Sai Baba சாய் பாபா

Sai Baba சாய் பாபா SAI RAM ‘Serve All – Help All’

சீரடி சாயி பாபா தமிழ் குழுமம் (Tamil Community) என்பது சாயி பாபாவின் போதனைகளை தமிழர்களுக்கு பரப்புவதை நோக்கமாகக் கொண்ட ஒரு இயக்கம் ஆகும்.
இந்த இயக்கம், சாயி பாபாவின் போதனைகள் மூலம் அன்பையும், அமைதியையும் பரப்பவும், பக்தர்களுக்கு ஆன்மீக வழிகாட்டுதலை வழங்கவும் முயல்கிறது.

உங்கள் வாழ்க்கை நீங்கள் நினைத்தவாறு மாற கர்மாவின் இந்த 9 விதிகளை பின்பற்றுகிறீர்களா? என்பதை இப்போதே சோதித்து பாருங்கள்.*...
12/15/2025

உங்கள் வாழ்க்கை நீங்கள் நினைத்தவாறு மாற கர்மாவின் இந்த 9 விதிகளை பின்பற்றுகிறீர்களா? என்பதை இப்போதே சோதித்து பாருங்கள்.**

நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப பலன்களையும் பெறுகிறோம். சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. நான் நினைக்கத் தானே செய்தேன்.. செயல்படுத்தவில்லையே என்று சாக்குபோக்கு சொல்வது கர்மாவிடம் செல்லாது. உங்கள் வாழ்க்கை நீங்கள் நினைத்தவாறு மாறுவதற்கு, கர்மாவின் இந்த 9 விதிகள் என்னென்ன? என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் அதை அறிவோம் வாருங்கள்.

விதி 1
பிரபஞ்சம் நாம் செய்வதை கவனித்துக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தில் நீங்கள் எதை செய்தாலும், அது உங்களுக்கே திரும்பி வரும். நல்லது செய்தால் நல்லதும், கெட்டது செய்தால் கெட்டதும் ஏதாவது ஒரு வழியில் உங்களை வந்தடைந்தே தீரும். இதை மாற்றுவது என்பது இயலாது.

விதி 2
பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் நடப்பது யாவும் அதுவாக நடப்பது கிடையாது. நாம் தான் நம் வாழ்க்கையில் தேவையானதை அடைய முன்னிறுத்தி நடத்திச் செல்ல வேண்டும். அதுவாக நடக்கும் என்று உட்கார்ந்து இருந்தால் எதுவும் மாறாது, விழித்துக் கொள்ளுங்கள்.

விதி 3
பிரபஞ்சத்தில் கர்மா எல்லாவற்றையும் உங்களுக்காக செய்யாது. சில விஷயங்களை நீங்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே வாழ்க்கையில் மாற்றமும் வரும். இது எப்படி நடக்கலாம்? என்று கோபித்துக் கொள்வதை விட, நடப்பதெல்லாம் ஒரு காரணத்தோடு நடக்கிறது என்று ஏற்றுக் கொள்ள பழகுங்கள்.

விதி 4
யாரும் நம்மை மாற்ற முடியாது. நம்மை நாமே மாற்றிக் கொண்டால் தான் நம்முடைய வாழ்க்கையும், அதனை பின்பற்றி மாற ஆரம்பிக்கும். இதை நீங்கள் புரிந்து கொள்ளும் வரை உங்கள் வாழ்க்கையும் சலனமற்று கிடக்கும்.

விதி 5
பிரபஞ்சத்தில் யாரால் நமக்கு என்ன நடந்தாலும், அதற்கு அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள். கர்மாவின் படி நமக்கு நடப்பவை யாவும் நம்மால் நடந்தவை ஆகும். நடந்தவற்றுக்கு பொறுப்பேற்க பழகுங்கள், விதி மாறும்.

விதி 6
சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை! அதே போல கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை நம்ப வேண்டும். பிரபஞ்சத்தில் எதுவும் காரணம் இன்றி நடப்பதில்லை. நாம் யாரையும் காரணம் இன்றி சந்திப்பதும் இல்லை.

விதி 7
ஒரே நேரத்தில் இரு வேறு விஷயங்களைப் பற்றி நாம் சிந்திக்க முடியாது. உங்கள் சிந்தையில் வரும் எல்லாவற்றையும், மூளைக்கு கொண்டு சென்று ஸ்டோர் செய்யாதீர்கள். எது முக்கியமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்க தவறாதீர்கள். அலட்சியம் பெருந்துயரை தரும்.

