07/12/2024
ஓம் நமசிவாய
திருமூலர் அருளிய சிவாகமம்
பாடல்-1
ஒன்று அவன்தானே இரண்டு அவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழு உம்பர்ச்
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே
பொருள்-
இறைமை ஒன்றுதான் ,இரண்டு அவனது அருள் (ஆண்,பெண்) (பகல்,இரவு),ஆக்கல்,காத்தல்,அழித்தல் என்ற
என்ற மூன்றும் செய்யவே நின்றவன் .ஆகாயம் தவிர்த்த நான்கை (நீர் ,நிலம்,நெருப்பு,காற்று) உணர்துபவன் . ஆகாயத்துயும் அறியச்செய்தவன் இந்த ஐந்து பூதத்தையும் கடந்து அயன் என்று ஆறாக விரிந்தவன் ,வாழ்தலில் ஏழாம் நிலையாக (நிற்பன,ஊர்வன,நீர்வா்ழ்வன,பறப்பன,நடப்பன,மனிதன்,தெய்வம்)வளர்ந்து செல்பவன்.எட்டாவதாக உணர்ந்து இருந்தான் .