் #குரலுக்கு #செவிசாயிக்க #வேண்டும்.
ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை
மன்னார் மறைமாவட்டத்தில் பணி வாழ்வுக்கான தேவ அழைத்தல்கள் குறைந்து செல்வதால் இளைஞர் யுவதிகள் உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் பெறுகின்ற உங்கள் மத்தியில் இதற்கான அழைப்பின் குரல் கேட்கும்போது அதற்கு செவிமடுக்க வேண்டும் என இவ்வாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
பேசாலை பங்காகிய புனித வெற்றிநாயகி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (18.09.2022) பங்கு தந்தை அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளாரின் அழைப்பை ஏற்று 71 இளைஞர் யுவதிகளுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையினால் உறுதிபூசுதல் என்னும் திருவருட்சாதனம் வழங்கும் திருச்சடங்கில் ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தனது மறையுரையில் தொடர்ந்து தெரிவிக்கையில்
பேசாலை பங்கில் இன்று (18.09.2022) இளைஞர் யுவதிகளுக்கு உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் வழங்குவதற்கு இறைவன் சித்தம் கொண்டுள்ளார்.
இறைவனின் சித்தத்தின்படி நாம் வாழந்து கொண்டு இருக்கின்றோம். அவரே நமக்கு வாழ்வை தந்து கொண்டிருக்கின்றார்.
அவரே நம்மை வாழ வைப்பதால் அவரிடமிருந்தே அழைப்புக்களையும் பொறுப்புக்களையும் நாம் பெறுகின்றோம்.
இங்கு வீற்றிருக்கும் பிள்ளைகள் கடந்த மூன்று நான்கு மாதங்களாக இந்த உறுத்pப்பூசுதல் அருட்சாதனத்தை பெறுவதற்காக தங்களை தயாரித்துள்ளனர்.
பங்கு தந்தையினர் மறையாசிரியர்கள் மற்றும் அருட்சகோதரிகளினால் இவர்கள் மறையறிவை கற்று மற்றும் பயிற்சிகளை பெற்றே இந்த அரட்சாதனத்தை பெறுவதற்காக தயார் நிலையில் இருக்கினறனர்.
ஆகவே நாம் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும் இவர்கள் தூய ஆவியின் கொடைகளை பெறுவதற்கு இறைவன் சித்தம் கொண்டமைக்காக.
நாம் திருமுழுக்கு பெற்ற காலத்திலிருந்து இறைவனின் பிள்ளைகளாக வாழந்து வருகின்றபோதும் எமது வாழ்க்கை எப்பொழுதும் புனிதமாக இருக்கின்றதா என்பது சொல்ல முடியாது.
நாம் எமது குற்றம் குறைகளினால் பாவங்கள் பல செய்து வருகின்றோம். இவற்றிலிருந்து எம்மை மீட்கவே கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார்.
ஒப்புறவு திருவருட்சாதனத்தின் மூலம் நீங்கள் மனமாற்றம் பெற்று வருவீர்கள் என இறைவன் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்.
ஆகவே நாம் பொறுப்புள்ள பிள்ளைகளாக வாழ வேண்டும் என இறைவன் எம்மை நோக்கி பார்த்துக் கொண்டு இருக்கின்றார்.
பிள்ளைகளே அன்று நீங்கள் திருமுழுக்கு பெற்றபோது உங்கள் சார்பாக உங்கள் ஞான பெற்றோர் வாக்குறுதி வழங்கினர். இன்று நீங்கள் முழு உள்ளத்தோடு அதை புதுப்பிக்கின்றீர்கள்.
இதன் மூலம் நீங்கள் தூய ஆவியானவரில் நம்பிக்கை கொண்டவர்களாக காணப்படுகின்றீர்கள். திருஅவையை ஏற்றுக்கொள்வதுடன் புனிதர்களின் உறவை விசுவசிப்பராகவும் நீங்கள் இருக்கின்றீர்கள்.
இன்றைய காலக்கட்டத்திலே திருச்சபையில் அங்கம் வகித்தவர்கள் எம்மை விட்டு விலகி வேறு வழிக்குச் சென்று விட்டனர். அவர்களிடம் விசுவாசம் அற்ற நிலை காணப்பட்டமையாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவேதான் நாம் எமது நம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும். நாம் மூவிரு கடவுளில் நம்பிக்கை வைப்பதுபோல திருச்சபையிலும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
உங்கள் நாளாந்த வாழ்க்கையில் இறைவனுக்காக பணி செய்ய தயாராக இருக்க வேண்டும்.
நாம் ஒன்றிப்பு , பங்கேற்பு , பணி என மூன்றையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
மன்னார் மறைமாவட்டத்தில் தேவ அழைத்தல்கள் குறைந்து கொண்டு போவதனால் பணி வாழ்வுக்கு எதிர்காலம் எப்படியாகுமோ என்ற ஐயப்பாடு தோன்றுகின்றது.
பணி வாழ்வுக்காக உங்களுக்கு அழைப்பு கிடைக்கும்போது பிள்ளைகளாகிய நீங்கள் செவி சாய்க்க வேண்டும்.
இதற்காக பரிசுத்த ஆவியின் கொடைகள் உங்களுக்கு நிறைவாக கிடைக்கட்டும். பல பிரச்சனைகள் மத்தியில் வாழும் நாம் அதிலிருந்து விடுபடவும் இன்றையத் திருப்பலியில் வேண்டிக் கொள்வோம் என இவ்வாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
(தமிழ்க் கத்தோலிக்க ஊடக சுவிஸ் இலங்கை செய்தியாளர் #வாஸ் #கூஞ்ஞ)