குலசை முத்தாரம்மன் பக்தர்பேரவை

  • Home
  • India
  • Tiruchendur
  • குலசை முத்தாரம்மன் பக்தர்பேரவை

குலசை முத்தாரம்மன் பக்தர்பேரவை குலசேகரன்பட்டினம் அருள்தரும் ஸ்ரீ முத்தாரம்மன் பக்தர்பேரவை!
(1)

தசராநாயகி  #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில்  #மார்கழி மாத திருவிழா..✨ஸ்ரீ காமதேனு குரூப்ஸ் அபிஷேக வழிபாட்டு மன்றத...
14/12/2025

தசராநாயகி #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் #மார்கழி மாத திருவிழா..✨

ஸ்ரீ காமதேனு குரூப்ஸ் அபிஷேக வழிபாட்டு மன்றத்தினர் நடத்தும்✨

1008 பால்குட அபிஷேக விழா!
1008 திருவிளக்கு பூஜை விழா!

நடைபெறும் நாள்👇🏻

மார்கழி -16, 31-12-2025 புதன்கிழமை மாலை முதல் மார்கழி -17, 01-01-2026 வியாழக்கிழமை இரவு திருத்தேர் வலம் வரும் வரை வருடந்தோறும் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும்...

அனைவரும் வருக...! அம்மையப்பன் அருள் பெறுக...!

நினைத்தாலே முக்தி தரும்  #திருவண்ணாமலை...!!!அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது...
02/12/2025

நினைத்தாலே முக்தி தரும் #திருவண்ணாமலை...!!!

அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் திருவண்ணாமலையின் சிறப்புகளைப் பற்றி சிவன் அடியார்கள் பலரும் சிறப்பாக எழுதியுள்ளனர். அதில் சிலவற்றை உங்களுக்கு தொகுத்து அளித்துள்ளோம்.

கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானிகளெல்லாம் வழிபட்டுள்ளனர்.

சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை :

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம்.

இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம். ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் நிறைந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் பால ரமணர் தவம் செய்த இடம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.

இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

என்றும் அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

தங்கமலை :

மிகப்பழமையான திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள்.அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.

முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி. உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில்மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.

திருவண்ணாமலை கிரிவலம் :

திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும்.

வாகனங்களில் செல்லக் கூடாது. கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது.
இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும்.

14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதை :

மலையின் உயரம் 2,688 அடி. கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

பவுர்ணமி கிரிவலம் :

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.

ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும். மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.

இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

என்றும் அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

செந்தூர விநாயகர் :

கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம். ஆனால், திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்.

நந்திக்கு பெருமை :

மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும்.

அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார்.
தனது வாகனமான நந்தியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்.

தீபதரிசன மண்டபம் :

அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.

திருப்புகழ் அருணகிரியார் :

திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.

இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார். அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார். அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.

மீனின் பெயர் செல்லாக்காசு :

ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.

திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.

கரும்புத்தொட்டில் :

அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம். தேரோட்டம் நாளில் ஏராளமான பக்தர்கள் கரும்புத்தொட்டில் கட்டி வந்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இத்தனை சிறப்புகளை கொண்ட திருவண்ணாமலையை வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசனம் செய்ய மறக்காதீர்கள்.

இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

என்றும் அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

ஆலயத்தின் உள்ளே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். விநாயகரின் ஆறு படை வீடுகளில் இதுவும் ஒன்று. பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.

கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்) இருக்கிறது. தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்)உள்ளது. மேற்கில் பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்) என்று 9 கோபுரங்கள் உள்ளன.

திருவண்ணாமலையில் உள்ள மலையின் உயரம் 2,688 அடி (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன.

திருவண்ணாமலையில் உள்ள மலையின் உயரம் 2,688 அடி (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன.
மலையின் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

மலையின் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.(Freepik)
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்..

சிவமும் சக்தியும் : சிவமும், சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்ததநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை. கார்த்திகை மாத சிறப்பு சிவன், கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், 'அண்ணாமலையானுக்கு அரோகரா' என விண்ணதிர முழக்கமிடுவார்கள். 'இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்வைத ஆன்ம ஜோதியைக் காண்பதுதான் இந்த தீப தரிசனம் ஆகும்' என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.

தீப தரிசனம் சிறப்பு : தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. 'ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்' --- பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதாகும். வைகுண்ட வாசல் சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் தீபத்தை ‘வைகுண்ட வாசல்' வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.

இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

என்றும் அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

விநாயகருக்கு செந்தூரம் :

ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது பொதுவாக நாம் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், இந்த தலத்திலுள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். இது தனி சிறப்பாக இருந்து வருகிறது. மாட்டு பொங்கல் சிறப்பு மாட்டுப் பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர்.

முருகன் காட்சியளித்தார் : அருணகிரியார் முருகனை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால், இவர் ‘கம்பத்திளையனார்' (கம்பம் - தூண், இளையனார்-முருகன்) என்று பெயர் பெற்றார். இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார் என்று பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாகர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்றபோது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளினார் இந்த இரண்டு முருகனின் தரிசனமும் மிகவும் விசேஷம்.

முக்கியமாக தரிசிக்க வேண்டியவை பிரம்ம லிங்கம், யோக நந்தி, பாதாள லிங்கம், கிளி கோபுரம், அருணகிரி யோகேசர் ஆகியவை முக்கியமாக பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டியவையாகும். பெளர்ணமி கிரிவலம் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது.

சித்தர்கள் வாழும் மலை :

திருவண்ணாமலையில் பல சித்தர்கள் வாழ்ந்ததாகவும், இன்றளவும் கூட அவர்கள் வாழ்ந்து வருவதாகவும், சிலர் சித்தர்களை நேரில் கண்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆட்டோ கிரிவலம் ஏறத்தாழ 14 கிலோமீட்டர் தூரம் இந்த மலையை சுற்றி வர முடியாதவர்கள். பகல் நேரத்தில் ஆட்டோ பிடித்து மலையை சுற்றியுள்ள சிறு சிறு கோயில்களை தரிசனம் செய்து வருவதை இங்கு ஆட்டோ கிரிவலம் என்கின்றனர்.

திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.

இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

என்றும் அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

1. திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

2. திருவண்ணாமலை ஈசனை மனதில் தினமும் நினைத்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும் என்று மார்க்கண்டேய முனிவரிடம் நந்தி பகவான் அருளியுள்ளார்.

3. வல்லாள மன்னன் நினைவு நாளில் அவனுக்கு இன்றும் திருவண்ணாமலை ஈசன் திதி கொடுக்கிறார்.

4. வினையை நீக்கும் மலை உருவில் திருவண்ணாமலை உள்ளது.

5. திருஞான சம்பந்தர் தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்தின் பதிகத்திலும் 9வது பாடலில் அண்ணாமலையாரை குறிப்பிட்டுள்ளார்.

6. திருவண்ணாமலை ஈசனை "தீப மங்கள ஜோதி நமோ நம" என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.

7. ஆடி மாதம் பூரம் தினத்தன்று உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீ மிதித்தல் நடைபெறும்.

இதை வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க முடியாது.

8. திருவண்ணாமலை தலத்தில் தான், முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது.

9. மகா சிவராத்திரி தொடங்கியதும் இந்த தலத்தில் தான்., என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

10. கோவில்களில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யும் போது அஷ்ட பந்தனம் செய்வது தான் வழக்கம்.

ஆனால் திருவண்ணாமலை தலத்தில் தங்கத்தைத் கொண்டு சொர்ண பந்தம் செய்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

11. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.

12. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், அண்ட சராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது.

13. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தரிசனத்தை ஒரு தடவை செய்தாலே, அது 21 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும் என்று தல புராணப் பாடலில் கூறப்பட்டுள்ளது.

14. திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஒரு வாரம் வரை எரியும்.

15. கார்த்திகை தீபம் தினத்தன்று அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்மனும் ஒன்று சேர கிரிவலம் வருவார்கள்.

அவர்களுடன் பக்தர்களும் சேர்ந்து வருவது புண்ணியமாகக் கருதப்படுகிறது.

16. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம், உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதையும், "இறைவன் ஒருவனே" என்ற தத்துவத்தையும் உணர்த்துகிறது.

17. கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள கால பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள்.

பிறகு மாலையில், அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபத்தை ஏற்றுவார்கள்.

18. திருவண்ணாமலை தீபத்தை காண ஆண்டு முழுவதும் சுமார் 20 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் திரள்கின்றனர்.

19. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால், பாவம் நீங்கி பிறவிப் பிணி அகழும் என்பது ஐதீகமாகும்.

20. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள்.

இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? "இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, உள்முகத்தால் அத்னவத ஆன்ம ஜோதியைக் காண்பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்" இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.

21. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம்.

22. இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.

