Arulmigu Arunachaleswarar-Tiruvannamalai

Arulmigu Arunachaleswarar-Tiruvannamalai "திருஅண்ணாமலையை நினைக்க முக்தி" சிறப?

திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவர் என்றும், அம்பிகை உண்ணாமுலையால் என்றும் அழைக்கப்படுகிறார்.

பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் மூண்ட பொழுது, சிவன் நெருப்பு பிளம்பாக தோன்றி தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ காணுபவரே பெரிய

வர் என்று வினவ, உருவான வடிவமேலிங்கோத்பவர் ( பல சிவாலயங்களில் சிவனின் கருவறையின் பின் உள்ள சிற்பம்) என்று அழைக்கப்படுகிறது. சிவ பெருமானின் திருவடியை அடியைக் காண திருமால் வரகா (பன்றி) வடிவெடுத்து நிலத்தினை குடைந்து சென்றார். பிரம்மா அன்ன வடிவெடுத்து பறந்து சென்று கங்கை குடி கொண்ட முடியைக் காண சென்றார். கோடானகோடி ஆண்டு பயணம் செய்தும் இலிங்கோத்பவரின் அடியை காண இயலாமல் திருமால் திரும்பினார், பிரம்மா, தாழம்பூவை பொய் சாட்சியாக வைத்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவிற்கு தனித்த ஆலயங்கள் இல்லாமல் போனது என்ற தொன்மமும், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவபெருமான் தன்னுடைய இடப்பாகத்தினை அளித்து அர்த்தநாரீஸ்வரராய் (கருவறையின் பின் புறம் ஐம்பொன் சிலை உள்ளது) நின்ற பெருமைக்கு உரிய தலம் இத்தலம். "திருஅண்ணாமலையை நினைக்க முக்தி" அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம்.

இத்தலத்தினை நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களை பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார். இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலை கடைபிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது.

பல்வேறு நகரங்களிலிருந்தும், ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன.

முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.

20/05/2025

🚩ஓம்நமசிவாய🔥

சிற்றகல் போதும்சிறு சுடர் போதும்முற்றிய  சூழ் இருள்முழுவதும் அகலும்..🪔கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்..🪔🪔🪔
13/12/2024

சிற்றகல் போதும்
சிறு சுடர் போதும்
முற்றிய சூழ் இருள்
முழுவதும் அகலும்..🪔

கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்..🪔🪔🪔

துதித்தழும் தொண்டனை நீ சோதித்து மேலும் மிதித்தலும்ஏன் என்றறிந்தேன் மென்தாள் பதித்தனை நீ வல்லரக்கன்மாமுடிமேல் வாய்த்தது க...
22/11/2024

துதித்தழும் தொண்டனை நீ சோதித்து மேலும் மிதித்தலும்
ஏன் என்றறிந்தேன் மென்தாள் பதித்தனை நீ வல்லரக்கன்
மாமுடிமேல் வாய்த்தது காண் ஆங்கவற்கு எல்லையிலா இன்பம் நிறை வாழ்வு.

#ஓம்நமசிவாய🔥

மனமாம் மாயச் சுழலிடையேமாயா வகையில் நானுன்றன்நினைவாம் படகைச் செலுத்துதற்குநேரும் துயரம் தாளாமல் தினமும் வருந்தும் அவலத்தை...
22/11/2024

மனமாம் மாயச் சுழலிடையே
மாயா வகையில் நானுன்றன்
நினைவாம் படகைச் செலுத்துதற்கு
நேரும் துயரம் தாளாமல் தினமும் வருந்தும் அவலத்தைத் தீர்க்க வழியை மொழியாயோ முனைநாள் முதலாய்த் தருநிழலில் மௌனம் பயிலும் என் இறையே!

