Tamil Catholic Music Composers and Lyricists

Tamil Catholic Music Composers and Lyricists கத்தோலிக்க திருவழிபாடுகளில் தமிழ் ப?

5.முன்னைய பிரிவான அத்தியாயம் 4 இல் இசையமைப்பாளர்களும் பாடலாசிரி யர்களும் எதிர்கொள்ளும் 8 சவால்கள் குறித்து ஆராய்ந்தோம். ...
18/04/2021

5.
முன்னைய பிரிவான அத்தியாயம் 4 இல் இசையமைப்பாளர்களும் பாடலாசிரி யர்களும் எதிர்கொள்ளும் 8 சவால்கள் குறித்து ஆராய்ந்தோம். அத்தியாயம் 5 என்னும் இந்தப் பிரிவில் கத்தோலிக்க பாடலாசிரியர்கள்பற்றியும் பாடல் வரிகள் எவ்வாறு அமையவேண்டும் என்பதுபற்றியும் பார்ப்போம்:

பாடலாசிரியர்களில் இரு வகையினர் உளர். முதலாம் வகையினர் தமது சிந்தனையில் உருவாகிய மெட்டுக்கேற்ற வகையில் பாடல் வரிகளை எழுதுவோர் என்றும் இரண்டாம் வகையினர் மற்றவர்களால் இசையமைக் கப்படுவதற்காகப் பாடல் வரிகளை எழுது வோர் என்றும் எடுத்துக்கொள்ளலாம். பாடலாசிரியர்களை ஒரு வகையில் சிறு கதை எழுத்தாளர்களுக்கு ஒப்பிடலாம். சிறு கதைகளை எழுதுவோர் தாம் எழுதும் ஒவ்வொரு கதையையும் ஒரு கருப்பொ ருளை அல்லது வரலாற்றுக் கதையில் வருவதைப்போல், ஒரு கதைப் பின்புலத்தை மையமாக வைத்து, ஒரு கதைக் களத்தைச் சித்திரித்து, வேண்டுமானால் சில கற்பனை சம்பவங்களைக் காட்சிகளாகத் தொகுத்து, தமது கருப்பொருளை நியாயப்படுத்தும் வகையில் சில அறிஞர்களின் அல்லது சம யப் பெரியார்களின் கூற்றுக்களை மேற்கோ ளாகக் காட்டி, இறுதியில் சில படிப்பினை களோடு (lessons) கதையை நிறைவு செய்வர்.

வழிபாட்டிற்கான பாடல்களைப் புனைவோ ரும் ஒரு கதாசிரியரைப்போல ஒரு கருப்
பொருளை (theme), ஒரு கதைக் களத்தை (context/situation) மற்றும் ஒரு உறுதிமொழி யை அல்லது பாடத்தை (pledge/lesson) உள்ளடக்கிப் பாடல் வரிகளை அமைப்பர்.
கத்தோலிக்கராகிய நமக்குத்தான் கருப் பொருளுக்குப் பஞ்சமே இல்லையே! மீட்பின் காவியத்தை எடுத்துக்கொண்டால், மீட்பின் நாயகனாம் இயேசு கிறிஸ்து, அவரது போதனைகள், அவரது பாடு, இறப்பு மற்றும் உயிர்ப்பு, அவரது சீடர்கள், அன்னை மரியா மற்றும் திரு அவையால் அறிவிக்கப்பட்ட புனிதர்கள் மற்றும் அவர்களால் எடுத்தா ளப்பட்ட சம்பவங்கள், தூய ஆவியாரின் வருகை, பழைய ஏற்பாட்டில் வரும் தாவீது அரசரின் திருப்பாடல்கள் ... என அடுக்கடுக் காக விவிலியத்தில் வரும் அனைத்துமே கருப்பொருள்தான். நற்செய்தியில் வரும் ஒவ்வொரு சம்பவமுமே ஒரு கதைக்களம் தான். மீட்பின் அடைவதில் தடையாக இருக்கக்கூடிய தவறுகள் (failures) எவை, அவற்றை வெற்றிகொள்ள நாம் எடுக்க வேண்டிய உறுதிப்பாடுகள் (pledge/resolution)என்ன .. இவை போன்றவையும், ஆவியாரின் கொடைகள், திருவருட்சாத னங்கள், குடும்பம், சமூகம், திரு அவை, புனிதர்களின் உறவு, மறுவாழ்வு .. போன்ற எண்ணக்கருக்கள் அனைத்துமே நல்ல சுவையான கதைக் களங்களாக எடுத்தாளப் படக்கூடியவையே.

