ஶ்ரீ வாழைச்சேனை கைலாய பிள்ளையார் ஆலய தொண்டர் படை

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • ஶ்ரீ வாழைச்சேனை கைலாய பிள்ளையார் ஆலய தொண்டர் படை

ஶ்ரீ வாழைச்சேனை கைலாய பிள்ளையார் ஆலய தொண்டர் படை தொண்டர் படையணி

🌺🙏 கபிலித்தை குடும்பத்தின் அன்பான பக்தர்களுக்கு ஒரு சிறப்பு அறிமுகம் 🙏🌺🏅 கலாநிதி, கலாபூஷணம் என். கே. எஸ். திருச்செல்வம் ...
02/09/2026

🌺🙏 கபிலித்தை குடும்பத்தின் அன்பான பக்தர்களுக்கு ஒரு சிறப்பு அறிமுகம் 🙏🌺

🏅 கலாநிதி, கலாபூஷணம் என். கே. எஸ். திருச்செல்வம் ஐயா அவர்களின் பிறந்தநாள் – செப்டம்பர் 03 🎂🌺

கபிலித்தை கந்தசுவாமி பெருமானின் திருத்தல வரலாறு, மரபுகள் மற்றும் எமது ஆன்மிகப் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தி, அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் அயராது உழைத்து வரும் சிறப்புமிக்க வரலாற்று ஆய்வாளர் ஐயா அவர்கள்.

📜 27+ ஆண்டுகள் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப் பணி
🏛️ 1500+ புராதன இந்துக் கோவில்கள் ஆய்வு
📜 2000+ பிராமிக் கல்வெட்டுகள் ஆய்வு
📚 19 நூல்கள் வெளியீடு
✍️ 1500+ ஆய்வுக் கட்டுரைகள்
🏆 2026 – வட இந்தியாவில் “சர்வதேச வரலாற்று ஆய்வு விருது” உள்ளிட்ட பல்வேறு விருதுகள் மற்றும் கௌரவங்கள்.

🌺 கபிலித்தை குடும்பத்தில் புதிதாக இணைந்துள்ள பக்தர்கள் அனைவரும், ஐயாவின் வரலாற்று ஆய்வுப் பணிகளையும், கபிலித்தை யாத்திரை மற்றும் சேவைக்கான அவரது பங்களிப்பையும் அறிந்து கொள்வது மிகவும் சிறப்பானதாகும்.

🎂🌺 செப்டம்பர் 03 – பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🌺🎂

🙏 கலாநிதி என். கே. எஸ். திருச்செல்வம் ஐயா அவர்கள்
நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும், இறையருளும் பெற்று, இன்னும் பல ஆண்டுகள் எமது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் பணியைத் தொடர கபிலித்தை கந்தசுவாமி பெருமான் அருள்புரிய வேண்டுகிறோம்.

🌺🙏 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா! 🙏🌺

வேல் வேல் முருகா! 🔱🙏

ஏறுமயில் ஏறி'      ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே          ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே     கூறுமடி யார்கள்வினை தீர்க்...
01/09/2026

ஏறுமயில் ஏறி'

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே

கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.
........ இப்பாடலின் மேலார்ந்த பொருள் .........

ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு
முகம்தான். சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு
முகம்தான்.

உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும்
தீர்த்துவைப்பது உன் ஒரு முகம்தான். கிரெளஞ்ச மலையை
உருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதிகாத்ததும் உன் ஒரு
முகம்தான்.

உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன்
ஒரு முகம்தான். வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து
ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம்தான்.
.. அவ்வாறெனில், நீ ஆறுமுகனாகக் காட்சி அளிப்பதன் பொருளை
நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மைவாய்ந்த
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

ஒரு பெண்🕴️ தன்னந்தனி ஆளாக நின்று, 171 அடி உயரத்துக்கு பிரமாண்டமான ஒரு ஆலய கோபுரத்தைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல.அத...
31/08/2026

ஒரு பெண்🕴️ தன்னந்தனி ஆளாக நின்று, 171 அடி உயரத்துக்கு பிரமாண்டமான ஒரு ஆலய கோபுரத்தைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல.
அதுவும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்த போது இந்த சாதனையை அந்த பெண் நிகழ்த்தியது பிரம்மிக்கத்தக்கது.

அந்தப் பெண் சாதாரணப் பெண் அல்ல. அவர் ஒரு சித்தப் புருஷர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு உயர் சித்த நிலைப் பெற்றவர். பொதுவாக ஒவ்வொரு சித்தருக்கும் குரு என்று யாராவது இருப்பார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கு சிவபெருமானே குருவாக இருந்தார். குரு என்று வேறு யாரையும் தேடாமல் பிறவியிலேயே சிவன் மீது சித்தம் வைத்த அந்தப் பெண் நடத்திய அற்புதங்கள் ஏராளம்.

