Grace Tabernacle Apostolic Church

Grace Tabernacle Apostolic Church We are a Tamil Christian Church (bi-lingual)congregation in Canada. We primarily work amongst the fir

06/25/2026

நிலையான நகரத்தை நோக்கி.... | TOWARDS CONTINUING CITY.... | INNERMAN DEVOTIONS

எபிரெயர் 13:14 - நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்.

இந்தப் பூமியிலே, தங்களை பக்தர்கள் என்று கூறிக் கொள்கின்றவர்கள், புனித ஸ்தலங்களை நோக்கி யாத்திரை செய்யும்போது, பொதுவாக, அவர்களுடைய நோக்கம் ஒன்றாகவே இருக்கின்றது. அவர்கள் பல்லாயிரம் மைல்களை கடந்து செல்கின்றார்கள். போகும் வழிகளிலே, தங்குமிடங்களிலே இரவிலே தூங்கிவிட்டு, அதிகாலையிலே தங்கள் யாத்திரைரைய மறுபடியும் ஆரம்பிக்கின்றார்கள். போகும் வழியிலோ அல்லது தங்கும் இடங்க ளிலே நடைபெறும் அசௌகரியங்களை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. தங்களைப் பார்த்து நகைக்கின்றவர்களை பற்றி கவனம் செலுத்துவதில்லை. அநாவசியமற்ற பேச்சு வார்த்தைகளிலோ, வாக்குவாதங்களிலோ நேரயத்தை விரயப்படுத்துவ தில்லை. வேறு எந்த காரியங்களும் தங்கள்; கவனத்தை திருப்புவதற்கு இடங் கொடுப்பதில்லை. எந்த வேளையிலும் தங்கள் இலக்கை குறித்த கவனமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். காரியம் அப்ப டியாக இருந்தால், நித்தியமான, அழிவில்லாத, ராஜ்யத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நாம், எவ்வளவு ஜாக்கிரதையுள்ள வர்களாக இருக்க வேண்டும். சில சமயங்களிலே, பெரிதான தியாகங்களை தங்கள் வாழ்வில் செய்து வரும் விசுவாசிகள், அற்பமான சின்ன காரியத்திற்டகாக தங்கள் பிரதானமான நோக்கத்தை மறந்து போய்விடுகின்றார்கள். ஒருவன் தான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை, சூதாட்டத்திலே பந்தயம் கட்டி, முழுவதையும் இழந்து போவதைப் போல, தங்கள் கடும் பிரயாச ங்களை யாவையும் பலனற்றுப்போகும்படி செய்து விடுகின்றார்கள். இன்னும் சிலர், வரப்போகின்ற ராஜ்யத்தின் மேன்மையை உணராமல், தற்போது இருக்கும் ராஜ்யத்தின் அழிந்து போகின்ற மேன்மைகளை இறுகப் பற்றிக் கொள்கின்றார்கள். ஒரு யாத்திரியானவன், தான் இரவு தங்கும் விடுதியிலே நிரந்தரமாக தங்க முடிவெடுத்துவிட்டால், அவனுடைய மதியீனத்தைக் குறித்து என்ன கூறிக் கொள்ள முடியும்? பிரிய மான சகோதர சகோதரிகளே, விசுவாசிகளாகிய நாம் வசிக்கும் இந்த பூமியில் உண்டாகும் எந்த மேன்மையும், நான் தாபரிக்கும் நிலையான நகரத்திற்கு நிகரானதல்ல. எனவே, வரப்போகிற நிலையான நகரமாகிய பரலோகத்தை நாடித் தேட வேண்டும். பூமியிலே உங்களுக்குப் பொக்கி ஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்;. நிலையான குடிப்யிருப்பாகிய பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள் அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை.

