10/06/2026
எழுத்தாளர்
அஷ்ஷெய்க் எம்.எச். ஷைஹுத்தீன் (மதனி)
தடுத்து வைக்கப்பட்டுள்ள அல் குர்ஆன் மொழிபெயர்ப்பு விடயமாக சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயமாக அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கெளரவ பொதுச் செயலாளர் ஷேய்க் அர்கம் நூராமித் அவர்கள் ஷோர்ட் நிவ்ஸ் ஊடகத்துக்கு முகங்கொடுக்காமல் நழுவிப் போவதும், Dr அஸ்வர் அவர்கள் திக்கு முக்காடி சமாளித்து பலரையும் குற்றஞ்சாட்டி பதில் சொல்வதும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. யார் யாருடையவோ தலையில் கொச்சிக்காய் அறைக்காமல் ஒன்று மன்னர் பஹ்த் அல் குர்ஆன் அச்சகத்தால் சவுதி அரேபிய அரசால் அச்சிடப்படுகின்ற, அவ்வரசால் நேரடி கண்கானிப்பிலும் தலைசிறந்த உலமாக்களாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அல் குர்ஆனை எவ்வித நிபந்தனைகளுமின்றி அல்லாஹ்வுக்கு பயந்து விரைவில் விடுவிக்க ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், முஸ்லிம் பாறாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முன்வர வேண்டும். அதற்காக அவர்கள் அரசை அழுத்தம் கொடுக்கவும் வேண்டும்.
அல்லது ரிவீவ் கமிட்டி உடனடியாக கலைக்கப்பட்டு ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், தவ்ஹீத், தப்லீக், தரீக்கா, ஜமாஅத்தே இஸ்லாமி உறுப்பினர்கள் அதற்காக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் அதற்காக புட் நோட்ஸ் போடப்பட்டு விரைவில் வெளியிடப்பட வேண்டும். தரீக்கா தப்லீக் காரர்கள் மாத்திரம் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் நடுநிலை பேணப்பட மாட்டாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
விதண்டாவாதமாக ஒரு சிலர் குறித்த சில வசனங்களில் சராச்சையைக் கிளப்பியதால் அவர்களுக்கு துணை போவது போல் மொழிபெயர்ப்பைவெளியிடாமல் இருக்கிறார்கள் ரிவிவ் கமிட்டியினர். அல்லது ஒரு சிலரின் அழுத்தங்களுக்காக வெளியிடாமல் இருக்கிறார்கள். இதற்கு நம்மவர்களின் நாசகார கைகளும் இல்லாமல் இல்லை. சர்ச்சைக்குரியதாக சித்தரிக்கப்பட்ட வசனங்களுக்கு புட் நோட் எழுத வேண்டும் என்றால் அதற்கு ஒரு வாரமும் அதிகம். மேற்குறிப்பிட்ட அனைத்து தரப்பினரும் இதில் வேண்டுமென்றே இழுத்தடிப்புச் செய்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவு.
குர்ஆன் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து தான் செயற்படுகிறோம் என அவர்கள் கூறுவதெல்லாம் பச்சைப் பொய். ஒருதலைப்பட்சமாக ஒரு சிலரின் அஜண்டாவுக்காகத் இவ்வளவு தூரம் இழுத்தடிப்புச் செய்கிறார்கள். டென்மார்க்கில் குர்ஆனை எரித்ததற்காக கொதித்தெழுந்தவர்கள் இலங்கையில் பல வருடங்களாக அல் குர்ஆன் தூசி பட அங்கும் இங்கும் பந்தாடப்பட்டுக் கொண்டிருப்பது அணு அளவும் அவர்களுக்கு கவலையளிக்க வில்லை. காரணம் அவர்களது பார்வையில் இது தவ்ஹீத் காரனுடைய தர்ஜுமா. ரிவிவ் கமிட்டியில் இருப்பவர்கள் அனைவரும் தரீக்க்கா தப்லீக்கைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நினைத்து விட்டார்கள் இது தவ்ஹீத் குர்ஆன் என்று. அவர்கள் தான் முக்கிய காரணம் இம்மொழிபெயர்ப்பை வெளியிடாமல் தடுத்து வைப்பதற்கு.