23. வல்லாள மன்னனுக்கு மகனாக வந்து அவதரித்து இறைவன் அருள் செய்த பதி இதுவே.

24. அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த தலம் இது தான்.

25. இத்திருக்கோவிலின் கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் கொண்டு தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது.

தெற்கு கோபுரமானது, திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம், பேய்க்கோபுரம், வடக்குக் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம் என்றழைக்கப்படுகிறது.

26. கோவிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி மற்றும் ரமணர் தவம் செய்த இடம், தரிசிக்கத் தக்கது.

27. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப் பெருமானுக்குச் சார்த்திய வேல் இன்றுமுள்ளது.

28. விசுவாமித்திரர், பதஞ்சலி வியாக்ரபர்தர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

29. 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோவில் (திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.

30. வள்ளல் பச்சையப்பர் இக்கோவிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோவிலில் உள்ளது.


இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

என்றும் அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

ஆன்மிகத்திலும் வரலாற்றிலும் புகழ்பெற்ற இடமாக திகழ்கிறது திருவண்ணாமலை. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாகவும் சைவக்குரவர்களால் பாடல் பெற்றத்தலமாகவும் சிறப்புபெற்ற திருக்கோயில்.

இங்குள்ள அண்ணாமலையார் கோயில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு தொடர்ந்து சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், போசளர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள், நகரத்தார்கள், குறுநில மன்னர்கள், ஐமின்தார்கள் என பல்வேறு அரசர்களின் பங்களிப்பு இக்கோயில் கட்டடக்கலை வரலாற்றில் உள்ளன. இக்கோயிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும், 450 கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோயிலில் 100 க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன.

இறைஉருவங்கள், செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், அழகிய திருச்சுற்றுகள், தீர்த்தக்குளங்கள், ஆயிரக்கால் மண்டபம், வானுயர்ந்த கோபுரங்கள் இக்கோயிலின் சிறப்புகள் ஆகும். 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாய் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கிருஷ்ணதேவராயர் கட்டிய கிழக்கு ராஜகோபுரம் 217 அடி உயரம், தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம் ஆகும். இவை தவிர வல்லாள மகாராஜா கோபுரம், கிளிக்கோபுரம் ஆகியன சரித்திரம், அம்மனிஅம்மன் கோபுரம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த கோபுரங்களாகும். இக்கோயிலில் அருள்மிகு அண்ணாமலையார் உடனமர் உண்ணாமுலை மூலவராக அமைந்துள்ளனர்.

மலைவலப்பாதையில் அமைந்துள்ள எழுத்து மண்டபம் ஓவிய கூடமாக திகழ்கிறது. இவை தவிர கந்தாஸ்ரமம், பவழக்குன்று, ரமணாஸ்ரமம், கிரிவலப்பாதை, அஷ்டலிங்கங்கள் பார்க்கத்தகுந்த இடங்களாகும்.

திருண்ணாமலை மலையும் அதன் மலைவலமும் தமிழர்களால் மிகவும் வணங்கப்பட்டு வருகிறது. அங்கு சிவபெருமானே அண்ணாமலையாராகக் காட்சி தருகிறார்.

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை. இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும் என்கிறார்கள்.

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை. இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும் என்கிறார்கள்.

நகரின் மையப்பகுதியில் சிவன் நெருப்பாக நிற்கும் மலையின் அடிவாரத்தில் இருக்கிறது அண்ணாமலையார் ஆலயம். இது 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்களும் ஆலயத்தின் உள்ளே 6 பிராகாரங்களும் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என்று அமைந்திருக்கிறது.

நகரின் மையப்பகுதியில் சிவன் நெருப்பாக நிற்கும் மலையின் அடிவாரத்தில் இருக்கிறது அண்ணாமலையார் ஆலயம். இது 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்களும் ஆலயத்தின் உள்ளே 6 பிராகாரங்களும் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என்று அமைந்திருக்கிறது.
ஆலயத்தின் உள்ளே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். விநாயகரின் ஆறு படை வீடுகளில் இதுவும் ஒன்று. பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.

நிலம், ஆகாயம், காற்று மற்றும் நெருப்பை தான் நாம் பஞ்சபூதங்கள் என்று குறிப்பிடுகிறோம். சிவன் குடியிருக்கும் தலங்களில் நீர், நிலம், ஆகாயம், காற்று மற்றும் நெருப்பை அடிப்படையாய் கொண்டு இருக்கும் தலங்களை தான் நாம் சிவனின் பஞ்ச பூதத் தலங்கள் என்று கூறுகிறோம்.