நல்ல கிறிஸ்தவனாக வாழ - அதிலும் நல்ல கத்தோலிக்கனாக வாழ நமக்கு வழிபாடுகள் தேவை. வழிபாடுகள் நன்றாக அமைய நல்ல வழிபாட்டுப் பாடல்கள் தேவை. இப் பாடல்கள் ஏனோ தானோ என்றில்லாது, அழகு தமிழில், நல்ல தாள இலயத்துடன், கேட்டவுடனேயே மனதைக் கவரும் வகையில், சுவைபட - ஆனால் ஆழ்ந்த மறையுண்மைகளைக் கொண்டதாக அமையவேண்டும். இங்கு மிகவும் கவனத்திற் கொள்ளப்படவேண்டிய ஒரு விடயம் யாதெனில், அது தாளமும் தமிழ் உச்சரிப்பும் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகும். பெரும்பாலான பாடலாசிரியர்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை. "அசை" எனப்படும் உச்சரிப்பு இடைவெளிகளில் (syllables) குறுகியவையும் உள்ளன, நீட்சி யானவையும் உள்ளன. உதாரணமாக, பழைய இராகத்தில் பாடப்படும் பரலோக மந்திரத்தில் "உம்முடைய திருச் சித்தம்" என்று வருவதைப் பாடும்போது "திருச் சீத்தம்" என்றுதான் பாடவேண்டியுள்ளது. "சித்" என்பது ஒரு அசையை மட்டும் கொண்ட குறுகிய ஒரு வல்லின உச்சரிப்பாகும். ஒன்றிற்கு மேற்பட்ட சுரங்களின் அசைகளை (உண்மை யில் "சித்" என்பதற்கு குறித்த பாடலில் நான்கு சுரங்கள் கொடுக்கப்பட் ஞஞடுள்ளன) அதற்குக் கொடுத்தால் உச்சரிப்பு நீளுவதைத் தவிர்க்கமுடியது. ஆகவேதான் "சித்தம் - சீத்தம்" ஆகின்றது. காதில் விழும்போது அது "சீற்றம்" (- அதாவது கோபம்) என்றுதான் விளங்குகின்றது. இன்னுமோர் உதாரணமாக "ஆவியானவரே அன்பின் ஆவியானவரே" பாடலைக் குறிப் பிடலாம். அதில் "இப்போ வாரும்" என்பதை "ஈப்போ வாரும்" என்றுதான் படுகிறார்கள். ஏவரினில் "இப்" என்பது ஒரு வல்லின உச்சரிப்பு ஆகும். அதற்கு ஒன்றரை அசை கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் பின்வருமாறு சீர் செய்யலாம்: "இப்போ வாரும்" என்பதற்குப் பதிலாக "இப்போது வாரும்" என்று பாடலாம். பின்வரும் சுர வடிவில் இதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்:
முன்னையதன் சுர வடிவம்: "நீ,ஸ ரீரீ".
பின்னையதன் சுர வடிவம்: "நிநீ,ஸ ரீரீ"
"இப்" என்ற வல்லினக் குறில் உச்சரிப்பக்கு "நி" என்ற சுரமும், "போ" என்ற நெடில் உச்சரிப்புக்கு "நீ," என்ற சுரமும், மீண்டும் "து" என்ற குறில் உச்சரிப்புக்கு "ஸ" என்ற சுரமும் வரும்படி பாடவும்.

தாளக்கட்டுடன் நன்கு பொருந்திப் போகும் வகையில் பாடல் வரிகள் சந்தங்கள், சங்க திகள் மற்றும் எதுகை மோனையுடன் அணி செய்யப்படல்வேண்டும். ஆக, சிறந்த பாடல் வரிகளைப் புனைவதில் ஒரு பாடலாசிரிய னுக்கு இருக்கின்ற பொறுப்பு பாரியது என்றால் அது மிகையில்லை. இவ்வாறான பாடல் வரிகள் இதயத்தைத் தொடும் இசை யமைப்புடன் வெளிவந்துவிட்டால், அவை ஆண்டுகள் பல சென்றாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிடும் என்பதில் ஐயம் இல்லை. உதாரணத்திற்கு, "அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்", " என் தேடல் நீ", "மனிதன் மிருகமாகலாம்", " அழைக்கின்றார் இயேசு ஆண்டவர்", "அர்ச்சனை மலராக", "பூம்புனல் அருகே", " என்னில் ஒன்றாக எந்தன் நல் தேவன்" போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் மக்கள் மனதில் இடம்பிடித்தமைக் கான காரணம்: எளிமையான சொற்பிர யோகம், மனங்கவரும் தாள இலயம் மற்றும் அவற்றில் பொதிந்துள்ள மறையுண்மைகள் என்பனவேயாகும்.

