நீர்கொழும்பு ஐயப்ப தேவஸ்தானம்

  • Home
  • Sri Lanka
  • Negombo
  • நீர்கொழும்பு ஐயப்ப தேவஸ்தானம்

நீர்கொழும்பு ஐயப்ப தேவஸ்தானம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

🙏ஓம் கன்னி மூல கணபதி பகவானே🙏            🌹சரணம் ஐயப்பா🌹நீர்கொழும்பு ஐயப்ப தேவஸ்தானம்யாத்திரை குழுவின்🙏43 வது மண்டல பூஜை🙏 ...
23/12/2025

🙏ஓம் கன்னி மூல கணபதி பகவானே🙏
🌹சரணம் ஐயப்பா🌹
நீர்கொழும்பு ஐயப்ப தேவஸ்தானம்
யாத்திரை குழுவின்🙏43 வது மண்டல பூஜை🙏 எதிர்வரும் (27-12-2025)) சனிக்கிழமை மகா மண்டல பூஜை நடத்துவதற்காக ஐயனின் உத்தரவு கிடைத்துள்ளது.

பால்குட பவனி காலை 07.30-08.00 மணி (பக்தர்கள் உரிய நேரத்தில் கலந்துகொண்டு பூஜைகளில் கலந்து ஐயன் அருளைப்பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்!)

(27.12.2025) அன்று நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாச்சார மண்டபத்தில்(YMHA)காலை 08.30 மணி : மஹா கணபதி ஹோமம் நடைபெற்ற பின் பின்னர் பஜனை மற்றும் பகல் 12.00 மணிக்கு மகேஸ்வர பூஜை நிறைவுடன் அன்னதானம் நடைபெறும்.

மாலை : நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாச்சார மண்டபத்தில்(YMHA) மாலை 06.00 மணிக்கு விசேட பூஜைகள் ஆரம்பமாகி பஜனை, தீபாராதனைகள் இடம்பெற்று ஐயன் இந்து இளைஞர் மன்ற கலாச்சார மண்டபத்திலிருந்து சன்னிதானம் சென்றடைவார், அதனைத் தொடர்ந்து ஜோதி பிரசாதம் வழங்கப்படும்.

ஐயப்ப சுவாமிகள் ,அடியார்கள் அனைவரும் மண்டல பூஜை நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஐயன் ஐயப்பனின் அருள் பெறுமாறு அன்போடு அழைக்கிறோம்.

அனைவரையும் வருக வருகவென்று அழைக்கின்றோம்.🙏🙏🙏

♦️அமரர் செ. ரவிச்சந்திரன் குருசுவாமியின் ஆசியுடன் G.ஜெகநாதன் மாஸ்டர் குருசுவாமி.

✍️ Negombo Thanush

♦️சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டு, மண்டல பூஜைகள் தொடங்கின.இதுவரை 30,000-க்கும் ம...
17/11/2025

♦️சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டு, மண்டல பூஜைகள் தொடங்கின.

இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து முடித்துள்ளனர்.

அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பெரிய நடை பந்தல், சிறிய நடை பந்தல் போன்ற இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.

17.11.2025

◼️சுவாமியே சரணம் ஐயப்பா ◼️இன்று சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கும் இனிய நாள்.....*மாலை அணியும் பக்தர்கள் ...
16/11/2025

◼️சுவாமியே சரணம் ஐயப்பா ◼️

இன்று சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கும் இனிய நாள்.....

*மாலை அணியும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய விடயங்கள்......

1 ஐயப்ப வழிபாட்டில் ஜாதி மதம் இனம் மொழி என்ற வேறுபாடில்லை. உள்ளன்போடும் தூய்மையுடனும் ஐயனை நாடும் அனைவரும் மாலை அணிய முடியும்.

2 மாலை அணிய விரும்பும் பெண்கள் 10 வயதிற்கு குறைந்தவர்களாகவும் (வயதிற்கு வராத பெண் குழந்தைகள்) 50 வயதை கடந்த பெண்களாகவும் (மாதவிடாய் சுழற்சி நிறுத்தப்பட்டவர்கள்) இருக்க வேண்டும்.

3 விரத மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரை மேற்கொள்வது கட்டாயம் (மாலை அணிந்தாள் சபரிமலை). அதே சமயம் இந்திய நாட்டின் சபரிமலை செல்வதற்கு தேவையான முழு பண ஒழுங்குகள் தொடர்பாக முன்னாயத்தமும் மனத்தைரியமும் அதனை நிர்வகிக்கக்கூடிய மனநிலை இருக்க வேண்டும்.

4 மாலை அணியும்பொழுது ஐயப்ப மாலை அணிவதற்கான மந்திரத்தை உச்சரித்து மாலை அணிய வேண்டும்.