விதி 8
நம் எண்ணங்களும், செயல்களும் தான் நம் நடத்தையில் தெரியும். நடத்தையில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு எண்ணங்களையும், செயல்களையும் சரியாக வழி நடத்துகிறோமா என்று அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

விதி 9
கடந்ததை எண்ணி வருத்தப்பட்டு கொண்டு இருந்தால் நிகழ்ந்து கொண்டிருக்கும் யாவும் நமக்கானதாய் நில்லாமல் கடந்து சென்றுவிடும். கடந்த காலத்தை மாற்றும் சக்தி நமக்கில்லை. நிகழ் காலத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் நீங்கள் இப்போது விட்டதை பிடிக்க, முடங்கிப் போகாமல் முன்னேறி செல்லுங்கள் அதுவே அறிவாகும்
🙏🙏🙏

🌼🙏 வீட்டில் சொல்லக்கூடிய சக்திவாய்ந்த சாய் பாபா பிரார்த்தனை 🙏🌼சாய் நாதா,  எங்கள் வீட்டில் சாந்தி,  எங்கள் மனங்களில் சமநி...
11/14/2025

🌼🙏 வீட்டில் சொல்லக்கூடிய சக்திவாய்ந்த சாய் பாபா பிரார்த்தனை 🙏🌼

சாய் நாதா,
எங்கள் வீட்டில் சாந்தி,
எங்கள் மனங்களில் சமநிலை,
எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை அருள்வாய்.

நாங்கள் செய்யும் தொழில்–வேலைகளில்
வெற்றி, முன்னேற்றம், தடையின்றி நடக்க
உன் அருள் பொழியட்டும்.

நோய்களில் இருந்து காக்க,
மனதில் தைரியம், உடலில் சக்தி அளிக்க.

தவறு செய்தால் திருத்தும் அறிவை,
சொற்களில் இனிமையை,
செயல்களில் நல்லதையும் அருள்வாய்.

சாய் நாதா,
உன் அருளின்றி எதுவும் இல்லை.
எங்களுடன் எப்போதும் இருப்பாயாக.

“ஓம் ஸ்ரீ சாயி நாதாய நமஹ”

🌺 சாய் நாதா எப்போதும் நம்முடன் இருக்கிறார்…
அன்பு, அமைதி, அருள், ஆசீர்வாதம் நம் குடும்பத்திலே நிலைத்திருக்கட்டும்! 🙏🌼

11/06/2025

Om Sai Ram

பொதுவாகவே சாய்பாபா வழிபாடு என்றாலே எல்லோரும் வியாழக்கிழமை அன்றுதான் செய்கின்றோம். ஆனால் உங்களுடைய பொருளாதார நிலமை முன்னே...
11/03/2025

பொதுவாகவே சாய்பாபா வழிபாடு என்றாலே எல்லோரும் வியாழக்கிழமை அன்றுதான் செய்கின்றோம். ஆனால் உங்களுடைய பொருளாதார நிலமை முன்னேற, வாழ்க்கையில் பெரிய செல்வந்தர்களாக மாற வேண்டும் என்றால், சாய்பாபாவை திங்கட்கிழமை இப்படி கும்பிடணும். சாய்பாபாவை நம்பிக்கையோடு கும்பிட்டால், அவர் யாரையுமே கைவிடமாட்டார். சாய்பாபா பக்தர்களுக்கு இது நன்றாகவே தெரியும். மனிதர்களாக இந்த பூமியில் பிறந்து, மகானாக மாறியவர்களை வழிபாடு செய்யும்போது, ஒரு கூடுதல் பவர் கட்டாயம் கிடைக்கும். இதை மகான் வழிபாடு செய்பவர்கள், நிச்சயமாக உணர்வார்கள். நீங்களும் மகான் வழிபாடுகளை செய்ய துன்பங்கள் விலகும். உங்களுடைய தலையெழுத்தும் மாறும். கையில் ஒரு ரூபாய் கூட இல்லை, நான் பரம்பரை ஏழை என்பவர்கள் கூட, பரம்பரை பணக்காரனாக மாற இந்த வழிபாடு ஒரு வழியை காட்டி தரும்.

உங்களுடைய வீட்டின் அருகில் சாய்பாபா ஆலயங்கள் ஏதேனும் இருந்தால், வாரம் தோறும் திங்கட்கிழமையில் சாய்பாபா கோவிலுக்கு சென்று, அந்த கோவிலில் அமர்ந்து “ஓம் ஸ்ரீ சாய்ராம்” என்ற மந்திரத்தை 108 முறை கண்களை மூடி உச்சரித்து வழிபாட்டை மேற்கொள்ளலாம். சாய்பாபாவிற்கு விருப்பமான வாசனை நிறைந்த ஊதுவத்தி, பூக்களை வாங்கிக் கொண்டு போய் கோவிலுக்கு கொடுத்து வழிபாட்டை மேற்கொள்ளலாம். வழிபாட்டை விட திங்கட்கிழமை சாய்பாபா கோவிலுக்கு செல்லும்போது நம்பிக்கைதான் ரொம்ப ரொம்ப அதிகமாக இருக்க வேண்டும். திங்கட்கிழமை சாய்பாபாவை வழிபாடு செய்கின்றோம். நிச்சயம் நாமும் பணக்காரராக மாறுவோம், நம்முடைய வறுமையும் சீக்கிரம் நீங்கும் என்று ஆழ்மனதில் ஒரு நம்பிக்கையை வையுங்கள். உங்கள் வீட்டு பக்கத்தில் சாய்பாபாவின் ஆலயம் இல்லையா.

