06/09/2026
துா்க்கை அம்பாள் துணை🙏
ஏற்றிவைத்த தீபங்கள் எழிலுடனே ஒளிர்ந்திருக்க,
போற்றியுன்னை வேண்டிநிற்கும் என் மனம் களித்திருக்க, மாற்றும் மணம் மாறாத மலர்கள் அலங்கரித்திருக்க...
பேரழகுக் கோலத்தில் காட்சி தரும் உன் திருக்கோலத்தை கண்ட பின் பேரானந்தம் அடைந்தேன்...
மும்மூா்த்திகளே அம்பாளின் பாதாரவிந்தங்களை போற்றுகின்றாா்கள் அப்படிப்பட்ட ஒப்பிடமுடியாத சிறப்புக்களை கொண்ட அம்பாளின் திருவடிகளை,
வணங்கும் வாய்பு என்பது முன்பு பல பிறவிகளில் செய்த புண்ணிய தவத்தின் பயனாக இந்தப் பிறப்பில் நமக்கு வந்து சோ்கின்றது....
விஷ்ணு, ருத்ரன், பிரம்மா முதலியவர்களாலும் பூஜித்தற்குரிய அம்பாளை முன்பு பல பிறவிகளில் புண்ணியம் செய்யாதவர்கள் வணங்குவதற்கோ அல்லது துதிப்பதற்கோ இந்தப் பிறப்பில் முடியாமல் போய்விடுகின்றது.
இந்தப் பிறப்பில் எல்லாம் வல்ல எங்கள் துா்க்கை அம்பாளை தங்கள் உள்ளத்தில் இருந்தி மெய்யன்போடு வழிபடும் மெய்யடியாா்கள் அனைவரும் முற்பிறப்பில் புண்ணியம் செய்தவா்கள்.
முத்தேவர்களின் முத்தொழில்களும் அன்னையின் திருவடியின் அபார சக்தியின் பெருமையாலேயே நிகழ்கிறது.
ஓம் சக்தி தாயே...