சுவடுகளைத் தேடி-Nks

சுவடுகளைத் தேடி-Nks NKS Thiru

தென்னிலங்கையில் உள்ள அடர்ந்த யாள காட்டில் சிவனின்  முக்கிய சுவடுகளைத் தேடிச் சென்றபோது...இங்கு நூற்றுக்கணக்கான இயற்கையான...
19/03/2025

தென்னிலங்கையில் உள்ள அடர்ந்த யாள காட்டில் சிவனின் முக்கிய சுவடுகளைத் தேடிச் சென்றபோது...

இங்கு நூற்றுக்கணக்கான இயற்கையான கற்குகைகள் உள்ளன.

இவற்றில் சிவன் தொடர்பான சில முக்கிய சின்னங்களும் உள்ளன.
அவை என்ன என்பதை இக் காணொளியில் பாருங்கள்.

இந்த எனும் எனது youtube Channel ஐ..
Subscribe செய்யுங்கள்.
நண்பர்களுக்கும் பகிருங்கள்.
மிக்க நன்றி.

Suvadugalai Thedi – A channel made for the people to learn about the history and more. (Since 2025)We warmly welcome you to Suvadugalai Thedi, your destinati...

அண்மையில் மாத்தறை மாவட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்த சமயம் பெளத்த விகாரை ஒன்றில்  அபூர்வமான சில சிலைகளைக் கண்டேன்.இடத...
18/03/2025

அண்மையில் மாத்தறை மாவட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்த சமயம் பெளத்த விகாரை ஒன்றில் அபூர்வமான சில சிலைகளைக் கண்டேன்.

இடது பக்கம் தமிழ் மன்னன் எல்லாளனும், வலது பக்கம் துட்டகாமினியும் தன் படைகள் சகிதம் போர் புரியச் செல்லும் காட்சி.

சுதையினால் அமைக்கப்பட்ட எல்லாளனின் சிலையின் கீழ்...
"இருபது யுத்த சேனைகளுடன் போர் புரிந்து மரணமடைந்த
#வீரன்_எல்லாளன்"
என எழுதப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட ஒரு சிலையை வேறு எங்கும் கண்டதில்லை.

அனுராதபுரத்தின் அருகில் உள்ள  காட்டில் தமிழரின் வணிக நிலையங்களைத் தேடிச் சென்றபோது...சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு இலங...
17/03/2025

அனுராதபுரத்தின் அருகில் உள்ள காட்டில் தமிழரின் வணிக நிலையங்களைத் தேடிச் சென்றபோது...

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்தின் அருகில் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்த குடியிருப்பு ஒன்று இருந்தது. இது ஒரு வணிகர் குடியிருப்பு. அங்கு சில வணிக நிலையங்களும் இருந்தன.

மிகுந்த பண வசதியுடன் செல்வந்தர்களாக பல நாடுகளுடன் வணிகம் செய்து வந்த இவ்வணிகர்கள் தங்கள் குடியிருப்பில்
ஆறு கோயில்களை அமைத்து வழிபட்டு வந்துள்ளனர்.

இக்குடியிருப்பில் இருந்த வணிக நிலையங்களின் சிதைவுகள் தற்போது அடர்ந்த கட்டின் மத்தியில் உள்ளன.
அவற்றின் எச்சங்களைத் தேடிச் சென்றபோது அங்கு 6 அடி உயரமான 8 கருங்கற் தூண்களும், 2, 3 அடி உயரத்தில் குட்டையான 12 தூண்களும் காணப்பட்டன.
இது வணிகர் குடியிருப்பில் இருந்த ஒரு வணிக நிலையமாகும்.

கலாநிதி
என். கே. எஸ். திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்

 #கபிலித்தைக்_கந்தனின்_புனித  #புளிய_மரமா_இது ???  #இல்லை.கபிலித்தைக் கந்தன் குடிகொண்டிருக்கும் புனித புளிய மரத்தைப் போன...
16/03/2025

#கபிலித்தைக்_கந்தனின்_புனித
#புளிய_மரமா_இது ???
#இல்லை.

