நாச்சியாதீவு - Nachchaduwa Jumu'ah Mosque

நாச்சியாதீவு - Nachchaduwa Jumu'ah Mosque எங்களின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24/02/2026
நாச்சியாதீவு மாணவர்களுக்கான விசேட "திறன் மேம்பாட்டு" செயலமர்வு!நாச்சியாதீவிலிருந்து 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளி...
16/02/2026

நாச்சியாதீவு மாணவர்களுக்கான விசேட "திறன் மேம்பாட்டு" செயலமர்வு!

நாச்சியாதீவிலிருந்து 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் கா.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான விசேட 'திறன் மேம்பாட்டுப் பயிற்சிநெறி' (Skills Development Workshop) 2026.02.14 சனிக்கிழமை நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நாச்சியாதீவு ஜும்ஆ பெரிய பள்ளிவாயல் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், வளவாளராகத் திறன் அபிவிருத்திப் பயிற்றுவிப்பாளரும், ஆசிரிய ஆலோசகருமான M.T.M நுஸ்ரத் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பானதொரு வழிகாட்டலை வழங்கினார்.

மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்ற இந்நிகழ்வானது, மாணவர்கள் தங்களது திறன்களைத் தாங்களே அடையாளம் கண்டு, அவற்றை வெளிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த களமாக அமைந்தது.

இந்நிகழ்வினை மிகச் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து நெறிப்படுத்திய மதிப்பிற்குரிய அஷ்-ஷெய்க் ஃபழீல் (நளீமி) அவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ், இனிவரும் காலங்களிலும் பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் திறன் வளர்ச்சிக்கான இது போன்ற பல பயனுள்ள நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.

நாச்சியாதீவு கிராமத்தின் எழுச்சி நோக்கிய ஓர் அறிவுபூர்வமான கள விஜயம்!நாச்சியாதீவு கிராமத்தை ஒரு முன்மாதிரி கிராமமாக மாற்...
02/02/2026

நாச்சியாதீவு கிராமத்தின் எழுச்சி நோக்கிய ஓர் அறிவுபூர்வமான கள விஜயம்!

நாச்சியாதீவு கிராமத்தை ஒரு முன்மாதிரி கிராமமாக மாற்றியமைக்கும் உயரிய நோக்கில், கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து கடந்த சனி(31) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (01) விசேட கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

நாச்சியாதீவு பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர்கள், அல்-ஹிகம் மத்ரஸா நிருவாகிகள், உலமாக்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் என சுமார் 26 பேர் கொண்ட குழுவினர் இதில் பங்கேற்றனர்.

பயணத்தின் முக்கிய தருணங்கள்:

📍மத்திய மாகாண விஜயம் (சனிக்கிழமை):

மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஸம் ஸம் (Zam Zam) மற்றும் UDT ஆகிய நிறுவனங்களுக்குச் சென்ற குழுவினர், அந்த நிறுவனங்களின் முன்னேற்றகரமான செயற்திட்டங்கள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தனர். அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு நாச்சியாதீவு மக்களை எவ்வாறு நல்வழிப்படுத்தலாம் என்பதற்கான வழிகாட்டல்களையும் பெற்றுக்கொண்டனர்.

📍காத்தான்குடி விஜயம் (ஞாயிற்றுக்கிழமை):

காத்தான்குடியின் அனைத்து அமைப்புகளுக்கும் வழிகாட்டியாகத் திகழும் பள்ளிவாயல்கள் மற்றும் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு (Federation) விஜயம் செய்து, அதன் நிருவாகிகளுடன் பயனுள்ள கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். தொடர்ந்து, இஸ்லாமிய வழிகாட்டலுக்கான நிலையம் (CIG) மற்றும் பிஸ்மி கலாசாலை ஆகிய இடங்களுக்குச் சென்று, இளைஞர்களுக்கு இஸ்லாமிய பண்பாடுகள், பொது அறிவு மற்றும் ஆன்மீகப் பயிற்சிகள் வழங்கப்படும் விதம் குறித்துத் தெளிவு பெற்றனர்.

