The Crossway Ministries

The Crossway Ministries Please check out our website www.crosswayministries.ca which contains the Pastor's profile, our mission and other useful resources.

06/16/2026

Romans 6 Episode 32 in Tamil - The Crossway Ministries (Canada)

06/16/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுன் 17

அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக: அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்? இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு. நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி (யோபு 38:1-4).

“பரிணாமத்தின் கேலிக்கூத்து”

ஒருவித எச்சரிக்கையும் இல்லாமல் சடுதியாகக் கர்த்தர் தோன்றினார். வளிமண்டலத்தில் ஏதோ ஒருவித குழப்பத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார். அவருடைய பிரசன்னம் ஒரு பிரளயம்போலவும், எதிர்பாராத அதிர்ச்சியைத் தருவதாயும், முற்றிலும் திணறடிப்பதாகவும் இருந்தது. “அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்?” என்று யோபுவினுடைய சிநேகிதர்களையும் எலிகூவையும் குறிப்பிட்டாரேதவிர யோபுவைக் குறிப்பிடவில்லை; யோபுவைப்பற்றி யோபு 42:7ல் “....என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக் குறித்து நிதானமாய்ப் பேசவில்லை” எனக் குறிப்பிடப்பட்டதிலிருந்து இந்த வசனத்தில் யோபுவைப்பற்றிக் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது; இப்பொழுது யோபு 38:3ல் யோபுவைப்பற்றிக் கர்த்தர் பேசுகிறார்.

யோபு மிகவும் தாழ்மையான நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தும், தான் பேசும்பொழுது “இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு” என அதிகாரத்துடன் கோருகிறார். இந்த அதிகாரபூர்வமான கோரிக்கையுடன் யோபுவின் மறுசீரமைப்பு ஆரம்பிக்கிறது; தேவன் வீழ்ந்துபோன மனுஷனைத் தூக்குகிறார். அவர் மனுஷனைக் கீழேதள்ளி விழுத்துவதில்லை; அவனுக்கு எந்தவிதமான தெரிவும் இல்லாத இடத்திலேயே விழுவதற்கு அனுமதிக்கிறார். “நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? ” என யோபு 38:4ல் கேட்கிறார்; இப்படிப் பல கேள்விகளைக் கேட்டு, இவைகளைச் சிருஷ்டித்த எனக்கு உனது பிரச்னையைத் தீர்ப்பது அற்பகாரியம் என்கிறார்; தேவனே எல்லாவற்றையும் சிருஷ்டித்தார் (ஆதி. 1:31). சிருஷ்டி இருந்தால், சிருஷ்டிகர் இருந்தேயாகவேண்டும்; ஆனபடியினால்த்தான், தர்க்கவாதத்திற்குட்பட்ட பரிணாமம் ஒரு கேலிக்கூத்தேயாகும்; பரிணாமத்தை ஒரு கொள்கை என்று சொல்லமுடியாது; ஏனென்றால், அது கொள்கையாயிருந்தால், அடிப்படையான அந்தக் கோரிக்கை நிரூபிக்கப்படவேண்டும். பரிணாமத்தில் எவ்வித உண்மையுமில்லை என்பது கர்த்தருடைய கேள்வியினால் நிரூபிக்கப்படுகின்றது.

06/15/2026

Romans 6 Episode 31 in Tamil - The Crossway Ministries (Canada)

06/15/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுன் 16

ஒரு மரத்தைக் குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்; அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும் (யோபு 14:7-9).
இளமரம்போலக் கிளைவிடும்”

யோபு, ஒருவனுடைய மரணத்தையும் ஜீவனையும் குறித்துப் பேசுகிறான்; ஆனாலும், இப்பொழுது அவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட வசனங்கள் மிகப்பெரிய ஒரு சத்தியத்தை நமக்குத் தெளிவாக்குகிறது. அவன் அந்த நேரம் தான் பேசினதின் தாற்பரியத்தை அறிந்தானா என்று சொல்வதற்கில்லை; ஒரு மனுஷன் மரிக்கும்பொழுது அவனுடைய ஜீவனும் முடிவுபெறுகிறது என்பது அவனுடைய ஜீவனைப் பொறுத்தளவில் உண்மைதான்; ஆனாலும், யோபு தற்போதைய ஜீவனைப்பற்றியே குறிப்பிட்டிருக்கிறான்; யோபு தான் மறுபடியும் புதுப்பிக்கப்படுவதில் நம்பிக்கையை இழந்துபோனான். அவனுடைய தற்போதைய நிலைமையை உற்றுநோக்குகையில், அது எப்படிச் சாத்தியமாகும் என்பதனைக் கற்பனைபண்ணிப் பார்க்கவும் அவனால் முடியவில்லை; தான் மரிக்கப்போவதை உணர்ந்துகொண்டான். இப்படித் துன்பப்படவேண்டுமாயின் மரிப்பது உத்தமமே என்பது அவனுடைய கணிப்பாகும்.