இன்னுமொன்றை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்: தூய அழகு தமிழில் வெளிவந்த திரு விவிலியத்தின் பொது மொழிபெ யர்ப்பே கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பாவனையில் இருந்துவருகிறது. பெருஞ் சிரத்தையெடுத்து அதனை வெளிக்கொ ணர்ந்த தமிழ்நாடு ஆயர் பேரவைக்கும் அச்சிட்டவர்களுக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். திருப்பலி வாசகங்களும் செபமாலை உட்பட நாம் அன்றாடம் சொல்லும் செபங்களும் புதிய மொழியாக் கத்தின்படியே அமைந்துள்ளன. அந்த வகையில், புதிதாக வெளிவரும் கத்தோ லிக்க திருவழிபாட்டுப் பாடல்களும் அமைந் திருப்பதுதானே முறை? ஆனால், பொதுவாக பாடல்களைப் பொறுத்த வரையில், கத்தோலிக்க இறைநம்பிக்கையாளர்கள் சில பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கின்றனர். இன்று YouTube ஐத் திறந்தால் அதில் நல்ல புதிய, பழைய கிறிஸ்தவ ஆராதனைப் பாடல்கள் ஒளி/ஒலிபரப்பாவதைக் காணலாம். அவற்றில் பாதிக்குமேல் நமது பிரிவினைச் சபையினராலேயே வெளியிடப் படுகின்றன. அவற்றில் பயன்படுத்தப்படும் சொல்லாடல்களைக்கொண்டு அவற்றை நாம் இலகுவாக இனங்காணலாம் (உதாரணமாக - ஆத்மா, ஜீவன், கர்த்தர், ஸ்தோத்திரம், ஜெபம், சங்கீதம், சுவிசேஷம், வேத புஸ்தகம் முதலியன). நம்மில் ஒரு சாரார் கேட்கலாம், 'எல்லாப் பாடல்களும் கடவுளுக்குப் புகழ்ச்சியாகத்தானே பாடப் படுகின்றன, இயேசுவே ஆண்டவர் என்று தானே அவர்களும் முழங்குகின்றனர், பயன்படுத்தப்படும் வார்த்தைகளைக் காரணம் காட்டி நமக்குள் நாம் ஏன் முரண் பட்டுக்கொள்ளவேண்டும்?' என்று. இப்படி யான சிந்தனைப் போக்குடன் வெறும் பெயருக்குக் கத்தோலிக்கர்களாக வாழும் கொள்கைப் பிடிப்பில்லாதவர்களைத்தான் பிரிவினைச் சகோதரர்களும் குறிவைத்து, அவர்களைச் சூழ்ச்சிகரமாகத் தங்கள் வலைக்குள் வீழ்த்துகின்றனர். அவர்களது உள்நோக்கம் உண்மையான திரு அவையாம் கத்தோலிக்கத் திரு அவையை உடைக்க வேண்டும் என்பதே. புனித இராயப்பரின் தலைமைப் பீடத்தை ஏற்காத இவர்கள், நற்கருணையில் இயேசுவின் பிரசன்னத்தை ஏற்காத இவர்கள், முதல் நற்கருணைப் பேழையாகத் திகழும் அன்னை மரியாவின் மேன்மையை ஏற்காத இவர்கள், மேற்கூறிய இறையியல் உண்மைகள்பற்றி வாயே திறக்காது, தமக்கு இசைவான வார்த்தை களை மட்டுமே விவிலியத்திலிருந்து எடுத்தாளும் இவர்கள் "ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலைஏற்படும்" (யோவான் 10:16) என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண் டிருக்கும் நம் ஆண்டவர் இயேசுவின் உண்மைச் சீடர்களாகத் தாங்களும் இருப்பதில்லை, மற்றவர்களையும் இருக்க விடுவதில்லை. எனவே, இப் போலி ஆயர்களின் வெளி ஆடம்பரங்களாலும் பசப்பு வார்த்தைகளாலும் கவரப்படாமல், உயிருள்ள தூய கத்தோலிக்க நம்பிக்கையை நம் எல்லோரிலும் சுடர்விட்டு எரியச்செய் யும்வகையில் நம் கத்தோலிக்க பாடலா சிரியர்கள் தமக்கென்று ஒரு கொள்கையை வகுத்து, சக்தி வாய்ந்த தம் எழுத்தாற்றலால், எல்லா வேளைகளுக்கும் தேவையான பாடல்களை எழுதும் அதேவேளை, தமிழ்த் தூது தனிநாயகம் அடிகளாரைப்போல் மறை வளர்த்துத் தமிழ்த் தொண்டாற்ற முன்வரு வார்களாக!