📍மருதமுனை மற்றும் ஏறாவூர் விஜயம்:

மருதமுனையில் கலாநிதி முபாரக் மதனி அவர்களின் வழிகாட்டலில் இயங்கும் அல்-ஹுதா பெண்கள் அரபுக் கல்லூரிக்குச் சென்ற குழுவினர், அங்கு பெண்களைச் சமூகச் செயற்பாட்டாளர்களாக உருவாக்கும் பாடநெறி மற்றும் நிருவாகக் கட்டமைப்புகளைப் பார்வையிட்டனர்.

இறுதியாக, காத்தான்குடி அல்-அக்ஸா மற்றும் ஷுஹதாக்கள் பள்ளிவாயல்களைப் பார்வையிட்டதுடன், ஏறாவூரில் அமைந்துள்ள புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (Cancer Care Home) மகத்தான சேவைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

நாச்சியாதீவு கிராமத்தின் எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்கும், சமூகத்திற்காகத் தியாகத்துடன் பணியாற்றும் மனஉறுதியைப் பெற்றுக்கொள்வதற்கும் இப்பயணம் ஒரு சிறந்த அனுபவமாக அமைந்தது. இன்ஷா அல்லாஹ், இந்தப் பயணத்தின் மூலம் திரட்டப்பட்ட அனுபவங்கள் நாச்சியாதீவு கிராமத்தின் எழுச்சிக்கு வித்திடும்.

நாச்சியாதீவு பொதுமக்களின் சுகாதார நலனைக் கருத்திற்கொண்டு, நாச்சியாதீவு ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபை மற்றும் திறப்பனை பிர...
07/12/2025

நாச்சியாதீவு பொதுமக்களின் சுகாதார நலனைக் கருத்திற்கொண்டு, நாச்சியாதீவு ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபை மற்றும் திறப்பனை பிரதேச சபை உப தலைவர் கௌரவ A.C. நியாஸ் ஆகியோரின் விசேட வேண்டுகோளிற்கிணங்க, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் (MOH) ஏற்பாட்டில் நேற்று (06.12.2025) காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை எமது நாச்சியாதீவு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் ரஹ்மானியா மத்ரஸா மண்டபத்தில் விசேட மருத்துவ முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இம்முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள், மருந்துகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. எமது ஊர் மக்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்ட இம்மருத்துவ முகாமிற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கிய சுகாதாரத் துறையினர், ஏற்பாட்டாளர்கள் மற்றும் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் நிர்வாக சபை மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

ருவென்வெலிசாயவிலிருந்து நாச்சியாதீவிற்கு உலர் உணவுப் பொருட்கள்+++++++++++++++அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்திய அ...
06/12/2025

ருவென்வெலிசாயவிலிருந்து நாச்சியாதீவிற்கு உலர் உணவுப் பொருட்கள்
+++++++++++++++
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி நிமல் செனவிரத்ன அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க ருவென்வெலிசாய விகாரதிபதி மூலமாக எமது ஊரிற்கு 5kg கொண்ட 145 அரிசி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதனை பள்ளி பரிபாலன சபை உறுப்பினர் அன்வர் சதாத் பஸ்மி அவர்கள் பெற்று வந்து அனர்த்த முகாமைத்துவக் குழுவிடம் ஒப்படைத்துள்ளார்.
வைத்திய அதிகாரி அவர்களுக்கும், விகாரதிபதி அவர்களுக்கும் பள்ளி நிருவாக சபை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

சனிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம்... அல் ஹிகம் அரபுக் கல்லூரியில்..
05/12/2025

சனிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம்... அல் ஹிகம் அரபுக் கல்லூரியில்..

நாச்சியாதீவு வெள்ள அனர்த்த நிவாரணப் பணிகள்!நாச்சியாதீவு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள...
05/12/2025

நாச்சியாதீவு வெள்ள அனர்த்த நிவாரணப் பணிகள்!

