St.Joseph's Church - Vaddakkachchi, Kilinochchi

St.Joseph's Church - Vaddakkachchi, Kilinochchi வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயம்

01/05/2026

எமது வட்டக்கச்சி பங்கின் பாதுகாவலராம் புனித சூசையப்பரின் #திருநாழ்

01/06/2025

வேளாங்கண்ணி தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்😇🙏

வட்டக்கச்சி மண்ணில் மாயவனூர்ப் பகுதியில் வீற்றிருந்து எமக்காக இறைவனிடம் பரிந்து பேசும் புனித  #வேளாங்கண்ணி அன்னையின் திர...
31/05/2025

வட்டக்கச்சி மண்ணில் மாயவனூர்ப் பகுதியில் வீற்றிருந்து எமக்காக இறைவனிடம் பரிந்து பேசும் புனித #வேளாங்கண்ணி அன்னையின் திருவிழாத் திருப்பலி…….
அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துகள்✝️

இன்றைய இறைமொழி, 31 மே ’25கன்னி மரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழாசெப்பனியா 3:14-18. லூக்கா 1:39-56மகிழ்ச்சிநம் தாய்த்திர...
31/05/2025

இன்றைய இறைமொழி
, 31 மே ’25
கன்னி மரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா
செப்பனியா 3:14-18. லூக்கா 1:39-56

மகிழ்ச்சி

நம் தாய்த்திருஅவையில் 13ஆம் நூற்றாண்டில் இத்திருவிழா தொடங்கப்பட்டது. முதலில் ஜூலை 2ஆம் தேதி கொண்டாடப்பட்ட இவ்விழா, பிற்காலத்தில் மே 31க்கு மாற்றப்பட்டது. அதாவது, மங்கள வார்த்தை திருநாளுக்கும் (மார்ச் 25), திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவுக்கும் (ஜூன் 24) இடையே கொண்டுவரப்பட்டது.

வானதூதர் தன் இல்லத்தை விட்டு வெளியேறிய அந்த நொடியே, கதவை அடைத்துவிட்டு மரியாவும் வெளியேறுகிறார். அப்படித்தான் பதிவு செய்கின்றார் லூக்கா: ‘அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.’ இயேசுவைத் தன் உடலில் தாங்கத் தொடங்கிய அந்த நொடி முதல் அவர் முழு இயக்கத்திற்கு உட்படுகிறார். எருசலேம் ஆலயத்தை நோக்கியோ, அல்லது தலைமைச்சங்கத்தை நோக்கியோ அவர் ஓடவில்லை. மாறாக, தேவையில் இருந்த தன் உறவினர் எலிசபெத்தை நோக்கி ஓடுகிறார்.

மங்கள வார்த்தை மரியாவை முழுவதுமாக மாற்றியது: நாசரேத்தூரின் எளிய இளவல் இப்போது உன்னதரின் மகனின் தாயாகின்றார். இனி அவர் தன் விருப்பத்தை அல்ல, இறைவிருப்பத்தை நிறைவேற்றவே விரும்புவார். இனி அவர் அனைத்திலும் விரைந்தே செயல்படுவார்: விரைந்து பணியாற்றுவார், விரைந்து இறைத்திருவுளம் நிறைவேற்றுவார்.

கிறிஸ்து நம்மில் கருவாகத் தொடங்கினால் நாமும் அமைதியாக ஓய்ந்திருக்க முடியாது. நாமும் அடுத்தவர்களுக்குப் பணி செய்வோம். நம் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுவோம். நம் தேவைகளை மறந்து மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவோம்.

இப்போது தொடங்குகின்ற மரியாவின் பயணம், தொடர்ந்துகொண்டே இருக்கும்: பெத்லகேமுக்கு, எகிப்துக்கு, மீண்டும் நாசரேத்துக்கு, எருசலேம் ஆலயத்துக்கு, கானாவூருக்கு, கல்வாரிக்கு என இனி அவர் பயணம் செய்துகொண்டே இருப்பார். எல்லாப் பயணங்களின் முன்னோட்டமே எலிசபெத்தை நோக்கிய பயணம்.

தான் கடவுளின் தாயாக இருந்தாலும் தாழ்ச்சியுடன் புறப்படுகின்றார் மரியா. தன் அன்பைப் பகிர்ந்துகொள்ளச் செயல்கிறார் மரியா. மரியாவின் அன்பும் தாழ்ச்சியுமே அவரை எலிசபெத்தை நோக்கி உந்தித் தள்ளியது என்கிறார் புனித பிரான்சிஸ் சலேசியார்.

மரியா தன் வழியில் வேறு எந்தக் கவனச் சிதறலும் கொள்ளவில்லை. அவருடைய இலக்குத் தெளிவு நமக்கு ஆச்சர்யம் தருகின்றது. செக்கரியாவின் வீட்டை அடைந்தவுடன் வாழ்த்துகிறார். மரியாவின் வாழ்த்து மிகவும் எதார்த்தமானதாகவும் உண்மையாகவும் இருந்ததால் அது வயிற்றிலுள்ள குழந்தையைச் சென்றடைகின்றது.