இதில் தமிழகத்தில் இருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் திருவண்ணாமலை சிவனின் தலங்களில் நெருப்பை குறிக்கிறது. மாதாமாதம் இங்கு பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்வதை மக்கள் வழக்கமாக கடைப்பிடித்து வருகிறார்கள்.

சித்திரா பௌர்ணமி (சித்திரை மாதம்), கார்த்திகை தீபம் (கார்த்திகை மாதம்), மாட்டுப் பொங்கல் போன்றவை இங்கு திருவிழா போல கொண்டாப்படுகின்றன. இது மட்டுமின்றி சிவனின் உக்கிரமான தலம் என்று கூறப்படும் திருவண்ணாமலைக்கு பல சிறப்புகள் இருக்கின்றன.

சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிய சிறப்பு பெற்ற தலம் ஆகும். ரமணர் தவமிருந்த தலம் இதுவாகும் ரமண மகரிஷி திருவண்ணாமலை எனும் இந்த தலத்தில் தான் தவம் இருந்தார். இது இந்த தலத்தின் மற்றுமொரு தனி சிறப்பாக இருந்துவருகிறது.

சுபம்!

இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

என்றும் அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

நன்றி!

குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின்  #குலதெய்வம்..! #உவரி அருள்மிகு சுயம்புலிங்கசுவாமி திருக்கோவில் , திச...
25/10/2025

குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் #குலதெய்வம்..!

#உவரி அருள்மிகு சுயம்புலிங்கசுவாமி திருக்கோவில் , திசையன்விளை வட்டம்.!

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட பல தென் மாவட்டங்களில், லிங்கமூர்த்தி, லிங்கம், லிங்கப்பாண்டியன், சுயம்புலிங்கம், சுயம்புமூர்த்தி என்றெல்லாம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவார்கள். இவர்கள் எல்லோரும் உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமியைக் கண்கண்ட தெய்வமாக வழிபடுபவர்களாக இருப்பார்கள்; இவர்களின் குலதெய்வம் அல்லது முன்னோர் காலத்திலிருந்தே சுயம்புலிங்கசுவாமியை வழிபடுபவர்களாக இருப்பர். இவர்களின் இஷ்ட தெய்வம் உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமியாகவும் பிரம்மசக்தி அம்மனாகவும் இருக்கும்!

தென் மாவட்டங்களில் வாழும் அன்பர்களும், அந்த மாவட்டங்களில் இருந்து பிழைப்புக்காக வெளியூரில் வசிக்கிற அன்பர்களும் சதாசர்வ காலமும் நினைப்பதும் வேண்டுவதும், உவரி சிவனாரைத்தான்!

திருச்செந்தூரின் கடலோரத்தில் பிள்ளை முருகப்பெருமான் அருளாட்சி நடத்த... உவரி கடற்கரையில் அழகு மிளிரும் ஆலயத்தில் இருந்தபடி, அருளாட்சி நடத்துகிறார் சிவனார்.

ஒருகாலத்தில் #கூட்டப்பனை கிராமத்தில் பால், மோர், தயிர் ஆகியவற்றை பானைகளில் வைத்து, ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி, தலையில் சுமந்தபடி விற்று வந்தனர் கோனார் குல மக்கள். அவர்களில் ஒரு மூதாட்டி, ஒருநாள் அந்தக் கடம்பமர வேருக்கு அருகில் அமர்ந்து, அழுதுகொண்டிருந்தாள். 'என்ன பொழப்புடா இது! தெனமும் பானைகளைச் சுமந்துக்கிட்டு, விக்கிறதுக்குக் கிளம்பினா, கடம்பவேர் தடுக்கி விழுந்து, பானைகள் உடைஞ்சு, பாலும் மோரும் தரையில ஆறாட்டம் ஓடுறதே வேலையாப் போச்சு! காலம் போன காலத்துல கண்ணும் தெரியலை, மண்ணும் தெரியலை எனக்கு!’ என்று புலம்பியவள், வெறுங்கையுடன் வீடு திரும்பினாள். விவரம் அறிந்து ஆவேசமான கணவன், கடம்பவேர் இருக்குமிடத்துக்கு வந்தார். 'உன்னோட அடிவேர் கூட இருக்கக்கூடாது! இதோ... உன்னைப் பூண்டோடு அழிக்கிறேன், பார்’ என்று அரிவாளால் அடிவேர்ப் பகுதியில் வெட்டினார். அவ்வளவுதான்... அங்கிருந்து குபுக்கென்று கிளம்பி, பீறிட்டு அடித்தது ரத்தம். இதில் அரண்டு போனவர், தலைதெறிக்க ஓடி, ஊர்ப் பெரியவரிடம் விவரம் சொன்னார். ஊரே திரண்டது. அப்போது ஊர்ப் பெரியவருக்கு அருள்வாக்கு வந்தது. 'வந்திருக்கறது சிவன். லிங்கமா, சுயம்புவா நமக்காக வந்திருக்காரு. உடனே சந்தனத்தை அரைச்சு, ரத்தம் வர்ற இடத்துல தடவுங்க. சரியாயிடும்!’ என்று சொல்லி, தென்னையும் பனையும் சூழ்ந்த இடத்தில், சந்தன மரத்தையும் காட்டியருளினார். பிறகு, சந்தனம் அரைத்துப் பூசியதும், ரத்தம் வழிவது நின்றது. அதையடுத்து அங்கேயே சின்னதாக கூரை வேய்ந்து, கோயிலாக்கி வழிபடத் துவங்கினர் மக்கள். பிறகு, கல் மண்டபங்கள் கட்டப்பட்டு, சந்நிதி அமைக்கப்பட்டு, மிகப் பெரிய ஆலயமாக உருவானதாகச் சொல்கிறது தல வரலாறு.