5 தாய், தந்தை அல்லது சுவாமிமாரின் பாதுகாவலர் போன்ற பெரியோர்களின் விருப்பத்தோடு அவர்களிடம் உத்தரவு பெற்ற பின்னரே அவர்களின் ஆசீர்வாதத்தோடு மாலை அணிதல் வேண்டும். இதுவே திருமணம் முடிந்தவராயின் கணவன்/மனைவியின் அனுமதியையும் கட்டாயம் பெற்றிருத்தல் வேண்டும்.

6 கார்த்திகை மாதம் முதலாம் திகதி மாலை அணிய மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. ஆனால் சபரிமலை ஐயப்ப சன்னிதான 18 படி ஏறுவதற்கு முன் 41 நாட்கள் விரதம் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால் அதனைக் கருத்தில் கொண்டு நாட்களைச் சரியாகக் கணக்கிட்டு விரதம், பூஜைகள் மற்றும் யாத்திரைச் செயல்களை முறையாகத் திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும்.

7 தலைமுடி மற்றும் தாடி மரியாதைக்குரிய தோற்றத்தைக் கொடுக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.

8 முக்கியமாக சுவாமிமார்களும் குருசுவாமிகளும் தங்களது தலைமுடி, மீசை மற்றும் தாடியை ஒரே நிறத்தில் (இயற்கையாக கருப்பு அல்லது வெள்ளை) பராமரிக்க வேண்டும். சாயம் போட விரும்பினால் கருப்பு நிறத்தில் மட்டுமே சாயம் போட அனுமதி உண்டு (அதுவும் மாலை இடுவதற்கு முன்பாகும்). வேறு எந்த நிறங்களும் அல்லது முரண்பட்ட நிறங்களும் அனுமதிக்கப்படாது. அவர்களது தோற்றம் எளிமையாகவும் மரியாதையுடனும் விரதம் மற்றும் யாத்திரைக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.

9 விரதக் காலத்தில் எளிமையுடன் இருப்பதற்காக எந்தவித ஆபரணங்களும் அணியக் கூடாது (பெண்கள் தாலி மற்றும் தோடு அணியலாம்). ஆண் சுவாமிகள் தோடு, கைக்காப்பு, கால் கயிறு, சங்கிலி, கழுத்துச் சங்கிலி, மோதிரம் போன்றவை விரத காலங்களில் அணியக்கூடாது. குருக்கள்மார் கடுக்கன் அணிந்துக்கொள்ளலாம்.

10 மாலை அணியும் ஒரு பக்தர் மாலை அணியும் முன் உடலையும் மனதையும் தயார் நிலையில் வைக்க வேண்டியது அவசியம். அதுமட்டுமல்லாமல் ஐந்து நாட்களுக்கு முன்பே தமது இல்லத்தைச் சுத்தம் செய்து மாமிசம், மதுபானம் முதலியவற்றை அகற்ற வேண்டும்.

11 குரு சுவாமிக்குக் கொடுக்கப்படும் குருதட்சணையானது சபரிமலை யாத்திரையில் குருசுவாமி (மீண்டும்) வழிகாட்டி மட்டுமல்லாமல் ஆன்மீகப் பயணத்தில் ஆதரவுத் தூணாகவும் உள்ளார். அவருக்கு நன்றியை வெளிப்படுத்தும் விதமாகக் குருதட்சணை வழங்கப்படுகிறது. பணத்தினை வெற்றிலையில் வைத்துக் குருதட்சணையாக வழங்கலாம். ஆனால் அந்தத் தொகையை எவரும் நிர்ணயிக்க முடியாது. அது அவரவர் விருப்பம்.

12 தீட்டு சம்பந்தப்பட்ட விடயங்களைக் குருநாதருடன் கலந்தாலோசித்து அவரின் அனுமதியைப் பெற்று மாலை அணிய வேண்டும்.

17.11.2025

♦️ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் கோரிக்கை பெருந்...
13/11/2025

♦️ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் கோரிக்கை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆலோசனை பிரகாரம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பரிந்துரைக்கமைய அமைச்சரவை அனுமதி பெறப்பட்டதுடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (13) அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இது உலக வாழ் இந்துக்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியோடு ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக பிரகனப்படுத்திய ஒரே நாடு என்று பெருமையினையும் இலங்கை பெற்றுள்ளது.

13.11.2025

🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 #இலங்கை_ஐயப்ப_சுவாமிமாருக்கான 🙏சபரிமலை புனிதயாத்திரையின் தாத்பரியம் மற்றும் அதனை  #இலங்கை_அ...
12/11/2025

🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
#இலங்கை_ஐயப்ப_சுவாமிமாருக்கான 🙏
சபரிமலை புனிதயாத்திரையின் தாத்பரியம் மற்றும் அதனை #இலங்கை_அரசாங்கம் புனித யாத்திரையாக அங்கீகரிக்க வேண்டி தொகுக்கப்பட்ட பரிந்துரை அறிக்கை.⬇️⬇️
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
♦️சபரிமலைக்கு புனிதயாத்திரையை மேற்கொள்ளும் சுவாமிமார்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், ஒழுக்கங்கள் மற்றும் விதிமுறைகள் ஆகியவற்றை விளக்கும் அறிக்கை...⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கோடி கணக்கான பக்தர்களின் ஆன்மீக வாழ்வில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு புனித ஸ்தலமாக திகழ்கிறது.