ரிவிவ் கமிட்டியில் அனைவரும் நழுவல் போக்கைத் தான் கடைப்பிடிக்கிறார்கள். அதே நழுவல் போக்கைத் தான் Dr அஸ்ஹர் அவர்களும் ஊடகத்தில் கையாண்டார். யார் வந்து எங்களோடு உட்கார்ந்து பேசினார்கள் என குறுக்குக் கேள்வி கேட்டு பந்தைத் திருப்பிப் போடுகிறார். அவர்களிடம் நேரடியாக போய் கேட்டாலும் இதை விட மழுப்பித் தான் பதிலளிப்பார்கள். தரீக்கா தப்லீக் கொள்கையைச் சார்ந்தவர்களை மாத்திரம் போடப்பட்டிருக்கிறது அந்த கமிட்டிக்கு. அதுவும் அந்த கமிட்டியில் உள்ளவர்களுக்கு கிளியரென்ஸ் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுத் தான் நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனக் கூறுகிறார்கள். அப்படி என்றால் அவர்கள் தங்களது பொறுப்பை சரியாக செய்ய வேண்டும். அடுத்தவன் வரல்ல பேசல்ல என சும்மா கதை அளப்பது நாகரிமல்ல.
ரிவிவ் கமிட்டியிடம் ஒரு கேள்வி... guideline தந்தார்கள் guideline தந்தார்கள், அதன்படி தான் செயற்படுவோம் என மூச்சுக்கு முன்னூறு தடவைகள் உளறும் நீங்கள், அந்த guideline பிழை என்றால் ஏன் அந்த guideline பிரகாரம் அல் குர்ஆனுக்குத் தீர்ப்பு வழங்கப் போகிறீர்கள். அந்த பிழையான guidelineஐ யார் கொடுத்தது என ரிவிவ் கமிட்டியோ, ஜம்இய்யதுல் உலமாவோ தேடிப் பார்க்க மாட்டீர்களா? கண்களை மூடிக் கொண்டு "ஆமன்வா ஸல்லம்னா" வா நீங்கள்?
பிழையான guidelineஐத் தந்தவர்களுக்கு சுட்டிக் காட்டி அந்த guidelineஐ உங்களால் திருத்த முடியாதா? இப்பாரிய பொறுப்பில் இருந்து ஏன் விலகி பொறுப்புக் கூற வேண்டியவராகளே பொறுப்பற்று நழுவுகிறீர்கள். guideline தந்தவர்கள் பிழையான guideline தந்திருந்தார்கள் என நன்கு தெரிந்தும் அந்த பிழையான guidelineஐ வைத்து புட் நோட் போட்டு அல்லாஹ்வின் அல் குர்ஆனில் பொறுப்புவாய்ந்தவர்களே, அல்லது பொறுப்புச் சாட்டப்பட்டவர்களே விளையாடப் பார்க்கிறீர்களா? அரச தரப்பில் இருந்து guideline தரப்பட்டு இருந்தால் அரச தரப்புக்கு பிழையான guidelineஐக் கொடுத்தது நம்மவர்களில் வெள்ளயாட்டு மந்தையில் உள்ள சில கருப்பாடுகளாகத் தான் இருக்க முடியும். பிழையான guideline என்றால் அதைத் திருத்துவது ரிவிவ் கமிட்டி மற்றும் ஜம்இய்யதுல் உலமாவின் தலையாய கடமை.
சுமார் 300 மில்லியன் ரியால்கள் வருடா வருடம் பட்ஜட் நிதியொதுக்கீட்டில் சவுதி அரேபிய அரசின் கண்காணிப்பிலும், அதன் முஸ்லிம் கலாசார அமைச்சர்களது நேரடி கண்காணிப்பிலும் 1984ம் ஆண்டில் இருந்து சுமார் 42 வருடங்களாக தமிழ் மொழி உட்பட உலகின் சகல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு அல் குர்ஆன் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. அம்மொழிபெயர்ப்புகளைப் பார்த்து யாரும் குண்டு வைக்க வில்லை. இதையும் ரிவிவ் கமிட்டி கவனத்தில் கொள்ள வேண்டும்.