ஜெபம்: பரலோக தேவனே, இந்த பூமி எனக்கு சொந்தமானதல்ல என் பதை ஒருபோதும் மறவாமல், என் சொந்த தேசமாகிய பரலோகத்தை நாடி, அதன் மேன்மைகளை தேட எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:21

Hebrews 13:14 - For here have we no continuing city, but we seek one to come. (KJV)

Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada

Background Music: Recorded by Grace Tabernacle apostolic church

06/24/2026
06/24/2026

வாடகை வீடு | RENTED HOUSE | INNERMAN DEVOTIONS

சங்கீதம் 23:6 - என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த குடியானவன், அதிகமாக பிரயாசப்பட்டு உழைத்து வந்தான். தற்போது வாடகை வீட்டிலே வாழ்ந்து வந்த அவ னுக்கு, தன் குடும்பத்தோடு, சொந்த வீட்டிலே வசிக்க வேண்டும் என்று வாஞ்சையாய் இருந்தான். தனக்கு சொந்தமாக ஒரு அளவான வீட்டை கட்ட ஆரம்பித்தான். தன்னுடைய உழைபின் பிரயாசத்தினாலே உண் டாகும் பலனை, வீண் செலவு செய்யாமல், அந்த பணத்தை சொந்த வீட்டை கட்டுவதற்கு முதலீடு செய்து வந்தான். தான் வாழும் வாடகை வீட்டிலே எளி மையாக வாழ்ந்து வந்தான். அவனை கண்ட உற்றார், உறவினர்களில் சிலர், நீ ஏன் இப்படி வாழ்கின்றாய்? கடுமையாக உழை க்கும் நீ, அதன் பலனை அனுபவிக்க வேண்டாமா? பிள்ளைகள் இந்த வயதில் உண்டு குடித்து மகிழ்ந்திருக்காவிட்டால், எந்த வயதில் அதை செய்யப் போகின்றார்கள் என்று கூறிக் கொண்டார்கள். அவனோ, அவர்களுக்கு மறுமொழியாக: நானும் என் குடும்பமும் பட்டினியாக இருக்கவில்லை. பிள்ளைகள், தங்கள் வயதிலே செய்ய வேண்டிய காரியங்களை நிறைவேற்வதற்கான ஒழுங்குகள் யாவும் செய்யப்பட்டிருக்கின்றது. நாங்கள் வசிக்கும் வீட்டில் முதலீடு செய்வதற்கு அது எங்களுக்கு சொந்தமானதல்ல. சில அசௌகரியங்கள் உண்டு. ஆனால், எங்களுடைய நிரந்தர வீடு கட்டப்பட்டபின்பு, நாங்கள் அங்கே சென்று விடுவோம். இப்போதுள்ள பிரச்சனைகள் ஒன்றும் அங்கே இருக்காது என்று தயவாக கூறினான். கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருக்க அழைப்பை பெற்ற அருமைய சகோதர சகோதரிகளே, நாம் வாழும் இந்த உலகம், நமக்கு ஒரு வாடகை வீடு. இது நிரந்தரமான வாசஸ்தலம் அல்ல. 'இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்க ப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.' 2 பேதுரு 3:7ல் வாசிக்கின்றோம். எனவே, ஞானமுள்ள பிள்ளைகளைப் போல, அநித்தியமானவைகளிலே உங்கள் காலங்களையும், வளங்களையும் முதலீடு செய்யாமல், நித்திய வீட்டிற்குரியவைகளிலே முதலீடு செய்யுங்கள். இவ்வுலகத்தை அனுபவி க்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே. (1 கொரி 7:31)

ஜெபம்: பரலோக தேவனே, அநித்தியமானவைகளிலே என் நாட்களை நான் விரயப்படுத்தாதபடிக்கு,நித்தியத்திற்குரியவைகளை பற்றுக் கொள்ளும்படிக்கு உணர்வுள்ள இருயதத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:20

Psalms 23:6 - Surely goodness and mercy shall follow me all the days of my life: and I will dwell in the house of the Lord for ever. (KJV)

Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada

Background Music: Recorded by Grace Tabernacle apostolic church

06/23/2026

நிரந்தர வதிவிடம் | PERMANENT DWELLING PLACE | INNERMAN DEVOTIONS

ரோமர் 2:7 - சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.

