அக்க்ஷயபுரீஸ்வரர் ஆலயம்

அக்க்ஷயபுரீஸ்வரர் ஆலயம் akshayatemple தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டையில் இருந்து தெற்கே 30 கி.மீ. தொலைவில் விளங்குளம் என்ற பகுதியில் அட்சய புரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

14/09/2016
விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்...
05/09/2016

விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்...

May the spirit of onam remains everywhere whatever you do, whatever you think whatever you hope in your life. Wish you a...
27/08/2015

May the spirit of onam remains everywhere whatever you do, whatever you think whatever you hope in your life. Wish you a happy onam to all....

தமிழ் நாட்டில், ஒவ்வொரு பண்டிகைக்கும் ஏற்ப சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு என்று ஆற்றல் மிகுந்த ஆலயங்கள் உள்ளன. அந்த வரிசை...
09/02/2015

தமிழ் நாட்டில், ஒவ்வொரு பண்டிகைக்கும் ஏற்ப சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு என்று ஆற்றல் மிகுந்த ஆலயங்கள் உள்ளன. அந்த வரிசையில் அட்சய திருதியை தினத்தன்று தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகாவில் உள்ள அட்சயபுரீஸ்வரர் தலம், சிறந்த தலமாக போற்றப்படுகிறது. அந்த தல வரலாறு வருமாறு:-

சூரிய தேவனின் மகன், சனிபகவான், இன்னொரு மகன் எமதர்மன். அண்ணன் தம்பியாக இருந்தபோதும் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர். அப்படி ஒரு சமயம் வந்த சண்டையில் அண்ணன் எமதர்மன் கோபத்தோடு தம்பி சனிபகவானின் காலில் ஓங்கி அடிக்க, தம்பியின் கால் ஊனமானது.

மனவருத்தத்துடன் புறப்பட்ட சனி, மனித உருவத்தில் பூவுலகில் சிவதரிசனம் செய்தபடியே பல தலங்களுக்கும் சென்றார். வழியில் பிச்சை எடுத்து கிடைத்ததை சமைத்து ஏழைகளுக்கும், முதியவர்களுக்கும் அளித்து தாமும் உண்டு வந்தார். ஊர் ஊராகச் சுற்றி வந்த சனிபகவான், விளா மரங்கள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்.

நடந்து போகும் வழியில், ஒரு பாதையைக் கடந்தபோது ஓரிடத்தில் விளா மரத்தின் வேரில் தடுக்கி நிலை தடுமாறி, அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார். அவர் கீழே விழுந்த அதே சமயத்தில், அந்தப் பள்ளத்தில் இருந்து குபீரென்று ஒரு நீரூற்று தோன்றியது.

அந்த நீர் சனிபகவானின் மேனியில் பட்ட மறுநொடி, அவரது ஊனம் மறைந்தது. கூடவே ஓர் அசரீரி எழுந்தது. `சனிபகவானே... பல கோடி யுகங்களாக மறைந்திருந்த `பூச ஞான வாவி' என்ற ஞான தீர்த்தம் இது. சித்திரைத் திங்கள், வளர்பிறை திருதியையும், பூச நட்சத்திரமும், சனி வாரமும் சேர்ந்த இந்தப் புனித நன்னாளில் இத்தீர்த்தம் உன்னால் மீண்டும் சுரந்துள்ளது.

விளாவேர் தடுக்கி நீ விழுந்ததால் சுரந்த ஞான வாவி, இத்தலத்தில் புனித தீர்த்தக்குளமாக விளங்கும். அதனால் இந்தக் கிராமம் விழக்குளம் என்று அழைக்கப்படும்!' என்றது அந்த அசரீரி. தற்போது மருவி விளங்குளம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வரும் அத்தலத்தில்தான், சனிபகவானுக்கு அருளிய ஈசன், அட்சயபுரீஸ்வரராக கோவில் கொண்டு அருள்கிறார்.

கி.பி.13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம். முதலாம் மாறவர்மன் பராக்ரம பாண்டியன் இவ்வாலய இறைவனை வழிபட்ட தகவல், கல்வெட்டு மூலம் காணக் கிடைக்கின்றது. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய கோபுரம். பெரிய பிராகாரத்தை அடுத்து உள்ளது வசந்த மண்டபம்.