கத்தோலிக்க பாடலாசிரியர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கை யில் என்னால் எழுதி இசையமைக்கப்பட்ட திருவிருந்துப் பாடல் ஒன்றின் வரிகளை வாசகர்களுக்கு இங்கு சமர்ப்பிக்கின்றேன்:

வாரும் தேவா வாருமே - இந்த
பாவியைக் கண் பாருமே
ஒரு சொல் நீரும் உரைத்தால் போதும்
நலமும் என்னைச் சேருமே.

உம்மைப் பிரிந்து அலைந்து திரிந்து
வாழ்வில் கண்டேன் வீழ்ச்சியே
அகந்தையாலே அறிவிழந்தேன்
அதுவும் சாத்தான் சூழ்ச்சியே
என்னில் நீரும் எழுந்து வந்தால்
என்றும் உந்தன் ஆட்சியே
எந்த நிலையில் இருந்திட்டாலும்
நானும் உமக்கோர் சாட்சியே

26/01/2021

கத்தோலிக்க திருவழிபாடுகளில் தமிழ் பாடல்களின் பரிணாம வளர்ச்சி
1.
கத்தோலிக்க திரு அவையில் சுமார் 70 - 80 வருடங்களுக்கு முந்திய காலத்தில் இலத்தீன் மொழியின் பயன்பாடு அதிகம் காணப்பட்டதால், திருவழிபாட்டுப் னைத்தும் அம்மொழியிலேயே காணப்பட்டன (உ+ம் : Veni Creator, The Deum Dominum, Tantum Ergo, Ave Maris Stella). நாளடைவில் அவை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதுடன் அதே மெட்டுகளில் பாடப்பட்டன. பக்திப் பரவசத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய கிரகோரியன் இசையில் (Gregorian Chant) அமைந்த பற்பல பாடற் திருப்பலிகளும் (High Mass) வேஸ்பர் ஆராதனை (Vespers) எனப்படும் மாலை வழிபாட்டுப் பாடல்களும் முக்கிய திருநாட்களின்போது இலத்தீன் மொழியிலேயே பாடப்பட்டுவந்தன.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் பின்னர் திரு அவையில் புகுத்தப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களின் விளைவாக, திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் வழிபாட்டு முறைகளிலும் திருப்பலிப் பாடல்களிலும் மாற்றங்கள் பல இடம்பெற்றன. பல்வேறு நாடுகளில் வாழும் இறை மக்களும் திருவழிபாட்டில் தத்தமது கலாச்சாரங் களையும் பாரம்பரியங்களையும் உட்புகுத்த இடமளிக்கப்பட்டதால், வழிபாடுகள் புதுப் பொலிவு பெற்றதுடன் பொருள் பொதிந்ததாகவும் மாற்றம் பெற்றன. வழிபாடுகளில் வெறுமனே பார்வையாளர் களாக இருந்த நம்பிக்கையாளர்கள் இதனையடுத்துப் பங்கேற்பாளர்களாகினர்.

தென்னிந்திய மறை மாவட்டங்களில் குறிப்பாக, சென்னை, திருச்சி போன்ற இடங்களில் உள்ள குருத்துவக் கல்லூரிகளுடன் இலங்கைத் தமிழ் மறை மாவட்டங்கள் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தமையால், அங்கு புதிது புதிதாக இசைக் குறிப்புகளுன் வெளிவரத் தொடங்கிய திருவழிபாட்டுப் பாடல்கள் இலங்கையிலும் உடனுக்குடன் அறிமுகமாகி விருப்புடன் பாடப்பட்டன. குருத்துவப் படிப்பை மேற்கொள்ள இலங்கையிலிருந்து தமிழகம் சென்ற குரு மாணவர்களும் வேதியர்களும் (Catechists) அவர்களை அங்கு அனுப்பிய யாழ், மன்னார், மட்டு மறை மாவட்ட ஆயர்களும், மற்றும் மேலைத்தேய இசையிலும் (Western Music) கருநாடக இசையிலும் (Karnatic Music) பரிச்சயம் பெற்றிருந்த உள்ளூர் இசை ஆர்வலர்களும் இதில் நிறையவே பங்களிப்புச் செய்தனர். அத்துடன், இசையறிவு படைத்த இலங்கை வாழ் இசை ஆர்வலர்களும் சுயமாகப் பாடல்கள் புனைந்து, இசையமைத்து வெளியிடத் தொடங்கினர்.

