12/10/2025
கடந்த 2025.10.11ம் திகதி (திங்கட்கிழமை) இந்தியாவிலிருந்து துறவிகள், பேராசிரியர்கள், ஆய்வாளர்களை உள்ளடக்கிய சைவ சித்தாந்த சிந்தனையாளர் குழுவானது தல யாத்திரையின் ஓர் அங்கமாக, சுவாமியின் பிறந்த இல்லத்தினை தரிசிப்பதற்காக சமூகமளித்திருந்தனர். இவ்வணியினை காரைதீவு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணிமன்றம் சார்பாகவும், இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகம், சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலையம், காரைதீவு, அம்பாரை சார்பாகவும், செயலாளர் கு. ஜெயராஜீ (மாவட்ட இந்துக் கலாச்சார உத்தியோகத்தர்) மற்றும் பொருளாளர் திரு.ம. வரதராஜன் (ஓய்வுநிலை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்) மற்றும் திருமதி. லோ . சிவலோஜினி (இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் வரவேற்றதுடன் செயலாளர் அவர்களினால், சுவாமிகளின் வாழ்க்கை, சேவைகள், பிறந்த இல்லத்தின் அம்சங்கள், மணிமண்டப செய்றபாடகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் பணிமன்றத்தலைவர் சோ. ஸுரநுதன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்) அவர்களும் இறுதியில் இணைந்துகொண்டார். சுவாமிகளின் புகழை தமிழ் நாட்டு மண்ணில் மீண்டும் கொண்டுசெல்வதற்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.