#ஓம்நமசிவாய🔥

இனி நமைப்பிரியானென எண்ணிஇறுமாப்பில் நான் திளைக்குங்கால்தனிமையில் என்னைத் தவிக்க விட்டுச் சாலத்தொலைவில்மறைந்திடுவாய் எனை ...
22/11/2024

இனி நமைப்பிரியானென எண்ணி
இறுமாப்பில் நான் திளைக்குங்கால்
தனிமையில் என்னைத் தவிக்க விட்டுச் சாலத்தொலைவில்
மறைந்திடுவாய் எனை நீ இது
போல் அலைக்கழித்தல் ஏனோ
என நான் அழுகையிலே பனி
மலை உறைவோய் மனமிளகிப்
பரிந்தென்னுள்ளே புகுவாயே.

#ஓம்நமசிவாய🔥

விண்ணிலுள் நீயுளாய் வேண்டுவோர்தம் அகக்கண்ணிலும் நீயுளாய் காண்பவை யாவிலும் நுண்ணியே நீயுளாய் நோக்கிடில் ஐயவோ என்னிலும் நீ...
22/11/2024

விண்ணிலுள் நீயுளாய் வேண்டுவோர்தம் அகக்
கண்ணிலும் நீயுளாய் காண்பவை யாவிலும் நுண்ணியே நீயுளாய் நோக்கிடில் ஐயவோ என்னிலும் நீயுளாய் என்னவோர் மாயமே!

#ஓம்நமசிவாய🔥

என்னுள் நீ நின்றாயேல் நான்உன்னுள் உளனாய் ஆவேனென்றுஉன்னும் போதில் உவகையெனும்ஓதத்தில் நான் மிதந்திடுவேன்என் கண்மணியே என்னு...
22/11/2024

என்னுள் நீ நின்றாயேல் நான்
உன்னுள் உளனாய் ஆவேனென்று
உன்னும் போதில் உவகையெனும்
ஓதத்தில் நான் மிதந்திடுவேன்
என் கண்மணியே என்னுயிரே
எல்லையில்லா பெருவெளியாம்
பொன்னம்பலத்துப் பொன்னே
என் பொல்லா இறையே பூரணமே!

#ஓம்நமசிவாய🔥

05/11/2024

𝟙𝟛.𝟙𝟚.𝟚𝟘𝟚𝟜

🙏🙏🙏

18/08/2024

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் நாட்களின் பலன்கள்...

ஓம் நமசிவாய சிவாய நமக..
🙏🙏🙏

உடலைப் பெருக்கியென் உளத்தினை சுருக்கினேன் உன் நினைவின்றியே வளர்ந்தேன்குடலை மலர்களில் குறையுள மலரெனக் கொண்டு நீ தள்ளிடாது...
06/08/2024

உடலைப் பெருக்கியென் உளத்தினை சுருக்கினேன் உன் நினைவின்றியே வளர்ந்தேன்
குடலை மலர்களில் குறையுள மலரெனக் கொண்டு நீ தள்ளிடாது என்றன் நடலை தீர்த்தருள் செய்வையேல் மறுகணம்
நானுமுன் அடியிணை நாடிச்
சுடலைப் பொடியணி தேவ!
நின் புகழ் சொலும் நல்லனாய் மாறுவேன் காணே.

#ஓம்நமசிவாய🔥

வாதவூர் அண்ணல் வாசகத்துள்ளேமறை சொல முயன்றுமே தோற்றபோதகப்பொருளாய் துலங்கிடும் சிவமே! போற்றவோர் முறையெதும் அறியாப் பேதையேன...
30/07/2024

வாதவூர் அண்ணல் வாசகத்துள்ளே
மறை சொல முயன்றுமே தோற்ற
போதகப்பொருளாய் துலங்கிடும் சிவமே! போற்றவோர் முறையெதும் அறியாப் பேதையேன் இங்குப் பிழைகளே மலிந்த பிதற்றலாய் மொழிந்ததை ஏற்று உன் மாதயை உலகோர் அறிந்திடச் செய்வாய்
வளர் திருச்சிதம்பரத்தரசே!

#ஓம்நமசிவாய🔥

28/07/2024

ஓம் நமச்சிவாய சிவாய நமக🙏
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர்...
🙏🙏🙏

Address

Tiruvannamalai

Alerts

Be the first to know and let us send you an email when Arulmigu Arunachaleswarar-Tiruvannamalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Arulmigu Arunachaleswarar-Tiruvannamalai:

Share