The Crossway Ministries

The Crossway Ministries Please check out our website www.crosswayministries.ca which contains the Pastor's profile, our mission and other useful resources.

06/03/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுன் 4

அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது, ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று. பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்றுகண்டு, அவனைத் தீவிரமாய் அங்கிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியே போகத்தீவிரப்பட்டான் (II நாளா. 26:19-20).

“உசியாவின் நெற்றியிலே குஷ்டரோகம்”

இரட்சகருடைய தலையீடு இல்லாமல் தேவனைத் தொழுதுகொள்ள முயற்சித்தபடியினால், கர்த்தர் அவனைக் குஷ்டரோகத்தினால் அடித்தார். பிரதான ஆசாரியருடைய நெற்றியில் “கர்த்தருக்குப் பரிசுத்தம்” என்று எழுதப்பட்ட பொற்தகடு கட்டப்பட்டிருக்கிறது. உசியாவினுடைய நெற்றியிலோ பாவம் நிறைந்திருக்கிறது என்பதற்கு அறிகுறியாகக் குஷ்டரோகம் காண்பிக்கப்பட்டிருக்கிறது. நாம் எப்பொழுதும் அறிந்திருக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு விசுவாசியைப் பொறுத்தளவில் அவனுக்குக் கிறிஸ்துவே ஆதாரம் என்பதனையும், சிலுவையின் மூலமாகவே சகலதும் அவனுக்குக் கிடைக்கிறது என்பதனையும் அவன் உறுதியாக அறிந்திருக்கவேண்டும். சிலுவையல்லாமல் கர்த்தரிடத்திலிருந்து வேறேதாவது வழியில் நம்முடைய தேவைகளைப்பெற முயற்சிப்போமானால், உசியா நானே இரட்சகரென உரிமைகோரினதுபோல, சிலவேளைகளில் அறிந்தோ அறியாமலோ நாமும் நாமே இரட்சகர் என்று உரிமைகோருகிறோம்.

உசியா தன்னைத் தேவன் கொல்லப்போகிறார் எனப் பயந்து “தானும் வெளியே போகத்தீவிரப்பட்டான்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேவனுடைய இரக்கத்தினால் உடனடியாக மரிக்காமல் தப்பினான். இப்படியே சுய இரட்சகர்களுக்கும் நடக்கும் என்பதனை அறிந்திருப்போமாக; குஷ்டரோகம் அவனுடைய நெற்றியில் ஆரம்பமாயிற்று; ஆனால், பரிசுத்தத்தைப் பிரதிபலிக்கிற பொற்தகடு பிரதான ஆசாரியரின் நெற்றியில் அணியப்பட்டிருக்கிறது. அந்தச் சிறப்புப் பெயருக்குத் தகுதியானவர் கிறிஸ்து ஒருவரேயாகும். கிறிஸ்துவையும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதையும் விசுவாசிக்கும்பொழுதே மனுஷன் பரிசுத்தமாயிருக்கிறான். கிறிஸ்துவில் பொருத்தமான விசுவாசத்தை வெளிப்படுத்தும்பொழுதே தேவநீதியும், பரிசுத்தமும் ஒருவன்மேல் உடனடியாகவே சுமத்தப்படுகிறது; அப்படியில்லாவிட்டால், பரிசுத்தம் அவனில் இல்லை; குஷ்டரோகமே அவனில் இருக்கிறது; ஆயினும், உசியா மனந்திரும்பினதாக வேதத்தில் சொல்லப்படவில்லை (IIநாளா. 26:23).

06/03/2026

Romans 6 Episode 19 in Tamil - The Crossway Ministries (Canada)

06/02/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுன் 3

அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான் (IIநாளா. 26:16).

“உசியாவின் பாவம்”

உசியா பலப்படுமட்டும் ஆச்சரியமாக அவனுக்கு அனுகூலம் உண்டாயிற்று என்றும், அவனுடைய கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று என்றும் IIநாளாகமம் 26:15ல் சொல்லப்பட்டிருக்கிறது; தேவன் அவனை ஆசீர்வதித்தார்; ஆனால், அவன் பலப்பட்டபொழுது ஆபத்தான மண்டலத்திற்குள் பிரவேசித்தான். பவுல் அப்போஸ்தலரோ தான் எப்பொழுது பலமாயிருந்தார் என்பதுபற்றி IIகொரிந்தியர் 12:10ல் “அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்” எனக் கூறியிருப்பதை நாம் அவதானமாகக் கவனிக்கவேண்டும்.