நாச்சியாதீவு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு கைகொடுப்போம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக, நாச்சியாதீவு ஜும்மா பெரிய பள்ளிவாயல் நிர்வாக சபை மற்றும் அனர்த்த முகாமைத்துவக் குழு ஆகியன இணைந்து நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கும் பணிகளை நேற்று முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

உங்களால் முடிந்த உலர் உணவுகள் அல்லது நிதியுதவிகளை வழங்கி இந்த மனிதாபிமான பணியில் நீங்களும் பங்காளராகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு -
078 772 4774
077 345 0606

தகவல் - நாச்சியாதீவு ஜும்மா பெரிய பள்ளிவாயல் நிர்வாக சபை..

நாச்சியாதீவு மக்களுக்கு சிங்கள சகோதரர்களது மனிதாபிமான உதவிநூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் அனுராதபுர மாவட்டத்தின் பெரிய கிர...
04/12/2025

நாச்சியாதீவு மக்களுக்கு சிங்கள சகோதரர்களது மனிதாபிமான உதவி

நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் அனுராதபுர மாவட்டத்தின் பெரிய கிராமங்களில் ஒன்றான நாச்சியாதீவில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக இன்று அனுராதபுர மாவட்டத்தின் தலாவ மகாவலி எச் பகுதியைச் சேர்ந்த சிங்கள சகோதரர்கள் 600 உணவுப் பார்சல்களை தயாரித்து எடுத்து வந்து ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்கள். அவர்களை தமது காரியாலயத்தில் வரவேற்ற நிர்வாகிகள் அவர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கி கெளரவித்ததுடன் நன்றி தெரிவிப்பதற்காக விசேட கூட்டம் ஒன்றையும் நடத்தியதுடன் அந்த பார்சல்களை ஊரில் சிறப்பாக பங்கீடு செய்தார்கள்.

இந்த சிங்கள சகோதரர்களது இந்த நடவடிக்கை இன நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இன ரீதியாக சிந்திக்கும் ஒரு சிறு குழுவினர் இந்த நாட்டில் இருப்பது போன்றே மனிதாபிமான அடிப்படையில், இன நல்லுறவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிந்திக்கும் சிங்கள சகோதரர்களும் இந்த நாட்டில் வாழுகிறார்கள் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

வெள்ள அனர்த்தம் பற்றிய பள்ளி வாசல் நிருவாக சபையின் அறிக்கைவெள்ள அனர்த்தம் பற்றிய பின்வரும் சில தகவல்களை நாச்சியாதீவு ஜும...
04/12/2025

வெள்ள அனர்த்தம் பற்றிய பள்ளி வாசல் நிருவாக சபையின் அறிக்கை

வெள்ள அனர்த்தம் பற்றிய பின்வரும் சில தகவல்களை நாச்சியாதீவு ஜுமுஆப் பள்ளி நிருவாகம் ஊர் ஜமாஅத்தவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறது.

வல்லவன் அல்லாஹ்வின் நாட்டப்படி நாட்டின் பல பாகங்களிலும் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஒரு பகுதியாக நமது ஊர் நாச்சியாதீவும் பாதிக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.
ஆனால், தற்போது நாடின் பல பகுதிகளில் இருந்தும் கிடைக்கும் தரவுகளுடன் ஒப்பிடும் போது எமது ஊரில் ஏற்பட்ட பாதிப்பின் அளவு குறைவாகும். அல்ஹம்துலில்லாஹ். இருப்பினும் பௌதீக மற்றும் இதர பாதிப்புகள் இடம்பெற்றுள்ளன என்பதை மறுக்கமுடியாது.