2.
கடந்த காலத்திலும் சரி, சமகாலத்திலும் சரி, தமிழகத்திலும் இலங்கையிலும் அவ்வாறு பங்களிப்புச் செய்து வந்தவர்கள் மற்றும் இப்போதும் செய்து வருகின்றவர்கள் மற்றும் அவர்களுக்குப் பக்க பலமாக நின்று செயற்படும் பாடலாசிரியர்கள், வாத்தியக் கலைஞர்கள், ஒலிப்பதிவு நிபுணர்கள் மற்றும் கலையகச் சேவை வழங்குனர்கள் போன்றோர் நிச்சயம் நன்றியோடு நினைவு கூரப்படவேண்டியவர்கள், பாராட்டப்பட வேண்டியவர்கள். இசைத்துறையில் இறைவன் தமக்குத் தந்த தாலந்துகளை அவர்கள் உரிய முறையில் விருத்தி செய்து செயற்பட்டதன் விளைவாக, மனதைத் தொடக்கூடிய நேர்த்தியான இசையமைப் புடன் கூடிய அரும் பெரும் பொக்கிஷங்கள் என்று சொல்லக்கூடிய பல திருவழிபாட்டுத் திருப்பலிப் பாடல்கள் நமக்குக் கிடைத்தன. அவை எல்லாவற்றையும் பட்டியலிடின் பக்கங்கள் பல தேவை. அதிகப்படியான பாடல்கள் தமிழகத்திலிருந்தே வெளியாகின. எல்லாமே அருமையான பாடல்கள்தான். ஆனால், அவற்றுள் எத்தனை பாடல்கள் எம் நினைவைவிட்டு அகன்றுவிட்டன என்பதை நினைக்கும்போது கவலையாக உள்ளது.
கடந்த காலத்திலும் சரி, சமகாலத்திலும் சரி, தமிழகத்திலும் இலங்கையிலும் அவ்வாறு பங்களிப்புச் செய்து வந்தவர்கள் மற்றும் இப்போதும் செய்து வருகின்றவர்கள் மற்றும் அவர்களுக்குப் பக்க பலமாக நின்று செயற்படும் பாடலாசிரியர்கள், வாத்தியக் கலைஞர்கள், ஒலிப்பதிவு நிபுணர்கள் மற்றும் கலையகச் சேவை வழங்குனர்கள் போன்றோர் நிச்சயம் நன்றியோடு நினைவு கூரப்படவேண்டியவர்கள், பாராட்டப்பட வேண்டியவர்கள். இசைத்துறையில் இறைவன் தமக்குத் தந்த தாலந்துகளை அவர்கள் உரிய முறையில் விருத்தி செய்து செயற்பட்டதன் விளைவாக, மனதைத் தொடக்கூடிய நேர்த்தியான இசையமைப் புடன் கூடிய அரும் பெரும் பொக்கிஷங்கள் என்று சொல்லக்கூடிய பல திருவழிபாட்டுத் திருப்பலிப் பாடல்கள் நமக்குக் கிடைத்தன. அவை எல்லாவற்றையும் பட்டியலிடின் பக்கங்கள் பல தேவை. அதிகப்படியான பாடல்கள் தமிழகத்திலிருந்தே வெளியாகின. எல்லாமே அருமையான பாடல்கள்தான். ஆனால், அவற்றுள் எத்தனை பாடல்கள் எம் நினைவைவிட்டு அகன்றுவிட்டன என்பதை நினைக்கும்போது கவலையாக உள்ளது. இக் கவலையை ஓரளவாவது நாம் தீர்த்துவைக்க வேண்டுமாயின், தமிழ் பேசும் நல்லுலகிலிருந்து இதுவரை வெளியான, எதிர்நோக்காளர்கள் மத்தியில் மிகவும் வரவேற்புப் பெற்ற, தமிழ் கத்தோலிக்க திருப்பலி மற்றும் தியானப் பாடல்கள், அவை வெளியிடப்பட்ட காலப்பகுதிகள், இசையமைத்தவர்கள், பாடலாசிரியர்கள், அவற்றின் இசைக் குறிப்புக்கள், பாடலைப் பாடியவர்கள் போன்ற தரவுகளைத் திரட்டி, அவற்றிற்கு உயிரூட்டிச் சுவடிகள் கூடத்தில் அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