வீட்டிலேயே சாய்பாபாவை மனதார நினைத்து ஒரு விளக்கு ஏற்றுங்கள். உங்கள் வீட்டில் சாய்பாபா சிலை திருவுருவப்படம் எதுவுமே இல்லையா. கவலையே வேண்டாம். மனசு முழுவதும் சாய் பாபாவை நினைத்துக்கொண்டு, விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பூஜையறையில் வந்து அந்த தீபச்சுடர் தான் சாய்பாபா என்று நினைத்து ஓம் ஸ்ரீ சாய்ராம் என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். சாய்பாபாவை வழிபாடு செய்வதற்கு பெருசாக எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது. ஒரு டம்ளரில் தண்ணீரை பூஜை அறையில் வைத்துவிட்டு, சாய்பாபாவை கூப்பிட்டு, உங்களுடைய வரங்களை கேளுங்கள். வழிபாட்டை நிறைவு செய்து கொண்டு, இரண்டு ஊதுவத்தியை காண்பித்து பூஜையை நிறைவு செய்துவிட்டு, அந்த தண்ணீரை எடுத்து குடித்து விடுங்கள். இவ்வளவு தான் வழிபாடு.

உங்கள் வீட்டில் சாய்பாபா சிலை வடிவில் இருந்தால் அவருக்கு நிச்சயமாக தினம் தினம் நெய்வேதியம் வைக்க வேண்டும். ஒரு ஸ்பூன் சக்கரை, இரண்டு கற்கண்டு எதாவது நெய்வேத்தியம் வைப்பது சிலை வழிபாட்டிற்கு நிச்சயம் முக்கியம். வாரம் தோறும் திங்கட்கிழமை விடாமல் சாய்பாபா, மந்திரத்தை சொல்லி சாய்பாபா வழிபாட்டை செய்து, சாய்பாபா பாதத்தை பற்றி கொள்ளுங்கள்.

ஒரு வருடம் அல்ல ஒரு மாதத்தில் உங்கள் வாழ்க்கையில், முன்னேற பல வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்ட துவங்கிவிடும். பிறகு நீங்கள் பெரிய செல்வந்தர்களாக மாறலாம். நீங்கள் மட்டுமல்ல உங்கள் அடுத்த அடுத்த தலைமுறைக்கு கூட உங்களுடைய செல்வங்கள் அழியாமல் போய் சேர அந்த சாய்பாபா நல்லதொரு வழியை காட்டி தருவார்

🙏🙏🙏
"ஓம் ஸ்ரீ சாய் பாபா"
WhatsApp குழுவில் இணைய
: https://chat.whatsapp.com/ChdoJmrDfw6Jx2IpS1rG5N?mode=wwc

அன்புள்ள சாய் அன்பர்களே!நாம் சேர்த்து வைத்த, நாம் செய்கின்ற, கர்மாக்களுக்கு ஏற்றவாறே வாழ்க்கையில் சுக துக்கங்கள் நம்மை வ...
11/02/2025

அன்புள்ள சாய் அன்பர்களே!

நாம் சேர்த்து வைத்த, நாம் செய்கின்ற, கர்மாக்களுக்கு ஏற்றவாறே வாழ்க்கையில் சுக துக்கங்கள் நம்மை வந்தடையும், வரும் இன்ப துன்பங்களை, நாம் அனுபவித்தே ஆகவேண்டும். ஆனாக் கருணை உள்ளம் கொண்ட "பாபா" இச்சம்சார சாஹரம் என்னும் துன்பக் கடலிலிருந்து நம்மை விடுவித்து நல்வழி படுத்தவே அவதரித்துள்ளார். பாபா ஒருவர் மட்டுமே நம் கர்மாக்களை எடுத்டு விடுவேன் என்று வாக்கு தானம் செய்திருக்கிறார். சாயியின் வார்த்தை கர்மவினைகளில் வீர்யத்தை தடுத்து நிறுத்தும் சக்தி வாய்ந்தது. ஆதலால் நமது துன்பம் தீர "சீரடி சாய் பிரார்த்தனா சமாஜ்" மூலம் கூட்டுப்பிரார்த்தனை செய்ய பாபா வாய்ப்பளித்திருக்கிறார்.

