ஶ்ரீ சக்தி வடிவேல் முருகன் ஆலயம்

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • ஶ்ரீ சக்தி வடிவேல் முருகன் ஆலயம்

ஶ்ரீ சக்தி வடிவேல் முருகன் ஆலயம் யாமிருக்க பயமேன் 🦚🦚🦚

🦚✨ அருள்மிகு ஸ்ரீ முருகப் பெருமான் திருவள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கும் தெய்வீக திருக்காட்சி ✨🦚மயில் இறகுகளால் அலங்க...
17/07/2026

🦚✨ அருள்மிகு ஸ்ரீ முருகப் பெருமான் திருவள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கும் தெய்வீக திருக்காட்சி ✨🦚

மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட அற்புத திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் கந்தன், வள்ளி, தெய்வானை திருவருளால் அனைவரின் வாழ்விலும் அமைதி, ஆரோக்கியம், செழிப்பு மற்றும் வெற்றி நிலைக்க இறைவனை வேண்டுகிறோம். 🙏

"வேல் உண்டு வினை இல்லை,
மயில் உண்டு பயம் இல்லை,
முருகன் அருள் உண்டு குறை இல்லை."

ஓம் சரவணபவா! 🔱

அலைகடலோரம் அமர்ந்திருக்கும் அலைவாயுகந்த பெருமாளே..மகிழ்வாக எழில் மயில் மீது மறை பொருள் உரைக்க வந்தாயே!சூர்யனைப் போல் ஒளி...
14/07/2026

அலைகடலோரம் அமர்ந்திருக்கும் அலைவாயுகந்த பெருமாளே..மகிழ்வாக எழில் மயில் மீது மறை பொருள் உரைக்க வந்தாயே!

சூர்யனைப் போல் ஒளி வீசும் சுடரொளி வேலும் கரத்திலுளாய்..காரிருள் அகற்றும் ஞானத்தை கருணையோடு அருளும் வேலவனே!

அலைகளின் ஓயாத சத்தத்தோடு அடியார்களின் துயர் துடைப்பவனே!
திருவடி சரணம் என்றேன்!

ஶ்ரீ சக்தி வடிவேல் முருகா சரணம்🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚

12/07/2026

ஶ்ரீ சக்தி வடிவேலன் 🦚🦚🦚

முருகா 🙏🏻🦚❤️
12/07/2026

முருகா 🙏🏻🦚❤️

திருப்பரங்குன்றத்தில் நக்கீரர் முருகப்பெருமான் காட்சி.! சிறை மீண்ட நக்கீரன் நெஞ்சம் குளிர,மறை சொன்ன குன்றினில் முருகன் எ...
09/07/2026

திருப்பரங்குன்றத்தில் நக்கீரர் முருகப்பெருமான் காட்சி.!

சிறை மீண்ட நக்கீரன் நெஞ்சம் குளிர,மறை சொன்ன குன்றினில் முருகன் எழுந்தான்!பன்னிரு கரங்கள் ஒளி வீச நின்ற,
பொன்னான கோலம் கண் முன்னே நின்றதே!

செந்தாமரை முகம் ஒன்று சிரித்திட,ஐந்து முகங்கள் அருள் மழை பொழிய,அறுமுகப் பெருமான் அழகினில் மயங்கி,நக்கீரன் நின்றார் கைகூப்பித் தொழுது!

வேலும் மயிலும் துணை நின்று காக்க,கோலக் குன்றில் குமரனும் வந்தான்!பக்தனின் துயர் தீர்க்கும் பரமன் அவன்,முத்தமிழ் பாடும் நக்கீரர்க்கு அருளினன்!

ஓம் சரவண பவ.!

