06/03/2026
முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்கள் | MORE THAN CONQUERORS | INNERMAN DEVOTIONS
ரோமர் 8:37 - இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
'உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்' என்று ஆண் வராகிய இயேசு கூறியிருக்கின்றார். சில வேளைகளிலே, விசுவாச மார் க்கத்தார் தாங்கள் இன்னும் உலகத்திலே தான் வாழ்க்கின்றோம் என் பதை விசுவாசிகள் மறந்து போய்விடுகின்றார்கள். அதனால் வாழ்க்கை யிலே எதிர்பாராத உபத்திரவங்கள் வரும் போது, சோர்ந்து போய்விடு கின்றார்கள். இன்று சில சாரார் உலக ஆசீர்வாதங்களையும், ஐசுவரி யத்தையும் குறித்து தவறாக போதி த்து, சில விசுவாசிகளின் மனத்தை இந்த உலகத்தின் போக்கிற்கு திரு ப்பி விடுகின்றார்கள். 'அன்றியும் கிறி ஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்கமனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.' 'உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்தி லிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக் கிறது.' என்பதை மறந்து போய்விடுகின்றார்கள். இந்த உலகத்தால் உபத்திரவங்கள் ஏற்பட்டாலும், ஆண்டவர் இயேசுவை சார்ந்து வாழ் கின்றவர்கள் அவைகள் மத்தியிலே வெற்றி சிறக்கின்றார்கள். அப்போ ஸ்தலராகிய பவுல், ரோமருக்கு எழுதிய நிரூபத்தின் 8ம் அதிகார த்திலே, 'உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப் படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, hநச மோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன் புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்க ளானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்கா ரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ; டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவ னுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்தி ருக்கிறேன் என்று அறிக்கையிட்டது போல, நாமும் நம்முடைய வாழ்விலே அந்த அறிக்கையிலே உறுதியாய் தரித்திருக்க வேண்டும்.
ஜெபம்: அன்பின் பரலோக தேவனே, இந்த உலகத்திலே என் வாழ்விலே உண்டாகும் பின்னடைவுகளை கண்டு, நான் சோர்ந்து போகாமல், உம் வார்த்தையினால் ஜெயங்கொள்ள வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 யோவான் 2:15
Romans 8:37 - Nay, in all these things we are more than conquerors through him that loved us. (KJV)
Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada
Background Music: Recorded by Grace Tabernacle apostolic church