இப்படி நாம் செய்யும் கூட்டுப்பிரார்த்தனை மூலம் கோடிக்கணக்கான பக்தர்களின் மனங்களில் உள்ள துன்பங்களை களைவதற்கும். ஒருவர் முகம் மற்றவர் அறியாமல் செய்யும் பிரார்த்தனையானது, சாயியின் பாதங்களை சிதறாமல் சென்றடைவதால் அந்த பக்தர்களின் நோய், காரியதடை, வியாபார மேன்மை, திருமணம், குழந்தைபேறு, உத்யோகம் போன்ற லோகாயத தேவைகளை சாய் ஆசிர்வதித்து பூர்த்தி செய்கிறார். கோரிக்கை எதுவாகினும் அது எமக்கு சாமான்யமே என்ற பாபாவின் வாக்கு நிச்சயம் ஆனது. பாபாவிடம் மனம் விட்டு பேசுவதே பிரார்த்தனை - சாயி நாமமே, நம்வாழ்வில் வழிக்காட்டியாகும். இதை அறியாமல் துன்பமும், பிரச்சனைகளும், நம்மை சூழும் போது, நாம் கடவுளை நோக்கி ஓடுகிறோம். நாம் சாயியை வாரம் ஒரு நாள் தரிசித்தால் போதும் என்ற எண்ணம் தவறானது. சாய் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார். நாம் உணவருந்தும் போதும், தண்ணீர் குடிக்கும் போதும் சாயிக்கு அர்ப்பணம் செய்கிறோமா? என்று எண்ணிப்பார்த்தல் வேண்டும். கடவுளுக்கும், நமக்கும் நெருக்கம் குறையும் போது, எதிர்மறையான எண்ணங்களை (Negative Energy) எதிர்க்க முடிர்க்க முடிவதில்லை. கூட்டுப்பிரார்த்தனை பேராயுதமானது. சாயியை நம்மை நோக்கி ஓடி வரச் செய்கிறது. நாமும் அவரை நெருங்க முடிகிறது. அவர் தமது பக்தர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்கிறார். ஆகையால் சாயி பக்தர்கள், பிரார்த்தனை செய்வதை தமது முக்கிய கடமைகளுள் ஒன்றாக வைத்திருக்கிறார்கள். கூட்டுப்பிரார்த்தனை மூலம் பல நற்காரியங்களை சாதித்து கொள்ள முடியும் என்பதை உணர்ந்திருக்கின்றார்கள்.

தினமும் சூரிய உதயம், உச்சி வேளை, அந்தி வேளை போன்ற முக்காலங்களிலும், சில வினாடிகள் நம் அன்றாட செயல்களின் ஊடே மனதில் தியானம் செய்வதை வழக்கமாக கொள்தல் வேண்டும். உண்மையான நம்பிக்கை, விசுவாசம் மற்றும் பரிபூரண சரணாகதியுடன் பிரார்த்தனை செய்தால் எல்லா துன்பங்களும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். சாயி சாயி என்று சதா ஞாபகமூட்டி கொள்வதே நம் தியானமாகும். இன்றைய நவீனயுகத்தில் பக்தர்களிடம் நம்பிக்கை ஊட்டவும், எல்லா துன்பங்களுக்கும் தீர்வு காணவும் நமக்காக பாபாவிடம் பிரார்த்தனை செய்யவும், பிறருக்காக நாம் பிரார்த்தனை செய்ய நமக்கு மன பக்குவத்தை அருளும்படி பாபாவிடம் கேட்கவும் "சீரடி சாய் பிரார்த்தனா சமாஜ்" உதவுகிறது. பிறருக்காவே (பக்தர்களுக்காக) நம் பிரார்த்தனை என்ற குறிக்கோளை உடைய சாயிபாபாவே, ஒவ்வொரு பக்தர்களின் சொரூபமாக இருந்து கூட்டுப்பிரார்த்தனையை நடத்துகிறார். சாயியின் ஆசிர்வாதம் மற்றும் அற்புதங்களை பெற நீங்களும் வாருங்கள். நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள், உங்கள் கோரிக்கை நிறைவேறும், எண்ணங்கள் ஈடேறும், எடுத்த காரியம் வெற்றி பெறும், மாயை விலகும், "சாயிகுரு" வடிவம் காட்சி கிடைக்கும். பரிபூரண சரணாகதி அடைந்தால் எந்த துன்பமும் வராது. பாபா சொல்கிறார்...

