புனித நீக்கொலார் ஆலயம் , மிருசுவில் - St.Nicholas Church, Mirusuvil

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • புனித நீக்கொலார் ஆலயம் , மிருசுவில் - St.Nicholas Church, Mirusuvil

புனித நீக்கொலார் ஆலயம் , மிருசுவில்  - St.Nicholas Church, Mirusuvil Official page of St. Connecting our parish through faith, unity, and service.

Nicholas Church, Mirusuvil
Sharing updates on church announcements, liturgical celebrations, parish council activities, and community events.

10/08/2026
உறுதிப்பூசுதல் அருட்சாதனம் -2026மிருசுவில் பங்கைச்சேர்ந்த 21 பிள்ளைகள் 03.08.2026 அன்று உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தினை ப...
05/08/2026

உறுதிப்பூசுதல் அருட்சாதனம் -2026

மிருசுவில் பங்கைச்சேர்ந்த 21 பிள்ளைகள் 03.08.2026 அன்று உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தினை பெற்றுக்கொண்டனர்.

மிருசுவில் புனித நீக்கொலார் ஆலயத்தில் 03.08.2026 திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலியின் போது உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது.

உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தினை பெற்றுக்கொண்ட அனைத்து பிள்ளைகளுக்கும் பங்குமக்கள் சார்பாக வாழ்த்துக்களை கூறுவதோடு இறையாசீரையும் வேண்டிக்கொள்கின்றோம்.
அத்துடன் அவர்களை வழிப்படுத்திய பங்குத்தந்தை, அருட்சகோதரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பங்குத்திரு அவை சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அந்நிகழ்வின் பதிவுகள்……
📸SNCMediaUnit

StNicholas Church Mirusuvil

கண்ணீர் அஞ்சலி 💐மிருசுவில் மக்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய அருட்சகோதரி மேரி இவோன் சிமியோன் (Rev. Sr. Yvonne Sime...
31/07/2026

கண்ணீர் அஞ்சலி 💐

மிருசுவில் மக்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய அருட்சகோதரி மேரி இவோன் சிமியோன் (Rev. Sr. Yvonne Simeon ) அவர்கள் இறைவனடி சேர்ந்த செய்தி எங்கள் இதயங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

அருட்சகோதரி அவர்கள் மிருசுவில் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நீண்டகாலம் பணியாற்றிய ஒருவராவார் , குறிப்பாக போரின் கொடூர நாட்களின்போது மக்களின் துயரங்களையும் வேதனைகளையும் தன் வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு, அச்சமின்றி அன்புடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றியவர். எத்தனை சிரமங்கள் வந்தாலும், மக்களின் நடுவே இருந்து அவர்களுக்கு ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும், தாயாகவும் வாழ்ந்தவர் ஆவார்.

அன்பு, கருணை, தியாகம் என்றால் நினைவிற்கு வருபவர் அருட்சகோதரி அவர்களே! . மிருசுவில் கத்தோலிக்க மக்களால் மட்டுமல்லாது, அயற்கிராமங்களில் வாழ்ந்த இந்து சகோதர சகோதரிகளாலும் சம அளவில் நேசிக்கப்பட்டு மதிக்கப்பட்ட ஒரு அரிய மனிதர்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தாயாக மாறி, அவர்களை தன் சொந்த பிள்ளைகளாக வளர்த்து, கல்வி கற்பித்து, நல்ல எதிர்காலத்தை உருவாக்கி, நன்கொடையாளர்களின் உதவியுடன் திருமணம் செய்து வைத்து வாழ்க்கையில் நிலைநிறுத்திய அவரது தாய்மையின் மகத்துவம் என்றும் மறக்க முடியாதது. அது ஒரு சேவை மட்டுமல்ல, இறைவனின் அன்பை மனிதர்களிடம் வாழ்ந்து காட்டிய சாட்சியாகும்.

கன்னியர் மடத்தில் வளர்ந்த சிறுவர்களாக இருந்தாலும், வெளியுலகில் உதவி தேடிய சிறுவர்களாக இருந்தாலும், அவர்களை வேறுபாடின்றி அரவணைத்து அன்பு செலுத்திய ஒரு உண்மையான தாயாக அவர் வாழ்ந்திருந்தார். திருக்குடும்ப அருட்சகோதரிகளின் அர்ப்பணிப்பு வாழ்வின் உண்மையான அர்த்தத்தை தனது வாழ்வின் மூலம் வெளிப்படுத்தியவர்.
அவரது புன்னகை, கனிவான வார்த்தைகள், அக்கறை நிறைந்த இதயம், தன்னலமற்ற சேவை , வீடுகளில் உள்ள நோயாளர்கள் மேலும் அவர்களுக்கு தேவநற்கருணை வழங்குவதிலும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு ஆகிய இவை அனைத்தும் மிருசுவில் மக்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.

