Grace Tabernacle Apostolic Church

Grace Tabernacle Apostolic Church We are a Tamil Christian Church (bi-lingual)congregation in Canada. We primarily work amongst the fir

06/03/2026

முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்கள் | MORE THAN CONQUERORS | INNERMAN DEVOTIONS

ரோமர் 8:37 - இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.

'உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்' என்று ஆண் வராகிய இயேசு கூறியிருக்கின்றார். சில வேளைகளிலே, விசுவாச மார் க்கத்தார் தாங்கள் இன்னும் உலகத்திலே தான் வாழ்க்கின்றோம் என் பதை விசுவாசிகள் மறந்து போய்விடுகின்றார்கள். அதனால் வாழ்க்கை யிலே எதிர்பாராத உபத்திரவங்கள் வரும் போது, சோர்ந்து போய்விடு கின்றார்கள். இன்று சில சாரார் உலக ஆசீர்வாதங்களையும், ஐசுவரி யத்தையும் குறித்து தவறாக போதி த்து, சில விசுவாசிகளின் மனத்தை இந்த உலகத்தின் போக்கிற்கு திரு ப்பி விடுகின்றார்கள். 'அன்றியும் கிறி ஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்கமனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.' 'உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்தி லிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக் கிறது.' என்பதை மறந்து போய்விடுகின்றார்கள். இந்த உலகத்தால் உபத்திரவங்கள் ஏற்பட்டாலும், ஆண்டவர் இயேசுவை சார்ந்து வாழ் கின்றவர்கள் அவைகள் மத்தியிலே வெற்றி சிறக்கின்றார்கள். அப்போ ஸ்தலராகிய பவுல், ரோமருக்கு எழுதிய நிரூபத்தின் 8ம் அதிகார த்திலே, 'உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப் படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, hநச மோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன் புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்க ளானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்கா ரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ; டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவ னுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்தி ருக்கிறேன் என்று அறிக்கையிட்டது போல, நாமும் நம்முடைய வாழ்விலே அந்த அறிக்கையிலே உறுதியாய் தரித்திருக்க வேண்டும்.

ஜெபம்: அன்பின் பரலோக தேவனே, இந்த உலகத்திலே என் வாழ்விலே உண்டாகும் பின்னடைவுகளை கண்டு, நான் சோர்ந்து போகாமல், உம் வார்த்தையினால் ஜெயங்கொள்ள வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 2:15

Romans 8:37 - Nay, in all these things we are more than conquerors through him that loved us. (KJV)

Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada

Background Music: Recorded by Grace Tabernacle apostolic church

06/02/2026
06/02/2026

அழைப்பின் பிரதான நோக்கம்... | MAIN PURPOSE OF THE CALLING | INNERMAN DEVOTIONS

பிலிப்பியர் 3:12 - நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல்,

ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கு எதிராக அயலிலுள்ள நாடு ஒன்று போர் தொடுத்தது. அந்த தேசத்தின் ராஜாவானவன், போரை நடத்தி எதிரிகளை மேற்கொள்ளும்படிக்கு தன்னுடைய தளபதிக்கு கட்டளை கொடுத்திருந்தான். அந்த போர் சில காலமாக நடந்து கொண்டிந்தது. சில நாட்களிலே நடந்த சண்டை யிலே தளபதி எதிரிகளை மேற்கொண்டான். தனக்கு உண்டான சிறு வெற்றிகளிலே சந்தோஷப்பட்டான். வீரர்கள் உற்சாகம் அடைந்தார்கள். ஆனால், அவன் அந்த வெற்றியிலே தரித்து நிற்கவில்லை. ஏனெனில் அவர்கள் போரில் இன் னும் வெற்றி அடையவில்லை. வேறு சில நாட்களிலே அவனுடைய படை சில பின்னடைவுகளை சந்தித்தது. சில இழப்புக்கள் ஏற்பட்டது. அத னால், அவன் பின்னிட்டு திரும்பவில்லை. கடந்த நாட்களைக் குறித்து துக்கித்துக் கொண்டிருக்கவில்லை. ராஜா தனக்கு கொடுத்த கட்ட ளையை நிறைவேற்றும்படி தன் இலக்கிலே மிகவும் கவனமுள்ளவனாக இருந்தான். அதுபோலவே, விசுவாசிகளுடைய வாழ்விலும் அனுதினமும் போராட்டங்கள் உண்டு. அவை ஒன்றின் பின் ஒன்றாக வரலாம். நம் வாழ்விலே நாம் பல தியாகங்களை செய்து பிரயாசப்படுகின்றோம். எனிலும் சில நாட்களிலே பின்னடைவுகள் சந்திக்க நேரிடுகின்றது. மனம் சோர்ந்து போகின்ற நாட்கள் உண்டு. உலகத்திலே எதிர்க்கும் சக்திகள் உண்டு. ஏனெனில், நமக்கு 'மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிக ளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்கு நாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.' என்று தேவ ஊழி யராகிய பவுல், எபேசு சபையோருக்கு கூறியிருக்கின்றார். விசுவா சிகள் தங்கள் வாழ்விலே, சில வேளைகளிலே உயர்வுகளை காணும் போது திருப்தியடைந்து அதிலே தரித்து நின்று மேன்மைபாராட்டுகி ன்றார்கள். பின்னடைவுகளை சந்திக்கும் போது, கடந்தவைகளை நினைத்து துக்கிக்கின்றார்கள். நாம் அப்படியிருக்கலாகாது, 'நான் இலக்கயை அடைந்தாயிற்று, அல்லது என் வாழ்விலே நான் முதிர்சியடைந்து முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், பிரதானமான இலக்கை அடையும்வரைக்கும் இயேசு கிறிஸ்துவை நோக்கி, அவருடைய சாயலிலே வளரும்படிக்கு முன்னேறிச் செல்வோமாக.