மேலும், சினிமாத் துறையில் முன்னாள் இசை மேதைகளான கே. வி. மகாதேவன், எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் பின்னாளில் இசைப் புரட்சி செய்த இசைஞானி இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் சமகாலத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஹரிஸ் ஜெயராஜ், டி. இமான், அனிருத் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் வெளிவந்த பழைய, இடைக்கால மற்றும் புதிய பாடல்களைக் கேட்கப் பெரும் இரசிகர் பட்டாளம் இருப்பதுபோல் நமது கத்தோலிக்க பாடல்களையும் ஆன்மீக தாகத்துடன் தேடிப் பெற்று, "என் வாழ்வில் எல்லாமே இயேசுதான், இந்நாளும் எந்நாளும் இயேசுதான், என் முன்னும் என் பின்னும் இயேசுதான், என் பேச்சிலும் மூச்சிலும் இயேசுதான்" என்ற திட மனதுடன் நாமும் அவற்றைக் கேட்டு மகிழ்வதோடு மட்டும் நில்லாது, மற்றவர்களும் அதைக் கேட்கும்படியாக அவர்களுடன் அவற்றைப் பகிர்ந்துகொள்ள நாம் முன்வர வேண்டும்.

மேலும், அவற்றுள் தனித்துவம் பெற்ற பாடல்களைத் தேர்வு செய்து ஆல்பங்களாக அவற்றை வெளியிடலாம். மறை பரப்புப் பணியில் ஈடுபட விரும்பும் வசதிபடைத்த இறையடியார்கள் இச்செயலில் ஈடுபடலாம். சென்னையில் உள்ள சாந்தோம் கலைத் தொடர்பு நிலையம் ஏற்கனவே "இசை 2000" என்ற மகுடத்தில் பல நூறு பாடல்கள் அடங்கிய ஒரு நூலை இசைக் குறிப்புடன் வெளியிட்டது பலருக்கும் நினைவிருக் கலாம். அதைத் தொடர்ந்து "இறையலைகள்" என்ற பெயரில் சுமார் 1300 mp3 பாடல்கள் அடங்கிய ஓர் இறுவட்டும் இந்தியாவில் இருந்து வெளியானது. இது நிகழ்ந்து 10 - 15 ஆண்டுகளாகிவிட்டன. இந்த இரண்டு வெளியீடுகளுக்கும் இந்தியாவிலும் இலங்கையிலும் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் மிகப் பிரபலமான பல தமிழ் திருப்பலிப் பாடல்கள் இவை இரண்டிலுமே இடம் பெறவில்லை. குறிப்பாக, அருட்தந்தையர்களான அமலதாஸ், தம்புராஜ், ஜாண் குழந்தை, சார்ள்ஸ்மணி, தீஸ்மாஸ், ஜோமிக்ஸ், ஆல்பின், ம. ப. ஸ்தனிஸ்லாஸ் என்போரின் பல பாடல்கள் விடுபட்டுப் போயின. இப் பகுதியியில் பல கத்தோலிக்க இசையமைப்பாளர்களும் அவர்களின் படைப்புகளும் விடுபட்டி ருக்கலாம். தகவல் அறிந்தோர் தம் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள் ளலாம். மேலும் காலத்தால் அழியாத பழைய கத்தோலிக்க பாடல்கள் குறுந் தகட்டிலோ (Micro Chips) அல்லது இறுவட்டிலோ யாரிட மாவது இருந்தால், அவற்றிற்கான இணைப்பை ( Link) அனுப்பி உதவலாம்.