சபரிமலை புனித யாத்திரை என்பது சமூக, சாதி, மொழி, நாடு ஆகிய எல்லாப் பாகுபாடுகளையும் தாண்டும் ஒரு ஆன்மீக ஒன்றிணைப்பாகும். இலங்கையின் இந்துக்களுக்கு மட்டுமன்றி உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் இந்துக்கள் ஆழ்ந்த பக்தியுடன் மேற்கொள்ளும் ஒரு புனித யாத்திரை ஆகும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரையை குறிப்பாக இலங்கையின் தமிழ் இந்து சமுதாயம் ஆன்மீகம் மற்றும் பக்தி உணர்வோடு மேற்கொண்டு வருகின்றனர். எனவே சபரிமலை யாத்திரையை இலங்கை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக புனித யாத்திரை என அங்கீகரிப்பதானது மிகவும் பொருத்தமானதும், தேவையானதுமான ஒரு நடவடிக்கையாக அமையும்.

சபரிமலை புனித யாத்திரையின் தாத்பரியம் ''தந்மயம் ஹி மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ" (மனம் தான் பந்தத்திற்கும், விடுதலைக்கும் காரணம்) இந்தியாவின் தொன்மையான ஆன்மிக மரபுகளில் ஒன்று தான் சபரிமலை ஐயப்பனின் யாத்திரை. இது ஒரு பாதயாத்திரையும், தீர்த்தயாத்திரையும் உள்ளடக்கிய ஒரு புனித யாத்திரையாக கருதப்படுகிறது. அதன் ஆழத்தில் உள்ளதொரு மனிதனின் ஆன்மிகப் பயணம் சனாதன தர்மத்தின் புனிதக் கொள்கைகளுடன் நெருக்கமாகவே தொடர்புபட்டுள்ளது.

இந்த யாத்திரை என்பது ஒரு ஆன்மிக சாதனையின் நடைமுறை வடிவமாகவும், மனிதனின் வாழ்வியல் மாற்றத்தை நோக்கி செல்லும் தத்துவ பாதையாகவும் விளங்குகிறது. சபரிமலை யாத்திரை என்பது ஒரு சாதாரண கோயில் வழிபாடல்ல. இது ஒவ்வொரு பக்தனின் உள்ளத்தை தூய்மைப்படுத்தி அவனை பக்தியிலும், தனிமனித ஒழுக்கத்திலும் உயர்த்தி மும்மலங்களை கடந்து முக்தி என்ற பிறவா நிலைக்கு வழிகாட்டும் ஆன்மீகப் யாத்திரையாக உள்ளது.

இந்த யாத்திரையின் மூலம் ஒரு மனிதன் தன்னைத் தூய்மைப்படுத்தி ஒரு உயர்ந்த இலக்கை நோக்கிச் செல்லும் ஒழுக்கமான ஆன்மீக பாதையில் பயணிக்கிறான். அதனால்தான் இது ஒரு மனிதனின் உடல், மனம், செயல் மற்றும் வாழ்வியலை மாற்றும் யாத்திரை என்று பார்க்கப்படுகிறது.

சபரிமலை புனிதயாத்திரையில் இலங்கை இந்து தமிழர்கள் ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர். இந்த யாத்திரை அவர்கள் குடும்ப பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவே விளங்குகிறது. இந்த புனிதயாத்திரை அவர்களின் மத உணர்வுகளை உறுதிப்படுத்தும் ஒரு தூய வழியாக இருக்கின்றது. இந்தியா - இலங்கை இடையேயான இந்த ஆன்மீக உறவுக்கு பல ஆண்டுகளாக அடித்தளமாக இருந்து வந்துள்ளது. இந்த சபரிமலை புனிதயாத்திரை தான்.

இந்த யாத்திரையின் மையத்துவம், "தத்துவமசி" என்ற உபநிடத வாக்கியத்தில் அடங்கியுள்ளது - அதாவது, ”நீயே அந்த பரம்பொருள்". இதன் மூலம் பக்தன் தன்மையைக் கடந்து இறைவனுடன் ஐக்கியம் அடையும் யாத்திரையாக அமைந்துள்ளது. சபரிமலை யாத்திரை செல்வதற்கு முன் 41 நாட்கள் அதாவது ஒரு மண்டல விரதம் மிக முக்கியம். ஒரு மண்டல விரதம் என்பது, ஒரு வாழ்வியல் மாற்றம் இது மனிதனை தனது உடலோடு மட்டுமல்லாமல் மனதோடும் உருமாற்றுவதற்கான ஆன்மீக பயிற்சியாகும். பக்தர்கள் கருப்பு உடை அணிந்து துளசி மாலை மற்றும் ருத்ராக்ஷ அணிந்து தவ வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்.