சவுதி அரேபிய மன்னர்களால் நியமிக்கப்படுகின்ற சவுதி அரேபிய தலைசிறந்த மார்க்க அறிஞர்களான முப்திகளை பயங்கரவாதிகளாகக் காட்டி அவர்களது புத்தகங்களை இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க ரிவிவ் கமிட்டி எடுத்த முடிவு மிகக் கேவலமாக உள்ளது. சவுதி அரேபிய முப்திகள் அவர்களுடைய புத்தகங்களில் எங்கேயாவது ஒரு வார்த்தையேனும் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக உங்களால் காட்ட முடியுமா? இது உங்களிடம் சவாலாக விடுகிறேன். முழுக்க முழுக்க அவர்கள் பயங்கரவாதத்துக்கு எதிராக தங்களை அர்ப்பணித்த மாமேதைகள். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக.
அம்மாமேதைகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து விட்டு அவர்களது தீர்ப்பின் பிரகாரம் அரபாவில் தங்குகிறீர்கள். அவர்களின் தீர்ப்பின் பிரகாரம் உம்ரா ஹஜ்ஜின் பல காரியங்களை நிறைவேற்றுகிறீர்கள். அவர்களுக்குப் பின்னால் தொழுகிறீர்கள். இதுக்கெல்லாம் உங்களிடம் பதில் உண்டா?
இன்னும் பல மார்க்க அறிஞர்களின் புத்தகங்களை தடை செய்துள்ளீர்கள். அவர்கள் பயங்கரவாதத்தை அப்புத்தகங்களில் ஊக்குவித்துள்ளார்களா? அந்த தலைசிறந்த ஆலிம்கள், முப்திகளின் கால் தூசிக்கும் நாங்களோ நீங்களோ தகுதியற்றவர்கள். அப்படிப்பட்டவர்களை பயங்கரவாதிகளாகவும் அவர்களின் புத்தகங்களை பயங்கரவாதத்தைப் போதிப்பதாகவும் சித்தரித்திருப்பது உங்களுக்கு கேவலமாகத் தெரிய வில்லையா?
நீங்கள் தடை செய்திருக்கும், அல்லது நீங்கள் பயங்கரவாதிகளாக சித்தரித்திருக்கும் சவுதி அரேபிய மற்றும் எகிப்து உலமாக்கள் மற்றும் அவர்களது பத்வாக்களை குறிப்பாக சவுதி முப்தியின் தலைவைழில் இயங்கும் சவுதி அரேபிய மஜ்மஉல் பிக்ஹில் இஸ்லாமி, எகிப்து அஸ்ஹர் உலமாக்களால் வெளியிடப்பட்டவற்றில் இருந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கூட பல மார்க்க சட்டங்களை எடுத்துள்ளதே? அவற்றையும் வழிகேடு, பயங்கரவாதம் என்று அவற்றையும் வாபஸ் பெற வைப்பீர்களா?
இப்னு தைமிய்யா, இப்னுல் கையூம் ரஹிமஹுமல்லாஹ் எப்போதே பிறந்தவர்கள். அவர்களையும் வஹ்ஹாபிகளாக்கி விட்டீர்கள். இப்னு தைமிய்யா வஹ்ஹாபி அவரை விட்டு விடுவோம், இப்னுல் கையூம் என்ன தப்பு செய்தார்? இப்னுல் கையூம் அவர்களின் புத்தகங்களைக் கூட நீங்கள் தடுத்ததன் மூலம் அடேங்கப்பா நீங்கள் எங்கேயோ போய் விட்டீர்கள்.
இவ்வாறு ரிவிவ் கமிட்டியிடமும் உலமா சபையிடமும் பல கேள்விகள் இருக்கிறது. பதில் தருவீர்களா?
எனவே போலியான காரணங்களையும் நழுவல் போக்குகளையும் விட்டு விட்டு, புத்தகங்கள் தடை விடயமாக நீங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்யுமாறும், அல்லாஹ்வுக்குப் பயந்து அவசரமாக களத்தில் இறங்கி தடுத்து வைக்கப்பட்புள்ள அல் குர்ஆனை விடுவிக்குமாறும் ரிவிவ் கமிட்டியை அல்லாஹ்வுக்காகக் கேட்டுக் கொள்கிறேன்.