அருட்சகோதரி மேரி இவோன் சிமியோன் அவர்களின் பிரிவு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருந்தாலும், அவர் விதைத்த அன்பும், நம்பிக்கையும், மனிதநேயமும் எமது இதயங்களில் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

இறைவன் அவரது ஆன்மாவிற்கு நித்திய இளைப்பாறுதலை அருள்வாராக.

இன்றைய தினம் குருத்துவ திருநிலைப்படுத்தலின் 34 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் மிருசுவில் புனித நீக்கொலார் ஆலய பங்குத்தந்தை ...
28/07/2026

இன்றைய தினம் குருத்துவ திருநிலைப்படுத்தலின் 34 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் மிருசுவில் புனித நீக்கொலார் ஆலய பங்குத்தந்தை
அன்புக்குரிய அருட்பணி S.J.Q. ஜெயறஞ்சன் அடிகளார் அவர்களுக்கு மிருசுவில் பங்குமக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வதோடு
தொடர்ந்தும் இறைவனின் அருளும் ஆசீரும் கிடைக்கப்பெற்று அவர் உடல் உள ஆரோக்கியத்துடன் திருப்பணி செய்யவேண்டும் என வேண்டி நிற்கின்றோம்.

ஆலய அருட்பணிச்சபை
புனித நீக்கொலார் ஆலயம்
மிருசுவில்.

மிருசுவில் மக்களின் நீண்டகால யாத்திரைஸ்தலமான வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலயத்தின் நவதின வழிபாடுகளில் வழமைபோன்று இவ...
22/06/2026

மிருசுவில் மக்களின் நீண்டகால யாத்திரைஸ்தலமான வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலயத்தின் நவதின வழிபாடுகளில் வழமைபோன்று இவ்வருடமும் 8வது நாள் அதாவது 20.06.2026 சனிக்கிழமை வழிபாடு பெருமளவிலான மிருசுவில் பங்குமக்களின் பங்குபற்றுதலுடன் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
அதன் பதிவுகள் சில…..

வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய திருநாள் - 2026 தொடர்பான அறிவித்தல்மிருசுவில் மக்களின் நீண்டகால யாத்திரைஸ்தலமான வெற...
19/06/2026

வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய திருநாள் - 2026 தொடர்பான அறிவித்தல்

மிருசுவில் மக்களின் நீண்டகால யாத்திரைஸ்தலமான வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலயத்தின் நவதின வழிபாடுகளில் வழமைபோன்று இவ்வருடமும் 8வது நாள் அதாவது 20.06.2026 சனிக்கிழமை வழிபாடு மிருசுவில் மக்களுக்கு என வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே விரும்பியவர்கள் அன்றைய வழிபாட்டில் பங்கெடுக்குமாறு அழைக்கப்படுகின்றனர்

பங்குமக்கள் வழிபாட்டிற்கு செல்வதற்கான விஷேட இலவச போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. 20.06.2026 சனிக்கிழமை மாலை புனித நீக்கொலார் ஆலய முன்றலில் இருந்து 3.15 மணிக்கு பேரூந்து புறப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன்.

செயலாளர் ,
ஆலய அருட்பணிச்சபை,
புனித நீக்கொலார் ஆலயம்,
மிருசுவில்.

மிருசுவில் புனித நீக்கொலார் ஆலயத்தில் 07.06.2026 அன்று நடைபெற்ற முதல் நன்மை நிகழ்வின் பதிவுகள்.மிருசுவில் புனித நீக்கொலா...
09/06/2026

மிருசுவில் புனித நீக்கொலார் ஆலயத்தில் 07.06.2026 அன்று நடைபெற்ற முதல் நன்மை நிகழ்வின் பதிவுகள்.

மிருசுவில் புனித நீக்கொலார் ஆலய பாஸ்கா திருவிழிப்பு திருப்பலியின் பதிவுகள்.

01/05/2026

வைரவிழா நாயகிகளுக்கு மிருசுவில் மண்ணின் வாழ்த்துக்கள்

அருட்கன்னியர்களாக திருநிலைப்படுத்தப்பட்டதன் 60 ஆவது வைர யூபிலியை கொண்டாடும் எமது ஆலயத்தின் புதல்விகள் அருட்சகோதரி மேரி திரேஸ்ராணி (அ.கா), அருட்சகோதரி மேரி கென்றியன் (அ.கா) ஆகியோரை எமது மண்ணின் பாதுகாவலர் புனித நீக்கொலாரின் ஆசியுடன் நீடூழி காலம் வாழ அருட்பணி சபையின் வாழ்த்துக்கள்.
இவர்கள் இருவரும் அச்சுவேலியில் அமைந்துள்ள கார்மேல் சபையினரின் லங்கா மாதா கன்னியர்மடத்தில் 02/05/2026 திருப்பலியுடன் மிக எளிமையான முறையில் தமது திருநிலைப்படுத்தலின் வைர ஜூபிலியை நினைவு கூறுகின்றனர்.