ஜெபம்: உண்மையாய் கூப்பிடுகின்றவர்களின் ஜெபத்தை கேட்கின்ற தேவனே, நீர் என்னுடைய பரம பிதா என்பதின் கருப்பொருளை உணர்ந்து, அன்போடும் விசுவாசத்தோடும் உம்மண்டை வர உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 1:10

Philippians 3:12 - Not as though I had already attained, either were already perfect: (KJV)

Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada

Background Music: Recorded by Grace Tabernacle apostolic church

06/01/2026

வாக்குத்தத்தம்பண்ணினவர் | THE ONE WHO PROMISED | INNERMAN DEVOTIONS

எபிரெயர் 10:23 - வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.

இந்த வருடத்தின் ஐந்து மாதங்களை கடந்து வந்திருக்கின்றோம். வாக்குரைத்த தேவனாகிய கர்த்தர்தாமே தம் வாக்கிலே உண்மையுள்ள வராக இருந்து நம்மை வழிநடத்தி வருகின்றார். உங்கள் வாழ்க்கையிலே நீங்கள் எதிர்பார்த்திருக்கும் சில காரியங்களை தாமாகின்றது என்று சோர்ந்து போய்விடாதிருங்கள். கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசத்திலே நிலைத்திருங்கள். நித்திய ஜீவனை அடைந்து கொள்வதே விசுவாசிக ளின் இலக்கு என்பதை மறந்து போய்விடாதிருங்கள். கடந்த ஐந்து மாதங்களாக பிலிப்பியருக்கு எழுதிய நிரூபத்தை மையமாக வைத்து தியானித்து வருகின் றோம். முதல் இரண்டு அதிகாரங்களிலும், நன்றியறிதலும், வாழ்த்துக்களும், சபையோரின் நிறைவுகள், கிறிஸ்துவின் நற்செய்தியை அறி விப்தே நோக்கம், எச்சரிப்புக்கள், சபையோரின் குறைவுகள், இந்த உல கத்திலே இருந்தாலும், கடந்து சென்றாலும், கிறிஸ்துவோடு வாழ்வதன் மேன்மை, கிறிஸ்துவுக்காக பாடுகளை சகித்தல், மனத்தாழ்மையோடு ஐக்கியமாக இருத்தல், கிறிஸ்துவின் சிந்தையை தரித்திருத்தல், கோண லும் மாறுபாடுமான இருளான உலகிலே ஒளி வீசுதல், ஊழியர்களின் மனப்பான்மை போன்ற தலைப்புக்களின் கீழே முதல் இரண்டு அதிகா ரங்களையும் தியானித்தோம், மூன்றாம் அதிகாரத்தின் ஆரம்பத்திலே, கர்த்தருக்குள் சந்தோஷமாயிருத்தல், பின்மாற்றக்காரருக்கு எச்சரிக்கையாக இருத்தல், மேன்மை பாராட்டுதல், கிறிஸ்துவை அறியும் அறிவிலே வளருதல், விசுவாசத்திலே நிலைத்திருத்தல் போன்றவற்றைக் குறித்து கடந்த நாட்களிலே தியானித்து வந்தோம். இந்நாட்களிலே, நம்முடைய இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்பதைக் குறித்து தியனம் செய்ய இருக்கின்றோம். நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப்பட்ட நாம், கொஞ்சக் காலம், யாத்திரிகளாக இந்த உலத்தைக் கடந்து கொண்டிருக்கின்றோம். வாழ்விலே குறைவுகள், நிறைவுகள் ஏற்பட்டிருக்கின்றது. சோதனைகள் வேதனைகள் இருந்தது. உயர்வுகள் தாழ்வுகள் தவிர்க்க முடியாதவைகள். தவறிப்போகும் நேரங்கள் உண்டு. நாட்கள் கொடியதாக மாறிக் கொண்டிருக்கின்றது. அவைகள் மத்தியிலே சோர்ந்து போகதிருங்கள். கிறிஸ்துவைப் பற்றுpம் விசுவாசத்தைவிட்டு தளர்ந்து போகாமல், ஆதியிலே கொண்டிருந்த வைராக்கியத்தை புதுப்பித்தவர்ளாக நிறைவை நோக்கி முன்னேறு ங்கள். அழைத்தவர் உண்மையுள்ளவர். முடிவு பரியந்தம் வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்: வாக்குமாறாத தேவனே, கடந்து வந்த பாதைகளிலே நீர் எனக்கு காட்டிய இரக்கத்திற்காக நன்றி, முடிவுபரியந்தம் நான் உம்மிலே நிலைத் திருக்க உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பயிர் 3:12

