மெய்யான ஒளியின் எழுப்புதல் ஊழியங்கள்

  • Home
  • Sri Lanka
  • Trincomalee
  • மெய்யான ஒளியின் எழுப்புதல் ஊழியங்கள்

மெய்யான ஒளியின் எழுப்புதல் ஊழியங்கள் Preaching the gospel

19/09/2025
17/09/2025

Most great invention👌🙏🔥

சார்லி கிர்க், 32 வயது அமெரிக்கா சுவிசேஷகர் 'நேற்றையதினம் குறிப்பிட்ட பல்கலைக் கழகத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது சுட்...
11/09/2025

சார்லி கிர்க், 32 வயது அமெரிக்கா சுவிசேஷகர் 'நேற்றையதினம் குறிப்பிட்ட பல்கலைக் கழகத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார். இவர் சமரசம் இல்லாமல் கர்த்தருடைய வார்த்தையை போதித்தவர். அமெரிக்க மக்களின் பாவங்களை தைரியமாக கண்டித்தார். மக்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பை சந்தித்தே ஆக வேண்டும் என எச்சரித்தார்.

நேற்று utha university ல பேசி கொண்டிருக்கும் போது கழுத்தில் சுடப்பட்டார். இவர் இளம் வயதில் அமெரிக்க மக்களால் அறியப்பட்டவர். விவாகரத்து, வேதத்துக்கு முரணான ஆண்-ஆண், பெண்-பெண் திருமணம், கருக்கலைப்பு போன்றவற்றை எதிர்த்தார். பல்கலை மாணவர்கள் இடையில் மாபெரும் மாற்றம் கொண்டுவந்தவர். சுவிசேஷத்தை தைரியமாக பிரசங்கித்த இவர் ஒரு யூதர். அவரது திடீர் மரணம் அமெரிக்க திருச்சபைகளுக்கு மிகப் பெரிய இழப்பு!

நம் இலங்கையில் ஒருவர் மதம் மாறுகிறார் என்றால் காசுக்காக சோத்துக்காக என்று கிண்டல் செய்கிற நீங்கள் வெளிநாட்டுக்காரன் மதம்...
29/08/2025

நம் இலங்கையில் ஒருவர் மதம் மாறுகிறார் என்றால் காசுக்காக சோத்துக்காக என்று கிண்டல் செய்கிற நீங்கள்
வெளிநாட்டுக்காரன் மதம் மாறியதற்கான காரணம் நீங்கள் கொடுக்கும் தயிர்சாதம் சுண்டலுக்காக மதம் மாறுகிறார் என்று ஒப்புக் கொள்கிறீர்களா?

இல்லை
எல்லோரும்
ஆன்மீகத்துக்காக மதம் மாறுகிறார்கள் என்று ஒத்துக் கொள்கிறீர்களா?....

கிறிஸ்த்தவர்கள் பன்னும் ரொட்டியும் மட்டுமா தந்தார்கள் ....

என்ன வேண்டுமானாலும் பேசுகிறவர்கள் பேசட்டும்
ஆனால் வரலாறு இவ்வாறு உண்மையை உரைக்கும்....

1877ம் ஆண்டு...............................
இந்திய நாட்டில் கடுமையான பஞ்சம். பசி..பட்டினியால் இறப்பு 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட உணவில்லாத நிலை!!

அதனால், அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக இந்தியா வந்தன. அப்படி ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்!

ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது.. ஐடா கதவை திறக்கிறாள்,ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள், உடனே வாங்க" என்று பதறுகிறார்..!

ஐடாவோ, "நான் டாக்டரல்ல, என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம் இருங்க அவரை எழுப்புறேன்" என்கிறார்.

இல்லம்மா.. என் மனைவிக்கு 14 வயசுதான். நாங்க பிராமணாளுங்க, பெண்ணை கணவனல்லாத பிற ஆம்பள தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவை தட்டுகிறார்.. மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, "வேண்டாம்மா, நாங்கள் இஸ்லாமியர்கள்... எங்க வீட்டு பொண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது" என்று அவரும் சோகத்துடனே திரும்பிவிடுகிறார்.

அந்த பெண்களுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று இரவெல்லாம் பதட்டத்துடன் தவிக்கிறாள் ஐடா. மறுநாள் காலை அந்த கர்ப்பிணிகளின் சடலம் தன் வீட்டை கடந்து கொண்டு செல்லப்படுவதை பார்த்து அதிர்ந்து தேம்பி தேம்பி அழுகிறாள் ஐடா.

என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்க மாட்டாங்களாம், ஆனால் பெண்ணுக்கு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த நாட்டில் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்த பெண்களை காப்பாற்றுவேன்" என சபதமேற்று அமெரிக்கா சென்று படிக்கிறார் , டாக்டராகிறார் ஐடா..!