ஆனாலும், கர்த்தராகிய ஆண்டவர் அவன்மூலம் எதனை உரைக்கிறார் என்பது யோபுவுக்கு விளங்கவில்லை; அதெப்படியென்றால், ஒரு மரத்தை வெட்டும்பொழுது பார்ப்பதற்கு அது அற்றுப்போனதாகவே தென்பட்டாலும் அது “திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்” எனக் கூறப்பட்டிருக்கிறது. வெட்டிப்போடப்பட்ட மரம் திரும்பத் தழைப்பதுபோல, யோபுவும் புதுப்பிக்கப்படுவான் என்பது தெளிவாகிறது; ஆயினும், அந்த நேரத்தில் அதற்குரிய அறிகுறியை அவன் காணவில்லை. இந்தப் பந்தி, அவன் எந்தமாதிரியான விசுவாசியாயிருந்தாலும் அவனுக்கு ஒரு பாரிய உண்மையை வெளிப்படுத்துகிறது.

துரதிஷ்டவசமாக, நம்முடைய வாழ்க்கையில் சிலவேளைகளில் நமக்கெதிராக ஏற்படும் விரோதமான சூழ்நிலைகளினால், பார்வைக்கு எல்லாம் இழந்துபோனதுபோலத் தென்படும்; ஆனால், பரிசுத்த ஆவியானவர்மூலம் இந்தக் கோத்திரத்தலைவன் சொல்வது என்னவெனில், வெட்டிப்போடப்பட்ட மரம் மறுபடியும் தழைக்கும் என்பதேயாகும். வார்த்தையென்ற தண்ணீர் அடிமரத்துக்கு ஊற்றப்பட்டவுடன் அந்த வாசனையினால் “அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும்”; கர்த்தராகிய ஆண்டவராலேயே அதனைச் செய்யமுடியும்; நம்மால் முடியாது. மனுஷன் விசுவாசியாக இருந்தாலும், மறுபிறப்பைப்பெற்று இருந்தாலும் அவன் தானாக அந்த மாற்றத்தைத் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்தமுடியாது; அந்த உண்மையைப் புரிந்துகொள்வது மனுஷனுக்கு அவ்வளவு இலகுவானதல்ல; ஆயினும், அதுவே உண்மையாயிருக்கிறது. மாற்றம் பரிசுத்த ஆவியானவராலேயே கொண்டுவரப்படுகிறது. அதனைச் செய்வதற்கு அவர் தயாராயிருக்கிறார்; நாம் அதனைப் பெறுவதற்குத் தயாரா என்பதனைச் சிந்திப்போமாக.

06/15/2026

Romans 6 Episode 30 in Tamil - The Crossway Ministries (Canada)

06/15/2026

Romans 6 Episode 30 in Tamil - The Crossway Ministries

06/15/2026

Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுன் 15

கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன் மேல்மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப்போனான் (யோபு 1:12).

“அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது”

கர்த்தராகிய ஆண்டவர் யோபுவைச் சோதிப்பதற்குச் சாத்தானுக்குக் அனுமதியைக் கொடுத்திருக்கிறார்; ஆனால், அதற்கு ஒரு வரையறையையும் நியமித்திருக்கிறார்; அந்த வரையறைக்கு அப்பால் சாத்தான் போகமுடியாது; இது சகல விசுவாசிகளுக்கும் பொருந்தும். யோபு இரட்சிக்கப்பட்ட ஒரு மனுஷன்; தேவனுடைய புத்திரர்களில் ஒருவனை இத்தகைய சோதனைக்குத் தெரிவுசெய்வது அவசியமானது.

இங்கு முக்கியமாகக் குறிவைக்கப்பட்டிருக்கும் விஷயம் அவிசுவாசியின் இரட்சிப்பைப்பற்றி அல்ல, ஒரு பரிசுத்தவானின் பக்திவிருத்தியைப்பற்றியும்; சுருக்கமாகப் பரிசுத்தத்தைப்பற்றியுமேயாகும்; இதிலிருந்து தெளிவாகிறது என்னவென்றால், மனந்திரும்பாத பாவி தன்னுடைய மாம்சத்தின் முடிவுக்கு வரவேண்டியது தவிர்க்கமுடியாததாயிருக்கிறது; தேவனுக்குப் பயப்படுகிற மனுஷனும், உத்தமனும், சன்மார்க்கனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுக்கும்கூட இப்படியான சோதனை அவசியமாக இருக்கிறது. யோபுவின் புஸ்தகத்தில் தேவன் சாத்தானைப் பாவித்து, பெருந்துன்பங்களையும், நோய்களையும் கருவிகளாக உபயோகித்து, மனுஷனைத் தன்னுடைய பரிசுத்தத்தில் பங்குபற்றவைக்கிறார்; இவை யாவும் கருவிகளேயாகும்.

தேவனுடைய கரமே இதனைச் செய்தது. யோபுவின் புஸ்தகத்தில் கிறிஸ்தவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும் உண்மை என்னவென்றால், யோபுவுக்கு அனுமதிக்கப்பட்டமாதிரிப் பெருந்துன்பங்கள், துக்கங்கள், வேதனைகள், நோய்கள் அனுமதிக்கப்பட்டவுடன் அவர்கள் தங்களுடைய நேர்மையையும், நாணயத்தையும் கையில் எடுத்து, அது எப்படித் தங்களுக்கு வரமுடியும் என அங்கலாய்க்கிறார்கள். தங்களுடைய நேர்மை, நாணயம், நீதி எல்லாம் தேவனுடைய பார்வைக்கு அழுக்கான கந்தையாயிருக்கிறது (ஏசா. 64:6) என்பதனை அவர்களால் கிரகித்துக்கொள்ள முடியாமலிருக்கிறது.

06/15/2026

Romans 6 Episode 29 in Tamil - The Crossway Ministries (Canada)

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when The Crossway Ministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share