கடலில் குளித்துவிட்டு, அருகில் உள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி (கிணற்றிலும் நீராடுகின்றனர்), தனிக்கோயிலில் எழுந்தருளும் ஸ்ரீகன்னி விநாயகரை வணங்கி, ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமியை வேண்டினால், சகல பிரச்னைகளும் பறந்தோடும்; சந்தோஷமும் நிம்மதியும் பொங்க வாழலாம் என்கிறார் கோயிலின் தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன்.

கோயிலுக்குப் பின்னே, ஸ்ரீபூரணை - புஷ்கலையுடன் உள்ள ஸ்ரீவன்னியடி சாஸ்தா காட்சி தருகிறார். இவருக்கு, பொங்கல் படையலிட்டுப் பிரார்த்திக்கின்றனர், பக்தர்கள்.

இங்கே, அம்பாளுக்குச் சந்நிதி இல்லை. ஆனால், அவளின் இன்னொரு வடிவமாக வணங்கப்படும் கிராம தேவதையான ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் சந்நிதி கொண்டிருக் கிறாள். அம்மனுக்கு, மஞ்சள் அல்லது குங்கும அபிஷேகம் செய்து வழிபட்டால், வீடு- வாசலுடன் இல்லறத்தைச் சிறக்கச் செய்வாள் என்பது ஐதீகம்.

''உடன்குடிதான் சொந்த ஊர். எங்களுக்கு இஷ்ட தெய்வம், காவல் தெய்வம் எல்லாமே சுயம்பு சாமிதான். சக்தி வாய்ந்தவர் இவர். சென்னைக்குப் போய் பல வருஷமாகிட்டாலும், எப்பத் தோணுதோ அப்பல்லாம் இங்கே ஓடோடி வந்துடுவேன்'' எனச் சிலாகிக்கிறார் சென்னை அன்பர் ஜி.டி.முருகேசன்.

பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை சிவனார் முன் வைப்பதற்கு, ஒரு சம்பிரதாயத்தை இங்கே கையாளு கின்றனர். அதாவது, கடலில் இருந்து மணலை எடுத்து வந்து, கரையில் குவியலாக்கிவிட்டு, சிவனாரை வணங்கு கின்றனர் (தங்கள் வேண்டுதலுக்கேற்ப 11 முறை 108 முறை என மணல் பெட்டி சுமக்கின்றனர்). வேண்டுதல் நிறைவேறியதும், சுயம்புலிங்க ஸ்வாமிக்கு பால், தேன், சந்தனத்தால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். ஆடு, மாடு மற்றும் கோழிகளைக் காணிக்கை செலுத்துபவர் களும் உண்டு.

அதேபோல், வீட்டில் எவரேனும் பிரச்னையில் சிக்கியுள்ளார் அல்லது தீராத நோயால் அவதிப்படுகிறார் என்றால், உடனே அவரை இங்கு அழைத்து வந்து, சுயம்புலிங்கமூர்த்தியின் பிள்ளையாக அறிவித்து, 'உன் புள்ளையை நீதாம்பா காக்கணும்’ என்று வேண்டுகின்றனர். நோய் தீர்ந்ததும், தங்களால் இயன்ற தொகையை 'பிடிபணம்’ செலுத்தி, நேர்த்திக் கடனை அடைக்கின்றனர். இந்தப் 'பிடிபணம்’ நேர்த்திக் கடன் சம்பிரதாயம் வந்ததற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு.