சக நண்பர் ஒருவர் ஐடாவை காதலிக்கிறார், ஆனால் ஐடா அந்த காதலை நிராகரிக்கிறார். மருத்துவம் படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே வேலை வாய்ப்புகள் வந்தன, ஐடா அதையும் நிராகரிக்கிறார். தமிழகத்தில் இறந்து போன அந்த பெண்களின் சடலங்கள் மட்டுமே கண்முன் வந்து வந்து போயின!!

ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு மருத்துவமனை தேவை என்பதை உணர்கிறார். பல நாடுகளில் இந்தியாவின் அவல நிலையை சொல்லி நிதி உதவி கேட்கிறார். ஓரளவு நிதியும் சேர்கிறது...

இனி ஒரு கர்ப்பிணியைகூட சாக விடமாட்டேன் என்ற உறுதியுடன் 19ஆம் நூற்றாண்டின், முதல் நாளில் தமிழகத்தில் கால் பதிக்கிறார் ஐடா.

மருத்துவமனை கட்டும் பணியை ஆரம்பிக்கிறார். படாதபாடுபட்டு, இறுதியில் 40 படுக்கை வசதியுடன் அந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு விட்டது.

பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாத நேரத்தில், பெண்களுக்காகவே ஒரு மருத்துவமனையை கட்டி முடித்தார் இளம்பெண் ஐடா!

அதுதான் ஆசியாவிலேயே தனிப்பெருமை வாய்ந்து.ஒரு நூற்றாண்டையும் கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் வேலூர் "சிஎம்சி (Christian Medical College - Research Institution in Vellore ). மருத்துவமனை!!

யார் இந்த பெண்? இவர் ஏன் நமக்காக அழுதார்? இவர் ஏன் நமக்காக உருகினார்? இவர் ஏன் நமக்காகவே வாழ்ந்தார்?

எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, நம் நாட்டுக்கு தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா, அன்னை தெரசாவுக்கே "வழிக்காட்டி" என்று சொன்னால் நம்ப முடிகிறதா?!!

அங்குமிங்கும் அலைந்து திரிந்து 5 இளம்பெண்களை திரட்டி, அவர்களுக்கு பயிற்சி தருகிறார் ஐடா.. இவர்கள் தான் தமிழகத்தின் முதல் 5 நர்ஸ்கள்..!

நம்முடைய பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்டதே, இந்த ஐடாதான் என்பதை எத்தனை பேர் இன்று நினைத்து பார்க்கிறார்களோ தெரியவில்லை !

ஆனால், ஒரு பெண் தனியாளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத்தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.. லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொணடிருக்கிறது..!.

ஐடா" என்ற மனித தெய்வத்துக்கு மட்டுமில்லை, இன்றைய ஆபத்தான சூழலில், உயிரை பணயம் வைத்து சிகிச்சை தந்து வரும் அனைத்து வெள்ளாடை தாய்களுக்கும் என் கோடானுகோடி நன்றிகள்!!.
➖➖➖➖➖➖➖

26/08/2025

Price the Lord

01/08/2025

🎵 பாடல் வரிகள் பொய்யாக மாறும் போது 🎵
*************************************

“கர்த்தரையே நீ பாடு – சர்க்கரையே வராது!”
“Happy ஆக பாடு – BP வும் வராது!”
“ஆராதிச்சு பாடு – மாரடைப்பு வராது!”
“வாய திறந்து பாடு – வாய் வலி வராது!”
“சிரிச்சு துதிச்சு பாடு – பல்லு வலி வராது!”
“கையை தட்டி பாடு – கை வலி வராது!”
“நடனமாடி பாடு – கால் வலி வராது!”

இந்த வரிகள் கவர்ச்சியாகத் தோன்றலாம், ஆனால் அவை உண்மையைத் தவறாகப் பிரதிபலிக்கின்றன.

ஆனால் முதலில்; இப்படி பாடல்கள் எழுதலாமா?
நிச்சயமாக "ஆம்" - நாம் விரும்பும் எதையும் எழுதலாம்!

ஆனால் இது உங்கள் தனிப்பட்ட அனுபவமாக இருந்தால் அல்லது வேதத்தில் எங்கும் காணப்படவில்லை என்றால், அதை நான்கு சுவர்களுக்குள் வைத்து தனிப்பட்ட முறையில் கடவுளைத் துதிக்க அதைப் பயன்படுத்தவும்.

இதுபோன்ற பாடல்களை இயற்றுவதும், பொதுக்கூட்டங்களில் பாடுவதும் தேவையற்றது மட்டுமல்ல - அது விவேகமற்றது மற்றும் தேவையற்றது.