இரட்சிப்பை பெற்றபின்பு தங்கள் சுய விருப்பப்படி பழைய வாழ்க் கைக்கு திரும்புகின்றவர்களை குறித்து எச்சரிக்கையாயிருங்கள், பொல் லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், இரட்சிப்படைந்த பின்பு தாங்கள் விட்டு வந்த மதச்சடங்குகளுக்கு திரும்புகின்றவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்பதைப் குறித்து தேவனுடைய ஊழியக்காரனாகிய பவுல், பிலிப்பி யர் 3ம் அதிகாரத்தின் ஆரம்பத்தி லே திரும்பம் ஞாபகப்படுத்தியத்தைக் குறித்து நாங்கள் தியானித்து வந் தோம். மேலும், இப்படிப்பட்டவர் கள், பூமிக்குரியவைகளை சிந்தித்து, அவைகளை நாடித் தேடுகின்றார் கள். தங்களுக்கு ஆதயம் உண்டா கும்படி, விசுவாச மார்க்கத்தாரை வஞ் சிக்கும்படி, ஆண்டவர் இயேசு கிறி ஸ்துவின் நாமத்தை துஷ;பிரயோகம் செய்கின்றார்கள் என்று கூறியிரு க்கின்றார். இப்படிப்பட்ட கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடு விலே, முதலாவதாக: விசுவாசிகளாகிய நம்முடைய இருதயமானது பர லோகத்திற்குரியவைகளை வாஞ்சிக்க வேண்டும். ஏனெனில் நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிரு க்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண் டிருக்கிறோம். அந்த நாள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாள். ஆதலால், இரண்டாவதாக: கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புர வானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்க வேண்டும். இந்த உலக த்தின் போக்கில் வாழாமல், அநேக தியாகங்களை செய்து வருகின் றீர்கள். கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் அதிகமாக பிரயாசப்பட்டு வருகின்றீர்கள். அந்த இலக்கை அடையாதபடிக்கு, புறம்பேயிருக்கின்ற அவவிசுவாசிகளோ, அல்லது வெளிவேஷம் தரித்து, உள்ளே இருக்கின் றோம் என்று தங்களை விசுவாசிகள் போல காட்டிக் கொள்ளும் கள்ளப் போதகர்களோ உங்கள் பார்வையை திசைதிருப்பி, உங்கள் கண்களை உலகத்திலே பதிக்க வைப்பதற்கு இடங் கொடாதிருங்கள். ஆரம்பதிலே கொண்ட வைராக்கியத்திலே உறுதியாய் நில்லுங்கள். ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தொடர்ந்து நாடித் தேடுங்கள், அப்படியாக உறுதியாய் தரித்திருப்பவர்களுக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நித்திய ஜீவனை அளிப்பார்.

ஜெபம்: நான் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்று என்னை வேறு பிரித்த தேவனே, என்னுடைய கண்களை பரலோக மேன்மையிலே பதியவைத்து ஓட எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:12

Romans 2:7 - To them who by patient continuance in well doing seek for glory and honour and immortality, eternal life: (KJV)

Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada

Background Music: Recorded by Grace Tabernacle apostolic church

06/22/2026

திவ்விய சுபாவத்தின் பங்காளிகள் | PARTAKERS OF DIVINE NATURE |INNERMAN DEVOTIONS

2 பேதுரு 1:4 - இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு

இந்த உலகத்தின் போக்கில் வாழும் கல்விமான்கள், இந்த உலத் தின்படி சிந்திக்கின்றார்கள். பூமிக்கடுத்தவைகளை சிந்தித்து. உலக ஞானத்தை நாடுகின்றார்கள். நாங்களோ, இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டுவதில்லை என்று தேவ ஊழியராகிய பவுல்தாமே கொரிந்தியருக்கு எழுதிய நிரூபத்திலே கூறியிருக்கின்றார். சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவை மேன்மை பாராட்டுகின்றவர்கள், இந்த பூமிக்குரியவைகளை தேடாமல், மேலானவைகளை நாடித் தேடுகின்றார்கள். அவர் கள் உலக ஞானத்தையல்ல, தேவ ஞானத்தை வாஞ்சிக்கின்றார்கள். அவர் மேலும் குறிப்பிடுகையில்: தேறினவர்க ளுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிற வர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத் தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக் களில் ஒருவனும் அறியவில்லை. அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண்காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.' ( 1 கொரி 2:6-10) இந்த உலக ஞானத்தை கொண்டவர்கள், இந்த உலகத்தின் வேஷத்தை தரித்து, இந்த உலகத்திலுண்டானதும், அற்ப பிரயோஜனமுள்ளதும், அழிந்து போகிறதுமான மேன்மைகளை குறி த்து பெருமையடைகின்றார்கள். தேவ ஞானத்தை பெற்றவர்கள், தேறின சிந்iயுடையவர்களாக இருக்கின்றார்கள். ஒருவேளை அவர்கள் இந்த உலகத்திலே மேன்மையானவைகள் என்று கருதப்படுபவைகளை கொண் டிருந்தாலும், இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, உலத்திலுள்ளவைகளைக் குறித்து மேன்மைபாராட்டாமலும், பூமிக்குரியவைகளை சிந்திக்காமல், பரலோகத்திற்குரியவைகளையே தியானமாக கொண்டிருக்கின்றார்கள்.