கபிலித்தைக் கந்தன் குடிகொண்டிருக்கும் புனித புளிய மரத்தைப் போன்ற அதே அபூர்வ வடிவமைப்பைக் கொண்ட புளிய மரம் தான் இது.

திருமங்கலாய் காட்டில் இந்த மரத்தைக் கண்டேன். இந்த மரம் ஏதோ ஓர் தெய்வத்தின் உறைவிடமாக முற்காலத்தில் இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
இந்த மரம் பற்றிய தகவல்கள் தெரிந்திருந்தால் பதிவிடுங்கள்.

திருகோணமலை மாவட்டத்தில், மூதூர் நகரின் தெற்கில் உள்ள கிளிவெட்டிக்கு மேற்குப் பகுதியில் திருமங்கலாய் காடும், பண்டைய சிவன் கோயிலின் இடிபாடுகளும் காணப்படுகின்றன.

திருமங்கலாய் பண்டைய காலத்தில் சிறப்புடன் விளங்கிய ஒரு மக்கள் குடியிருப்பாகும். இப்போது அடர்ந்த காடாகக் காணப்படும் இப்பகுதியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் குடியிருந்தமைக்கான சான்றுகள் பல காணப்படுகின்றன.

பொலநறுவை புராதன நகரில் உள்ள ஐநூற்றவர் ஈஸ்வரம் எனும் 5 ஆம் சிவாலயத்தை 1898 ஆம் ஆண்டு பெல் அவர்கள் ஆய்வு செய்தபோது அங்கு ஓ...
15/03/2025

பொலநறுவை புராதன நகரில் உள்ள ஐநூற்றவர் ஈஸ்வரம் எனும் 5 ஆம் சிவாலயத்தை 1898 ஆம் ஆண்டு பெல் அவர்கள் ஆய்வு செய்தபோது அங்கு ஓர் அழகிய, வனப்புமிக்க விநாயகர் புடைப்புச் சிற்பம் சிவாலயத்தின் அர்த்த மண்டபத் தூணில் காணப்பட்டது.

அதன் அருகில் தொழிலாளி ஒருவரை நிற்க வைத்து பெல் அவர்கள் எடுத்த புகைப்படமொன்றை சில மாதங்களுக்கு முன்பு காணக் கிடைத்தது.

பின்பு பொலனறுவைக்குச் சென்று, அந்த சிவாலயத்தை ஆய்வு செய்தபோது விநாயகரின் புடைப்புச் சிற்பத்தைத் தேடினேன். ஆனால் அது அங்கு காணப்படவில்லை.

பின்பு அந்த சிற்பத்தை பொலநறுவை தொல்லியல் நூதன சாலையில் தேடிப்பார்த்தேன். அங்கும் அது காணப்படவில்லை.

அதன்பின்பு கொழும்பு தேசிய நூதன சாலையில் அந்த அழகிய வினாயகரைத் தேடினேன்.

அங்கே ஒரு இடத்தில் மிக அழகாக, ஒய்யாரமாக, பார்ப்பவர் கண்களைக் கவரும் வகையில் அவரைக் கண்டதும் பெரு மகிழ்ச்சியடைந்தேன்.

இலங்கையில் கல்லில் செதுக்கப்பட்ட விநாயகர் சிற்பங்களில் அதி உயர்ந்த சிற்பக் கலையம்சம் கொண்ட அந்த விநாயகரை நீங்களும் பாருங்கள்.

கலாநிதி
என்.கே.எஸ்.திருச்செல்வம்

முற்றாக அழிக்கப்பட்ட தொண்டஸ்வரம் சிவன் கோயில். பாகம்- 4இக்கோயில் சிறப்புடன் வழிபடப்பட்டமைக்கான அதி முக்கிய ஆதாரங்களான சி...
14/03/2025

முற்றாக அழிக்கப்பட்ட தொண்டஸ்வரம் சிவன் கோயில்.
பாகம்- 4

இக்கோயில் சிறப்புடன் வழிபடப்பட்டமைக்கான
அதி முக்கிய ஆதாரங்களான சிவலிங்கங்களைத் தவிர இன்னும் சில முக்கிய ஆதாரங்கள் உள்ளன.