Hebrews 10:23 - For He is faithful that promised; (KJV)

Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada

Background Music: Recorded by Grace Tabernacle apostolic church

05/31/2026

மேன்மையானவைகளை பற்றிக் கொள்! | LAY HOLD OF GREAT THINGS | INNERMAN DEVOTIONS

1 தீமோத்தேயு 6:12 - விசுவாசத்தின் நல்ல போரா ட்டத்தைப் போராடு

தேவனுடைய ஊழிக்காரனாகிய பவுல், கிறிஸ்து இயேசுவை அறியும் அறிவின் மேன்மைக்காக, இந்த உலகத்திலே வசதிகளையும், செல்வாக்குகளையும் தரக்கூடிய யாவற்றையும் விட்டுவிட்டார். இந்த உலகத் திலே வாழும் கிறிஸ்து இயேசுவை அறியாத சிலரும் அவ்வண்ணமாக தங்களுக்குண்டான யாவற்றையும் துறந்து துறவியானார்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கின்றோம். அப்ப டியானால், நம்முடைய மேன்மை என்ன? உலகத்தையும் அதிலுள்ள வைகளையும் விட்டுவிடுவது மேன்மை அல்ல. 'கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்பட வேண்டும்.' கிறிஸ்து இயேசுவை அறியும் அறிவின் மேன்மைக்காக அவரைப் பற்றும் விசுவாசத்திலே நிலைத்திருப்பதே நம்முடைய மேன்மை. ஒருவன் உண்மையாக கிறி ஸ்து இயேசுவிலே நிலைத்திருந்தால், அவருடைய வார்த்தை அவனு க்குள் நிலைத்திருக்கும். அவருடைய வார்த்தையில் அவன் நிலைத் திருப்பதினால், அவன் தன் வாழ்வின் கனிகள் வழியாக கிறிஸ்து இயேசுவை வெளிப்படுத்துவான் சில வேளைகளிலே சில விசுவாசிகள் தங்களிடத்தில் இல்லாதவைகளை குறித்து பேசும் போது, அதிலே தங்களுக்கு நாட்டம் இல்லை என்று ஆணித்தரமாக கூறிக் கொள் வார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விசுவாசி யானவன், அன்றாட மாதாந்தம் தனக்கு கிடைக்கும் சம்பளத்திலே தன் குடும்பத்தின் தேவைகளை சந்தித்து வந்தான். ஐசுவரியத்தைக் குறித்து பேசும் போது, அது அவனித்டதில் இல்லாதிருந்ததால், ஐசுவரியம் மனிதர்களின் மனதை கடினப்படுத்தி, வழிவிலகச் செய்யும் என்று ஆணித்தரமாக பேசிக் கொள்வான். ஆனால், அவனோ கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்திலே நிலைத்திருக்கவில்லை. தேவ வார்த்தையானது அவனுக்குள் இல்லை. அதனால் என்ன பலன்? 'நீயோ, தேவனுடைய மனுஷனே, பண ஆசையை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்;' என்று தேவ ஊழியராகிய பவுல், தீமோத்தேயு என்னும் ஊழியனுக்கு கூறியது போல, நாமும், உலகத்தின் வஞ்சனைக்குள் சிக்கி விழாதபடிக்கு, கிறிஸ்து இயேசுவை பற்றும் மேன்மையானவைகளை நாடித் தேட வேண்டும்.