கடந்த 2025.11.27 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் நீர்ப்பாசன திணைக்களத்தினால் நிருவாக சபைக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய உடனடியாக பெரிய பள்ளிவாயல் ஒலிபெருக்கி மூலம் ஊர்மக்களுக்கு இது பற்றி அறிவிக்கப்பட்டு விழிப்பாக இருக்கும் படி அவர்கள் வேண்டப்பட்டனர். சமூக ஊடகங்களிலும் இது பற்றிய தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இரண்டாம் கட்டமாக அதிகாலையிலே பிரதானமாக 'கொடவான்' மூலமாக வந்த அளவு கடந்த தண்ணீர் மூலம் குசவை மற்றும் பாண்டியன்குளம் உட்பட ஊரின் கீழ்ப்பகுதி நீரினால் பாதிப்படைந்தது. இந்த வெள்ளத்தினால் நிருவாக சபை அங்கத்தவர்களிற் சிலரது வீடுகளும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டாலும் அவற்றையும் கடந்து அவர்கள் ஊருக்கான பொறுப்புகளைத் தம்மால் முடிந்த அளவு நிறைவேற்றினார்கள்.

அதிகரித்த நீரின் போக்கும், நீர்ப்பாசன திணைக்களத்தினரது செயற்பாடுகளும், முன்னர் ஏற்பட்ட வெள்ள சூழ்நிலைகளின் போது அவர்கள் செயற்பட்ட விதமும் இம்முறை செயற்பட்ட விதமும் பல பிரச்சினைகளை உருவாக்கின. இருப்பினும் ஊருக்கு அதிகமாக பாதிப்புகள் ஏற்படாதவாறு நிருவாக சபை மற்றும் பொறியியலாளர் சகோ. ஹம்சீன், சகோ.ஹஸ்மி ஆகியோர் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளுடன் பல கட்டப் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

கொடவானை இன்னும் அதிகமாக வெட்டுவதற்கு நீர்ப்பாசனத் திணைக்களம் முடிவெடுத்திருந்தாலும் சிலரது தலையீட்டின் காரணமாக அந்த நிலை தவிர்க்கப்பட்டது. இதில் சகோ பொறியளாளர் ஹம்சினின் ஒத்துழைப்பு மெச்சத்தக்கதாகும் .

பெரிய அலையில் கமால் நானா வீட்டுக்கு அருகில் உள்ள பாதையை வெட்ட முடிவு செய்யப்பட்ட போது, கடும் மழை மற்றும் போக்குவரத்து தடைகள் இருந்த போதும் அவ்விடத்துக்கு நிர்வாக சபை உறுப்பினர்கள் சென்று அந்த முயற்சியை வெற்றிகரமாக்கினர். இதன் மூலம் நாச்சியாதீவு பெரிய பள்ளி,நாச்சியாதீவு கீழ் பசார்,ஸப்ரான் பாமசிக்கு அருகில் உள்ள கடைகள், குசவை, பாண்டியன்குளம் மற்றும் கொடவான் பகுதிகளில் உள்ள உடைமைகள் இன்னும் அதிகமாக பாதிப்படைவது தவிர்க்கப்பட்டது. இதன் போது ஷுகுர் மாமாவும் தனது ஒத்துழைப்பு வழங்கினார் என்பதை குறிப்பிட வேண்டும்.

இவற்றுக்கு மத்தியில் பள்ளி வளாகத்திற்குள் வரலாறு காணாத நீர் வரத்தொடங்கியது. எனவே, பள்ளிவாயலை பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் நிர்வாக சபைக்கு இருந்தது. அன்றைய தினம் ஜூம்ஆ குத்பா சுருக்கப்பட்டு தொழுகை நடாத்தப்பட்டதுடன் துஆ பிரார்த்தனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அத்துடன் பள்ளியின் காபட் நனையாமல் இருக்க ஊர் மக்களது உதவியுடன் அது பாதுகாப்பாக உயர்த்தி வைக்கப்பட்டது. இதன் போது சகோ. யாசிர் இது பற்றி பல தடவை நிர்வாக சபையுடன் தொடர்பு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனரேட்டர் அறைக்குள் முற்றாக நீர் வரத் தொடங்கியதால் பல சிரமங்களுக்கு மத்தியில் ஜெனரேட்டர் வெளியே கொண்டு வரப்பட்டது. இதற்கு பல இளைஞர்கள் உதவினர் (ஆசாத், அன்சார்தீன், சாகிர், ரஷாட் ) இன்னும் சிலரும் அவர்களோடு இணைந்து ஒத்துழைப்புத் தந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