குமரி மாவட்டத்தில் உள்ள மக்கள், அந்தக் காலத்தில் நடந்தே வந்து தரிசிப்பார்கள். அப்போது வழியில், ஒரு தென்னந்தோப்பில் தங்கி இளைப் பாறுவார்கள்.

ஒருமுறை, அந்தத் தோப்பின் உரிமை யாளர் கடும் நோயால் அவதிப்பட்டார். இளைப்பாறியவர்கள், 'எங்க சுயம்புலிங்க சாமி, உன்னைக் கைவிட மாட்டாரு’ எனச் சொல்லிவிட்டு, உவரிக்கு வந்து தரிசனம் முடித்து, விபூதி பிரசாதத்துடன் தோப்புக்குச் செல்ல, பூரணமாகக் குணமாகி இருந்தாராம் அவர்.

சுயம்புலிங்க ஸ்வாமியின் அருட் கடாட்சத்தை எண்ணி நெகிழ்ந்தவர், உவரி தலத்துக்கு வந்து, நாணயம் காணிக்கை (திருவிதாங்கூர் நாணயம்) தந்து, வணங்கினாராம். அன்று முதல், 'பிடிபணம்’ எனும் நேர்த்திக்கடன் நடைமுறைக்கு வந்ததாகச் சொல்வர்.

அழகிய கடல், அதன் கரையையட்டி தேரோட்டம் நடைபெறுவதற்காகப் போடப்பட்டுள்ள தார்ச்சாலை, அருகில் தீர்த்தக் குளம், கோயிலைச் சுற்றிலும் மணல் பரப்புகளும் அழகிய மரங்களும்... என ரம்மியமாகக் காட்சி தரும் உவரியை சுற்றுலாத் தலமாக அறிவித்துள்ளது தமிழக அரசு. தற்போது, அழகிய கோபுரம் அமைக்கும் திருப்பணியிலும் ஈடுபட்டுள்ளது, கோயில் நிர்வாகம்.

சுயம்பு மூர்த்தமாக, கடம்ப வேரின் அடியில் இருந்து வெளிப்படும்போது, சந்தனம் பூசப்பட்டது அல்லவா! எனவே, இன்றைக்கும் இங்கு வரும் பக்தர்களுக்கு (கோயிலுக்குள் சட்டை அணியக்கூடாது), கட்டையில் அரைக்கப்பட்ட சந்தனப் பிரசாதம் தரப்படுகிறது. இந்தச் சந்தனத்தை உடலில் பூசிக்கொள்ள, சகல நோய்களும் தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமியைத் தரிசித்து, சந்தனத்தை உடலில் மணக்க மணக்கப் பூசிக் கொண்டு, கடல் காற்றை அனுபவிக்கும்போது, கவலையாவது துக்கமாவது... எல்லாம் காற்றோடு காற்றாகக் கலந்துவிடும் என்பது உறுதி!

உவரிக்கு வாருங்கள்; உவகையால் உள்ளம் குளிர்வீர்கள்!

என்றும் அன்புடன்..
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐖𝐞𝐛 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

தெற்கே ஒரு  #தசரா_திருவிழா..!!!உலகப்புகழ்பெற்ற  #குலசை தசராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..!!! #குலசை  தசரா திருவிழா..!...
20/10/2025

தெற்கே ஒரு #தசரா_திருவிழா..!!!

உலகப்புகழ்பெற்ற #குலசை தசராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..!!!

#குலசை தசரா திருவிழா..!!!

Credits : Jeevanphotography

Dasara festival at kulasekarapattinam (Kulasai)
#குலசை #குலசேகரன்பட்டினம் #தசரா_திருவிழா #குலசை_தசரா

அனைவருக்கும் இனிய  #தீபாவளி நல்வாழ்த்துக்கள்!ஒளியின் திருநாளான தீபாவளி, உங்கள் வாழ்க்கையில் ஆனந்தம், ஆரோக்கியம், செழிப்ப...
20/10/2025

அனைவருக்கும் இனிய #தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஒளியின் திருநாளான தீபாவளி, உங்கள் வாழ்க்கையில் ஆனந்தம், ஆரோக்கியம், செழிப்பு மற்றும் வெற்றியை பொழியட்டும்.
உங்கள் இல்லம் சந்தோஷமும் சமாதானமும் நிறைந்திட நாங்கள் மனமார வாழ்த்துகிறோம்.