அவை பற்றிய விபரங்களை விரிவாக இந்தக் காணொளியில் விபரித்துள்ளேன்.

இக் காணொளியை இறுதிவரை பாருங்கள். உங்கள் நட்பு வட்டத்தில் பகிருங்கள.

Oodagan (ஊடகன்) – A channel made for the...

அழிந்து போன தொண்டேஸ்வரத்தின் இரண்டு சிவலிங்கங்கள்-பாகம்-3இவை தெய்வந்துறை கடற்கரைப் பகுதியில் உள்ள கோவிலவத்த என்னுமிடத்தி...
14/03/2025

அழிந்து போன தொண்டேஸ்வரத்தின் இரண்டு சிவலிங்கங்கள்-
பாகம்-3

இவை தெய்வந்துறை கடற்கரைப் பகுதியில் உள்ள கோவிலவத்த என்னுமிடத்தில் சுமார் 400 ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்து கிடந்து அண்மையில் வெளிப்பட்டுள்ளன.

இச் சிவலிங்கங்கள் மற்றும் இந்தக் கோயில் வரலாறு பற்றிய முழு விபரங்கள் இந்தக் காணொளியில் உள்ளன.
இதைப் பார்த்து விட்டு உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Oodagan (ஊடகன்) – A channel made for the people (Since 2022)We warmly welcome you to Oodagan (ஊடகன்) , your destination for the latest news happening all ove...

போர்த்துக்கேயர் அழித்த மாபெரும் சிவாலயம்-பாகம் 2இலங்கையின் அதி தென் முனையில் அமைந்திருந்த சந்திர சேகர ஈஸ்வரம் எனும் தொண்...
14/03/2025

போர்த்துக்கேயர் அழித்த மாபெரும் சிவாலயம்-பாகம் 2

இலங்கையின் அதி தென் முனையில் அமைந்திருந்த சந்திர சேகர ஈஸ்வரம் எனும் தொண்டேஸ்வரம்,
8 கோயில்களைக் கொண்டிருந்த கோயில் வளாகத்தில் அமைந்திருந்தது.

மத வெறியர்களால் இக்கோயில்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன.
இவ் வெறியர்கள் முதலில் இங்கிருந்த 1000 க் கணக்கான தெய்வச் சிலைகளை அழித்தார்கள்.

பின்பு பசு மாடுகளை கோயிலுக்கு முன்பாக அறுத்துக் கொன்று அட்டூழியம் செய்தார்கள்.

இவ்வாறு அழிக்கப்பட்ட சிவன் கோயில் 438 ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறது.

முழு விபரங்கள் இந்தக் காணொளியில்.

Oodagan (ஊடகன்) – A channel made for the people (Since 2022)We warmly welcome you to Oodagan (ஊடகன்) , your destination for the latest news happening all ove...

தென்னிலங்கையில்  #திட்டமிட்டு_அழிக்கப்பட்ட  #சிவாலயத்தின்  #உண்மை_வரலாறு. #பாகம்_1  Youtube சன்னலில்....இலங்கையின் அதி த...
14/03/2025

தென்னிலங்கையில்
#திட்டமிட்டு_அழிக்கப்பட்ட #சிவாலயத்தின்
#உண்மை_வரலாறு.
#பாகம்_1


Youtube சன்னலில்....

இலங்கையின் அதி தென் முனையில் இருந்த தேனு பர்வதம் எனும் நந்தி மலை.

அவசியம் பாருங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

இக்காணொளி பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

Oodagan (ஊடகன்) – A channel made for the people (Since 2022)We warmly welcome you to Oodagan (ஊடகன்) , your destination for the latest news happening all ove...

Address

Colombo, Sri Lanka
Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when சுவடுகளைத் தேடி-Nks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category