இந்த மண்டபத்தின் வலதுபுறம் அன்னை அபிவிருத்தி நாயகியின் சன்னதி உள்ளது. அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் தண்டத்தையும், தாமரையையும் தாங்கி, கீழ் இருகரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ தென்திசை நோக்கி அருள்பாலிக்கின்றாள்.

மகா மண்டபத்தை அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் இரட்டை விநாயகரும் வலதுபுறம் மாரியம்மன், பிரதோஷ நாயகர் திருமேனிகளும் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

இவர், சனி பகவானுக்கு அருளிய தினம் ஓர் அட்சய திருதியை நாள். எனவே இறைவன், அட்சயபுரீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். அட்சயம் என்றால் வளர்வது என்று அர்த்தம். இத்தலத்திற்கு ஒருமுறை வந்து போனாலே பக்தர்களின் இல்லத்தில் செல்வம் உள்ளிட்ட பதினாறு பேறுகளும் தழைத்து வளரும் என்பது ஐதீகம்.

அது மட்டுமல்ல, அம்பிகையின் திருப்பெயரும் `அபிவிருத்தி' நாயகி என அமைத்து, மேலும் மேலும் செல்வங்கள் வளரும் என்பதையே உறுதிப்படுத்துகிறது. செல்வங்கள் அனைத்துக்கும் அதிபதியான குபேரன், ஈசனை வழிபட்டே சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான் என்கிறது புராணம்.

அப்படி குபேரன் செல்வங்களைப் பெற்று அளகாபுரிக்கு அரசனானதும், அட்சயபுரீஸ்வரரின் அருளால்தான் என்பதால் இத்தலம் அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலமாகக் கூறப்படுகிறது. இத்தலத்தில் சிவபெருமான் அருளால் சனி பகவானுக்கு திருமணமாகும் பாக்கியமும் கிடைத்ததாம்.

எனவே இத்தலத்தில் மந்தாதேவி, ஜேஷ்டா தேவி என்ற இரு பத்தினிகளுடன் ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரோடு தனிச் சன்னதியில் அமைந்திருக்கிறார் சனிபகவான். அட்சய திருதியை அன்று சனிபகவான் ஸ்தூல சூட்சும வடிவங்களில் அட்சயபுரீஸ்வரரை முழுவதும் வழிபடுவதாக ஐதீகம் நிலவுகிறது.

தொடர்புக்கு:-97507 84944,
96266 85051

கார்த்திகை மாதம் ஆரம்பம் ...
17/11/2014

கார்த்திகை மாதம் ஆரம்பம் ...

Durgai Amman...
25/07/2014

Durgai Amman...

திருநாகேஸ்வரம் நாகநாதர் சுவாமி கோவிலில் ராகு பகவானுக்கு ராகு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு இன்று நடைபெற்றது. இதையொட்டி தங்கக...
21/06/2014

திருநாகேஸ்வரம் நாகநாதர் சுவாமி கோவிலில் ராகு பகவானுக்கு ராகு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு இன்று நடைபெற்றது. இதையொட்டி தங்ககலச அலங்காரத்தில் நாக கன்னி-நாகவள்ளியுடன் ராகுபகவான் இருப்பதை படத்தில் காணலாம். இந்த வழிபாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கும்பகோணம் நகராட்சி தலைவர் ரத்னாசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 2-ம் தேதி தங்கம் சேரும் பொன்னாளாம் அட்சய திரிதியை நன்னாளில் 2500 பேருக்கு அருள்மிகு அட்சய புரீஸ்வரர் கோவிலில் அன்ன...
20/05/2014

கடந்த 2-ம் தேதி தங்கம் சேரும் பொன்னாளாம் அட்சய திரிதியை நன்னாளில் 2500 பேருக்கு அருள்மிகு அட்சய புரீஸ்வரர் கோவிலில் அன்னதானம் செய்யப்பட்டது... இதுவே அடுத்த வருடம் 4000 பேருக்கு மேல் அன்னதானம் செய்ய திட்டமும் உள்ளது...இதில் பங்கேற்ற பங்கேற்க இருக்கிற பக்தர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆலய குழுவினர் சார்பில் நன்றி...

அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில்தலபெருமை: பூச பத நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரை குறிக்கும். சனிப...
03/04/2014

அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில்

தலபெருமை:

பூச பத நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரை குறிக்கும். சனிபகவான் தன் பாத குறைபாடு நீங்க இத்தல அட்சய புரீஸ்வரரை வேண்டி நிவாரணம் பெற்ற தலமே விளங்குளம். எனவே பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளிலோ, பூச நட்சத்திர தினத்தன்றோ, அட்சய திரிதியை நாளிலோ இத்தல இறைவனை வழிபட்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

27 நட்சத்திரத்தில் பூச நட்சத்திரம் 8வது நட்சத்திரமாக அமைந்துள்ளது. இதனால் பூச நட்சத்திரத்திற்குரியவர்கள் இந்த நாட்களில் நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு, இளநீர், சந்தனம், பால், தயிர் ஆகிய எட்டு வகை பொருள்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்சனைகள் தீரும் என்பதும், அனைத்து வகையான சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் மனைவியருடன் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கும் சனிபகவானை வழிபட்டால் தோஷங்களின் பாதிப்பு குறையும் என்பதும் ஐதீகம்.

அடிக்கடி உடல் நலக்குறைவு, கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், மன நிம்மதி வேண்டுபவர்கள், ஊனமுற்றவர்கள், கால் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் விளங்குளம் சனீஸ்வரரை வழிபட்டு வரலாம். இங்கு சனீஸ்வர பகவான் மந்தா, ஜேஷ்டா என்ற மனைவியருடன் திருமண கோலத்தில் ஆதிபிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இத்தல அபிவிருத்தி நாயகியை வழிபட்டால் சகல காரியங்களும் அபிவிருத்தியாகும். இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. அதற்கு பதில் சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.

விநாயகர் இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இதுபோன்ற அமைப்பை காண்பது அரிது. இவரை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் விஜயம் கிடைக்கும் என்பதால் இவர் விஜய விநாயகர் என அழைக்கப்படுகிறார்.

திறக்கும் நேரம்:

காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.காமம்: பற்று உண்டானால் பாசம்,மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடை...
30/03/2014

சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.
காமம்: பற்று உண்டானால் பாசம்,மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
குரோதம் :கோபம் குடியைக் கெடுத்து ,கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் அடைய முடியாது.
மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும்.அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா.அது போல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்து விடுவான்.
மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலை நிருத்தி வாழ்பவனுக்கு வேறு பகையே வேண்டாம்.அதுவே அவனை அழித்துவிடும்.
வீண் பெருமை:அசுர குணமானது நாமகள் இருக்க கூடாது.
அகந்தை :தான் என்ற அகந்தை கொண்டவன் ஒருபோதும் வாழ்வில் முன்னேற முடியாது.அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
சாத்வீகம் :விருப்பு வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
ராஜஸம்:அகங்காரத்தோடு கருமம் செய்தல்.
தாமஸம்:அற்ப புத்தியை பற்றி நிற்பது..மதி மயக்கத்தால் வினை செய்வது.
ஞானம் :எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
மனம்:நம்மனம் கெடாது.பிறர் மனம் வருந்தாது வாழ வேண்டும்.எப்போது ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
அஞ்ஞானம்:உண்மைப் பொருளை அறிய மட்டது மூடி நிற்கும் இருள்.
கண் :ஆண்டவனைப் பார்க்கவும்,ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமெ ஏற்பட்டது.
காது:ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு,அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும் .
மூக்கு:ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
நாக்கு:இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும்.கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும்.உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
இந்த பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும் ,தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச் சென்றதால் இறைவன் அருள் நமக்கு கிடைக்கும் .

இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

18 படி தெய்வங்கள்:

ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள் பாலிப்பது சிறப்பு:

1.விநாயகர்
2.சிவன்
3.பார்வதி
4.முருகன்
5.பிரம்மா
6.விஷ்ணு
7.ரெங்கநாதர்
8.காளி
9.எமன்
10.சூரியன்
11.சந்திரன்
12.செவ்வாய்
13.புதன்
14.குரு(வியாழன் )
15.சுக்கிரன்
16.சனி
17.ராகு
18.கேது

ஸ்ரீநீலகண்ட பிள்ளையார் - பேராவூரணி
22/03/2014

ஸ்ரீநீலகண்ட பிள்ளையார் - பேராவூரணி

Address

Peravurani

Alerts

Be the first to know and let us send you an email when அக்க்ஷயபுரீஸ்வரர் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share