"என்னுடைய கருவூலம் நிறைந்திருக்கிறது" என்னிடம் வருபவர்களெல்லாம் கொடு, கொடு என்கிறார்கள். நான் கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் பெற கூடிய தகுதி அவர்களுக்கு இருக்கின்றதா என்று பார்க்க வேண்டியுள்ளது - சீரடி சாய்பாபா ஆகையால் கூட்டுப்பிரார்த்தனையின் மூலம் அந்த தகுதியை வளர்த்து கொள்ள வருமாறு அன்புடன் அழைக்கிறோம்

குரு நம்பிக்கை 🙏🙏🙏'குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக ...
10/25/2025

குரு நம்பிக்கை 🙏🙏🙏

'குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பாபாவின் மேல் உள்ள நம் பக்தியை, நம்பிக்கையினை மேலும் வளர்த்துக் கொள்வதற்குரிய சில கருத்துக்களாக திரு சாயி வரதராஜன் அவர்கள் கூறியுள்ள எட்டு சிறந்த வழிகளை இங்கு பகிர்வது அனைவருக்கும் உபயோகமாயிருக்கும் என்று கருதுகிறேன்.

01
சாயிபாபாவின் உருவப்படம் இன்றியமையாத ஒன்று. ஏனெனில், பாபாவும் அவரது படமும் வேறல்ல. தவிர, அது பாபாவின் மேல் இடையறாத தியானம் செய்ய வேண்டியதின் உயர்வைப் பற்றிச் சக்திவாய்ந்த முறையில் நமக்கு நினைவுபடுத்துகிறது. பாபாவின் படம், அத்தகைய குறிக்கோளை அடைய முயலும்படி நம்மை தூண்டுகிறது. பாபாவின் படத்தைப் பார்ப்பது மிகவும் சக்தி வாய்ந்த சாதனையாகும்.

02
பாபாவின் வாழ்க்கைச் சரிதத்தைத் தவறாமல் பாராயணம் செய்வது, நமது மனதை ஆத்மீகக் குறிக்கோளை நோக்கி இழுக்கும். நமது எல்லா எண்ணங்களும் உணர்வுகளும் பாபாவைப் பற்றியே வட்டமிடும்படிச் செய்யும். பாபாவின் சரிதத்தைக் கற்ற புத்திசாலியான ஒருவருக்குத் தடையே உதவியாக மாறிவிடுகிறது.

03
எப்போதுமே பாபாவின் நினைவிலேயே மூழ்கி, அவரது திவ்ய நாமத்தை இடையறாது உச்சரிப்பதில் நம் மனதை ஈடுபடுத்தும்படியான வழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

04
நாம் எதை உண்டாலும் அல்லது பருகினாலும், அதை மானசீகமாகப் பாபாவுக்கு நிவேதனம் செய்து, அவரது பிரசாதமாக உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

05
நாளின் முதல் 15 நிமிடநேரத்தை, நாள் முழுவதும் நாம் பாபாவின் நினைவில் தோய்ந்திருப்பதற்காக, நம் பாவனையை இசைவு செய்துகொள்ளுவதில் செலவிடவேண்டும்.மீண்டும், தூங்குவதற்கு முன், நாளின் இறுதி 15 நிமிடங்களையும் பாபாவைப் பற்றிச் சிந்திப்பதிலும் செலவிட முயல வேண்டும்.

06
ஸ்ரீ சாயிபாபாவின் விபூதியை( உதி ) நாள்தோறும் இட்டுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

07
வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பாபாவை மனமார வழிபடுவதற்காக ஒதுக்க வேண்டும். பாபா, தமது படத்தோடு ஒன்றுப்பட்டவர் என்பதைப் பலமாக நினைவுகூர்ந்து, அவரது இருப்பை உணர்ந்து, அவரது படத்தைப் பூஜை செய்ய வேண்டும்.

08
முடிந்தபோதெல்லாம், தினசரி, வாராந்திர சாய் சத்சங்கத்தில் பங்கேற்க முயல வேண்டும்.

🙏🙏🙏
"ஓம் ஸ்ரீ சாய் பாபா"

WhatsApp குழுவில் இணைய
: https://chat.whatsapp.com/ChdoJmrDfw6Jx2IpS1rG5N?mode=wwc

எவன் ஆபத்துக் காலங்களில் கலங்குவது கிடையாதோ, கவனத்துடன் செயல் புரிந்துகொண்டே இருக்கிறானோ, சமயம் நேரும்போது துக்கத்தையும்...
10/24/2025

எவன் ஆபத்துக் காலங்களில் கலங்குவது கிடையாதோ, கவனத்துடன் செயல் புரிந்துகொண்டே இருக்கிறானோ, சமயம் நேரும்போது துக்கத்தையும் பொறுத்துக் கொள்கிறானோ அவனுடைய விரோதி அழிந்துவிடுகிறான்.

