18/05/2026
ஓம் நமசிவாய
பிரணவம் அறக்கட்டளை நடாத்தும் முதலாவது சர்வதேச சைவ மாநாடும்- பாடசாலை மாணவர்களுக்கான சமய அறிவுப் போட்டிகளும்.
பிரணவம் அறக்கட்டளையானது எதிர்வரும் 2026.08.15ஆம் திகதி சர்வதேச சைவ மாநாடு ஒன்றினை யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடத்தவுள்ளது.
இம்மாநாட்டினையொட்டி இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களிடையேயும் "வாழ்வியலில் திருமுறைகள்- திருமுறைகளில் வாழ்வியல்" எனும் தொணிப்பொருளில், தரம்- 3 தொடக்கம் தரம்- 13 வரையான மாணவர்களுக்கு வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் பண்ணிசைப் போட்டி, பேச்சுப் போட்டி, நாடகப் போட்டி மற்றும் வில்லிசைப் போட்டி என்பவற்றை தமிழ் மாணவர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் மாவட்ட நிலைகளிலும்- தமிழ் மாணவர்கள் குறைவாக உள்ள
மாகாணங்களில் மாகாண நிலையிலும் நடாத்தப்படவுள்ளன.
போட்டிகளில் முதலிடம் பெறுகின்ற அனைத்துப் போட்டியாளர்களும் அகில இலங்கை ரீதியான இறுதிப் போட்டிக்கு அழைக்கப்பட்டு, அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களையும் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும்- பரிசில்களும் மாநாட்டில் வழங்கி கௌரவிப்பதோடு, மாவட்ட நிலையில் முதல் ஐந்து இடங்களைப் பெறுகின்ற மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
எனவே அனைத்து மாணவர்களும் பங்குபெறும் வகையில், இப்போட்டிகள் தொடர்பான சுற்றுநிருபங்கள் பாடசாலைகளுக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்களின் அனுமதியுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பப் படிவங்களை தங்கள் பாடசாலை அதிபர் ஊடாக தங்கள் மாவட்டத்திற்குப் பொறுப்பான ஒருங்கிணைப்பாளர்களிடம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். மாவட்ட ரீதியான போட்டிகள் 2026.07.04ஆம் திகதியும், அகில இலங்கை ரீதியான இறுதிப் போட்டிகள் 2026.07.11ஆம் திகதி வவுனியாவிலும் நடைபெறவுள்ளது.
அந்த வகையில்:
யாழ்ப்பாண மாவட்ட மாணவர்கள் திருமதி சு.நவிதா – 0769024273,
மன்னார் மாவட்ட மாணவர்கள் திரு அ.யோகன் – 077 2526562,
கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் திரு தா.நிகேதன் – 076 5256948,
முல்லைத்தீவு மாவட்ட மாணவர்கள் திரு சி. நாகேந்திரராசா – 0773407243,
வவுனியா மாவட்ட மாணவர்கள் திருமதி து.லிங்கேஸ்வரி- 0778547718
மட்டக்களப்பு,திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட மாணவர்கள் திரு த.அருச்சுனன் -077 1235238 மற்றும் திருமதி சி.ஞானசூரியம் – 077 1768830,
மத்திய மாகாண மாணவர்கள் திருமதி நந்தினி பாஸ்கரன் – 077 5943695,
மேல் மாகாண மாணவர்கள் திருமதி சு.ஜெயந்தி-077 3880155
வடமத்திய மாகாண மாணவர்கள் சிவஸ்ரீ உதயகுமாரக் குருக்கள் –077 2530122 ஆகிய போட்டிப் பொறுப்பாளர்களிடம் அந்தந்த மாவட்ட மாணவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து போட்டியில் பங்குபெற முடியும்.
மாநாட்டுக் குழுவின் முதன்மைப் போட்டிச் செயலாளர் திருமதி சிவப்பிரியா ராஜ்குமார் அவர்கள் தலைமையில் மேற்படி போட்டிகள் அனைத்தும் நெறிப்படுத்தப்பட்டு நடத்தப்படும் எனவும், மேலதிக தகவல்களுக்கு முதன்மைப் போட்டிச் செயலாளரை (0771046674) தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிகளில் பங்குபற்றி மாணவர்கள் அனைவரையும் பயனடைய அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆக்கமும் ஊக்கமும் அளித்துச் செயற்படுத்துமாறு விழா பிரணவம் அறக்கட்டளையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.