14/06/2026
இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச் செயற்குழுவால் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராங்கண்டல் தமிழ் மகாவித்தியாலயத்திலும், முள்ளியவளை தமிழ் மகாவித்தியாலயத்திலும் கழகத்தின் சிறுவர் கல்வி மேம்பாட்டுத் திட்டம் 13- 06 - 2026ஆம் நாள் சனிக்கிழமையன்று
கழகப் பதில் தலைவர் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களும்,
கல்விக்குழுச் செயலாளரும் கழகப் பதில் செயலாளருமான சைவத்திரு.சி.பிரியதர்சன் அவர்களும், கழக உபதலைவரும் கல்விக்குழுப் பொருளாளருமான சைவத்திரு.ச.யோகேந்திரபிரசாத் அவர்களும், நேரடியாகச் சென்று கலந்துகொண்டு தொடங்கிவைத்தனர்.
சிவபூசையுடனும் சைவப்பெரியார் சூரன்பெருமானார் குருபூசையுடனும் இவ்வகுப்புகள் தொடங்கிவைக்கப்பட்டன. ஒவ்வொரு சனிக்கிழமையும் சிவபூசையும் சைவப்பெரியார் சூரன்பெருமானார் குருபூசையோடு இப்பாடசாலைகளில் சிறுவர் கல்வி மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.சிவபெருமானைச் சிக்கெனப்பிடித்தோர் உயர்வர் என்பதனை நம் சமூகம் தெளிந்து, கல்வி தொழில் முதலிய வாழ்வியலில் சிவபரத்துவத்துடன் விளங்கும்பொருட்டுப் பணியாற்றுவதே கழகத்தார் கடனாகும்.
🙏🏾எல்லாம் திருவருட் சம்மதம்🙏🏾