‘எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்’ என இங்கே பதிவு செய்கின்றார் லூக்கா. வானதூதர் கபிரியேல் சொன்ன நொடியில் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார் மரியா. இப்போது ஒரு மெழுகுதிரி இன்னொரு மெழுகுதிரியைப் பற்ற வைப்பதுபோல, தன்னிடம் உள்ள தூய ஆவியைத் தன் உறவினருக்குக் கொடுக்கின்றார் மரியா.

எலிசபெத்து மரியாவை வாழ்த்த, மரியாவோ கடவுளைப் பாடிப் புகழ்கின்றார். மற்றவர்கள் நம்மைப் பாராட்டும்போது நம் முகம் நம்மையோ அல்லது மற்றவர்களையோ பார்க்காமல் இறைவனைப் பார்த்தால் எத்துணை நலம்! தன் வாழ்வு முழுவதும் இறைமையின் வெளிப்பாடாகப் பார்க்கத் தெரிந்த மரியாவின் நம்பிக்கைப் பார்வை நமக்கு வியப்பாக இருக்கிறது.

ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசபெத்தோடு தங்கியிருக்கின்ற மரியா பின்னர் வீடு திரும்புகின்றார்.

புறப்படும் பயணம் அனைத்தும் இல்லம் திரும்பவே என்பதும் ஒரு நல்ல வாழ்வியல் பாடம். பயணத்தின் எந்த இலக்கும் நம் வீடாகிவிடாது. நாம் திரும்ப வேண்டிய ஒரு வீடு எப்போதும் உண்டு.

நிகழ்வு முழுவதும் மகிழ்ச்சி மேலோங்கி இருக்கிறது.

இந்த மகிழ்ச்சி நம் அனைவரையும் பற்றிக்கொள்வதாக!

மாயவனூர் புனித வேளாங்கண்ணி திருத்தல நற்கருணைப்பெருவிழா 30/05/2025
31/05/2025

மாயவனூர் புனித வேளாங்கண்ணி திருத்தல நற்கருணைப்பெருவிழா 30/05/2025

25/05/2025
தனது முதலாவது திருப்பலியை  ஒப்புக்கொடுத்த திருத்தந்தை 14ம் லியோகத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைமை குருவாக தேர்ந்தெடுக்...
10/05/2025

தனது முதலாவது திருப்பலியை ஒப்புக்கொடுத்த திருத்தந்தை 14ம் லியோ

கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைமை குருவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராபர்ட் பிரான்சிஸ், வாடிகன் தேவாலயத்தில் தனது முதல் திருப்பலியை இன்று தொடங்கி வைத்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த மாதம் காலமானார். இதுவரை இருந்த போப் மதகுருக்களிலேயே மிகுந்த முற்போக்கு சிந்தனைக் கொண்டவராகவும், எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவராகவும் போப் பிரான்சிஸ் விளங்கினார்.

இதனால் அவரது மறைவானது, அனைத்து தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக, புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் வாடிகன் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

71 நாடுகளைச் சேர்ந்த 133 கார்டினல்கள் புதிய போப்பை தேர்வு செய்யும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.

அதன்படி, ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டதாக வாடிகன் நேற்று அறிவித்தது.

இதையடுத்து, புதிய போப் '14ஆம் லியோ' என்ற பெயரால் அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. போப் ஆக தேர்வு செய்யப்பட்ட முதல் அமெரிக்கர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது.

இந்நிலையில், வாடிகன் திருச்சபை தலைமை குருவாக பொறுப்பேற்ற 14ஆம் போப் லியோ, நேற்று தனது முதல் திருப்பலியை நடத்தினார். இந்த திருப்பலியில் வாடிகன், ரோம் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளையும் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, மறைந்த போப் பிரான்சிஸ் அணியும் சிகப்பு நிறத்திலான அங்கி சால்வையை அவர் அணிந்திருந்தார். போப் பிரான்சிஸ் பின்பற்றிய சில முற்போக்கு நடைமுறைகளை தானும் கடைப்பிடிப்பேன் என அவர் மறைமுகமாக உணர்த்துவதற்காக அந்த சால்வையை அணிந்ததாக கத்தோலிக்க மக்கள் கருதினர்.

திருப்பலியை தொடங்கி வைத்து பேசிய 14ஆம் போப் லியோ, "ஒரு தேவாலயம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முதலில் நாம் அடையாளம் காண்பது அவசியம். மக்களுக்கும், கர்த்தருக்கும் பாலமாக கிறிஸ்தவ தேவாலயம் விளங்க வேண்டும்.

உதவி, அன்பு, ஆறுதலான வார்த்தை என எது தேவைப்பட்டாலும், அதனை எளிதாக எடுத்துக் கொள்ளும் இடமாக ஒரு தேவாலயம் இருக்க வேண்டும்" எனக் கூறினார்..

Address

Vaddakkachchi
9FF4+HGM,FARMRD,VADDAKKACHCHI

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.Joseph's Church - Vaddakkachchi, Kilinochchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share