பொது மக்களுக்கு தங்குமிடம் தேவையாயின் பள்ளிகளில் தங்க வசதிகள் செய்து தரப்படுவதுடன் பள்ளிகளில் வந்து தங்குமாறு ஜூம்ஆ தொழுகையின் பின்னர் அறிவிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு உணவு வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்து. இந்த வகையில் இரண்டு இரவுகள் உணவு வழங்கப்பட்டது. இதன் போது கேஸ் பெற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்தது. விறகு நனைந்து சில உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து தடைகளுக்கு மத்தியில் இந்தப் பணி மேற்கொளப்பட்டது. இதன் போது அல்ஹிகம் மத்ரசா நிருவாகம் மற்றும் சகோ நியாஸ், தமீம், முனாபர், ஹாரிஸ் நாநா, ஆப்தீன், சஹாப்தீன், சப்ரி, ரியாஸ் அஹமட் ஆசிரியர் உட்பட இன்னும் பலர் உதவிகளை செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், இரு கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் நிர்வாக சபையினர் பல தடவை கலந்துரையாடல்களை மேற்கொண்டு முடியுமான விடயங்களை அவர்கள் ஊடாக செய்வதற்கு முயற்சிகள் செய்யப்பட்டன. சில சந்தர்ப்பங்களில் அவர்களுடன் முரண்பட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டதை இங்கு ஞாபகப்படுத்த வேண்டும்.

நீர் மட்டம் குறைந்த பின்னரும் பலர் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தனர். அவர்களது இருப்பிடங்களை சுத்தம் செய்து கொடுக்க வேண்டிய கடப்பாடு சகலருக்கும் உள்ளது. அதற்காக நிர்வாக சபை முடியுமான பங்களிப்பை செய்துள்ளது.

அதேபோன்று, பிரதேச சபை உப தவிசாளர் சகோ. நியாஸ் அவர்கள் மூலம் பிரதேச சபையின் உதவியுடன் வீதிகளை செப்பனிடவும் மற்றும் பிற சேவைகளை வழங்கவும் நிருவாக சபை ஏற்பாடு செய்தது. அல்லாஹ் போதுமானவன்.

மேலும் கடந்த 2025.12.01 ஆம் திகதி பெரிய பள்ளி வெள்ளத்தினால் பாதிப்படைந்த நிலையில் அது சுத்தப்படுத்தப்பட்டு முழுமையாக தொழுகைக்காக தயார்படுத்தப்பட்டதுடன் வெளி வளாகம் கிரவல் இடப்பட்டு சரிபடுத்தப்பட்டுள்ளது, முன்பக்க வீதியின் சேதம் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து சீர்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் பின்பக்க மதிலின் ஒரு பகுததி உடைந்து கழிவு நீர் வடிகால் தடைப்பட்டிருந்தது. அது சரிபடுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று பெரிய பள்ளி மத்ரஸா கட்டிடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளதால் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மத்ரஸாவை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விடயங்களில் பொது மக்கள் பலர் தமது பூரண ஒத்துழைப்பைத் தந்தனர்.

மேலும் சகோ.ரஸ்கான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியாக 2025.12.01 திகதி பகல் உணவு வழங்கியிருந்தார்கள். அவர்களுக்கு நிர்வாக சபை தனது நன்றியை தெரிவிப்பதுடன், இன்னும் பலர் உதவிகளை உங்களது உறவுகளுக்கு மற்றும் பொது மக்களுக்கு வழங்கியிருப்பீர்கள் அதற்கு நிருவாக சபை நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

நிர்வாக சபையின் இரு தலைவர்கள் உட்பட பல உறுப்பினர்களும் அவர்களது இல்லிடங்களும் உறவினர்களும் அவர்களது இல்லிடங்களும் அனர்த்தத்தினால் பாதிக்கப்படிருக்கும் சூழ்நிலையிலும் பொது மக்களின் நலனை முற்படுத்தி, முடியுமான உதவிகளை இறைவனுக்காக செய்திருக்கிறார்கள்.உங்களது துஆக்களும் ஒத்துழைப்புக்களையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