அருட்சகோதரி திரேஸ்ராணி திருகோணமலை புனிதமரியாள் கல்லூரியின் புகழ் பெற்ற அதிபராக இருந்த காலத்தில் சிறந்த அதிபருக்கான அரச விருதினை பெற்று எமது மண்ணிற்கு பெருமை சேர்த்து தந்தவர். இவ்வேளையில் இவரது அருமைச்சகோதரன் அருட்பணி அமரர் பிலிப் அரியநாயகத்தினையும் நினைவு கூருகின்றோம். எமது மண் அமலமரித்தியாகிகள் சபைக்கு வழங்கிய அருமையான ஒரு முத்து அவர்.

இன்றைய தினம் திருநிலைப்படுதலின் வைரவிழாவினை சிறப்பிக்கும் எமது மண்ணின் மற்றைய புதல்வி அருட்சகோதரி மேரி கென்றியன் ஆவார். ஆசிரிய பணியை சிறப்புற ஆற்றிய இவர் இவரின் சகோதரர்களான அருட்பணி நிக்கொலஸ், அருட்பணி (அமரர்) திருச்செல்வம் மற்றும் அருட்சகோதரி பொஸ்கோ ஆகியோரை இறைபணிக்கு வழங்கிய இறையருள் பெற்ற குடும்பத்தை சேர்ந்தவர் என்ற சிறப்புக்குரியவராவார்.

இவர்களுடன் சேர்ந்து ஒரே தினத்தில் அருட்சகோதரியாக திருநிலைப்படுத்தப்பட்ட அப்போஸ்தலிக்க கார்மேல் சபையை சேர்ந்த மற்றும் ஒரு அருட்சகோதரி (அமரர்) மேரி சன்ரா (அ.கா ) ஆவார். சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் ஆங்கில ஆசிரியையாக சிறப்பாக கடமை புரிந்த இவர் மிக எளிமையான வாழ்வை வாழ்ந்து காட்டி இறை சித்தத்திற்கு சான்று பகர்ந்த ஒரு அருட்சகோதரியாவார். மிருசுவில் உறவுகளால் சில்லாலை அப்பு என அன்பாக அழைக்கப்படும் மிருசுவிலை பூர்விகமாக கொண்ட அமரர் சின்னத்துரை மாஸ்டரின் கனிஷ்ட புதல்வியான இவரின் ஆன்மா இறைவனில் நித்திய இளைப்பாற்றியை பெற இன்னாளில் வேண்டிக்கொள்வோமாக!

அருட்பணிச் சபை சார்பாக
செயலாளர்
அருட்பணி சபை
புனித நீக்கொலார் ஆலயம்
மிருசுவில்

29/04/2026

யாழ் மறைமாவட்ட குரு அருட்பணி. அருள்நேசன் அடிகளார் இன்று இறைபதம் அடைந்தார் - 27.04.2026

யாழ். மறைமாவட்ட குருவாகிய அருட்பணி. அருள்நேசன் அடிகளார் அவர்கள் சித்திரை மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை இன்று சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.

அருட்தந்தை அவர்கள் 1994 மார்ச் மாதம் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு யாழ். புனித மரியன்னை பேராலயம் மற்றும் குருநகர் பங்கின் உதவிப் பங்குத்தந்தையாகவும், உரும்பிராய் பங்கில் பதில் பங்குத்தந்தையாகவும், மிருசுவில், நெடுந்தீவு, செம்பியன்பற்று, ஆணைக்கோட்டை, ஊறணி, ஒட்டகப்புலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் பங்குத்தந்தையாகவும், அத்துடன் கனடா ரொரன்ரோ தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குனராகவும், கனடா கத்தரீன் ஆலய பங்குத்தந்தையாகவும் பணியாற்றியுள்ளார்.

மன்னார் மறைமாவட்டம் சார்பாக யாழ் மரமாவட்ட திருவைக்கும், அருட்தந்தையின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அருட்தந்தையின் பணிவாழ்வுக்காக இறைவனுக்கு நன்றிகூறி அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுகிறோம்.

மிருசுவில் புனித நீக்கொலார் ஆலய பாஸ்கா திருவிழிப்பு திருப்பலியின் பதிவுகள்.
08/04/2026

மிருசுவில் புனித நீக்கொலார் ஆலய பாஸ்கா திருவிழிப்பு திருப்பலியின் பதிவுகள்.

Address

St. Nicholas Church Mirusuvil
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when புனித நீக்கொலார் ஆலயம் , மிருசுவில் - St.Nicholas Church, Mirusuvil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share