ஜெபம்: பரலோக மேன்மைக்காக என்னை அழைத்தவரே, கிறிஸ்து இயே சுவிலே நிலைத்திருந்து, அவரை என் வாழ்விலே வெளிப்படுத்தும், கனி கொடுக்கும் வாழ்க்கை வாழும்படிக்கு என்னை உம்முடைய வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 15:1-5

1 Timothy 6:12 - Fight the good fight of faith,.(KJV)

Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada

Background Music: Recorded by Grace Tabernacle apostolic church

05/30/2026

கிறிஸ்துவை ஆயதப்படுத்திக்கொள்ளுங்கள் | HAVE CHRIST AS GAIN | INNERMAN DEVOTIONS

பிலிப்பியர் 3:11 - அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.

கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ள வேண்டும். சட்டதிட்டங்கள், மதச்சடங்குகள், மனித முறைமைகளிhல் உண்;டாகும் நீதியை களைந்து போட வேண்டும். அவைகளை முற்றாக விட்டுவிட்டு, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவர்களாக இருந்து, அத்தோடு, கிறிஸ்துவுக்குள் ஜீவிக்கின்றோம் என்று காணப்பட வேண்டும். அத ற்காக ஒவ்வொரு விசுவாசியும் என்ன செய்ய வேண்டும்? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும், 1. அவரு டைய உயிர்த்தெழுதலின் வல்லமை யையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகின்ற அறிவிலே வளரவேண்டும். 2. கிறிஸ்துவுடன் மரணமதின் சாயலிலே இணைந்து கொள்ள வேண்டும். 3. நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திரு ப்பதற்குத் தகுதியாக வேண்டும். எனவே, இந்த காரியங்களுக்கு தடை யாக எவைகள் வருகின்றதோ, அவைகள் யாவும் அழிவுக்குரியவை களும், அழிந்து போகின்றவைகளுமாயிருப்பதால், கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்றுவிட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன் எண்ணுகின்றேன் என்று தேவ ஊழயிராகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிருபத்திலே 3ம் அதிகாரத்திலே கூறியிருக்கின்றார். அதாவது, கிறிஸ்து இயேசுவைப் போல, நாமும், இரத்தம் சிந்தி, சிலுவையிலே தொங்கி மரிக்க வேண்டும் என்பது பொருளல்ல. கடினமானவைகள் யாவற்றையும் அவர்தாமே நமக்காக நிறைவேற்றி முடித்திருக்கின்றார். 'அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். புதிதும், ஜீவனுமான வழியை உண்டாக்கியிருக்கின்றார். அதிலே நாம் பிரவே சித்து, வலது புறமுமோ, இடது புறமோ சாயாமல் நடப்பதற்கு, சத்திய ஆவியானவரை கொடுத்திருக்கின்றார். எனவே, உலக கவலை கள், ஜீவனத்தின் பெருமைகள் ஒன்றும் உங்களை மேற்கொள்ளாத படிக்கு விழிப்புள்ளவர்களாக இருந்து, உலகத்தினாலும் உண்டாகும் பாரமான அழுத்தத்தினால், சோர்ந்து போகாமல், விசுவாசத்தை தொடக் கின்றவ ரும் முடிக்கின்றவருமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி முன்னேறுங்கள்.

ஜெபம்: நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, நீர் ஏற்படு த்தின செம்மையான வழியை நான் அற்பமாக எண்ணி, நஷ்டமடையாதபடிக்கு எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 91:16

Philippians 3:11 - for whom I have suffered the loss of all things, and do count them but dung,(KJV)

Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada

Background Music: Recorded by Grace Tabernacle apostolic church

Address

210 Silver Star Boulevard , Unit 807
Toronto, ON
M1V5J9

Opening Hours

Tuesday 7pm - 8:30pm
Sunday 9am - 1pm

Telephone

+14166132909

Alerts

Be the first to know and let us send you an email when Grace Tabernacle Apostolic Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share