இந்த தீபாவளி, உங்கள் வியாபாரம் மேலும் வளர்ந்து புதிய உயரங்களை எட்டிட அருக்ஸ் உங்களுடன் இணைந்திருக்க பெருமை கொள்கிறது. ✨

🪔 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Wishing You a Happy Diwali from Arukz!

May this Festival of Lights fill your life with happiness, health, prosperity, and endless success.

May your home be blessed with peace and joy, and your business shine brighter than ever.

This Diwali, Arukz is proud to stand with you in your journey towards digital growth and success. ✨

🪔 Happy Diwali to You and Your Family!

📞 Contact us today to transform your business digitally and build a strong online presence that lasts.

📩 Email: [email protected]
🌏 website : www.arukz.com
📞 Whatsapp : 9597841535
📍 Tamil Nadu, India

 #உவரி சுயம்புலிங்கசுவாமியின் அருளால்… இன்று எங்கள் Arukz நிறுவனம் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியுள்ளது! ✨✨ Official ...
20/10/2025

#உவரி சுயம்புலிங்கசுவாமியின் அருளால்… இன்று எங்கள் Arukz நிறுவனம் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியுள்ளது! ✨

✨ Official Launch Announcement – Digital Marketing ✨

With the divine blessings of Suyambulingaswamy, we are delighted to announce the successful launch of our company – Arukz.

Arukz is your one-stop digital solution, delivering end to-end marketing, branding, advertising, and tailored to help businesses grow faster and stronger in today’s competitive digital era.

We offer a comprehensive suite of 51 premium services to empower your business:

---

🌟 📢 ARUKZ – Complete Digital Marketing & Advertising Services 🌟

📌 Below is our 51 premium services list, designed to help your business grow from local level to global presence 👇

---

🌐 Digital Marketing & Advertising

• 📱 Social Media Marketing (SMM)
• 🔍 Search Engine Optimization (SEO)
• 💰 Search Engine Marketing (SEM)
• ✍️ Content Marketing
• 🌟 Influencer Marketing
• 📧 Email Marketing Campaigns
• 🎥 Video Marketing
• 💬 WhatsApp & SMS Marketing
• 🤝 Affiliate Marketing
• 🚀 Lead Generation Campaigns

---

🎨 Branding & Creative Design

• 🪄 Logo Design & Brand Identity
• 📰 Poster & Flex Banner Design
• 📚 Brochure, Business Card & Catalog Design
• 🧭 Brand Strategy & Positioning
• 📦 Packaging Design
• 🖼 Corporate Presentations
• 🔄 Digital Rebranding Solutions

---

📲 Social Media Management

• 🆕 Full Social Media Account Creation & Setup
• ⚡ Page Optimization & Verification
• 📝 Daily Content Planning & Scheduling
• 👥 Community Building & Engagement
• 🎯 Ads Management (Facebook, Instagram, YouTube, LinkedIn, X, etc.)
• 📊 Social Media Analytics & Insights

---

🧭 Google & Local Marketing

• 🏪 Google My Business Creation & Optimization
• 📍 Map Location Add & Verification
• 🧠 Local SEO for Shops & Services
• 📢 Google Ads Campaigns (Search, Display, Shopping, YouTube)

---

💻 Website & App Development

• 🌐 Static & Dynamic Website Development
• 🛒 E-commerce Development
• 💼 Portfolio & Business Websites
• 🧭 Landing Page Design
• 🧠 UI/UX Design & Prototyping
• ☁️ Web Hosting & Domain Services
• 🔐 Website Maintenance & Security

---

🚀 Advanced Digital Solutions

• 🤖 Marketing Automation & CRM Integration
• 💬 Chatbot Development
• 🌀 Funnel Building & Conversion Optimization
• 📈 Analytics & Reporting Dashboards
• 🎯 Retargeting Campaigns
• 🧠 Programmatic Advertising
• 🕶 AR/VR Marketing Experiences
• 🗣 Voice Search Optimization
• ✍️ AI Content Generation
• 🌐 360° Digital Transformation Consulting

---

🌍 Global-Level Marketing Tech

• 🌐 Omnichannel Strategy & Implementation
• 📊 Data-Driven Campaign Optimization
• 🧪 A/B Testing & Heatmap Analysis
• 📈 Predictive Analytics for Marketing
• 🔧 Advanced SEO (Schema, Core Web Vitals, etc.)
• 🧠 API Integrations for Ads Platforms
• ☁️ Cloud Hosting & Edge Deployment for Sites
• 🤖 Performance Marketing Using AI Tools
• 🛡 Reputation Management Systems
• 🌟 Influencer & Affiliate Networks Integration
• 📰 Global PR & Digital Press Releases

✨ With Arukz, you get complete end-to-end digital growth solutions — from design and branding to marketing, technology, and global-level strategies.

