28/12/2025
🌾✨ வங்க மண்ணின் 42வது குருமணி ✨🌾
மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களும் துறவிகளும் நிறைந்த வங்காலை மண்ணில் இருந்து, 42வது அருட்பணியாளராக குருத்துவ அருட்பொழிவு பெற்றுள்ள சலேசியன் சபை அருட்தந்தை பிரியங்கன் மார்க் அவர்களுக்கு வங்க மண்ணின் மக்கள் அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏 இறைவன் அவர்களின் அருட்பணியை ஆசீர்வதித்து, திருச்சபைக்கும் சமூகத்திற்கும் ஒளிவிளக்காக அவரை வழிநடத்தட்டும்.
வங்க மண்ணின் பெருமை – நம் அனைவரின் மகிழ்ச்சி! 🌿⛪