கோபம்,பொய், ஆசை ஆகியவற்றை தவிர்த்து பிரம்மச்சரியம், சுத்தமான சைவ உணவு, தினசரி ஸ்நானம் மற்றும் பூஜை, போன்ற நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சபரிமலை யாத்திரை என்பது வெறும் உடல் பயணம் மட்டுமல்ல அது ஒரு ஆன்மீகப் பயணமாகும். தியாகம், அடக்கம், ஒழுக்கம், சமத்துவம், பக்தி,மனித நேயம் ஆகியவற்றின் மூலம் மனிதன் தன்னை அறிந்து இறைவனை உணரும் ஒரு புனித வழி இது.சபரிமலை யாத்திரையின் மிக முக்கியமான அம்சம் அதன் சமத்துவ தத்துவமாகும். சாதி, மதம், மொழி, சமூக நிலை என எந்த வகை பாகுபாடும் இந்த யாத்திரையில் பார்க்கப்படுவதில்லை.

இலங்கையில் மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக இருந்து வந்துள்ளன. சபரிமலை யாத்திரை அதன் இயல்பாகவே இந்த ஒற்றுமையை ஊக்குவிக்கின்றது. இதனை ஒரு அரசியலற்ற ஆன்மீக உந்துதல் எனப் பார்க்க முடியும். மத அமைதிக்கும், நம்பிக்கைக்கும் இது ஒரு அரிய முன்னுதாரணமாக விளங்குகின்றது. இந்நிலையில், சபரிமலை யாத்திரையை புனித யாத்திரை (Religious Pilgrimage) என அதிகாரப்பூர்வமாக இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. சபரிமலை யாத்திரை, ஒரு சாதாரண கோயில் தரிசனத்தைக் காட்டிலும் அதிகமான ஒழுக்கம், ஆழ்ந்த பக்தி ஆன்மீக உயர்வை அடையக் கூடிய வழிமுறையாக அமைகிறது.

இது இலங்கை தமிழ் சமூகத்தின் ஆன்மீக மற்றும் கலாசார வாழ்க்கையின் அடிப்படையிலேயே நிறைந்துள்ளது. ஆகையால் இந்த ஆன்மீக சாதனையை இலங்கை அரசாங்கம் புனித யாத்திரை என அங்கீகரிக்க வேண்டியது நியாயமானதும் அத்தியாவசியமானதும் ஆகும்.

🙏🙏ஒம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏

✍️ Negombo Thanush

 #அனைத்து_ஐயப்ப_பக்தர்களுக்கும் அன்பார்ந்த அறிவித்தல் ⬇️⚠️⚠️⚠️⬇️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏2025 ஆம் ஆண்டு மாலை அணிவதற்கு காத்திருக்கும...
12/11/2025

#அனைத்து_ஐயப்ப_பக்தர்களுக்கும்
அன்பார்ந்த அறிவித்தல் ⬇️⚠️⚠️⚠️⬇️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
2025 ஆம் ஆண்டு மாலை அணிவதற்கு காத்திருக்கும் ஐயப்ப பக்தர்களே இம்முறை வியாபார நோக்கத்துடன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள கருப்பு வேஷ்டி ஐயப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதத்தில்

💥ஐயப்பனுடைய திருஉருவப்படத்தையும்
💥பொண்ணுபதினெட்டாம் படியையும்
💥ஐயப்பனுடைய வாகனமான புலி சின்னத்தையும்

பதித்து வேஷ்டிகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்கள். ஆகையால் உண்மையான ஐயப்ப பக்தனாக இருந்தால் இந்த வேஷ்டிகளை யாரும் கொள்வனவு செய்யவும் வேண்டாம் இந்த வேஷ்டிகளை அணியவும் வேண்டாம்.

‼️ #மஹாசபையின்_எச்சரிக்கை‼️

🛑(01) அப்படி யாராவது இந்த வேஷ்டிகளை வாங்க முற்பட்டாலோ அணிய முற்பட்டாலோ மீறியும் அணிந்தால் கண்ணில் காணும் இடத்திலேயே அந்த வேஷ்டி அகட்டப்படும் உங்களுக்கு மாலை அணிவித்த குருசாமியின் மூலமாகவே உங்கள் மாலை கழட்டப்படும்.