இதுதான் டிரெண்டிங் பாடல் என்கிறார்கள்.
ஆனால் அவர்கள் ட்ரெண்டிங் என்பதன் சரியான அர்த்தம் எது?

உண்மையில், உலகம் கிறித்துவத்தை ட்ரோல் செய்து கேலி செய்கிறது - துரதிர்ஷ்டவசமாக, டிக்டோக் கிளிப்புகள் மற்றும் ரீல்களுக்கான உள்ளடக்கத்தை அறியாமல் வழங்குவது நமது சொந்த போதகர்களும் தலைவர்களும்தான்.

இசையமைப்பாளர் ஒருபோதும் நோயை அனுபவிக்கவில்லை என்றால், அவர் மகிழ்ச்சியடையட்டும் - ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் அவ்வாறு செய்யட்டும். ஏனென்றால், கடவுளைப் பின்பற்றி பாடுபவர்களுக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் அல்லது பிற நோய்கள் வராது என்று பைபிள் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை.

உண்மையில், இயேசு சொன்னார்,

"இந்த உலகில், உங்களுக்கு சிரமம் இருக்கும், ஆனால் தைரியமாக இருங்கள், நான் உலகத்தை வென்றுவிட்டேன்." (யோவான் 16:33)

ஆகவே நோயை வரவழைக்கும் பாடல்களை நாம் பாட வேண்டியதில்லை என்றாலும், யதார்த்தத்தை மறுத்து வேதத்திற்கு முரணான பாடல் வரிகளைப் பாடுவதும் முட்டாள்தனம்.

கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் கடவுளின் உண்மையுள்ள ஊழியர்கள் பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர், அவர்கள் நோய் மற்றும் வலியால் துன்பப்படுகிறார்கள் அல்லது துன்பப்படுத்தப்படுகிறார்கள், இருப்பினும் அவர்கள் தொடர்ந்து உண்மையுடன் சேவை செய்கிறார்கள்.

இது தெளிவாக இருக்கட்டும்:
➡️ வார்த்தையில் எதுவும் இல்லை என்றால், அதை தேவாலயத்திற்கு கொண்டு வர வேண்டாம்.
➡️ இது உங்கள் தனிப்பட்ட ஆன்மீக அனுபவமாக இருந்தால், அதை தனிப்பட்டதாக வைத்திருங்கள்.
➡️ அனைவருக்கும் பொருந்தாத அனுபவங்களுடன் கிறிஸ்துவின் உடலைக் குழப்ப வேண்டாம்.
➡️ நம்மை ஏளனம் செய்வதற்கு உலகத்திற்கு காரணங்களை கூறி கிறிஸ்தவத்தை கேலிக்கூத்தாக்காதீர்கள்.

எந்தவொரு மனிதனும்-எவ்வளவு ஆன்மீகமாக இருந்தாலும்-இன்னும் மாம்சத்தில் இருக்கிறான், மேலும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நோய், வலி மற்றும் பலவீனத்தின் வழியாகச் செல்வான்.

உலகப் போக்குகளோடு அல்லாமல், வார்த்தையோடு நம் வழிபாட்டைச் சீரமைப்போம்.

ஆம், வழிபாடு அமைதியையும் மகிழ்ச்சியையும் துன்பத்தில் வலிமையையும் தருகிறது. ஆனால் பாடுவது அல்லது கடவுளைப் புகழ்வது நோயற்ற வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று பைபிள் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை.

கடவுளின் உண்மையுள்ள ஊழியர்கள் பலர் நீரிழிவு, இதய நோய் அல்லது பிற துன்பங்களுடன் வாழ்கிறார்கள், ஆனால் அவர்கள் வலியிலும் கூட வணங்குகிறார்கள், நோயைத் தவிர்ப்பதற்காக அல்ல, ஆனால் அது இருந்தபோதிலும் கடவுளை மகிமைப்படுத்துவதற்காக.

புனிதர்களின் துன்பங்களை கேலி செய்யவோ அல்லது நற்செய்தியை உணர்வுப்பூர்வமான ரைம்களில் நீர்த்துப்போகவோ வேண்டாம். வழிபாடு என்பது ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அல்ல - உடல் உடைந்தாலும் அது ஒரு இதய தோரணை.

போக்குகளை அல்ல, உண்மையை அடிப்படையாகக் கொண்டு பாடல்களை எழுதுவோம்.
நம்முடைய பாடல் வரிகளை அல்ல, அவருடைய சித்தத்தின்படி குணமாக்கும் கடவுளை போற்றுவோம்.

✝️ வழிபாடு என்பது ஆரோக்கியத்திற்கான மருந்து அல்ல, மாறாக நம்பிக்கையின் பிரசாதம்.

Address

205/4, T/S Road
Trincomalee
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when மெய்யான ஒளியின் எழுப்புதல் ஊழியங்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share