St.Joseph's Church - Vaddakkachchi, Kilinochchi

St.Joseph's Church - Vaddakkachchi, Kilinochchi வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயம்

அம்மா என்று அழைப்போருக்கு அன்பைப் பொழிபவளே!கானகத்தில் அரசியே!கடைக்கண் நேக்கி பாரும் அம்மா!பாவிகள் எமக்கான பரிந்து பேசிடு...
02/07/2026

அம்மா என்று அழைப்போருக்கு
அன்பைப் பொழிபவளே!
கானகத்தில் அரசியே!
கடைக்கண் நேக்கி பாரும் அம்மா!
பாவிகள் எமக்கான பரிந்து பேசிடுவாய்
உம் மகனிடம்.

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாண மறைம...
29/06/2026

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் ஆனி மாதம் 29ஆம் திகதி நியமனம் பெற்றுள்ளார்.

1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் 2000ஆம் ஆண்டு கொழும்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பல இடங்களிலும் சமய, கல்வி மற்றும் நிர்வாகப்பணியாற்றியுள்ளதுடன் உரோமில் இறையியல் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும் கொழும்பில் கல்வியியல் டிப்ளோமாவையும் ஐக்கிய இராச்சியத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமானி, கலைமானி பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஆடி மாதம் 13ஆம் திகதி அப்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக நியமிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 29ஆம் திகதி ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டதுடன் 2024ஆம் ஆண்டு ஆவணி 19ஆம் திகதி மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் நியமனம் பெற்று பணியாற்றிவருகின்றார்.

தற்போதைய ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் ஓய்வு காரணமாக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக பணியாற்றி வந்த இவர் யாழ். மறைமாவட்ட ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வல்லமையுள்ள புனித சூசையப்பர் மன்றாட்டு!(1900 ஆண்டுகள் பழமையானது)புனித சூசையப்பரே! உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லம...
27/06/2026

வல்லமையுள்ள புனித சூசையப்பர் மன்றாட்டு!

(1900 ஆண்டுகள் பழமையானது)

புனித சூசையப்பரே! உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. எனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கிறேன்.

உம் வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா உடல், உள்ள, ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும்.

இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும் ஆராதனையும் செலுத்தக்கடவேன்.

புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் இயேசுவையும் சதாகாலமும் எண்ணி பூரிப்படையத் தயங்கியதில்லை. இறைவன் உம் மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும். ஆமென்.

(தொடர்ந்து ஒன்பது நாட்கள் காலையில் இந்த மன்றாட்டை வேண்டினால் கேட்ட வரம் கட்டாயம் கிடைக்கும்.)🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

01/05/2026

எமது வட்டக்கச்சி பங்கின் பாதுகாவலராம் புனித சூசையப்பரின் #திருநாழ்

Address

Vaddakkachchi
9FF4+HGM,FARMRD,VADDAKKACHCHI

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.Joseph's Church - Vaddakkachchi, Kilinochchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share