🛑(02) ஐயப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வேஷ்டி யாரேனும் விற்பனை செய்வதற்கு முன் வந்தால் மஹாசபையின் ஏற்பாட்டில் அந்த வியாபார ஸ்தாபனத்துக்கு முன்னால் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

🛑(03) இந்து மதத்தையும் இந்து மதத்தை சார்ந்த வழிபாட்டு முறைகளையும் இந்துக் கடவுள்களையும் சபரிமலைக்கு மாலை அணியும் ஐயப்ப பக்தர்களையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் வியாபார ஸ்தாபனம் செயல்பட்டது என இலங்கைச் ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி 2015 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி திருநாட்டின் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரகாரம் அத்தியாயம் (ii/3/9)இலங்கை குடியரசின் பௌத்த மதத்திற்கு முதன்மைத் தானம் பௌத்த மதம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு அதற்குஇணங்க (10)ஆம் (14) (01)(உ) ஆம் உருப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் எல்லா மதங்களுக்கும் காப்புருதி செய்யும் அதே வேளையில் பௌத்த சாசனத்தை பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும்.இலங்கை அரசின் இந்த ஆணைக்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதினை உருக்கமாக தெரிவித்துக் கொள்கிறோம். மஹாசபை மஹாகுரு
Raveendrakumar Subramaniyam Ravindrakumaran Ponnusamy Rishi Senthil Raj குருசாமியின் ஆலோசனைக்கு இணங்க மஹாசபை ஊடகப்பிரிவு எம்.முரளிதரன்

நன்றிகள்.

ஓம் நமச்சிவாய சுவாமியே சரணம் ஐயப்பா

♦️சபரிமலைக்கு புனிதயாத்திரையை மேற்கொள்ளும் சுவாமிமார்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், ஒழுக்கங்கள் மற்றும் விதிமுறைகள் ஆ...
07/11/2025

♦️சபரிமலைக்கு புனிதயாத்திரையை மேற்கொள்ளும் சுவாமிமார்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், ஒழுக்கங்கள் மற்றும் விதிமுறைகள் ஆகியவற்றை விளக்கும் அறிக்கை...

◼️ சபரிமலை புனிதயாத்திரையின் தாத்பரியம் மற்றும் அதனை இலங்கை அரசாங்கம் புனித யாத்திரையாக அங்கீகரிக்க வேண்டி தொகுக்கப்பட்ட பரிந்துரை அறிக்கை.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கோடி கணக்கான பக்தர்களின் ஆன்மீக வாழ்வில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு புனித ஸ்தலமாக திகழ்கிறது.

சபரிமலை புனித யாத்திரை என்பது சமூக, சாதி, மொழி, நாடு ஆகிய எல்லாப் பாகுபாடுகளையும் தாண்டும் ஒரு ஆன்மீக ஒன்றிணைப்பாகும். இலங்கையின் இந்துக்களுக்கு மட்டுமன்றி உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் இந்துக்கள் ஆழ்ந்த பக்தியுடன் மேற்கொள்ளும் ஒரு புனித யாத்திரை ஆகும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரையை குறிப்பாக இலங்கையின் தமிழ் இந்து சமுதாயம் ஆன்மீகம் மற்றும் பக்தி உணர்வோடு மேற்கொண்டு வருகின்றனர். எனவே சபரிமலை யாத்திரையை இலங்கை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக புனித யாத்திரை என அங்கீகரிப்பதானது மிகவும் பொருத்தமானதும், தேவையானதுமான ஒரு நடவடிக்கையாக அமையும்.

சபரிமலை புனித யாத்திரையின் தாத்பரியம் ''தந்மயம் ஹி மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ" (மனம் தான் பந்தத்திற்கும், விடுதலைக்கும் காரணம்) இந்தியாவின் தொன்மையான ஆன்மிக மரபுகளில் ஒன்று தான் சபரிமலை ஐயப்பனின் யாத்திரை. இது ஒரு பாதயாத்திரையும், தீர்த்தயாத்திரையும் உள்ளடக்கிய ஒரு புனித யாத்திரையாக கருதப்படுகிறது. அதன் ஆழத்தில் உள்ளதொரு மனிதனின் ஆன்மிகப் பயணம் சனாதன தர்மத்தின் புனிதக் கொள்கைகளுடன் நெருக்கமாகவே தொடர்புபட்டுள்ளது.

இந்த யாத்திரை என்பது ஒரு ஆன்மிக சாதனையின் நடைமுறை வடிவமாகவும், மனிதனின் வாழ்வியல் மாற்றத்தை நோக்கி செல்லும் தத்துவ பாதையாகவும் விளங்குகிறது. சபரிமலை யாத்திரை என்பது ஒரு சாதாரண கோயில் வழிபாடல்ல. இது ஒவ்வொரு பக்தனின் உள்ளத்தை தூய்மைப்படுத்தி அவனை பக்தியிலும், தனிமனித ஒழுக்கத்திலும் உயர்த்தி மும்மலங்களை கடந்து முக்தி என்ற பிறவா நிலைக்கு வழிகாட்டும் ஆன்மீகப் யாத்திரையாக உள்ளது.