எவன் காரணம் இன்றி வெளிநாட்டுக்குச் செல்வது இல்லையோ, பாவிகளுடன் சேர்வது இல்லையோ, பிறன் மனைவியை ஏறெடுத்துப் பார்ப்பதில்லையோ, செருக்குக் கொள்வதில்லையோ, திருட்டு, கோள் சொல்லுதல், கள் குடித்தல் இவற்றை செய்யாமல் இருக்கிறானோ அவன் எப்போதும் சுகமாயிருக்கிறான்.
உறுதியான புத்தியுடன், செய்யத் தக்கது, செய்யத் தகாததை நிச்சயம் செய்து, சாமம் பேதம், தானம், தண்டம் இந்நான்கு உபாயங்களால் நண்பர், பகைவர், நட்பு பகை இரண்டும் அற்ற அயலார், ஆகிய எல்லோரையும் வசப்படுத்த வேண்டும்.

***********************************************************************
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

WhatsApp குழுவில் இணைய
📱📶 Whatspp
: https://chat.whatsapp.com/ChdoJmrDfw6Jx2IpS1rG5N?mode=wwc

***********************************************************************

விஷத்தாலும் ஆயுதத்தாலும் ஒருவன் தான் கொல்லப்படுகிறான். கெட்ட எண்ணங்களால் பலருக்கு அழிவு ஏற்படுகிறது. பொறுத்தருள்தல் மனிதனுக்கு மிகச்சிறந்த பலம். வலிமையற்றவர்களுக்குப் பொறுமை ஒரு நற்குணம் ஆகும். திறமை சாலிகளுக்கு அது ஓர் அணிகலன்.
எவனுடைய கையில் பொறுமை என்னும் வாள் இருக்கிறதோ, கெட்டவர்கள் அவனுக்கு எந்த விதக் கெடுதலையும் செய்யமுடியாது.

தான் செய்த தீய செயல்களை பிறர் அறியாமல் போனாலும் கூட தனக்குத் தானே அது பற்றி வெட்கம் கொள்கிறானோ, அவன் கெட்ட கர்மங்கள் விலகி சென்று விடுகின்றன. அவனுக்கு அமைதி கிடைக்கிறது.
பணம் இரண்டு தகாத வழிகளில் செலவழியக் கூடும். ஒன்று தகுதியற்றவர்களுக்குக் கொடுத்தல், மற்றொன்று நல்ல தகுதியுடையவர்கட்குக் கொடுக்காமல் இருத்தல்.

அன்புடையவன், பணிவிடை செய்பவன், நான் உன்னைச் சார்ந்தவன் என்று அடைக்கலம் புகுந்தவன் ஆகியோரை ஒரு போதும் கைவிடக்கூடாது.
நான்கு விக்ஷயங்கள் விரைவிலேயே பலன் தரும். அவை தேவதைகளை தியானிப்பதால் மனோரதம் பூர்த்தியாகும். அறிவாளியின் நுட்பமான அறிவினால் ரகஸ்யமான விவரங்கள் தெரியவரும். அறிஞர்களின் பணிவை மக்கள் பெரிதும் போற்றுகின்றனர்.

பாவத்தைத் துறப்பதால் மனதில் சாந்தி ஏற்படுகிறது.
அக்னி ஹோத்ரம், பேசா நோன்பு, வேதாத்யயனம், யாகம் இவை தற்பெருமைக்காகச் செய்யப்பட்டால் மாறான பலன்களைத் தரும்.
தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள், பிச்சைக்காரர்கள், விருந்தினர் இந்த ஐவரையும் தினமும் பூஜிப்பவன்
மிகுந்த மரியாதைக்கு உரியவன்.

காமம், கோபம், சோகம், மோகம், மதம், பெருமை என்கிற இவை ஆறும் எவனிடத்தில் கட்டுப்பட்டு உள்ளனவோ அவன் புலன்களை வென்றவன்.
எவர் பிறரது மேன்மையைக் காணப் பொறுப்ப தில்லையோ, மகிழ்ச்சி கொள்வதில்லையோ, சினம் கொள்கிறார்களோ, எவரிடத்திலும் நம்பிக்கை, எவர் பிறரை நம்பியே வாழ்கிறாரோ, எவர் பிறரை வெறுக்கிறார்களோ, அவர்கள் எப்பொழுதும் துயரம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

அந்தணர்களை வெறுத்தல், அவர்களிடம் சண்டையிடுதல், செல்வத்தை பிடுங்கிக்கொள்ளுதல், கொல்ல விரும்புதல், அவர்களை இகழ்தல், அவர்களை மறந்துவிடுதல், அவர்கள் எதையாவது ஏற்க வரும் போது அவர்களுடைய குறைகளைக் கூறுதல், அவர்களைப் புகழ்ந்து பேசுதலை ஏற்றுக் கொள்ளாமல் இருத்தல் ஆகிய எட்டும் இனி நேரப் போகும் அழி வைக் குறிக்கின்றன.

