06/03/2026
The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்
ஜுன் 4
அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது, ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று. பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்றுகண்டு, அவனைத் தீவிரமாய் அங்கிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியே போகத்தீவிரப்பட்டான் (II நாளா. 26:19-20).
“உசியாவின் நெற்றியிலே குஷ்டரோகம்”
இரட்சகருடைய தலையீடு இல்லாமல் தேவனைத் தொழுதுகொள்ள முயற்சித்தபடியினால், கர்த்தர் அவனைக் குஷ்டரோகத்தினால் அடித்தார். பிரதான ஆசாரியருடைய நெற்றியில் “கர்த்தருக்குப் பரிசுத்தம்” என்று எழுதப்பட்ட பொற்தகடு கட்டப்பட்டிருக்கிறது. உசியாவினுடைய நெற்றியிலோ பாவம் நிறைந்திருக்கிறது என்பதற்கு அறிகுறியாகக் குஷ்டரோகம் காண்பிக்கப்பட்டிருக்கிறது. நாம் எப்பொழுதும் அறிந்திருக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு விசுவாசியைப் பொறுத்தளவில் அவனுக்குக் கிறிஸ்துவே ஆதாரம் என்பதனையும், சிலுவையின் மூலமாகவே சகலதும் அவனுக்குக் கிடைக்கிறது என்பதனையும் அவன் உறுதியாக அறிந்திருக்கவேண்டும். சிலுவையல்லாமல் கர்த்தரிடத்திலிருந்து வேறேதாவது வழியில் நம்முடைய தேவைகளைப்பெற முயற்சிப்போமானால், உசியா நானே இரட்சகரென உரிமைகோரினதுபோல, சிலவேளைகளில் அறிந்தோ அறியாமலோ நாமும் நாமே இரட்சகர் என்று உரிமைகோருகிறோம்.
உசியா தன்னைத் தேவன் கொல்லப்போகிறார் எனப் பயந்து “தானும் வெளியே போகத்தீவிரப்பட்டான்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேவனுடைய இரக்கத்தினால் உடனடியாக மரிக்காமல் தப்பினான். இப்படியே சுய இரட்சகர்களுக்கும் நடக்கும் என்பதனை அறிந்திருப்போமாக; குஷ்டரோகம் அவனுடைய நெற்றியில் ஆரம்பமாயிற்று; ஆனால், பரிசுத்தத்தைப் பிரதிபலிக்கிற பொற்தகடு பிரதான ஆசாரியரின் நெற்றியில் அணியப்பட்டிருக்கிறது. அந்தச் சிறப்புப் பெயருக்குத் தகுதியானவர் கிறிஸ்து ஒருவரேயாகும். கிறிஸ்துவையும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதையும் விசுவாசிக்கும்பொழுதே மனுஷன் பரிசுத்தமாயிருக்கிறான். கிறிஸ்துவில் பொருத்தமான விசுவாசத்தை வெளிப்படுத்தும்பொழுதே தேவநீதியும், பரிசுத்தமும் ஒருவன்மேல் உடனடியாகவே சுமத்தப்படுகிறது; அப்படியில்லாவிட்டால், பரிசுத்தம் அவனில் இல்லை; குஷ்டரோகமே அவனில் இருக்கிறது; ஆயினும், உசியா மனந்திரும்பினதாக வேதத்தில் சொல்லப்படவில்லை (IIநாளா. 26:23).