அந்தப் பெண்ணின் பெயர் அம்மணி அம்மாள். பஞ்சப் பூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் அவர் வாழ்ந்தார் என்று சொல்வதை விட அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராகத் திகழ்ந்தார் என்றே சொல்லலாம். அந்த ஆலயத்தில் வடக்குப் பகுதி கோபுரம் மட்டும் கட்டப்படாமல் இருந்தது.
அதாவது கோபுரம் கட்ட அடித்தளம் போடப்பட்டு, பிறகு ஏனோ கட்டப்பட முடியாமல் அப்படியே மொட்டையாக நின்று போனது. எத்தனையோ பேர் முயன்றும் அந்த கோபுரத்தைக் கட்ட இயலவில்லை.

ஈசனுக்குத் தெரியும், எந்த வேலையை, யாரிடம் கொடுத்து, எப்படி முடிக்க வேண்டும் என்று. அதன்படி திருவண்ணாமலை ஆலய வடக்குக் கோபுரத்தைக் கட்ட அம்மணி அம்மாளை ஈசன் தேர்வு செய்து அருள் புரிந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள சென்னசமுத்திரத்தில் கோபால் பிள்ளை- ஆயி தம்பதிக்கு 1785-ம் ஆண்டு மார்கழி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் அம்மணி அம்மாள் பிறந்தார். அவரது உண்மையான பெயர் அருள்மொழி.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு சிறு வயதிலேயே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது அளவு கடந்த பக்தி ஏற்பட்டது.
தங்கள் மகள் எப்போதும் அருணாசலேஸ்வரர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்து பயந்து போன அவர் பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். சொந்த மாமன் மகனை மணமகனாகப் பேசி முடித்தனர்.

இதை அறிந்த அம்மணி அம்மாள், “நான் இதற்காக பிறவி எடுக்கவில்லை” என்று கூறி, வேதனைத் தாங்காமல் சுமார் 1 மைல் தொலைவில் உள்ள கோமுட்டி குளத்துக்குள் குதித்து விட்டார். ஊரே திரண்டு வந்து குளத்துக்குள் இறங்கித் தேடினார்கள். அம்மணி அம்மாளை காண முடியவில்லை. மூன்றாவது நாள் குளத்தில் இருந்து அம்மணி அம்மாள் வெளியில் வந்தார். ஊரே திரண்டு ஆச்சரியப்பட்டது.

குளக்கரை மண்ணை எடுத்து அவர் கொடுக்க, அது அவல் பொரியாக மாறியது. அம்மணி அம்மாள் சித்தப்புருஷராக மாறி இருப்பது அப்போதுதான் அவர் பெற்றோருக்கும், ஊருக்கும் தெரிய

சிவ பார்வதி குடும்பம் 🙏🙏
31/08/2026

சிவ பார்வதி குடும்பம் 🙏🙏

ஓம் முருகா 🙏
31/08/2026

ஓம் முருகா 🙏

முருகனே முத்துக்குமரனே கந்தனே சரணம் சரணம் ஐயா
31/08/2026

முருகனே முத்துக்குமரனே கந்தனே சரணம் சரணம் ஐயா

ஓம் விநாயக போற்றி 🙏🙏🙏
31/08/2026

ஓம் விநாயக போற்றி 🙏🙏🙏

லக்ஷ்மி அம்மன் (மகாலட்சுமி) செல்வம், வளம், அதிர்ஷ்டம் மற்றும் ஆன்மீகப் பேறு ஆகியவற்றை வழங்கும் இந்து மதப் பெருந்தெய்வம் ...
30/08/2026

லக்ஷ்மி அம்மன் (மகாலட்சுமி) செல்வம், வளம், அதிர்ஷ்டம் மற்றும் ஆன்மீகப் பேறு ஆகியவற்றை வழங்கும் இந்து மதப் பெருந்தெய்வம் ஆவார். இவர் விஷ்ணு பகவானின் மனைவியும் ஆவாள்

ஓம் கணபதியே 🙏🙏🙏
28/08/2026

ஓம் கணபதியே 🙏🙏🙏

🦚🙏அழகன்
27/08/2026

🦚🙏அழகன்

Address

Valaichenai
Batticaloa

Alerts

Be the first to know and let us send you an email when ஶ்ரீ வாழைச்சேனை கைலாய பிள்ளையார் ஆலய தொண்டர் படை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category