*பொறுப்புணர்வுடன் நடப்பது அவசியம்*

இது போன்ற நிகழ்வுகளின் போது நிருவாகமும் ஊர் ஜமாஅத்தாரும் மிக நிதானமாக செயற்பட வேண்டியுள்ளது. சில தனிப்பட நபர்கள் சமூக ஊடகங்களில் குறிப்பாக (Whats app மற்றும் Face Book ) ஊடாக எமது ஊரின் வெள்ள நிலைகளின் வீடியோ மற்றும் புகைபடங்களை காண்பித்து தனிப்பட்ட ஒரு வங்கிக் கணக்கிற்கு குறிப்பிட்ட தொகைப் பணம் சேகரிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதற்கு சிலர் ஆலோசனை வழங்கியுள்ளனர். பொறுப்புள்ள நிருவாக சபை என்ற அடிப்படையில் அதனை நிறுத்தியுள்ளது. பொது மக்களாகிய நீங்கள் மிக நிதானமாக செயற்படுமாறும் அவ்வாறான தனிப்பட்ட நபர்கள், அங்கீகரிக்கப்படாத குழுக்கள் பற்றி அவதானத்துடன் செயற்படுமாறும் பணிவுடன் வேண்டுகிறோம்.

மேலும் சமூக வலைத் தலங்கள் வாயிலாக தகவல்களைப் பகிரும் போது அமானிதமாகவும் சமூகப் பொறுப்புடனும் அனைவரும் நடந்துகொள்ளும் படியும் நிர்வாக சபை அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.

அதேபோன்று நேற்று 2025.12.02 இரவு நிர்வாக சபை விசேடமான கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில் அனர்த்த முகாமைத்துவத்துக்கான தனியான செயலணி(Task Force) ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. உங்களில் எவருக்காவது ஏதாவது பிரச்சினைகள், தேவைகள் இருப்பின் நிர்வாக சபையின் உறுப்பினர்களுக்கு நீங்கள் அது பற்றி தெரிவிக்க முடியும்.
செயலணியின் விரிவான செயற்பாடுகள் பற்றி இன்ஷா அல்லாஹ் பொது மக்களுக்கு எதிர்காலத்தில் தெரியப்படுத்தப்படும்.

நிவாரண பொருட்கள் வழங்குவதை நிர்வாகம் ஊக்குவிக்கிறது. அதன் மூலம் அல்லாஹ்வின் கூலி நிச்சயமாகக் கிடைக்கும். எனின் நிருவாக சபை அல்லது கிராம உத்தியோகத்தர் அல்லது ஊரில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் ஊடாகவே அவற்றை வழங்க முன்வர வேண்டும். மேலும் இன்ஷா அல்லாஹ் பாதிக்கப்பட்டவர்களுக்க நிவாரண உதவிளைப் பெற்று வழங்க நிருவாக சபை தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உங்களுக்குத் தெரிந்த யாராவது நிருவாக சபை ஊடாக வழங்க முன்வருவார்களாயின் அதற்கான ஒத்துழைப்பை நிருவாக சபை வழங்கும்.

நாடும் மாவட்டமும் குறிப்பாக நமது ஊரும் ஓர் அனர்த்தத்தை சந்தித்துள்ள இந்த இக்கட்டான சூழலில் அல்லாஹ்வுடனான தொடர்பை மென்மேலும் வலுப்படுத்தி ஒற்றுமையாக செயல்படுவோமாக.

அல்லாஹ் நன்கறிந்தவன். எல்லோருக்குமாக எல்லோரும் அல்லாஹ்வை பிரார்த்தித்துக் கொள்வோம்.

இவ்வண்ணம்

*நிர்வாக சபை*

நாச்சியாதீவு ஜும்ஆ பள்ளிவாசல்

03.12.2025

Address

Bazar Street
Nachchaduwa
50046

Telephone

+94773450606

Website

Alerts

Be the first to know and let us send you an email when நாச்சியாதீவு - Nachchaduwa Jumu'ah Mosque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share