லயன்ஸ் கழகத்தினரிடம் ஆலய நிர்வாகத்தினர் விடுத்த கோரிக்கையின் படி அதற்கு மதிப்பளித்து இன்றைய தினம் வந்து எமது முருகன் ஆலய...
01/07/2026

லயன்ஸ் கழகத்தினரிடம் ஆலய நிர்வாகத்தினர் விடுத்த கோரிக்கையின் படி அதற்கு மதிப்பளித்து இன்றைய தினம் வந்து எமது முருகன் ஆலயத்தில் பல தென்னங்கன்றுகளை நட்டு தந்துள்ளதுடன் இனி வரும் காலங்களிலும் அவர்களது பணி தொடர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு அத்துடன் லயன்ஸ் கழகத்தினருக்கு ஆலய நிர்வாக சபை சார்பாகவும் கிராம பொதுமக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்வதுடன் அதே சமயம் அழைப்பு விடுத்து மறுக்காமல் வருகை தந்து ஆலய நிர்வாக சபையினருக்கும் லயன்ஸ் கழகத்தினருக்கும் ஒத்துளைப்பை வழங்கிய எமது முருக பக்த அடியார்களுக்கு ஆலய நிர்வாக சபை சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

நன்றி..!

ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

கம்பீர தோற்றத்துடன் அருள் பாலிக்கும் கார்த்திகேயன்:கந்தர் அலங்காரம் :10.சொல்லுகைக் கில்லையென் றெல்லாமிழந்து சும்மா விருக...
27/06/2026

கம்பீர தோற்றத்துடன் அருள் பாலிக்கும் கார்த்திகேயன்:
கந்தர் அலங்காரம் :
10.சொல்லுகைக் கில்லையென் றெல்லாமிழந்து சும்மா விருக்கும்
எல்லையுட் செல்ல எனைவிட்ட வாஇகல் வேலனல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே. .
#முருகா #சரவணபவ

******************கழுகுமலைப் பத்து******************01)கழுகுமலை தனிலுறையும் முருகவேலேகருத்துடனே வுன்பாதமலர் தானே யோதபழுத...
26/06/2026

******************
கழுகுமலைப் பத்து
******************

01)
கழுகுமலை தனிலுறையும் முருகவேலே
கருத்துடனே வுன்பாதமலர் தானே யோத
பழுதொன்ரும் வாராமல் காக்க வேணும்
பச்சைமால் தன் மருகா பார்வதியின் மைந்தா
வழுவாமல் அடியே முன் நிற்க வேண்டும்
வரும்பிழைகள் தனையகற்றி வளியச்செய்வாய்
தெளிவாக உன்பாதம் துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!

02)
காடுதனில் வேங்கை மரமாகி நின்றாய்
கானவர்கள் கண்டுன்னை கடுவே கத்தால்
சாடிடவே மனதிலெண்ணிப் பரிசைகத்தி
தானெடுத்தார் தவிடுபொடி யாக்க வென்று
கூடியே குறவரெல்லாம் நிமித்தங்கண்டு
குமாரவேல் என்றெண்ணி குலைந்திட்டார்கள்
தேடியே உன்பாதம் துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!

03)
கிட்டாத பொருள்தனைப் போலென்னாளும்
கீர்த்தியுடனே இந்தப்புவியில் யானும்
எட்டிஎட்டியே உன்னைப்பார்க்கும் போது
ஏமாற்றி என்னை விட்டு ஏகலாமோ
சட்டமுடன் தோகை மயில் மீதில் ஏறி
சடாட்சரமாய் என்முன்னே தோன்ற வேணும்
திட்டமுட னுன்பாதம் துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!

04)
கீர்த்தியுடனே இந்தப்புவியில் யானும்
கிருபையுடன் உன்பதியை தேடி வாரேன்
பூத்தமலர் போல உன்னை காண்பதெப்போ
புண்ணியனே எனக்கு வரம் தருவதெப்போ
வார்த்தையொன்று முறையாயோ வள்ளி வாழ்வே
வந்துனது சந்நிதியில் மனதன்பாகத்
தீர்த்தங்கள் ஆடியுனை துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!

05)
குவலயத்தில் அடியேன் யான் செய்த பாவம்
குற்றமெல்லாம் பொறுத்துனது குழந்தை போலக்
கவலையற்று வாழ்ந்திருக்க கருணை தந்து
காப்பதுவுன் செயலல்லோ கார்த்திகேயா
கவலையிளங் கன்றதுதன் தாயைத் தேடி
தயங்குகிறது போலயான் தயங்கலானேன்
சிவலை நிறமார்பழகா செந்தூர்கந்தா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!