இந்த யாத்திரையின் மூலம் ஒரு மனிதன் தன்னைத் தூய்மைப்படுத்தி ஒரு உயர்ந்த இலக்கை நோக்கிச் செல்லும் ஒழுக்கமான ஆன்மீக பாதையில் பயணிக்கிறான். அதனால்தான் இது ஒரு மனிதனின் உடல், மனம், செயல் மற்றும் வாழ்வியலை மாற்றும் யாத்திரை என்று பார்க்கப்படுகிறது.

சபரிமலை புனிதயாத்திரையில் இலங்கை இந்து தமிழர்கள் ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர். இந்த யாத்திரை அவர்கள் குடும்ப பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவே விளங்குகிறது. இந்த புனிதயாத்திரை அவர்களின் மத உணர்வுகளை உறுதிப்படுத்தும் ஒரு தூய வழியாக இருக்கின்றது. இந்தியா - இலங்கை இடையேயான இந்த ஆன்மீக உறவுக்கு பல ஆண்டுகளாக அடித்தளமாக இருந்து வந்துள்ளது. இந்த சபரிமலை புனிதயாத்திரை தான்.

இந்த யாத்திரையின் மையத்துவம், "தத்துவமசி" என்ற உபநிடத வாக்கியத்தில் அடங்கியுள்ளது - அதாவது, ”நீயே அந்த பரம்பொருள்". இதன் மூலம் பக்தன் தன்மையைக் கடந்து இறைவனுடன் ஐக்கியம் அடையும் யாத்திரையாக அமைந்துள்ளது. சபரிமலை யாத்திரை செல்வதற்கு முன் 41 நாட்கள் அதாவது ஒரு மண்டல விரதம் மிக முக்கியம். ஒரு மண்டல விரதம் என்பது, ஒரு வாழ்வியல் மாற்றம் இது மனிதனை தனது உடலோடு மட்டுமல்லாமல் மனதோடும் உருமாற்றுவதற்கான ஆன்மீக பயிற்சியாகும். பக்தர்கள் கருப்பு உடை அணிந்து துளசி மாலை மற்றும் ருத்ராக்ஷ அணிந்து தவ வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்.

கோபம்,பொய், ஆசை ஆகியவற்றை தவிர்த்து பிரம்மச்சரியம், சுத்தமான சைவ உணவு, தினசரி ஸ்நானம் மற்றும் பூஜை, போன்ற நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சபரிமலை யாத்திரை என்பது வெறும் உடல் பயணம் மட்டுமல்ல அது ஒரு ஆன்மீகப் பயணமாகும். தியாகம், அடக்கம், ஒழுக்கம், சமத்துவம், பக்தி,மனித நேயம் ஆகியவற்றின் மூலம் மனிதன் தன்னை அறிந்து இறைவனை உணரும் ஒரு புனித வழி இது.சபரிமலை யாத்திரையின் மிக முக்கியமான அம்சம் அதன் சமத்துவ தத்துவமாகும். சாதி, மதம், மொழி, சமூக நிலை என எந்த வகை பாகுபாடும் இந்த யாத்திரையில் பார்க்கப்படுவதில்லை.

இலங்கையில் மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக இருந்து வந்துள்ளன. சபரிமலை யாத்திரை அதன் இயல்பாகவே இந்த ஒற்றுமையை ஊக்குவிக்கின்றது. இதனை ஒரு அரசியலற்ற ஆன்மீக உந்துதல் எனப் பார்க்க முடியும். மத அமைதிக்கும், நம்பிக்கைக்கும் இது ஒரு அரிய முன்னுதாரணமாக விளங்குகின்றது. இந்நிலையில், சபரிமலை யாத்திரையை புனித யாத்திரை (Religious Pilgrimage) என அதிகாரப்பூர்வமாக இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. சபரிமலை யாத்திரை, ஒரு சாதாரண கோயில் தரிசனத்தைக் காட்டிலும் அதிகமான ஒழுக்கம், ஆழ்ந்த பக்தி ஆன்மீக உயர்வை அடையக் கூடிய வழிமுறையாக அமைகிறது.

இது இலங்கை தமிழ் சமூகத்தின் ஆன்மீக மற்றும் கலாசார வாழ்க்கையின் அடிப்படையிலேயே நிறைந்துள்ளது. ஆகையால் இந்த ஆன்மீக சாதனையை இலங்கை அரசாங்கம் புனித யாத்திரை என அங்கீகரிக்க வேண்டியது நியாயமானதும் அத்தியாவசியமானதும் ஆகும்.

தொடரும்.....

🟡 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🟡2025  ஆம் ஆண்டு ஐயப்பன் மாலை அணிதல் தொடர்பான அறிவித்தல்.அணிவதற்கான நாள், கார்த்திகை மாதத்தி...
03/11/2025

🟡 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🟡

2025 ஆம் ஆண்டு ஐயப்பன் மாலை அணிதல் தொடர்பான அறிவித்தல்.

