Swami Vipulananthar Memorial Activities Committee

Swami Vipulananthar Memorial Activities Committee சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிம?

06/02/2026
எமது பணிமன்ற ஸ்தாபக நிருவாக சபை உறுப்பினரும், ஆயுட்கால உறுப்பினருமான அமரர். மா. வடிவேல் ஐயா அவர்களின் ஆத்ம சாந்திக்காகப்...
28/01/2026

எமது பணிமன்ற ஸ்தாபக நிருவாக சபை உறுப்பினரும், ஆயுட்கால உறுப்பினருமான அமரர். மா. வடிவேல் ஐயா அவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்

கடந்த 2025.10.11ம் திகதி (திங்கட்கிழமை) இந்தியாவிலிருந்து துறவிகள், பேராசிரியர்கள், ஆய்வாளர்களை உள்ளடக்கிய சைவ சித்தாந்த...
12/10/2025

கடந்த 2025.10.11ம் திகதி (திங்கட்கிழமை) இந்தியாவிலிருந்து துறவிகள், பேராசிரியர்கள், ஆய்வாளர்களை உள்ளடக்கிய சைவ சித்தாந்த சிந்தனையாளர் குழுவானது தல யாத்திரையின் ஓர் அங்கமாக, சுவாமியின் பிறந்த இல்லத்தினை தரிசிப்பதற்காக சமூகமளித்திருந்தனர். இவ்வணியினை காரைதீவு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணிமன்றம் சார்பாகவும், இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகம், சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலையம், காரைதீவு, அம்பாரை சார்பாகவும், செயலாளர் கு. ஜெயராஜீ (மாவட்ட இந்துக் கலாச்சார உத்தியோகத்தர்) மற்றும் பொருளாளர் திரு.ம. வரதராஜன் (ஓய்வுநிலை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்) மற்றும் திருமதி. லோ . சிவலோஜினி (இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் வரவேற்றதுடன் செயலாளர் அவர்களினால், சுவாமிகளின் வாழ்க்கை, சேவைகள், பிறந்த இல்லத்தின் அம்சங்கள், மணிமண்டப செய்றபாடகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் பணிமன்றத்தலைவர் சோ. ஸுரநுதன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்) அவர்களும் இறுதியில் இணைந்துகொண்டார். சுவாமிகளின் புகழை தமிழ் நாட்டு மண்ணில் மீண்டும் கொண்டுசெல்வதற்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 2025.10.11ம் திகதி (திங்கட்கிழமை) இலங்கை சைவநெறிக் கழகச் சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவருக...
12/10/2025

கடந்த 2025.10.11ம் திகதி (திங்கட்கிழமை) இலங்கை சைவநெறிக் கழகச் சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவருக்குரிய மட்டக்களப்பு அம்பாறை சைவாலயத் திருத்தல ஓர் அங்கமாக சுவாமி விபுலானந்த அடிகளாரின் பிறந்த இல்லத்தினை தரிசிப்பதற்காக சமூகமளித்திருந்தனர். இவ்வணியில் இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் சிவத்திரு. ஈசானதேசிகர், வைத்திய கலாநிதி. க. பிரதீபன், பொதுச் செயலாளர் வி.துலாஞ்சனன் (உதவி பிரதேச செயலாளர்) மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள், அறநெறிப்பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட சுமார் 100 உள்ளடங்கியிருந்தனர். இவ்வணியினை காரைதீவு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணிமன்றம் சார்பாக தலைவர் சோ. ஸுரநுதன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்), செயலாளர் கு. ஜெயராஜீ (மாவட்ட இந்துக் கலாச்சார உத்தியோகத்தர்), பொருளாளர் திரு.ம. வரதராஜன் (ஓய்வுநிலை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்), திரு.வ.குகராஜ் (சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்) மற்றும் ஆன்மீக செயற்பாட்டாளாரும் ஊடகவியலாளருமான சி. சிறிக்காந்தன் ஜீ உள்ளிட்ட குழுவினர் வரவேற்று சுவாமிகளின் வாழ்க்கை, சேவைகள், பிறந்த இல்லத்தின் அம்சங்கள், மணிமண்டப செய்றபாடகள் தொடர்பாக விளக்கமளித்தனர். இவ்வணியினக்கான சிற்றுண்டி விருந்துபசாரத்தினை காரைதீவைச் சேர்ந்த திரு. திருமதி. கிரிசாந் மெண்டிஸ் (விரிவுலையாளர்) தாட்சாயினி (ஆசிரியை) குடும்பத்தினர் ஓழுங்குசெய்திருந்தனர்.

எமது ஆழ்ந்த அனுதாபங்கள்….
03/10/2025

எமது ஆழ்ந்த அனுதாபங்கள்….

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும்  முத்தமிழ் வித்தகர்...
19/07/2025

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் 78வது மகாசமாதி தினம் இன்று (19.07.2025) காலை 8.30மணிக்கு காரைதீவில் சுவாமி விபுலாநந்தர் அவதரித்த இல்லத்தில் இடம்பெற்றது.திரு. எஸ். சிவராஜா(உப தலைவர் - சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றம்) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்திருமுன்னிலை அதிதி ஆக சிவ ஸ்ரீ பிரியதர்ஷன் குருக்கள் கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக திரு சிவ. ஜெகராஜன் (மேலதிக அரசாங்க அதிபர்,அம்பாறை) அவர்கள் கலந்து கொண்டதுடன் அதிதிகள் பலரும் கலத்து கொண்டனர்
https://web.facebook.com/share/p/1BDxW67GPS/
Thanks: Karaitivu WebTeam

யாழ்ப்பாண மண்ணில் இடம்பெறும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளின் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வுகளை சிறப்புற ஓழு...
17/07/2025

யாழ்ப்பாண மண்ணில் இடம்பெறும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளின் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வுகளை சிறப்புற ஓழுங்குசெய்து நடாத்தும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மற்றும் பொது அமைப்புக்களுக்கும் காரைதீவு மண் சார்பாகவும் காரைதீவு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணிமன்றம் சார்பாகவும் எமது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

13/05/2025
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஒருங்கிணைப்பில் அனுஷ...
10/05/2025

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஒருங்கிணைப்பில் அனுஷ்டிக்கப்படும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழாயொட்டிய செயற்பாடுகளில் ஒன்றாக, சுவுhமி விபுலாநந்தரின் 101வது துறவற தின நிகழ்வானது எதிர்வரும் 2025.05.12 காலை 08.30 மணிக்கு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் பணிமன்றத் தலைவர் திரு.சோ.ஸுரநுதன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

நூற்றாண்டு விழாத் தொடரின் இறுதி நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்ற தேர்தல்கள் காரணமாக பிற்போடப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் இடம்பெறவுள்ளன.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஒருங்கிணைப்பில் அனுஷ...
10/05/2025

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஒருங்கிணைப்பில் அனுஷ்டிக்கப்படும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழாயொட்டிய செயற்பாடுகளில் ஒன்றாக, சுவாமி விபுலாநந்தர் வீதி பெயர்ப்பலகை திறப்பு நிகழ்வானது நாளை (2025.05.11) பிற்பகல் 03.00 மணிக்கு பெரியநீலாவணையில் இடம்பெறவுள்ளது.

Address

Vipulananda Road, Karaitivu
Karativu
32250

Telephone

+94779309257

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swami Vipulananthar Memorial Activities Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share