ஜெபம்: தூய ஆவியை எனக்கு அருளின தேவனே, நான் இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, பரலோகத்திற்குரியவைகளை பற்றிக் கொள்ள கிருபை செய்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 7:31

2 Peter 1:4 - that by these ye might be partakers of the divine nature (KJV)

Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada

Background Music: Recorded by Grace Tabernacle apostolic church

06/21/2026

வஞ்சிக்கின்றவர்களை விட்டு விலகுங்கள் | DEPART FROM DECEIVERS | INNERMAN DEVOTIONS

1 தீமோத்தேயு 6:11 - நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவ பக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.

'ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன் னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.' என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனாகிய பவுல், பிலிப்பி சபையிலுள்ள விசுவாசிகளுக்கு கூறியிருப்பதை பிலிப்பியர் 3ம் அதிகாரம் 18ம் வசனத்திலே வாசிக்கலாம். புறம்பே இருக்கின்றவர்களின் ஒரு சாரார், அடையாளங்களையும், உலக ஞானத்தையும் தேடுகின்றார்கள். இவர்கள் தங்கள் ஆத்துமாவை கெடுத் துக் கொள்ளும்படி, கிறிஸ்துவை எதி ர்த்து நிற்கின்றவர்கள் எனவே, சிலு வையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது. இவர்கள் தங்களுக்கு தெரியாதவைகளை தூஷித்து, புத்தி யில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்கு தெரித்திருக்கின்றவைகளினாலே தங்களை கெடுத் துக் கொள்கின்றார்கள். வேற்றுமையான உபதேசங்களை கொண்டவர்கள்: கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாய த்தொழிலென்று எண்ணுகிறவர்களுமா யிருக்கிறார்கள். இவர்கள் சுய இலாபத்தை நாடுகின்றவர்கள். மேலும் வேறு விதமாய் சிந்திக்கின்றவர்கள், கிறிஸ்வின் நாமத்தை சொல்லிக் கொண்டு, சத்திய வேதம் பாவம் என்று கூறும் அசுத்தங்களை, வாழ்வின் சட்டமாக்கிக் கொள்கின்றார்கள். தீமையை நன்மை என்று கூறிக் கொண்டு, துணிகரமாக பாவத்தை குறித்து மேன்மை பாராட்டுகின்றவர்கள். 'அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சை' என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. வஞ்சிக்கின்ற போதனைகளை போதிக்கின்றவர்களுடைய இலக்கு கிறிஸ்து அல்ல. இவர்கள் நித்திய ஜீவனை குறித்து சிந்திப்பதில்லை. இதோ, எல்லாருக்கும் நியாயத் தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கி றதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று ஏனோக்கு முன்னறிவித்தான்

ஜெபம்: பரலோக தேவனே, ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்தி க்கேற்ற உபதேசங்களையும் நான் கைகொள்ளவும், வேற்றுமையான உபதேசங்களை விட்டு விலகவும் தேவ ஞானத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 1:18

1 Timothy 6:11 - But thou, O man of God, flee these things; and follow after righteousness, godliness, faith, love, patience, meekness.(KJV)

Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada

Background Music: Recorded by Grace Tabernacle apostolic church

Address

210 Silver Star Boulevard , Unit 807
Toronto, ON
M1V5J9

Opening Hours

Tuesday 7pm - 8:30pm
Sunday 9am - 1pm

Telephone

+14166132909

Alerts

Be the first to know and let us send you an email when Grace Tabernacle Apostolic Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share