அணிவதற்கான நாள், கார்த்திகை மாதத்தின் முதல் திகதி அன்று தொடங்கும், அதாவது நவம்பர் 17, 2025 அன்றைய தினம் பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் அல்லது 48 நாட்கள் விரதத்தை தொடங்குவார்கள்.

அகில இலங்கை ரீதியில் இரண்டாம் நிலையில் உள்ள நீர்கொழும்பு சபரிமலை யாத்திரைக் குழு இம்முறை எமது மூத்த குரு சுவாமிகளில் ஒருவரான திருவாளர் மதிப்புக்குரிய ஜெகநாதன் மாஸ்டர் சுவாமி அவர்களின் தலைமையில் நீர்கொழும்பு ஐயப்ப சந்நிதானத்துக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் அணிவிக்கப்படும்.

மேலும் அகில இலங்கை தேசிய ஐயப்ப மஹா சபை,
தேசிய உயர் குரு சபையினால்
கம்பஹா மாவட்டத்திற்கு பொறுப்பாளர்களாக கீழ் வரும் கௌரவத்திற்குரிய குருசுவாமிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

*01.கௌரவ.முத்து குருசுவாமி (வத்தளை)*

*02.கௌரவ.சுரேஷ்குமார்
குருசுவாமி (நீர்கொழும்பு)*

03.கௌரவ.ராஜேஸ்வரன் குருசுவாமி (நீர்கொழும்பு)

ஐயப்ப யாத்திரையானது இம்முறை அகில இலங்கை ரீதியிலே புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சில முக்கிய சட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அவையான....!

01) ஐயப்ப விரதமாலை அணியும் சுவாமிகளில் 18 வயதை தாண்டியவர்கள் தன்னுடைய தேசிய அடையாள அட்டையில் ஒரு பிரதியினை மாலை அணியும் போது கட்டாயமாக குரு சுவாமியிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

02) 18 வயதுக்கு குறைந்தவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடைய அடையாள அட்டைப் பிரதியை சமர்ப்பித்தல் வேண்டும்.

குறிப்பு:- இலங்கை தேசிய ஐயப்ப மஹா சபை,தேசிய உயர் குரு சபையின் மேலதிக சட்டதிட்டங்களுக்கும், ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு இந்த யாத்திரை கொண்டு செல்லப்படும் முகமாக மேலும் சில புதிய சட்டதிட்டங்கள் தொடர்பான தகவல்களையும் நாம் பின்வரும் நாட்களில் அறியத் தரவிருக்கின்றோம் என்பதை அனைத்து ஐயப்பன் அடியார்களுக்கும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம் சுவாமியே சரணம் ஐயப்பா.

"நீர்கொழும்பு ஐயப்ப யாத்திரைக் குழு"

03.11.2025

30/04/2025

🪔மரண அறிவித்தல்🪔
நீர்கொழும்பு தளுபத்தை விஷ்ணு ஆலயம் மற்றும் ஐயப்பன் தேவஸ்தான பிரதம குருக்களும்,
நீர் கொழும்பு முத்துமாரியம்மன் கதிர்வேலாயுத ஆலய முன்னாள் குருக்கள் அவர்கள் இன்றைய தினம் (30-04-2025) இறைபதம் அடைந்தார்.

அன்னார்
நீர்கொழும்பு முத்துமாரியம்மன் கதிர்வேலாயுத ஆலய முன்னாள் பிரதம குருக்களான #முரளி_ஐயா அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.

ஐயா அவர்கள் 24 வருடங்களுக்கு அதிகமாக ஐயனின் விரத மாலை அணிந்து சபரிமலை சென்று ஐயன் ஐயப்பனை தரிசிக்கும் ஐயப்பனின் அடிமையுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்பு அறியத்தரப்படும்.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

✍️ Negombo Thanush

22/03/2025

நீர்கொழும்பு ஐயப்ப தேவஸ்தானம்
குருசுவாமி செ.ரவிசந்திரன் அவர்களின் நினைவு அஞ்சலி கூட்டம்
*********†**********†****************************
நீர்கொழும்பில் ஐயப்பன் வழிப்பட்டை யாத்திரையையும் முதன்முதலில்1984ம் ஆண்டு ஆரம்பித்து தொடர்ந்து சபரிமலை யாத்திரை மேற்கொண்ட மூத்த குருநாதர் நீர்கொழும்பு அமரர் ரவிசந்திரன் குருசுவாமி அவர்கள் (08-01-2025) அன்று ஐயனின் திருப்பாதம் அடைந்தார்.

