21/05/2026
1988 முதல் 2026 வரை, தனது அர்ப்பணிப்பான இறைப்பணி மற்றும் சேவையின் மூலம் எண்ணற்ற உள்ளங்களில் அழியாத நினைவுகளைப் பதித்த சுவாமி ராஜேஸ்வரானந்தஜி மகராஜ் அவர்களின் பிரிவு உபசார விழா பக்திப்பூர்வமாகவும் மிக உன்னதமான முறையிலும் 17-05-2026 அன்று மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில், மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிசன் முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜி மகாராஜ் அவர்களின் திருமுன்னிலையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சுவாமிகளின் உன்னத சேவைக்கான நன்றியறிதலை தெரிவிக்;கு முகமாக இராமகிருஷ்ண மிஷனுக்கு மகத்தான இரு துறவியரை அர்ப்பணித்த காரைதீவு மண்ணிலிருந்து, காரைதீவு ஆலய அறங்காவலர் ஒன்றியத் தலைவரும், காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வண்ணக்கரும், காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்ற ஆலோசகருமான இரா. குணசிங்கம் அவர்களும், காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றச் செயலாளரும், அம்பாரை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தருமான கு. ஜெயராஜீ, காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்ற பொதுச் சபை உறுப்பினர் ஆ. பூபாலரெத்தினம், காரைதீவு அரசடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பொருளாளர் திரு. சி. சிறிகாந்தன் மற்றும் நிருவாக சபை உறுப்பினர் சி. துலக்ஷன் உள்ளிட்ட இராமகிருஷ்ண மிஷன் அபிமானிகள் கலந்துகொண்டனர். காரைதீவு மக்கள் சார்பாகவும் சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றம் சார்பாகவும் பாராட்டு மங்கல வாழ்த்துப் பாவானது திரு. சி. துலக்ஷன் அவர்களால் வாசிக்கப்பட்டு பிரமுகர்களால் சுவாமிகளிடம் வழங்கி நல்லாசிகளைப் பெற்றுக்கொண்டனர். மேலும், காரைதீவு சிவானந்தியன்கள் சார்பாக கு.ஜெயராஜி அவர்களால் அனுபவப் பகிர்வு உரையினை நிகழ்த்தினார்