03/01/2026
#ஜித்தா_ஹஜ் – #இலங்கை கொன்சியூலர் ஜெனரலாக ஒரு முஸ்லிம் நியமனம் ஏன் அவசியம்?
இலங்கையிலிருந்து புனித ஹஜ் யாத்திரைக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் யாத்திரிகர்களின் மத, நிர்வாக மற்றும் மனிதாபிமான தேவைகளை கருத்தில் கொண்டு, ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் பதவிக்கு ஒரு தகுதியான முஸ்லிம் நியமிக்கப்படுவது காலத்தின் அவசியமாகும்.
ஹஜ் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் மிக முக்கியமான ஒரு புனித கடமை. அதன் அமல்கள், ஷரீஅத் சட்டங்கள் மற்றும் மத நடைமுறைகள் குறித்த ஆழமான புரிதல் அவசியம். இவ்வாறான நிலையில், ஹஜ் தொடர்பான விடயங்களில் நேரடி பொறுப்பு வகிக்கும் கொன்சியூலர் ஜெனரல் பதவியில் முஸ்லிம் ஒருவர் இருப்பது யாத்திரிகர்களின் பிரச்சினைகளை சரியாக புரிந்து விரைவாக தீர்வு காண உதவும்.
மேலும், சவுதி அரேபிய ஹஜ் அமைச்சகம், முகவாசல்கள், தங்குமிடம், போக்குவரத்து, உணவு மற்றும் அவசர சேவைகள் தொடர்பான ஒருங்கிணைப்புகளில் முஸ்லிம் கொன்சியூலர் ஜெனரலின் பங்கு மிக முக்கியமானதாகும். இது சேவைகளின் தரத்தை மேம்படுத்தி, இலங்கை ஹாஜிகளின் உரிமைகள் மற்றும் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது
இலங்கை ஒரு பன்மத நாடாக இருப்பினும், ஒவ்வொரு சமூகத்தின் மத உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில், முஸ்லிம்களுக்கு மட்டுமே உரிய ஹஜ் போன்ற புனித மதக் கடமையை நிர்வகிக்கும் முக்கிய பதவியில் ஒரு முஸ்லிம் நியமிக்கப்படுவது நியாயமானதும் பொருத்தமானதும் ஆகும்.
எனவே, அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்த விடயத்தை தீவிரமாக பரிசீலித்து, ஜித்தா ஹஜ் – இலங்கை கொன்சியூலர் ஜெனரல் பதவிக்கு தகுதி மற்றும் அனுபவம் கொண்ட ஒரு முஸ்லிமை நியமிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனைய அரச துறைகள் மற்றும் அமைச்சரவையில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டது போன்று முஸ்லீம்களின் மத நம்பிக்கைகளில் தனது இனபேத உள்தினிப்பை ஏற்படுத்தாமல் நியாயமான முறையில் முஸ்லீம்களின் உணர்வை மதிக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.
Acm Nayeem (B.Ed)
Member of pradeshiya sabha
Sammanthurai