அந்நேரம் அனைத்து குருசுவாமிகளும், சுவாமிமார்களும் மாலை அணிந்து சபரிமலை செல்ல இருந்ததால் இறுதி கிரியையில் கலந்துகொள்ள முடியவில்லை ஆதலால் அவருடைய நினைவை முன்னிட்டு நினைவஞ்சலி கூட்டம் எதிர்வரும் (23-03-2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு அளுத்மாவத்தை ஆனந்த ஐயப்பன் தேவஸ்தான மண்டபத்தில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் (SASS SRILANKA) ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

இவ் நினைவஞ்சலி கூட்டத்தில் அனைத்து குருசுவாமிகளும், சுவாமிமார்களும் குடும்பத்தோடு கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 🪔 🙏
நீர் கொழும்பு
✍️Thanushkanth Haridev

10/01/2025

#ஆழ்ந்த_அனுதாபங்கள்
என்னுடைய குருநாதருக்கு🙏🙏🙏
ஐயனின் பாதத்தில் சரணமடைந்த எங்கள் குருசுவாமியின் ஆத்மா எல்லாம் வல்ல ஐயன் ஐயப்பனின் காலடியில் இளைப்பாற ஐயனை பிரார்த்திக்கின்றேன்.🙏🙏🙏

எனக்கு ஐயன் கொடுத்த பாக்கியம் என்றே கூறுவேன் ஏனெனில்
நீர்கொழும்பு
#மாநகரிற்கு_முதல்_முதலாக
#ஐயப்பன்_வழிபாட்டை கொண்டு வந்த எங்கள் குருசுவாமியோடு அவர் கைகளினாலேயே மாத்திரம் 17 வருடங்களாக மாலையணிந்து ஒன்றாகவும் அவருக்கு பக்க பலமாகவும் அவருக்கு ஒரு சீடனாகவும் பயணித்து இருக்கிறேன் என்று எண்ணும்போது எனக்கு குருசுவாமியோடு பயணிக்க ஐயன் ஐயப்பன் கொடுத்த பாக்கியம் என்றே கூறுவேன்.
இனி எங்களுக்கு யார் இருக்கிறார்கள் மாலை அணிவிக்க😥😥😥
இனி எப்ப உங்கள் கைகளால் மாலை போடுவது குருசுவாமி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாங்கள் உங்களோடு இத்தனை வருடங்களாக பயணித்த நினைவலைகளை மீட்டி நினைத்துக்கொண்டே இருப்போம் குருசுவாமி.🤔🤔🤔

என்றும் உங்கள் நினைவுகள் எங்கள் ஐயப்ப சுவாமிமார்கள் மனத்தில் வடுக்களாக மறக்காமல் நினைத்து கொண்டே இருக்குமே தவிர அழியாது குருசுவாமி.🙏

ஐயன் ஐயப்பன் என்றும் உங்களோடுதான் குருசுவாமி 🙏🪔 🙏
என்றும் உங்களுடன் உங்கள் சீடன்
✍️ Negombo Thanush
Thanushkanth Haridev

 #எங்கள்_குருநாதரின்  #இறுதி_கிரிகைகள்_பற்றிய_தகவல்கள்.🪔ஆழ்ந்த அனுதாபங்கள்🪔எங்கள் குருசுவாமி 😥😥😥🪔மரண அறிவித்தல்🪔நீர்கொழு...
09/01/2025

#எங்கள்_குருநாதரின்
#இறுதி_கிரிகைகள்_பற்றிய_தகவல்கள்.
🪔ஆழ்ந்த அனுதாபங்கள்🪔
எங்கள் குருசுவாமி 😥😥😥
🪔மரண அறிவித்தல்🪔
நீர்கொழும்பு ஐயப்ப தேவஸ்தானம் குருசுவாமியான #செ_ரவிச்சந்திரன் குருசுவாமி இன்றைய தினம் அதிகாலை (09-01-2025) ஐயனின் பாதத்தில் சரணமடைந்தார்.

எங்கள் ரவி குருசுவாமி நீர் கொழும்பு
விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களான #மீரா, #வித்தியாஷாகர்(2012 O/L), #விஷ்ணுஷாகர்(2013 O/L),
#அபிலாஷ்(2015 O/L) சகோதரர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.

எங்கள் குருநாதரின் இறுதிக் கிரிகைகள் எதிர்வரும் சனிக்கிழமை மாலை 03:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (NEIL MARIN ROAD,NEGOMBO/JUDE CHURCH ROAD, NEGOMBO) நடைபெற்று தகனக்கிரிகைகளுக்காக நீர்கொழும்பு பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள்,நலன்விரும்பிகள் மற்றும் ஐயப்ப சுவாமிகள் அனைவரும்
ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

எங்கள் குருசுவாமியின் ஆத்மா எல்லாம் வல்ல ஐயன் ஐயப்பனின் காலடியில் இளைப்பாறட்டும்.🙏🙏🙏

🙏ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

✍️ Negombo Thanush

Address

SEA Street
Negombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when நீர்கொழும்பு ஐயப்ப தேவஸ்தானம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category