06)
கூடியே மறலிஎன்னைப் பிடியாவண்ணம்
கொடு நரகிலே நானும் விழுந்திடாமல்
வாடியே மனம் மெலிந்து போகா வண்ண
மாகவே உன்னுடைய கீர்த்தி தந்து
பாடியே பவனொளி வபாய மென்றால்
பறக்குமே பிசாசு முதல் ஏவல் தானும்
தேடியே உன்பாதம் துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!

07)
கெடுதியுள்ள சூரனை வதையே செய்தாய்
கிளி மொழியாள் வள்ளி தினப் புனத்திலேதான்
படிமீதில் தான் பெரிய பண்டாரம் போல்
பாசி பற்றிய பழுத்த கிழவனாகித்
தடியூன்றி தண்டுக மண்டலமும் கொண்டு
சாட்டங்கமாய் குறவர்க்கெதிரே சென்றாய்
தேடியே உன்பாதம் துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!

08)
கேசவனார் முருகோனே நீ செய் கோலம்
கொடிதான குமரகுரு வேடனாகி
நேசமுடன் கையிலம்புங் கொண்டு
நிமிசமுடன் வள்ளிதினப் புனத்திலேதான்
பாசமுடன் பெண்ணே கண்ணே என்று
பண்புடைய வள்ளியை நீ பாகம் செய்தாய்
தேசமெல்லாந் திரிந்தலைந்தேன் உன்பாதங்காண சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!

09)
கையிலே சேவற்க் கொடியும் வேலும்
வள்ளி தெய்வானையுடன் மயில் மீதேறி
தைய நல்லாள் தீபதூபம் பிடிக்கத்
தாதியர்கள் இருபுறமுங் கவரி வீச
மெய்யுடனே ஆறுமுக ரூபமாகி
வேலவனே வந்தெனக்கு விடைகள் தாரும்
தெய் தெய் என்றுன் பாதந்துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!

10)
கொன்றைமலர் வேணியனே உனக்குந்தானே
குழந்தையாய் வந்துதித்த குமர வேலே
அண்டரெல்லாம் உனைக்காண வேண்டியிங்கே
அபயமென்று கையேந்தி அணுகி நிற்பார்
தண்டை கிங்கிணிகாலில் சதங்கை கொஞ்சத்
தானோடி வந்துன் ஒளியைக் காட்டுந்
தெண்டனிட்டே உன்பாதந் துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!

11)
கோதையர்க ளிருபுறமும் கவரி வீசக்
குளிரான மதிமுகங்க ளாறுந் துண்ணக்
காதலுடன் பன்னிருகை வேலுந் துண்ணக்
கானமயில் மீதேறும் கார்த்திகேயா
வாதுடனே சோதையன் செய் சிகரந் தன்னை
வடிவேலால் நீறு செய்த வானோர் கோவே
சீதமரு கோனே உன் புகழைச்சொன்னேன் சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!

12)
கவ்விய பூதமெனை பிடியா வண்ணம்
காத்துனது கிருபை தந்து ரட்சியுமையா
வவ்விய மெய்மறந்து மொரு பசாசு தானும்
பவனொளி பவயமென்றால் பறக்குமேதான்
ஒவ்விய எனைச்சூழும் லாடன் மாடன்
ஒம் நம சிவாய மென்றால் ஓடிடாதோ
செவ்வையா உன்பாதந் துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!


13)
இக்கணமே இது நல்ல வேளையையா
இதோ பாரும் சந்நிதியில் திருவிழாவை
வணக்கமாய் கற்பூர மடவிளக்கு
வகை வகையாய் கன்னியர்க ளேந்துறார்கள்
எக்காளம் பேரிகை தம்பூர் மேளம்
இடியெனவே எத்திசையும் முழங்கி நிற்க
இக்கணமே உன்பாதந் துதிப்பேனையா சுவாமி
தென்கதிரை முருகோனே தெரிசிப்பாயே!

*ஓம்நமசிவாய *

🙏🏻🙏🏻🙏🏻
06/06/2026

🙏🏻🙏🏻🙏🏻

வேலுண்டு வினையில்லை 🙏🕉️🦚✨
03/06/2026

வேலுண்டு வினையில்லை 🙏🕉️🦚✨

Address

புதுமுகத்துவாரம்
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஶ்ரீ சக்தி வடிவேல் முருகன் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category