குடியர்கள், புலன் இன்பத்தில் கருத்துடையோர், மனநோய் பிடித்தவர், களைத்துப் போனவர்;, சினம் மிக்கவர்;, பசியாக இருப்பவர்;, ஆவல் கொண்டவர்கள், பேராசைப் பிடித்தவர்;, கோழை, காமம் மிகுந்தவர் இவர்கள் அறத்தின் நுட்பத்தை அறிந்துகொள்ள இயலாதவர்கள். ஆகவே, இவர்களுடன் ஒருபோதும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.

இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

WhatsApp குழுவில் இணைய
📱📶 Whatspp
: https://chat.whatsapp.com/ChdoJmrDfw6Jx2IpS1rG5N?mode=wwc

என் அன்பு குழந்தையே!ஏன் இப்படி இருக்கிறாய், எதற்கு எடுத்தாலும் புலம்பலும் அழுகையும், ஏன் உன் சாய்அப்பா மீது உனக்கு நம்பி...
10/23/2025

என் அன்பு குழந்தையே!

ஏன் இப்படி இருக்கிறாய், எதற்கு எடுத்தாலும் புலம்பலும் அழுகையும், ஏன் உன் சாய்அப்பா மீது உனக்கு நம்பிக்கை இல்லையா , உன் எல்லா பிரச்சனையும் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறினேன் , பிறகு உன்னை எப்படி நான் கைவிடுவேன். ஏன் இந்த நடுக்கம்.

ஒரு பிரச்சனை என்றால் என்னைத்தான் கூப்பிடுகிறாய். அதே நேரத்தில் இது நன்றாக நடக்குமா, நம் சாய் அப்பா நமக்கு இதை நிறைவேற்றி தருவார்களா என்றும் யோசித்து சந்தேகப்படுகிறாய்.
இது ஏன்?

இவ்வளவு நாள் உன் எல்லா பிரச்சனைகளுக்கும் உனக்கு தீர்வை நானே கொடுத்தேன். இப்போழுது உள்ள பிரச்சனைகட்கும் தீர்வை கொடுக்க மாட்டேனா? ஏன் இப்படி நீயே உன்னை காயப்படுத்தி கஷ்டபடுத்துகிறாய், முதலில் உன் சாய் அப்பா உனக்கான அனைத்தையும் சரியாக்குவர் என்று உனக்குள் சொல்லி கொள் நிச்சயம் என்னை உயிராய் நினைக்கும் என் பிள்ளையான உன்னை கைவிட மாட்டேன் ,உனக்குள் இப்போது எல்லாம் இழந்ததைப் போன்று ஒரு தோற்றம், போராட சக்தி இல்லாதது போல் வலு இழந்து இருப்பது போன்று உணர்கிறாய், இப்போது உள்ள சூழ்நிலைகள் உனக்குள் இருந்த நம்பிக்கை என்னும் கண்னை மறைக்கின்றது, நீ தளராதே இதை விட மோசமான சூழ்நிலை வந்த போது கூட நீ அசரவில்லை ,ஆனால் இப்போது

உன்னைச் சுற்றி நீ அன்பானவர்கள் என்று நினைக்கும் நபர்கள் உனக்கு யதார்த்தமாக கூறினாலும் அதை ஏன் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்கிறாய், உன் மீது உள்ள உரிமையில் தானே கூறுகிறார்கள் ,அது உன்னை கஷ்டப்படுத்தினாலும் அதை ஏற்றுக் கொள் , அதில் ஏதும் தவறில்லை, விட்டுகொடுத்து போவதில் ஒரு மனநிறைவு கிடைக்கும் அதை நீ கண்டிப்பாக உணர்வாய் , ஏன் சாய்அப்பா நான் இப்படி இருக்கிறேன் என்று என்னிடம் வேண்டுகிறாய், நிச்சயம் உன் சூழ்நிலைகளும் உனக்கான நேரமும் தான் உன்னை இப்படி சிந்திக்க வைக்கிறது , இதில் உன் தவறு இல்லை, நீ வீணாக எல்லாவற்றையும் நினைத்து உன் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே, உனக்கு தேவையான அனைத்தும் விரைவில் உன்னை தேடி வரும் , அப்பா நீங்கள் இப்படித்தான் சொல்கின்றீர்கள் , ஆனால் எதுவும் மாறவில்லையே என்று தானே நினைக்கிறாய், உனக்கான நல்ல நேரம் வரும் என்று நான் நம்பிக்கையாய் கூறுகிறேன் , அது போலவே நீயும் நினை உனக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது என்று நிச்சயம் எல்லாம் சுகமாகிவிடும்,