ஆனால், நாம் நினைப்பதைவிட உசியாவின் மீறுதல் விபரீதமானது; பொன்தூபபீடத்தில் தூபங்காட்ட எடுத்த முயற்சியின் நிமித்தம் தனக்கு ஒரு இரட்சகர் தேவையில்லை என அவன் பிரகடனப்படுத்துகிறான். ஆசாரியர் ஒருவனே தூபம் காட்டமுடியும்; ஏனென்றால், அவன் கிறிஸ்துவின் மாதிரியும், கிறிஸ்து தேவனுக்கும் மனுஷனுக்குமிடையில் மத்தியஸ்தராகவும் இருக்கிறதைப் பிரதிபலிக்கும் மாதிரியாகவும் இருக்கிறபடியினால், ஆசாரியரைத்தவிர வேறொருவரும் தூபம் காட்டமுயற்சிக்கக்கூடாது.

அப்படியே தற்போதைய கிறிஸ்தவ சபையினரும் சிலுவையை உதாசீனஞ்செய்து, அதனை நிராகரித்து, தங்களுடைய பாவச்செயல்களை உறுதிப்படுத்துகின்றனர். கிறிஸ்துவை இரட்சகராகத் தொழுதுகொள்ளவேண்டும்; சிலுவையின்மூலமே அவர் நம்முடைய இரட்சகராக இருக்கிறார் (Iகொரி. 1:17-18, 23, 2:2). ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை வேறேதாவது வழியினால் தொழுதுகொண்டால் அல்லது வேறொரு வழியினால், அவரைத் தேடினால், அவன் வேறொரு இயேசுவையே தேடுகிறான்; வேறொரு இயேசுவைத் தேவன் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ளமாட்டார் (IIகொரி. 11:4).

06/02/2026

Romans 6 Episode 18 in Tamil - The Crossway Ministries (Canada)

06/01/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

ஜுன் 2

அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்களென்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான் (II நாளா. 24:20).

“தேவனுடைய ஆவி சகரியாவின்மேல் இறங்கியது”

தன் தகப்பனாகிய யோய்தா மரணமடைந்த பின்பு, அவன் குமாரனாகிய சகரியா பிரதான ஆசாரியனாயிருந்தான். விசுவாசி தேவனுடைய கட்டளைகளை மீறும்பொழுது, பணத்தின் ஐசுவரியத்தைப்பெற்றாலும், நிச்சயமாக ஆவிக்குரிய ஐசுவரியத்தைப் பெறமாட்டான். இந்த உண்மையை சகரியாமூலம் கர்த்தருடைய ஆவியானவர் எல்லா மனுஷரும் விளங்கக்கூடிய முறையில் ஒரு தீர்க்கதரிசனத்தைக் கொடுத்தார். அதென்னவென்றால், “நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார்” என்பதேயாகும். அப்படியானால், நாம் அவரை விட்டுவிடாதிருந்தால், அவரும் நம்மைக் கைவிடமாட்டார் என்பது தெளிவாகிறது.

ஆவியானவருடைய அசைவாட்டம் இருந்தால், நிச்சயமாக அங்கே பிசாசின் அசைவாட்டமும் உண்டு என்பதனை நாம் அறிந்திருக்கவேண்டும்; மேற்கூறிய தீர்க்கதரிசனம் வெளிப்பட்டவுடன், ராஜாவும், அவனிடம் வந்துசேர்ந்த யூதேயாவின் பிரபுக்களும் கோபமடைந்து, சகரியாவுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி, அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். இங்கு சொல்லப்பட்டிருக்கும் சகரியா, சகரியா புஸ்தகத்தை எழுதிய தீர்க்கதரிசி அல்ல என்பதனை நாம் அறிந்திருக்கவேண்டும். இரண்டு சகரியாவும் கல்லால் எறியப்பட்டு மாண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவன் ஆலயப்பிராகாரத்திலும் (IIநாளா. 24:21), மற்றவன் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவேயும் (மத். 23:35) கல்லினால் எறிந்து கொல்லப்பட்டனர்.

சகரியா மரிக்கும்பொழுது “....கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்” (IIநாளா. 24:22); அப்படியே நியாயத்தீர்ப்பு அவர்கள் எல்லார்மேலும் வந்தது (IIநாளா. 24:23-25). நடந்த சம்பவத்தைப் பார்க்கும்பொழுது யோவாஸ் பரலோகத்திற்குச் சென்றிருப்பானா என்பது சந்தேகமாயிருக்கிறது. எப்படியான ஆரம்பம் எப்படி முடிந்தது? இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை, மனுஷன் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதொன்றே தேவையானது; ஆனால், அவன் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியாவிட்டால், தேவனுடைய வார்த்தைக்கும் கீழ்ப்படிய அவனால் முடியாது; கீழ்ப்படியவேண்டிய அந்த விசுவாசம், சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவாகும் (Iகொரி. 2:2).

06/01/2026

Romans 6 Episode 17 in Tamil - The Crossway Ministries (Canada)

06/01/2026

Romans 6 Episode 16 in Tamil - The Crossway Ministries (Canada)

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when The Crossway Ministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share