📩 DM us or 📞 Contact us today to grow your business in the digital world 🌐🔥

✨ At Arukz, our mission is simple — to elevate your business to new heights through innovation, strategy, and powerful digital experiences.

📞 Contact us today to transform your business digitally and build a strong online presence that lasts.

📩 Email: [email protected]
🌏 website : www.arukz.com
📞 Whatsapp : 095978 41535
📍 Tamil Nadu, India



🌐 இன்றைய உலகில் ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு டிஜிட்டல் இருப்பிடம் மிகவும் முக்கியம். அதனை உணர்ந்து, உங்கள் நிறுவனத்தை இணையத்தின் வாயிலாக உலகம் முழுவதும் வளரச் செய்வதே எங்கள் நோக்கம்.

நாங்கள் வழங்கும் முக்கிய சேவைகள்:

1️⃣ Website Development & UI/UX Design
➡ உங்கள் நிறுவனத்திற்கே உரிய, கவர்ச்சியான மற்றும் வேகமான வலைத்தளங்களை உருவாக்கி, வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் நிலைத்து வைக்கவும் உதவுகிறோம்.

2️⃣ Digital Marketing & Social Media Management
➡ உங்கள் நிறுவனத்தை இலக்கு வாடிக்கையாளர்களிடம் சரியான நேரத்தில் கொண்டு சென்று, பிராண்டின் நம்பிக்கையை உருவாக்குகிறோம்.

3️⃣ Brand Identity & Logo Designing
➡ உங்கள் நிறுவனத்தின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் அடையாளங்களையும் லோகோக்களையும் வடிவமைத்து, வலுவான முதல்நிலை கண்ணோட்டத்தை உருவாக்குகிறோம்.

4️⃣ SEO & Google Optimization
➡ உங்கள் வலைத்தளம் Google-இல் முன்னிலை வகிக்க எங்களின் நுண்ணறிவான SEO தந்திரங்களைப் பயன்படுத்துகிறோம். இதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

5️⃣ Content Creation & Video Editing
➡ தொழில்முறை காட்சிகள், விளம்பர வீடியோக்கள், ரீல்கள் மற்றும் பதிவுகள் மூலம் உங்கள் நிறுவனத்தின் கதை உலகத்துடன் பகிரப்படுகிறது.

6️⃣ E-Commerce Solutions & Online Store Setup
➡ உங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்ய முழுமையான தொழில்நுட்ப வசதிகளுடன் கடையை உருவாக்குகிறோம்.

---

💼 இச்சேவைகள் மூலம் நீங்கள் பெறும் நன்மைகள்:
✅ ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஈர்த்தல்
✅ விற்பனை & வருமானத்தை உயர்த்தல்
✅ நிறுவனத்தின் நம்பிக்கையையும் செல்வாக்கையும் நிலைநிறுத்தல்
✅ 24/7 ஆன்லைன் இருப்பிடம்
✅ போட்டியாளர்களிடையே தனித்துவமாக மிளிருதல்

---

🙏 எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி உங்கள் நிறுவனத்தை டிஜிட்டல் உலகில் வெற்றியின் புதிய உச்சிக்குக் கொண்டு செல்லுங்கள்.
📩 இன்று எங்களை தொடர்பு கொள்ளுங்கள் – உங்கள் கனவுகளை நனவாக்க நாங்கள் தயார்!

✨ Arukz — உங்கள் நிறுவனத்தின் டிஜிட்டல் வெற்றிக்கு உறுதியான துணை ✨

🙏உங்களின் அனைத்து வகையான டிஜிட்டல் ஆன்லைன் தேவைகளுக்கும் எங்களை தொடர்புகொண்டு, தொழில்முறை தீர்வுகளைப் பெற்றுக்கொண்டு தங்களின் மேலான ஆதரவையும் நம்பிக்கையையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி! ✨🙌

📞 Contact us today to transform your business digitally and build a strong online presence that lasts.

📩 Email: [email protected]
🌏 website : www.arukz.com
📞 Whatsapp : 095978 41535
📍 Tamil Nadu, India

Address

Kulasekarapattinam
Tiruchendur
628203

Website

Alerts

Be the first to know and let us send you an email when குலசை முத்தாரம்மன் பக்தர்பேரவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to குலசை முத்தாரம்மன் பக்தர்பேரவை:

Share