உன்னை எல்லாரும் தனியாக விட்டுவிட்டார்கள் என்று நினைத்து புழம்புகிறாய், யாரும் இவ்வுலகில் தனியாக இல்லை, எல்லாருக்கும் இந்த உலகம் என்பது பொதுவானது, யாரிடமும் அதிகம் எதிர்பார்க்காதே அது உன்னை ஏமாற்றத்தில் தள்ளி இந்த நிலைமையில் தள்ளி இருக்கிறது, உனக்காக யார் இருந்தாலும் இல்லாமல் போனாலும் உன் உயிராய் நீ மரியாதை செலுத்தும் உன் சாய் அப்பா துணை எப்போதும் உனக்கு உண்டு , என் பிள்ளையான நீ என்னை நினைத்த மறு நிமிடமே உன் அருகில் நான் நிற்பேன், உன் தாயாக தந்தையாக நான் எப்போதும் இருப்பேன்.

இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

WhatsApp குழுவில் இணைய
📱📶 Whatspp
: https://chat.whatsapp.com/ChdoJmrDfw6Jx2IpS1rG5N?mode=wwc

அன்பு குழந்தையே...எதையோ யோசித்தபடியே இருக்கிறாய்  வாழ்க்கையில் வருவதை  அனுபவித்து வாழ வேண்டுமே தவிர தேவையற்ற குழப்பங்க ள...
10/09/2025

அன்பு குழந்தையே...

எதையோ யோசித்தபடியே இருக்கிறாய்

வாழ்க்கையில் வருவதை அனுபவித்து வாழ வேண்டுமே தவிர தேவையற்ற குழப்பங்க ளை மனதில் சுமந்து கொண்டு தேவையில் லாமல் யோசித்து கொண்டு இருப்பதை தவிர்த்து,

கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையை எப்படி போராடி ஜெயிப்பது இதை பற்றி யோசித்து, வாழ்க்கையில் வரும் மேடு பள்ளத்தை கடந்து எப்படி மீண்டு வருவது, என யோசித்து வாழ்க்கையில் வரும் இன்னல்களை எதிர்த்து வாழவேண்டும்.

நான் சொல்வது அருள் வாக்கு அல்ல, தெய்வ வாக்கு. விதிக்கப்பட்ட விதி யாராக இருந்தா லும் அனுபவித்தே ஆக வேண்டும். நான் அனைத்திலும் இருந்து உன்னை பாதுகாத்து வழிநடத்திச் செல்வேன்.

என் அற்புதங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதை நீயும் பார்த்துக் கொண் டே இருக்கிறாய் உன் துயரங்கள் அகல போகிறது மகிழ்ச்சியாக இரு. எதற்காகவு ம் எந்த சூழ்நி லையிலும் மனம் தளர்ந்து விடாதே.

வஞ்சகம் செய்யாதவர் யார் ஒருவரை காட்டு பார்க்கலாம். தவறு வஞ்சகம் செய்யாதவர் எவரும் இல்லை. மனதை அலைபாய விடாமல் எதை செய்தாலும் என்னிடத்தில் தெரிவித்து பின்னர் அதை செய்ய முற்படு.

நான் அதை நடத்தி காட்டுவேன். அனைத் தும் விலக போகிறது பொறுமையாக இரு உன் னை வீழ்த்தி பார்க்க நினைப்பவர் மத்தியில் உன்னை பாதுகாத்து நிச்சயம் அனைத்திலும் வெற்றி பெற வைப்பேன். நான் இருக்கிறேன் நிழலாக என்றும் உனக்காக நீ செல்லும் இடமெல்லாம்.

ஓம் ஸ்ரீ சாய் ராம்...
🙏 🙏 🙏

Whatsapp Link:
https://chat.whatsapp.com/GThPzklWEV44UCWMNUD23r?mode=ems_copy_t

08/27/2025

பிரணவப் பொருளே
பேரருட் கடலே🙏
ஓம் என்ற பிரணவம்
தாமெனக் காட்டும் தலைவா
தடைகள் இல்லாத் தருணம் நல்கி
நலமாய் விளங்கிட
நற்சுகம் துலங்கிட
வளமாய்க் வாழ
அருள்வாய்
அம்பிகை புதல்வா
சித்தி விநாயக
வள்ளலே போற்றி 🙏

#விநாயகர்சதுர்த்தி
நல்வாழ்த்துகள் 🙏

07/16/2025

தொழிலில் வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அருளும் சஸ்திர பந்தம்

சாஸ்திர பந்தம் என்பது ஒரு சக்தி வாய்ந்த முருக மந்திரம். இதை தினமும் உச்சரிப்பதன் மூலம் செல்வச் செழிப்பு, தொழில் வெற்றி, மற்றும் அனைத்து விதமான நன்மைகளையும் பெறலாம்

Address

2721 Markham Road Unit 8
Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when Sai Baba சாய் பாபா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category