இது இவ்வாறிருக்க, இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக, சுமார் 100 வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத் திலிருந்து அப்போதைய யாழ் ஆயரின் அனுமதியுடன் "கத்தோலிக்க கீர்த்தனை மாலை" என்ற பெயருடன் அழகான ஒரு நூல் வெளிவந்தது. இதன் சிறப்பு என்னவென் றால், அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த இலத்தீன் மற்றும் தமிழ் மொழியிலான திருப்பலிப் பாடல்களும் மாதா மற்றும் புனிதர்கள் பேரிலான பாடல்களும் தரமான இசைக் குறிப்புகளுடன் வெளிவந்தமைதான். அக் காலத்தில் ஆலயங்கள் பலவற்றிலும் பாடகர் குழாமில் இருந்தோருக்கு ஆர்மோனியம் வாசிப்பதற்கும் மேலைத்தேய இசையைக் கற்றுக் கொள்வதற்குமான ஆசை ஏற்பட்டதற்குக் காரணமாக இருந்ததே இந்த இசை நூல்தான் என்றால் அது மிகை யாகாது. பெறுமதிமிக்க இதன்பிரதிகள் யாரிடமாவது இருப்பின் அதை நிழற்படப் பிரதி எடுத்து எனக்கு அனுப்பி உதவலாம்.

இந்தியப் படைப்புக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல திருப்பலிப் பாடல்கள் கண்டி, அம்பிட்டிய அமல மரித் தியாகிகளின் பெரிய குருமடத்தில் (OMI Scholasticate, Ampitiya, Kandy) இருந்து 70'களில் "இறை இசை மாலை" என்ற பெயரில் பாகம் I, பாகம் II, பாகம் III என்ற மூன்று தொகுதிகள் கொண்ட நூலாக வெளிவந்தன. அவற்றின் பிரதிகளைத் தம் வசம் வைத்திருப்போரும் இவ்விடயத்தில் எனக்கு உதவலாம்.

22/01/2021

அன்பர்களின் கவனத்திற்கு!
இவ்வரங்கில் இடம்பெறும் அனைத்துக் கட்டுரைகளும் திருத்தத்திற்கு உட்பட இடமளிக்கப்படுகிறது. தவறுகள் அல்லது திருத்தங்கள் ஏதும் இருப்பின் வரவேற்கப் படுகின்றன.

All that appear in this forum are open for correction or edition. I shall be happy to receive comments/corrections regarding misreporting or omission due to inadvertence.

விரைவில் இங்கு இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள சில விடயங்கள் வருமாறு:
Upcoming Articles in this forum soon:

1. இசையறிவை வளர்ப்போம்
(Lessons on Western & Karnatic Music)
2. பாடல் வரிகளை எழுதப் பயன்படும் சில குறிப்புகள்
(Useful hints for effective lyrics writing)
3. திருவழிபாட்டில் கிராமிய இசை
(Folk Music in Liturgy)

22/01/2021

கத்தோலிக்க திருவழிபாடுகளில் தமிழ் பாடல்களின் பரிணாம வளர்ச்சி
1.
கத்தோலிக்க திரு அவையில் சுமார் 70 - 80 வருடங்களுக்கு முந்திய காலத்தில் இலத்தீன் மொழியின் பயன்பாடு அதிகம் காணப்பட்டதால், திருவழிபாட்டுப் னைத்தும் அம்மொழியிலேயே காணப்பட்டன (உ+ம் : Veni Creator, The Deum Dominum, Tantum Ergo, Ave Maris Stella). நாளடைவில் அவை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதுடன் அதே மெட்டுகளில் பாடப்பட்டன. பக்திப் பரவசத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய கிரகோரியன் இசையில் (Gregorian Chant) அமைந்த பற்பல பாடற் திருப்பலிகளும் (High Mass) வேஸ்பர் ஆராதனை (Vespers) எனப்படும் மாலை வழிபாட்டுப் பாடல்களும் முக்கிய திருநாட்களின்போது இலத்தீன் மொழியிலேயே பாடப்பட்டுவந்தன.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் பின்னர் திரு அவையில் புகுத்தப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களின் விளைவாக, திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் வழிபாட்டு முறைகளிலும் திருப்பலிப் பாடல்களிலும் மாற்றங்கள் பல இடம்பெற்றன. பல்வேறு நாடுகளில் வாழும் இறை மக்களும் திருவழிபாட்டில் தத்தமது கலாச்சாரங் களையும் பாரம்பரியங்களையும் உட்புகுத்த இடமளிக்கப்பட்டதால், வழிபாடுகள் புதுப் பொலிவு பெற்றதுடன் பொருள் பொதிந்ததாகவும் மாற்றம் பெற்றன. வழிபாடுகளில் வெறுமனே பார்வையாளர் களாக இருந்த நம்பிக்கையாளர்கள் இதனையடுத்துப் பங்கேற்பாளர்களாகினர்.

தென்னிந்திய மறை மாவட்டங்களில் குறிப்பாக, சென்னை, திருச்சி போன்ற இடங்களில் உள்ள குருத்துவக் கல்லூரிகளுடன் இலங்கைத் தமிழ் மறை மாவட்டங்கள் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தமையால், அங்கு புதிது புதிதாக இசைக் குறிப்புகளுன் வெளிவரத் தொடங்கிய திருவழிபாட்டுப் பாடல்கள் இலங்கையிலும் உடனுக்குடன் அறிமுகமாகி விருப்புடன் பாடப்பட்டன. குருத்துவப் படிப்பை மேற்கொள்ள இலங்கையிலிருந்து தமிழகம் சென்ற குரு மாணவர்களும் வேதியர்களும் (Catechists) அவர்களை அங்கு அனுப்பிய யாழ், மன்னார், மட்டு மறை மாவட்ட ஆயர்களும், மற்றும் மேலைத்தேய இசையிலும் (Western Music) கருநாடக இசையிலும் (Karnatic Music) பரிச்சயம் பெற்றிருந்த உள்ளூர் இசை ஆர்வலர்களும் இதில் நிறையவே பங்களிப்புச் செய்தனர். அத்துடன், இசையறிவு படைத்த இலங்கை வாழ் இசை ஆர்வலர்களும் சுயமாகப் பாடல்கள் புனைந்து, இசையமைத்து வெளியிடத் தொடங்கினர்.
.. தொடரும் ...

21/01/2021

கத்தோலிக்க திருவழிபாடுகளில் தமிழ் பாடல்களின் பரிணாம வளர்ச்சி

19/01/2021

"ஒரு முறை பாடுதல் இருமுறை ஜெபிப்பதற்குச் சமம்" என்ற புனித அகுஸ்தினாரின் கூற்றிற்கு வலுச் சேர்க்கும் ஒரு முயற்சியாக "கத்தோலிக்க தமிழ் இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்கள்" என்ற மகுடத்தின்கீழ், நம்மிடையே இலை மறை காயாகப் பரவி வாழும் இசைத் திறமை படைத்த பல ஆண், பெண் இசை ஆர்வலர்களுக்குத் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கும், கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்குமான களம் ஒன்றினை முகநூல்வழியாக அமைத்திட வேண்டும் என்பது என் நெடுநாள் அவா. 1965 - 1985 காலப்பகுதிகளில் தென் இந்தியாவில் கொடிகட்டிப் பறந்த பல அற்புதமான கத்தோலிக்க இசையமைப்பாளர்களிடமிருந்து கருநாடக மற்றும் மேலைத்தேய இராகங்களில் இசைக்குறிப்புகள் (notations) மூலமாக வெளியிடப்பட்ட, ஆன்மீக அருட்சியுடன்கூடிய பல திருப்பலிப் பாடல்கள் எம்மை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை. அவற்றுள் பல இன்று இசை வடிவிலோ அல்லது எழுத்து வடிவிலோ எம்மிடம் இல்லை. அவற்றைத் தம்வசம் வைத்திருப்போர் இந்த அரங்கத்தின் வாயிலாகத் தமக்குள் பரிமாறிக்கொள்ளலாம். புதிய படைப்புக்களை வைத்திருப்போர் அவற்றை இசைவடிவில் இங்கு பதிவிடலாம். இதன்மூலம் இறைவனுக்குப் புகழ்ச்சியையும் தமக்கு ஆன்மீக திருப்தியையும் ஏற்படுத்திக்கொள்ளலாம். அத்துடன் திரு இசை மற்றும் keyboard வாசித்தல் மற்றும் இசை அமைத்தல் என்பவற்றில் தமக்கெழும் சந்தேகங்களைத் துறை சார்ந்தவர்கள் மூலமாகத் தீர்த்துக்கொள்ளவும் இக் களத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆர்வமுள்ளவர்கள் இதில் இணைந்துகொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். முதன்முறையாக இணைந்து கொள்பவர்கள் தாம் விரும்பினால் இசைத்துறையில் தமது அனுபவம்பற்றிக் குறிப்பிடலாம்.
உங்கள் அன்பன்
எட்வேட் பீரிஸ்

Address

Ward 07, Talaimannar Road,
Pesalai

Telephone

+94773000504

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Catholic Music Composers and Lyricists posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Tamil Catholic Music Composers and Lyricists:

Share